புதன், 2 ஆகஸ்ட், 2017

சாப்பிடுவதற்கு இப்படி

மனுஷன் வகைதொகையா சாப்பிடுவதற்கு என்றே பண்டிகைகள் பூஜைகள் ஏற்படுத்தி இருக்க வேண்டும் அதற்கு என்று ஏதாவது காரணங்களை கொண்டு வருவதில் கில்லாடி
இங்கு இப்படி ஒரு காரணம்
நாமகிரி பேட்டையில், 250 ஆண்டுகளுக்கு முன் பொங்களாயி என்ற பெண்ணுக்கு, பெண்கள் யாரும் உதவி செய்யாததால், இரட்டை குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.இதனால், அந்த பெண் விட்ட சாபத்தால், இப்பகுதியில் பஞ்சம், பட்டினி ஏற்பட்டது. இப்பகுதியை சேர்ந்த ஆண்கள் மட்டும், தவறுக்கு மன்னிப்பு கேட்டதுடன், அனைத்து சமுதாயத்தையும் சேர்ந்த ஆண்கள் மட்டும் விழா எடுப்பதாக கேட்டுக்கொண்டதால், விழா கொண்டாடப்படுகிறது
ஒவ்வொரு ஆண்டும் ஆடி18க்கு முன்பாக கிடா வெட்டி பூஜை நடக்கும். இந்த விழாவில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்வார்கள்.
அதே போன்று இந்த ஆண்டும் ஆடு, கோழி, பன்றி ஆகியவை பலியிட்டு முப்பூஜை செய்யப்பட்டது.
இவ்விழாவில், மொத்தம், 145 கிடாக்கள் பலியிடப்பட்டன. நேற்று அதிகாலை, சமைக்கப்பட்டு, 3,000த்துக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு பரிமாறப்பட்டன.
மனுஷன் மட்டும் தான் ஆண்டவன் படைப்பா ....
அந்த ஆடு கோழி பன்றி எல்லாம் சாபம்விட்டா ......அதற்கு என்ன .இன்னொரு பூஜை சாப்பிடுவதற்கு ஏதுவாக .....

2 கருத்துகள்: