புதன், 26 ஜூலை, 2017

சோம்பேறிகள் சங்கம்

பால்கனியின் திண்டிலே சாய்ந்து
அம்மாவின் திட்டுகள்
தினந்தோறும் ..
சோம்பேறி ..
சோறுண்ணவும் மறக்கும்
கைபேசியின் கைப்பிள்ளையானாய்
கைவிடாமல் உழைக்கும்
கைவிரல்களுக்கு
நேர்ந்த அவமானம் 
கைகளுக்குள் உலகத்தை 
காட்டியிடும் மாயனை 
மதிப்பிழக்க செய்யும்
சொற்களின் வீரியம் 
என்று புரியுமோ    
இணையத்தை இடைவிடாமல் 
இயக்கி ஆண்டு 
பல பேரை வாழவைக்கும்
வள்ளல் என்று 
பணிக்கு செல்லுமுன் அவரின் 
கைப்பையின் முன் 
கையேந்தும் நிலை 
உலகை காக்க 
இப்படிக்கு 
சோம்பேறிகள் சங்கம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக