புதன், 27 பிப்ரவரி, 2013

துப்பறியும் சிசுகள்





சிசுக்களின் காதுகள் 23 வாரம் கர்ப்பத்தில் இருக்கும்போது வளரத்தொடங்குகின்றன

கர்ப்பப்பையில் இருக்கும்போதே சிசுக்களால் ஒலிகளைக் கேட்க முடியும் என்பது ஏற்கனவே விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட ஒன்றுதான். ஆனால் கூடுதலாக இப்பொழுது சிசுக்களின் வளர்ச்சியின் மற்றொரு அம்சமாக இவை 

பிக்கார்டி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் 'கர்ப்பப்பையில் இருக்கும்போதே குரல்களை உணர முடியும் சிசுக்களால்' என்று கண்டுபிடித்துள்ளனர்

28 வார கர்ப்பத்தில் இருக்கும் சிசுக்களை ஒளி ஸ்கேன்கள் மூலம் சோதனை செய்ததில், அவைகள் வெவ்வேறு வார்த்தைப் பதங்கள் மற்றும் ஆண் , பெண் குரல்களை, சிசுக்களால் பாகுபடுத்திப் பார்க்க முடிகிறது என்று தெரியவந்துள்ளதாக கூறுகின்றனர்.

தாயின் கருப்பையில் இருக்கும்  போதே சிசுக்கள், பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே, வெளியில் இருந்து வரும் பேச்சொலிளிகளில் காணப்படும் வேறுபாடுகளைப் புரிந்துகொள்கின்றன என்று பிரெஞ்சு விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மனித மூளைக்கு பேசப்படும் மொழியைப் புரிந்துகொள்ளத்தேவையான உள்ளார்ந்த அறிவுத்திறன்  அவைகளுக்கு இருப்பதாக தாங்கள் நம்புவதாக பிரெஞ்சு விஞ்ஞானிகள் குழு கூறுகிறது.

இனி யாரிடம் பேசுகிறோம்  என்ன பேசுகிறோம் எந்த தொனியில் பேசுகிறோம் என்பதை கருவுற்றிருக்கும் தாய்மார்கள்  உணர்ந்து  செய்தால் நல்லது 


12 கருத்துகள்:

  1. ஆமாம் . நீங்கள் சொல்வது போல் இனிமேல் பார்த்துப் பேசவேண்டும். கர்ப்பிணிகள் மட்டுமல்ல கர்ப்பிணிகளிடம் பேசுபவர்களும் கூட தான்.

    பகிர்விற்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கருத்துக்கு கவனமுடன் காப்போம் இனிவரும் தலைமுறையை

      நீக்கு
  2. அபிமன்யு கர்பத்தில் இருக்கும்போதே வியூகத்தை உடைப்பது பற்றித் தெரிந்து கொண்டானாம்.ஆனால் அதை உடைக்கும் விதத்தைத் தெரிந்து கொள்ள முடியாமல் கிருஷ்ணர் தடுத்து விட்டாராம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை சொல்லுங்க நம்ம முன்னோர்கள் எல்லாத்தையும் கண்டுபிடிச்சி கதையா வச்சிடாங்க இப்ப இவங்க புதுசா சொல்லறாங்க

      நீக்கு
  3. என்ன ஒரு ஆச்சரியமான செய்தி! உண்மையில் கர்ப்பிணிகளும், அவர்களுக்கு அருகில் இருப்பவர்களும் கவனமாகவே பேச வேண்டும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னே வருவதற்கு முன்னாடியே இவ்வளவு தில்லாலங்கடினா கவனமாதான் இருக்கணும்

      நீக்கு
  4. அதனால்தான் அந்த நேரங்களில் நல்லவிஷயங்களை பேசவும்,கேட்கவும் சொல்வார்கள் பெரியவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நல்லவையே பேசினால் நல்லது நன்றி கருத்துக்கு

      நீக்கு
  5. சுவருக்கும் காதிருக்கும் என்பார்கள்.... இங்கே கருவுக்கு காது இருக்கிறது. இல்லை எனசொல்லவில்லை. ஆனால் இப்படி எல்லாத்தையும் கேட்டுவிடுகிறதே ... அவ்வ்வ்வ்வ்...:)
    அதுதான். பயம்ம்மா இருக்கூஊ...:)))

    நல்ல பதிவு + பகிர்வு!

    பதிலளிநீக்கு
  6. இனி யாரிடம் பேசுகிறோம் என்ன பேசுகிறோம் எந்த தொனியில் பேசுகிறோம் என்பதை கருவுற்றிருக்கும் தாய்மார்கள் உணர்ந்து செய்தால் நல்லது ..

    சிருஷ்டியின் மகத்தான படைப்பு ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுளின் கம்பியூடர்க்கு முன்னாடி நாம் எல்லாம் ஒன்றுமில்லைதான்

      நீக்கு