செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

இதோ ஒரு காதல் மன்னன்

பணக்காரன் காதல் எல்லாம் காதலா என்று புறம் பேசும் மனங்களிடையே இதோ ஒரு சினிமாவை மிஞ்சும் நிஜக்காதல்
முகேஷ் அம்பானி  தெரியாதவர் யாராவது இருக்க முடியுமா இன்று ......இந்தியா மட்டுமின்றி, உலகளவில் சிறந்த தொழிலதிபராக திகழும் நபர். ஆடம்பரமான வாழ்க்கைக்கு பெயர் போனவர் முகேஷ் அம்பானி தான் எந்த துறையில் காலடி எடுத்து வைத்தாலும் அதில் வென்றே ஆகவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
வியாபாரத்தில் மட்டுமல்ல, காதலிலும் இவர் கெட்டி தானாம் . தனது காதல் மனைவிக்கு ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் யோசிக்க முடியாத அளவில் ஒரு வியக்கத்தக்க பரிசை கொடுத்து அசத்தும் சூப்பர் காதலனுமாம் நம்ப முடிகிறதா.....
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பத்தில் பிறந்த நீத்தா அம்பானி ஒரு பரத நாட்டிய தாரகை  ஒருசமயம் ஒரு விழாவில் நாட்டியம் நிகழ்ச்சியை வழங்கும்போது  முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி அவரின் நாட்டிய  திறமை கண்டு தன் மகனுக்கு மணமுடிக்க கேட்டாராம்
இது தொடர்பாக  முகேஷ் அம்பானியும் நீத்தாவும் சந்தித்து பேச்சுக்கள் நடந்ததாம் ஒருமுறை இருவரும் காரில் சென்றுக் கொண்டிருந்த போது. ட்ராபிக் சிக்னலில் கார் நின்றுக் கொண்டிருக்கையில், "நீத்தா நீ என்னை திருமணம் செய்துக் கொள்வாயா?” என கேட்டுள்ளார் முகேஷ். இதற்கு பதில் கிடைக்க வேண்டும் என்ற பிடிவாதம் தோன்றியுள்ளது
சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தது. பின்னடி நின்ற அனைவரும் ஹார்ன் அடித்துக் கொண்டே இருந்தனர். நீத்தா நீ பதில் கூறாமல் நான் வண்டியை எடுக்க மாட்டேன் என அடம் பிடித்துள்ளார் முகேஷ். ....... மணிரத்தனத்திற்கே டிப்ஸ் கொடுப்பார் போல இருக்கே
"எஸ். நான் உன்னை திருமணம் செய்துக் கொள்வேன்" என நீத்தா கூறிய பின்பு தான் வண்டியை எடுத்துள்ளார் முகேஷ்.
இனிதாக தொடர்ந்து கொண்டிருக்கிறது காதல் பயணம் இன்றுவரை தன் காதல் மனைவிக்கு அவர் வியக்கும் வண்ணம் பரிசுகள் வழங்குவதில் கில்லாடியாம் பணமிருந்தாலும்  அதிலும் காதலை தனித்துவமாக நிரூபிக்க திறமை வேண்டுமே முகேஷ்  அம்பானி தன்வியாபாரத்தில் மட்டுமல்ல தன் காதலிலும் கிரியேட்டிவ் மைன்ட்  உபயோகித்து சாதிக்கிறாராம்
 நீங்கள்  கேள்வி பட்ட  கதையாக இருக்கலாம்

2 கருத்துகள்:

  1. ம்ம்ம்.. ஆசியாவின் இரண்டாவது பணக்காரர். என்ன பரிசு வேண்டுமானாலும் அளிக்க முடியும்.

    பதிலளிநீக்கு