வியாழன், 14 பிப்ரவரி, 2013

இன்று நாம் யார் ?

ஆம் இன்று  நாம் யார் ?

எதை நோக்கி பயணம் புரியவில்லை ?

கற்கால மனிதன் நிர்வாணத்தை உதறி நாகரிக வாழ்க்கையை கொண்டுவந்தான் ஆனால் இன்று ,நிர்வாணத்தை (அரைகுரையானால் மட்டும் நிர்வாணம் நிர்வாணம் தான் ) அரங்கேற்றி கொண்டிருக்கிறோம் நாகரீகம் என்ற பெயரால்
இதில் என்ன நகைசுவை என்றால் முழு ஆடை அணிந்தவன்" கன்றி ப்ருட்" என்று சொல்லபடுகிறா(ன்,ள் ) விநோதமாய் பார்க்க படுகிறா(ன் ,ள்)  ஆம் நாம் இப்பொழுது யார் ?
எப்படி இருந்த .........நாம் இப்படி என்று சொல்லி கொள்ள லாமா ?

மற்றொருதொடர்  பெண் கொடுமை வன்முறை டில்லியில் சரி சரி அதை நடைமுறைக்கு கொண்டுவந்துவிட்டால் புதிதாய் தெரியாது அல்லவா ?
(ஒரு சொல் வழக்கு இருக்கிறது எருமை மாட்டின் மேல் பெய்தத மழை
போல் )

ஆம் எத்தனையோ நாகரிகம் அற்ற விளம்பரங்கள் பெண்களை இழிவாய் காண்பித்து நடைமுறை படுத்த படவில்லையா ?அவையெல்லாம் நாம் ஏற்று கொள்ள வில்லை யா ?

ஒரு துச்சாதணன் இருந்தான் கண்ணன் வந்தான் காப்பாற்ற இன்று எத்தனை துச்சாதனன்கள் கண்ணன் களைத்துவிட்டானோ ?ஒரே சமயத்தில் எத்தனை கண்ணனாய் அவதரித்து அவதரித்து ,

மற்றும் ஒரு சொல் வழக்கு சொல்லுவார்கள் முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு பெண்களை சம்பதாசம்பந்தம்  இல்லாமல் இழிவாய் காட்ட முயற்ச்சித்த போதே ........Gate of .......India வில் (.மட்டுமாவது) மக்கள் இளைஞ்சர்கள்
இளைஞ்சிகள் கூடி இருந்தால் ............
இன்று இந்த நிலை வருமா?
முளையிலேயே வெட்டி எரியாமல் நுனிமரத்தில் உட்கார்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டுகிறார்களாம் இன்று

நாம கவிஞ்சர்  சூப்பரா....... ஒரு பாட்டு எழுதி இருக்கார்
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது .............

நிஜமாய் தூங்குறவனை எழுப்பலாம் தூங்கற மாதிரி இருப்பவனை எழுப்ப முடியுமா?

பெண்களே விழித்து கொள்ளுங்கள் உங்களை நீங்களே இழிநிலைக்கு தள்ளாதீர்கள் (வேண்டுகோள் மட்டுமே )

இதுலயும் பாருங்க கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்கு ஒரு கொடுமை ஜிங்கு ஜிங்கு னு ........ஆடுதாம் எப்படி ?
அப்படி இருக்கு இதை கேள்விபட்டு  படித்து  பார்த்து ,
டில்லி வன்கொடுமையாளர்களின் சொந்தங்களும் தாய்மார்களும் அவர்களுக்காக பூஜிக்கிறார் கலாம் விடுதலைக்கு அப்பட்டமாய்  நிகழ்த்தபட்ட  கொடுரமாய் நிகழ்ந்த நிகழ்வுகள் இவர்களை பாதிக்கவே
பாதிக்ககவில்லையா ?இவர்கள் எல்லாம் பெண்கள் தானா ?

பச்சிளம் பாலகனை கூட நாட்டை காப்பாற்ற வாள் கொடுத்து போருக்கு அனுப்பிய தாய்மார்கள் வாழ்ந்த  நாடு இதுதானா ?நம்ப முடியவில்லை
இல்லையா ?

