புதன், 2 ஆகஸ்ட், 2017

விந்தை திருவிழா

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்லுக்கு  எதிர்ப்பதமாய் ஒரு சடங்கு
விந்தையாக இருக்கிறது பயம் என்ற உணர்வுக்கு அப்பாற்படடவர்களா இவர்கள்
பாம்பு திருவிழா  பிகாரின் சமஸ்திபூரில் நடை  பெறுகிறது ஒவ்வொரு ஆண்டும் நாகபஞ்சமியின்போது, பாம்புகளை கையில் ஏந்தியபடி மக்கள் ஊர்வலமாக செல்கின்றனர் மகிழ்ச்சியாக கொண்டாடி .சின்னசிறுசுகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொள்கிறார்கள்
இதற்காக இவர்கள் ஒரு மாத்திற்கு முன்பே இருந்து பாம்புகளை பிடிக்கின்றனர், பாதுகாக்கின்றனர்.... அவற்றின்  நச்சுக்கள் நீக்கப்படுகின்றன
நாகபஞ்சமியின்போது போது  பாம்புகளுக்கு பால் கொடுக்க வேண்டும் என்னும்  சடங்கு ,நம்பிக்கை
பார்வதி அம்மனை வணங்கி..... பாம்புகளுடன் நதிக்கு சென்று பூஜை செய்து அங்கிருந்து காட்டுக்கு கொண்டு போய் சேர்க்கிறார்கள் இந்த பாம்புகளை.....
பூஜையில் பாம்புகளுக்கு பாலும் பொரியும் கொடுக்கப்படுகிறது ....
பாம்புகளை வாழ்வில் ஒரு அங்கமாய் இவர்கள் உணர்கிறார்கள் .....இயற்கைக்கும் தமக்குமிடையே இருக்கும் நெருங்கிய சொந்தமாகவே இதை அவர்கள் பார்க்கிறார்கள் ....
Image result for பாம்பு திருவிழா





4 கருத்துகள்: