செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

கூகுள் வரம்

                       கூகுளுடன் வேலை செய்ய நான்..... நீ என்று போட்டி  இருக்க கூகிள் வரம் ஒரு 16 வயது பருவத்திற்கு பட்டு சாமரம் விரித்துள்ளது. இந்திய சிறுவர்கள் இன்னும் முழுமதியுடன் இருப்பதை நிரூபிக்கும் வண்ணம் ஒரு இளம் குருத்து இங்கே தன் வெற்றியை முழங்கி இருக்கிறது அரசு பள்ளியில் படித்த கல்வியும் உயர்ந்தவை என்று மீண்டும் நிரூபணம் .
                       சண்டிகர் மாநிலத்தின் செக்டார் 33 பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் பயின்று வரும் ஹர்ஷித் சர்மா அடுத்த ஒரு மாதத்தில் அமெரிக்காவில் இருக்கும் கூகிள் நிறுவனத்தின் பணியாற்ற உள்ளார்.
தன் திறமையை கிராபிக்ஸில் தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்   இந்த இளம் வாலிபன்  அதற்கு அவன் வாங்க போகும் சம்பளம் பயிற்சி காலத்தில் 1 வருடத்திற்கு 4 லட்ச்மும் பயிற்சி முடிந்த பின் மாதம்ம்ம்ம்ம்ம்ம்ம் 12 லட்சம் வழங்கப்படவுள்ளது .

விடா  முயற்சி விஸ்வரூப வெற்றி தரும் என்ற வாக்குகேற்றப  10 வருடகாலம் கிராபிக்ஸ் டிசைனில் தேர்ச்சி  பெற்று தன் திறமையை வெளிப்படுத்தி கூகிள் இணைத்துவிட்டார்..... இதை தவிர கற்க்கும் காலத்திலேயே போஸ்டர்கள் தயாரித்து பாலிவுட் மற்றும் ஹாலிவுடில்  விற்று தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் ....இவரது பெற்றோர்கள் ஆசிரியர்கள்..... ஆசிரியர் பிள்ளை மக்கு என்ற வாக்கை பொய்யாகியவர் ஹர்ஷித் சர்மா!

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அற஧ந்து செயின்.
தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.என்பதை நிரூபித்துள்ள இந்த இளம் குருத்தை பாராட்டுவோம் 

4 கருத்துகள்: