புதன், 20 பிப்ரவரி, 2013

புதனின் புதிர் -வியப்பு



ஆம் புதன் கிரகத்தை பற்றி அறிந்தவைகளை இன்று ம்று ஆலோசனை செய்கிறது அறிவியல் விஞ்ஞானம் 
இதுவரை புதனை சூரியனுக்கு மிகவும் அருகில் இருக்கும் கோளாகவே அறியப்பட்டு வந்தது 
தற்பொழுது  அந்தக் கோள்தான் எப்போதுமே சூரியனுக்கு அருகில் இருந்தததாகக் கூறமுடியாது என்று அறிவியலாளர்கள் இப்போது கருத ஆரம்பித்துள்ளார்கள்.
புதனின் தோற்றம் குறித்து இப்போது ஆய்வாளர்கள் மறுஆய்வு  தொடங்கியுள்ளார்கள்.
அந்தக் கோளில் உள்ள சில வேதியல் பொருட்கள் அதீதமான வெப்பத்தில் உருவாகியிருக்க முடியாது என ஆய்வாளர்கள் எண்ணுகிறார்கள்.
அமெரிக்க தேசிய விண்வெளி அமைப்பான நாசா புதன் கோளை ஆய்வு செய்ய ஏவிய மெஸஞ்சர் என்ற விண்கலம் எடுத்து அனுப்பியப் படங்களை வைத்தே இப்படியான கருத்துக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.
புதன் கோள் நமது சூரிய மண்டலத்துக்கு வெளியே உருவாகி இருக்கலாம் என்றும், பின்னர் அது மிதந்து வந்து இப்போது இருக்கும் இடத்துக்கு வந்திருக்கலாம் என்றும் நாசா விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
பூமியிலிருந்து புதனைப் பார்க்கும்போது மங்கிப் போன பழுப்பு நிற உருண்டையாக தெரியும். ஆனால் அந்தத் தோற்றத்துக்கு மாறாக அதன் மேற்பரப்பு புகைப்படங்களில் வேறு மாதிரியாகக் காணப்படுகிறது என தற்போது கிடைத்துள்ள புகைப்படங்களை பார்த்த பின்னர் நாசா விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
புதிய புகைப்படங்களில் புதனின் பரப்பிலுள்ள எரிமலை பள்ளத்தாக்குகள் ஆரஞ்சு வண்ணத்திலும், சில பகுதிகள் ஆழ்- நீல வண்ணத்திலும் இருப்பது தெரிகிறது.
புதனின்  புதிர் -வியப்பு 
ஒளி ஊடுறுவ முடியாத மர்மமான தாதுப் பொருளையே அந்த ஆழ்-நீல வண்ணம் காட்டுகிறது என அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகத்தின் இயற்பியல் துறை பேராசிரியர் டாக்டர் டேவிட் ப்ளீவெட் கூறுகிறார்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போதே, புதன் வேறு எங்கோ உருவாகி மெல்ல மெல்ல வான் மண்டலத்தில் மிதந்து நகர்ந்து தற்போது இருக்கும் இடத்துக்கு வந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பீடாக உள்ளது.
அந்தக் கோளில் இருக்காது என்று கருதப்பட்ட விஷயங்கள் அங்கு உள்ளன என்றும் அது மேலும் தமது கருத்தை வலுப்படுத்துவதாகவும் அமெரிக்க அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
புதனின் நிழல் படிந்த பெரும் பள்ளங்களில் உறைபனி இருப்பதையும்,அதன் துருவப் பகுதியிலும் அதே போன்று காணப்படுவதாகும் கூறும் விஞ்ஞானிகள், சூரியனுக்கு மிகவும் அருகில் இருக்கும் கோளில் இப்படி உறைபனி இருப்பது வியக்கத்தக்கதாக உள்ளதாக கூறுகின்றனர் 
அதேபோல விரைவில் ஆவியாகக் கூடிய கந்தகம் மற்றும் பொட்டாஷியம் போன்றத் தனிமங்களும் மிக அதிக அளவில் காணப்படுவதாகவும் புகைப்படங்கள் மூலம் தெரிய வருவதாகவும் கூறும் விஞ்ஞானிகள் இவையெல்லாம் பெரும் புதிராக உள்ளன எனவும் கூறுகிறார்கள்.

8 கருத்துகள்:

  1. புதனைப் பற்றிய தகவல்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் ஆச்சரியமாக உள்ளது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் அறியாததும் வியப்பதற்கும் எவ்வளவோ இருக்கும் இறைவன் படைப்பில்

      நீக்கு
  3. வியக்கவைக்கும் அரிய தகவல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள் ..

    பதிலளிநீக்கு
  4. அறிவியல் தகவல்களையும் தந்து அசத்தறீங்க.. ம்ம்... கலக்குங்க.. கலக்குங்க..!!

    பகிர்வுக்கு நன்றி.. தொடர்ந்து எழுத என்னுடைய வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நன்றி வருகைக்கும் கருத்துக்கும் மேலும் வாருங்கள் கருத்துரைக்க

      நீக்கு