புதன், 16 ஜனவரி, 2013

இந்தியனின் கால்கள் எங்கெல்லாம் ......


ஆஸ்திரேலியா - இந்தியா இடையே 4000-வருட மரபணுத் தொடர்பு
ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களுடைய மரபணுக்கூறுகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய கண்டத்துக்கு நாலாயிரம் ஆண்டுகள் முன்னரே குடியேற்றம் நடந்துள்ளது என்பதற்கான அறிகுறிகள் தெரிவதாகக் கூறுகின்றனர்.

ஐரோப்பியர்கள் செல்வதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்னதாகவே இந்தியாவில் இருந்து இக்கண்டத்துக்கு மனித நடமாட்டம் இருந்திருக்க வேண்டும் என்பதாக ஆஸ்திரேலிய பூர்வகுடிகளின் மரபணுக்கள் காட்டுகின்றன.
ஆஸ்திரேலிய பூர்வகுடிகளின் மரபணுத் தொகுதியில் இந்திய மரபணுக்கள் கலந்த காலகட்டமும், அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட ஃபாஸ்ஸில் படிமங்களின் அடிப்படையில் டிங்கோ காட்டு நாய்கள் ஆஸ்திரேலியாவில் தென்பட ஆரம்பித்த காலகட்டமும் ஒன்றாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இவர்களுடைய ஆய்வின் முடிவுகள் நேஷனல் அக்காடமி ஒஃப் சயின்ஸஸ் என்ற
 அறிவியல் மன்றத்தின் பதிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளன.

மைக்ரோலித் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் கற்கருவிகளை ஆஸ்திரேலியாவில்அறிமுகப்படுத்தியவர்களும் இந்தியாவிலிருந்து வந்த குடியேறிகளாக இருக்கலாம் என்றுவிஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

2 கருத்துகள்:

  1. கல் தோன்றி மண் தோன்றி முன்னேறி முத்தெடுத்த மூத்த குடி ......அருமையான தகவல் நன்றி

    பதிலளிநீக்கு