மும்மாரி
பொழிந்து உச்சி முகர்ந்த மழையோ !
இன்று
முன்னறிவிப்பில்லாமல் முகம் திருப்புகிறது
முன்
தலைமுறைக்கு முகம் கொடுத்த உழவா !
என்
தலைமுறைக்கு வாசல் திறக்க மறுக்கலாமா ?
காவேரி
பாய்ந்து குளித்து குளிர்ந்த உழவு(பூமி)த்தாய் !
இன்று
கட்டிடத்தின் கீழ் சமாதி நிலையில் !
இயற்கை
எல்லாம் செயற்கை பூச்சிகொல்லியாய் !
மனிதனின்
மரண முகவரிக்கு ஓலை விதைக்கின்றன !
மரித்து
போன உழவனின் மானத்தை
விலை
கொடுத்து வாங்கும் அரசு
வரலாற்றின்
பொற்காலங்களாய் இருந்துவிட்டு
வழிதுணைக்கு
கூட வரலாற்றில் இல்லாமல் போய்விடுமோ !
கற்பம்
சுமந்த பெண்ணை போல் பூமித்தாயை காத்த
உழவனின்
நிலை கழனிவிட்டு பழனி போகும்படி
காற்றாடும்
வயல்வெளிகள் எல்லாம்
தார்
சாலையாய் மாறும் காலம் வந்ததோ !
நடவு
பாடல்கள் எல்லாம் ஒப்பாரி பாடல்களாய்
வயல்வெளியின்
வெட்ட வெளியை நோக்கி
இயந்திரத்தின்
உதவியால் உருமாரிய உழவு
முன்
தலைமுறையின் ஆரோக்கியத்தை இழந்து
உழவனின்
வியர்வைக்கு முன்னே !
உலகத்தின்
உயர்வை நிறுத்த முடியுமோ ?
உயர்வு
கொடுக்கும் உழவை மறந்தோம் மறுத்தோம்
உயிரை
காக்கும் உணவை மறப்போமா? மறுப்போமா?
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குநல்ல சிந்தனை! வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு