திங்கள், 18 பிப்ரவரி, 2013

மதில் மேல் பூனையாய்

உலகில் 
மரண தண்டனை இன்று மதில் மேல் பூனையாய் எப்பொழுதும் அல்லாடி 
(இந்த பக்கம் மா அந்த பக்கமா) கொண்டு  இருக்கிறது 
ஆம் உலகில் 140 க்கும் அதிகமான நாடுகள் மரண தண்டனையை முற்றாக ஒழிந்துவிட்டனாவாம்,

இந்தியாவில் ,1455 பேர் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளி விபரங்களை மேற்கோள் காட்டி, ஆசிய மனித உரிமைகள் மையம் என்ற மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

மரண தண்டனைகள் மூலமாக குற்றங்கள் தடுக்கப்படுகின்றன என்பதற்கு எவ்வித அறிவியல் ஆதாரமும் கிடையாது என்றும் அது கூறுகிறது.

 இந்தியா அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனைகளை அளிப்பதாகக் கூறுகிறது. இருந்தும் நாட்டில் மூன்று நாட்களுக்கு ஒருவருக்கு என்ற வகையில் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. அதாவது ஆண்டுக்கு 132 பேருக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்படுகிறது.
மேலும் கடந்த 2001 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 4,321 தூக்கு தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பளிக்கப்பட்டு, அவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


மகாத்மா காந்தியை கொன்ற நாத்துராம் கோட்சேவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட போதிலும் அதனால் பிற அரசியல் கொலைகளை தடுத்து நிறுத்தமுடியவில்லை.
இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, பஞ்சாபின் முதல்வர் பியாந்த் சிங், நாடாளுமன்ற உறுப்பினர் லலித் மாகேன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்த அமைப்பு சுட்டிக் காட்டுகிறது.


ஆனால் கடந்த 2001 ஆம் ஆண்டில் இந்தியாவில் 36,202 பேர் கொலை செய்யப்பட்டு இறந்துள்ளனர். 2011 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 34,305 ஆக குறைந்துள்ளது. இந்தக் கால கட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 19 கோடியாக உயர்ந்தும் கொலைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளி விபரங்களில் இருந்து அறியக் கூடியதாக உள்ளது.(அப்படியானால் நாட்டில் மூன்று நாட்களுக்கு  ஒன்று என்ற மரண தண்டனையை  மாநிலத்திற்கு  ஆறு நாடகளுக்கு  ஒன்று என்று சட்டம் வந்தால் கொடூரகொலைகளின் சாயல் நிற்க்குமோ )

கடந்த 15 ஆண்டுகாலப் பகுதியில் 4 பேர் இந்தியாவில் தூக்கிலிடப்பட்டுள்ளனர் அவர்களில் இருவர் கடந்த நான்கு மாதங்களில் தூக்கிலிடப்பட்டனர்.
கே ஆர் நாராயணன், அப்துல் கலாம், பிரதீபா பாடில் ஆகிய மூன்று ஜனாதிபதிகளும் கருணை மனுக்களை தள்ளுபடி செய்வதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.(என்ன செய்யவது குற்றத்தின் கொடூரம் மனித நேயத்திற்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறதே )

பிரணாப் முகர்ஜி பதிவியேற்ற 7 மாதங்களில் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் உட்பட 7 பேரின் கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். இவர்களில் இருவர் ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுள்ளனர். மேலும் 9 பேரின் கருணை மனுக்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவதிலும் சில பாரபட்சங்கள் காட்டப்படுவதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது. (குற்றங்களுக்கும் விலை போகும் விமர்சனங்கள் )
மனிதன் அல்லது மனிதர்கள் காட்ட தவறிய தனிமனித ஒழுக்கத்தையும் மனிதாபிமானத்தையும், மனித நேயத்தையும் சட்டம் காட்ட வேண்டுமாம் 


5 கருத்துகள்:

  1. மரணதண்டனை கட்டாயம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. உயிரை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை.

    பதிலளிநீக்கு
  2. மரண தண்டனையை
    ஒழித்து விடலாம்
    சரியான யோசனை.
    வரவேற்று. பாராட்டபடவேண்டியது.

    பிறர் உயிரை எடுக்க உரிமை
    நீதிமன்றங்களுக்கு மட்டும் கிடையாது

    ஆனால் வெளியில் இருப்பவர்கள்
    அந்த உரிமையை எடுத்துகொள்ளலாம்
    அதை யாரும் தடுக்க முடியாது.

    தற்போது உள்ளதுபோல் ஓடும் பேருந்தில்.
    ரயிலில்,திரைப்படங்களில்,
    வீடுகளில் எங்கு வேண்டுமானாலும்
    பெண்களை பாலியல் கொடுமை செய்யலாம்.
    செய்துவிட்டு மாட்டிக்கொண்டால்
    நாங்கள் அதை செய்ய வில்லை
    என்று சொல்லட்டும்.

    பாதகம் செய்தவர்களுக்கு
    தண்டனையும் கிடையாது

    பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் வாழ்நாள்
    முழுவதும் புழுங்கி சாகட்டும்.
    உயிரோடு இருந்தால்

    எங்கு வேண்டுமானாலும் குண்டு
    வைத்து நூற்றுக்கணக்கில்
    மக்களை கொல்லலாம்

    ஆளும் வர்க்கம் யார்மீதாவது
    பழி போட்டுவிட்டு தப்பித்துவிடும்.

    வல்லரசுகள் அற்ப காரணங்களுக்காக
    மற்ற நாடுகள் மீது தொடர்ந்து
    குண்டு மழை பொழிந்து லட்சக்கணக்கில்
    உயிர்களை கொல்லலாம்.

    துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு
    காரணமில்லாமல் ஒருவரை ஒருவர்
    சுட்டு கொல்லலாம்

    திட்டம் போட்டு கொலை செய்த
    குற்றவாளி மட்டும் பல வருடம் வழக்கு
    விசாரிக்கப்பட்டு நீதிமன்றம் மரண தண்டனை
    தீர்ப்பளித்தால் மட்டும் தண்டனை நிறைவேற்றக்கூடாது.

    முற்போக்கு சிந்தனையாளர்கள் வாழ்க

    பதிலளிநீக்கு
  3. தெய்வம் நின்று கொள்ளுமாம் எப்போது அது நிற்க இடம் சிசி இந்த பழம் புளிக்கும் என்பது போல் அதுவும் சீ சீ இங்கு அசுத்தங்கள் மட்டுமே கால் வைக்க இடமில்லை என்று வாராமல் இருந்துவிடுகிறதோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அசுத்ததிலேயே
      சுத்தம் உள்ளது

      பிரச்சினைகளிலேயே
      தீர்வும் உள்ளது

      நீக்கு