இனி வரும் காலத்தில் மறு படியும் பெண்சிசு கொலை அல்லது கருவிலேயே அழித்தல் வந்துவிடும் என்று நினைகிறேன்
ஏன் ?ஏனென்றால் நம்மால் பிரச்சனையை களைய முடியவில்லை பிரச்ச்னைகுள்  ஏன்? மாட்டி கொள்ள வேண்டும் என்று புத்திசாலியாக முடிவெடுக்கலாம், நடந்து கொண்டும் இருக்கலாம் இன்றைய நாட்டின் நிலைமைக்கு

இதோ இதற்கு  வலு சேர்க்க மற்றும் ஒரு வீரிய சம்பவங்களின் அடுக்கு தொடரில் விநோதனியின் வினோத மரணம் காதல் கொடூரமாய் கொக்கரிக்கிறது
நாய்க்கு எங்கு அடிபட்டாலும் காலை தூக்கி கொள்ளுமாம் என்று சொல்லுவார்கள் அதோ போல் புரியவில்லை உலகத்தில் எங்கு எதற்க்காக என்ன பிரச்சனை நடந்தாலும் பெண்களை  கொடூரமாய் இழிவாய் கொடுமை படுத்த படுவது தான் நோக்கமாய் இருக் கிறது அது ஏன் ?ஏன்?  ஏன் ?







8 கருத்துகள்:

  1. இனி வரும் காலத்தில் மறு படியும் பெண்சிசு கொலை அல்லது கருவிலேயே அழித்தல் வந்துவிடும் என்று நினைகிறேன்
    ஏன் ?ஏனென்றால் நம்மால் பிரச்சனையை களைய முடியவில்லை பிரச்ச்னைகுள் ஏன்? மாட்டி கொள்ள வேண்டும் என்று புத்திசாலியாக முடிவெடுக்கலாம், நடந்து கொண்டும் இருக்கலாம் இன்றைய நாட்டின் நிலைமைக்கு//

    இதைபடிக்கும் போது மனம் பதறுது.
    பெண்பிள்ளைகளை வெளியில் அனுப்பிவிட்டு கடவுளிடம் பத்திரமாய் கொண்டு வந்து சேர்த்து விடு என்று பிராத்தனை செய்யவேண்டும். காலம் கலிகாலம் ஆகி போச்சு என்று தான் சொல்ல தோன்றுகிறது.
    பெண்கள் தங்கள் பலம், பலவீனம் இரண்டும் தெரிந்து நடந்து கொள்ளவேண்டும்.
    பெண்களை விளம்பரங்களில் இழிவாக காட்டும் போது தடுக்கவேண்டும். பெண்களை நாடகங்களில் அன்பில்லாதவர்களாய், வில்லிகளாய், சதிதிட்டம் தீட்டுபவர்களாய் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அதை நட்ட நடுக்கூடத்தில் உட்கார்ந்து எல்லோரும் பார்த்து ரசிக்கிறார்கள்.
    அன்பு, பண்பு வீரம் இவை இப்போது பெண்களுக்கு வேண்டும். நாம் யார் என்பதை ஒவ்வொரு பெண்ணும் தெரிந்துகொள்ளவேண்டும்.
    நன்றி நல்ல பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ.. பெண் சமுகம் இன்னுமும் விழித்து கொள்ளவில்லை என்றே நினைகிறேன்

      நீக்கு
  2. ஆமாம் .மீண்டும் பெண் சிசு கொலை ஆரம்பிக்காமல் இருக்க வேண்டும்.
    பெண்கள் வீரம் மிக்கவர்களாக இருக்க வேண்டும்,
    ஆனால் இது ஒரு தீர்வே இல்லை என்று தான் தோன்றுகிறது. சுமுதாயக் கண்ணோட்டம் மாற வேண்டும்.
    அது தான் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சமுதாய கண்ணோட்டத்தில் மாற்றம் வராமல் எதுவும் செய்ய முடியாது வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. ஒரு நல்ல மனிதன் உருவாவது முதலில் வீட்டிலிருந்து தொடங்குகிறது... ! நல்ல சமுதாயத்தை உருவாக்க பெற்றோரின் பங்கு மிக மிக அவசியமாகிறது. பெண்களை இழிவுப்படுத்தும் நாகரீகமற்ற விளம்பரங்களை ஊடகங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் வீட்டு மிக முக்கியமான பங்கு வருகைகு நன்றி

      நீக்கு
  4. பதில்கள்
    1. இந்த கூற்றுக்கு பல எதிர்மறை விவாதங்கள் இருக்கே எப்படி எடுத்து கொள்வது ?

      நீக்கு