புதன், 26 ஜூலை, 2017

வேண்டல்


பஞ்சம் வந்ததடி பராசக்தி
பஞ்சம் வந்ததடி
மனிதனுக்கு
மனிதம் மேல்
பஞ்சம்  வந்ததடி
பஞ்சத்திற்கு தஞ்சமிடுவாய் என
இருக்க நான்
நின்  கொடையின்
தஞ்சமென  அளித்ததையும்
பிரித்திட நினைக்கின்றாயே
பாரினில்
பஞ்சத்தின் பரிசாய்
மனிதனின் வெற்றிக்கு
மடி ஏந்துகிறேன் காலபைரவி
கருணை காட்டிட்டு
மனிதம் வளர

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக