நாம எதிர் நீச்சலில்
இன்னிக்கு பார்க்க போவது காத்திருப்பு ஐயோ காத்திருப்பதா காத்திருந்து
காத்திருந்து காலங்கள் போகுதடி ..........அப்படின்னு பாட ஆரம்பிக்காதீங்க
காத்திருனு யாரவது
சொல்லிடா அல்லது எதற்காவது காத்திருக்கனும்னா நாம் டென்ஷன் ஆயிடுவோம் ஆனா .....
நாம
வாழ்க்கை முழுவதும் எதற்க்காவது காத்து கொண்டுதான் இருக்கிறோம் 5 வயது புள்ளை 10 வயது
சைக்கிள் ஓட்டுகிரவனை பார்த்து எப்ப நமக்கு 10 வயதாகும் என்று காத்திருக்கிறது 12வயது பையன் 16 வயதுல்ல தன் அண்ணனின்அல்டாப்பை பார்த்து அவனை மாதிரி நான் எப்போ ஸ்டையில்
பண்ணிப்பேன் என்று காத்திருக்கிறான் 19 வயது எப்பட நானும் இந்த படிப்புலருந்து விடுதலை ஆவேன் என்று வேலைக்கு
செல்லும் 23 வயது வாலிபனை பார்த்து
காத்திருக்கிறான் வேலை கிடைச்சா கல்யாணத்திற்கு... கல்யாணம் ஆனா குழந்தைக்கு....
இப்படி சொல்லிகிட்டே போகலாம் ஆனா பாருங்க நமக்கு வாழ்க்கையில் வெற்றியோ அல்லது
சரியான விஷயமோ அமையனும் நினைத்தால்
கொஞ்சம் காத்திருந்து அமைக்கனும்
கொக்கு மாதிரி
இந்த கொக்கு இருக்கு பாருங்க அது தனக்கான
மீன் வரும் வரை ஒற்றைகாலில் எவ்வளவு நேரம் காத்திருக்குது உங்களுக்கு சின்ன வயசிலேயே இந்த கதையெல்லாம்
சொல்லிருப்பாங்க கொக்கு ஒரு பழமொழியே இருக்கு
”ஓடுமீன் ஓட உருமீன் வருமளவும்
வாடியிருக்குமாம் கொக்கு”
வாடியிருக்குமாம் கொக்கு”
ஓடுமீன் ஓட என்றால் எத்தனையோ மீன்கள் ஓடிக்கொண்டிருக்க அவற்றைக்
கொத்தாமல் ஏன் காத்திருக்கிறது கொக்கு? உறு மீன் வருமளவும் காத்திருக்கும். ஆமாம், அந்தக் கொக்கின் வயிறு நிரம்பும் அளவுக்கு கொழுத்த மீன் வரும்
வரையில் அந்தக் கொக்கு காத்திருக்கும்
.அது
போலத்தான் நாமும் நமக்குத் தேவையான, தகுதியான வாய்ப்பு
வரும் வரையில்
காத்திருக்கத்தான் வேண்டும்.
ஆனால் ஐந்தறிவு கொண்ட கொக்கே இப்படி அறிவுத் தவம்
செய்கிறதே,
ஆறரிவு
கொண்ட மனிதர்களாகிய நாம் முயற்சி என்னும் தவத்தை மேற்கொண்டுநல்லவாய்ப்புகளை நல்ல ப் பெற காத்திருக்க வேண்டும்
ஒரு காலில்
காத்திருக்கட்டும் நாம் 2 காலில் காத்திருப்போம் நமக்கான மீன் வரும் வரை காத்திருக்க
வேண்டும்
(யாரும் எடக்குமுடக்க
திங் பண்ண கூடாது நான் சொல்லும் மீன் வெற்றியை குறிக்குது )
சரி வேற சொல்லறேன்
இந்த மாம்பழம் இருக்கு பாருங்க அது இயல்பா பழுத்து சாப்பிட்டால் எவ்வளவு சுவை ஆனா
காத்திருக்காமல் அதை கல் போட்டாம் கெமிகல் போட்டும் பழுக்க வைக்கும் பழம் அவ்வளவு
சுவை தருவதில்லை மேலும் உடம்புக்கும் கெடுதல் தருகிறது நல்ல பழ சாப்பிடனும்
என்றால் காத்திருகனும்
‘புலி பசித்தாலும்
புல்லை தின்னாது ‘அப்படின்னு சொல்லுவாங்க அதுகான இரை வந்ததும் அதை அது நேரம் பார்த்து குறிவைத்து தன் உணவை
புசிக்கும் இது தான் வெற்றி இலக்கு
விதை
விதைக்கவேண்டுமென்றால் ஆடிபட்டம் வரை காத்திருக்கணும்
சொல்வாங்க அடைமழைக்கு ஐப்பசி வரை காத்திருக்கத்தான் வேண்டும் வேற வழியே இல்லை
சரி நம்ம புள்ளையாரை
எடுத்துகோங்க அவரு பிரம்மசாரின்னு தெரியும் ஏன்? தன் தாய் பார்வதி போல் ஒரு பெண்
வேண்டும் என்று காலம் காலமா காத்திட்டு இருக்கார் இதுக்கு அர்த்தம் என்ன
சொல்றாங்கனா நல்லதா கிடைக்கனும்ணா கொஞ்சம் காத்திருக்கணும் என்ற கோட்பாட்டை
விளக்குவதற்கு தான் பிரம்சாரியான புள்ளையார் உருவம் கதையெல்லாம்
சூப்பரான மட்டுமல்ல
மிக நல்ல காதலி கிடைக்கனும்னா ‘தி பெஸ்ட்டுகாக’ காத்திருக்கத்தான் வேண்டும் சும்மாவே வயசு வந்திடுச்சி லவ்னா அது ‘அட்
ஃபஸ்ட் சைட் ‘அப்படி இப்படினு பேத்தினால் ரஜினி டயலாக்தான்
'கிடைக்கிறது
கிடைக்காம இருக்காது
கிடைக்காம இருக்கறது
கிடைக்காது'
நம்ம சூர்யா ஜோதிக்கா
காதலையே உதரணாமா சொல்லலாமா அவங்க லவ் சக்சஸ் ஆகா ரொம்பநாள் காத்திருந்ததாக
சொல்லிகிறாங்க ஒன்றை நல்லதாக அடைய வேண்டுமென்றால்
காத்திருக்கணும் தப்பில்லை அவசரபட்டு ஒரு முடிவெடுப்பதை விட காத்திருப்பது
மேலானதுன்னு நான் நினைகிறேன் அவசரத்தில் செய்யும் காரியம் அலங்கோலம் ஆகும் என்று
நம்ம பெரியவங்க சொல்லி இருகாங்க
அதுக்கு உதாரணமா நம்
அவுரங்கசிப்பை எடுத்துகோங்க அப்பா ஷாஜகானிடமிருந்து நாட்டை பிடுங்கி அப்பாவையும்
சிறையில் அடைத்து அண்ணனையும் கொன்றுவிட்டு அவசரமா அரியணை ஏறியதால் இன்றுவரை அவன்
பழிக்க படுகிறான் சரித்திரத்தில்
சரி அவ்வளவு ஏங்க
உங்களுக்கு பூனை குட்டி வேணுமா? யானை குட்டி வேணுமா? நீங்கதான் முடிவெடுக்கணும்
யான குட்டி வேண்டுமென்றால் 20 மாதம் காத்திருக்கத்தான் வேண்டும் பூனை குட்டி
என்றால் 40 நாளில் கிடைத்து விடும்
பங்குகளின் விலை
குறையும் வரை காத்திருக்கத்தான் வேண்டும் முதலீடு செய்ய வேண்டுமென்றால் விற்க
வேண்டுமென்றால் அதன் விலை உயரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும் அப்பதான் லாபம் எப்பவோ
படித்ததை எல்லாம் நியாபக படுத்தி எனக்கு தெரிந்த அளவில் சொல்லிடேன் அவ்வளவுதான்
நியாயமான வெற்றிக்கு
காத்திருத்தல் அவசியம் அதுதான் நிலையானதாக
இருக்கும்
சொல்லுறத்தை
சொல்லிப்புடேன்
செய்யறதை செஞ்சிடுங்க
நல்லதுனா கேட்டுகோங்க
கெட்டதுனா
விட்டுடுங்க
முன்னால வந்தவங்க
என்னனமோ சொன்னாங்க
மூளையிலே ஏறுமுன்னு
முயற்ச்சியும்
செஞ்சாங்க
குடியிருந்தும்
மூட்டைகளாய்
மூச்சிருந்தும்
கட்டைகளாய்
வெளியிருந்தும்
கொட்டைகளாய்
விழுந்து கிடக்க
போறீங்களா
முறையை தெரிஞ்சு
நடந்து
பழைய நெனப்ப மறந்து
உலகம் போற பாதையை
உள்ளம் தெளிஞ்சு
வாரீகளா
சித்தர்களும்
யோகிகளும்
சிந்தனையுள்ள
ஞானிகளும்
எத்தனையோ எழுதி எழுதி
வச்சாங்க
எல்லாதான் படிச்சீங்க
என்ன பண்ணி
கிழுச்சீங்க
ஒண்ணுமே நடக்காமே
உள்ளம் நொந்து
செத்தாங்க
என்னால ஆகாதுன்னு
எனக்கும் தெரியுமுங்க