மாற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 நவம்பர், 2017

தேவதை என்னும் அரக்கன்-நிஜம்

நடப்பது என்ன ?

                                                                    

தேவதை என்னும் அரக்கன் செய்யும்  விபரீதத்தை பாருங்க இந்த செல்போன் என்னும் அரக்கன் செய்யும் அட்டுழியங்கள் பல என்று   முன்பே பதிவு போட்டு இருக்கிறேன் கொஞ்சம் கவன குறைவாய் இருந்தாலும் சரி நம்  இழப்பை  ஈடு செய்ய முடியாமல் போய்விடும்.
இதை  பற்றி ஒரு நிஜம் இங்கே...................

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கருப்பையா நகரைச் சேர்ந்தவர் ஜெயம்.இவர் ஒரு  ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியை, இவருடைய மகன் செந்தில், டிகிரி முடித்துள்ளார்.


கடந்த சில தினங்களாக. செந்திலின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்துள்ளது. நாள் செல்ல செல்ல, பெற்ற தாய் என்றும் பாராமல் ஜெயத்தை அடித்து துன்புறத்தத் துவங்கியுள்ளார்.காரணம் புரியாமல் அந்த தாய் தவித்துள்ளார்


செந்திலின் கொடுமை உச்சக்கட்டம் அடைய, வேறு வழி அற்று ஜெயம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் .

போலீசும் நடவெடிக்கையில் இறங்கியது, 



செந்திலிடம் போலீசார் விசாரிக்கையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதில், கடந்த சில தினங்களாக புளூவேல் விளையாட்டை விளையாடியதாகவும், விளையாட்டில் கொடுக்கப்பட்ட கட்டளைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வந்ததாகவும் செந்தில் கூறினார்.
தொடர்ந்து, புளூவேல் விளையாட்டில், தாயை அடிக்கச் சொல்லி கட்டளை வந்ததாகவும், அதன்படி தாயை அடிதத்தாகவும் கூறியுள்ளார்.


இவனை போல் மாக்கான்கள் இருக்கும் வரை சைக்கோ தனமாய் விளையாட்டுகளை உற்பத்தி பண்ணும் சைக்கோக்களுக்கு வசதிதான்......


விளையாட்டில் கொடுக்கப்பட்ட கட்டளைக்காக, பெற்ற தாயையே மகன் அடித்து கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம் அனைவரையும் அதிரச்சிக்குள்ளாக்கியுள்ளது.இப்ப அதிர்ச்சி ஆகி என்ன செய்வது முதலிலேயே கவனித்து இருக்கனும் நம்ம வீட்டுது  சைக்கோ ஆகிறதா என்று .......

செவ்வாய், 14 நவம்பர், 2017

கேட்டிங்களா கேட்டிங்களா கதையை


                        மகாத்மா காந்தினாலே  அவர் கண்ணாடியை  தாம் முதலில் நினைவு கொள்வோம் ஏதாவது புதிர் காம்படீஷன் வந்தால் கூட  அந்த கண்ணாடியை வைத்தே கண்டுபிடித்துவிடும் அளவுக்கு மகத்துவம் பெற்ற அவர் கண்ணாடி அடையாள சின்னம்- இது தூய்மை இந்தியாவின் அடையாள சின்னமாக உள்ளது.



                          சரித்திரம் படைத்த இந்த கண்ணாடியை மாற்ற சொல்லி இந்தியாவிற்கு பயணம்  வந்த ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி லியோ ஹெல்லர்   சொல்லிட்டார் எப்படின்னா  "தூய்மை இந்தியா திட்டத்தின் சின்னமான மகாத்மா காந்தியின் கண்ணாடியைப் பார்த்தேன். இது மோசமான நிலைமை. விரைவில் காந்தியின் கண்ணாடியில் மனித நேயத்தின் லென்ஸை மாட்ட வேண்டும்" 

                           தூய்மை படுத்த ஐடியா கொடுப்பாங்கனு பார்த்தா இவங்க கண்ணாடியை மாற்று வேஷ்டியை மாற்று என்று டிரெஸ் சென்ஸ்க்கு  சொல்விட்டு போயிருக்காரு ... 



                          இது பயங்கர சர்ச்சையை கிளப்பியுள்ளது  நாமதான் சர்ச்சயை கொண்டாடுவதில் வல்லவர்கள்  ஆச்சே 



                          அரசு தரப்பில் இருந்து "மகாத்மா காந்தி மனித உரிமைகளுக்கு(இதபாருங்க ஜோக்கு மனித உரிமையாம் இதுதான் புரியமாட்டேங்குது இதெல்லாம் நல்ல சொல்றாங்க ஆனா பின்பற்றுகிறார்களா  இதைமட்டும் கேட்க கூடாது )  முன்னுரிமை அளித்தவர் என்பது உலகத்தில் அனைவருக்கும் தெரியும். சுகாதாரதைப் பேண தனி கவனம் செலுத்தினார். தூய்மை இந்தியா திட்டத்திற்கு அவரது கண்ணாடி மிகவும் பொருத்தமானது" என்று பதிலை கொடுத்து இருக்கிறது. இதுமாதிரி ஒண்ணுமில்லாத விஷயத்திற்கு தீர்ப்பு சொல்லனும்னா தெளிவா உடனே சொல்லுவோமில்ல  


ஞாயிறு, 12 நவம்பர், 2017

புதுமை என்பது இதுதான்

புதுமை என்பது இதுதானா .....




                    இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலை கழகங்களில் ஒன்று பூனே பல்கலை கழகம்  இங்கு நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். திடிரென்று இந்த  பல்கலைக்கழக மாணவர்களுக்கு தங்க பதக்கம் வழங்க, பல்கலைக்கழக நிர்வாகம் புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளதாம் .                     

                 

                     அது என்னவென்றால்  இங்கு படிப்பை மட்டும் அடிப்படையாக கொண்டு தங்கப்பதக்கம் இனி வழங்கப்படமாட்டாது 


பின்னர் எப்படி  தங்க பதக்கம் வாங்குவது ?

                    


                       தங்க பதக்கத்தை  விரும்பும் மாணவர்கள், படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டும் போதாதாம்...... அவர்கள்  அசைவம் சாப்பிடாதவர்களாக இருக்க வேண்டுமமாம் ...... அதுமட்டுமில்லை மிக முக்கியமான புதுமை , மாணவர்கள் மது அருந்தாமல் டீடோட்டலர்களாக இருக்க வேண்டும் என்றும் புனே பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாம்  இப்படித்தாங்க மாற்றத்தை கொண்டுவரனும் .ஆனா அப்படி மதுவே அருந்தவர்கள் எப்படி கண்டுபிடிப்பாங்க மருத்தவம் காண்பிக்குமோ? 


                  மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் தங்கப்பதக்கம் வழங்கப்படாது என்றும் மாணவர்களின் பழக்க வழக்கங்களை பொறுத்தே வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளதால் பழக்கவழக்கம் என்பது நெறிமுறை படுத்தபடுமா? இப்பொழுதே அங்கே போயி இதை பற்றி  ஆராயவேண்டுமென்று வேகம் வருகிறதே....... எப்படி இதை கண்காணிக்க போகிறர்கள் என்று ...


                    இதுமட்டுமல்ல பதக்கம் வாங்கும் மாணவர்கள் ஷெலர் மாமா.! என்று பட்டபெயரும் கொடுக்கப்படுமாம் இந்த விதிகளுக்கு உட்படடவர்கள் இங்கு சேர்வதற்க்கான விண்ணப்பங்கள் நவம்பர் 15ஆம் தேதி வரை பெறப்படும் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறதாம்   ஏன் இப்படி திடீரென்ற முடிவு குற்றங்களை குறைக்கவா ?மாமிசம் என்பது மதுவுடன் சம்பந்த படுகிறது என்ற நோக்கத்திற்காகவே இப்படி மாமிசத்தையும் சேர்த்து தடை செய்திருக்கிறார்களா??

                     

                     இதை பெற்றோர்களே வரவேற்பார்களா என்பது சந்தேகமாகவே  இருக்கிறது ஏனென்றால் மாமிசம் மட்டுமே சாப்பிட்டு வாழும்  சமூகதினரிடமிருந்து இதற்கு  வரேவேற்பு நிச்சியம் இருக்காது.   

                    

புனே பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் பயங்கர எதிர்ப்பை கிளப்பியிருக்கிறதாம் . மாணவர்களிடையே பிளவை ஏற்படுத்தும் செயல் என்று பல்வேறு அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


உணவு என்பது பிளவை கொடுக்குமா? 
    

நீங்களும் சொல்லுங்களேன்......... 


வெள்ளி, 3 நவம்பர், 2017

தன் இருப்பிடங்களை தேடி..

மழை தன் இருப்பிடங்களை தேடி அலைகிறது .....
எங்கேடா??? என் குளங்கள்....... 
எங்கேடா???? என் ஏரிகள் ......
தன்  இருப்பிடம் கிடைக்காத  சோகத்தில்....... 
தெருக்களில்  அலைந்து கொண்டு இருக்கிறது ........
யாரோ  நம்மை போல் இதை பகிர்ந்திருந்தார் முகநூலில் கவிதையாய் பெயரை படிக்காமல் விட்டுவிட்டேன் .....எவ்வ்ளவு உண்மை இந்த வரிகளில் ....
அந்த சோகமே கோபமாய் தாக்கிடுமோ என்பது போல் கண்ணுர்றேன் இன்று



மழையின் போக்குவரத்து இன்று சென்னையில் இன்று நான்  காலையில் பிராட்வே வரை செல்ல வேண்டி வந்தது போகும் போது கண்டது  மழையின் தாண்டவம்  என்று சொன்னால் கடவுள் இறங்கி வந்து பளாரென்று அறைந்துவிடுவார்......  மக்களின் மேம்போக்குத்தனம் ஆடுகிறது ஆடிவிட்டது எல்லா பக்கமும்  இரண்டு மாதத்துக்கு  முன் தண்ணீருக்கு காக்காயை போல்  பறந்தது பறந்து ஆடியது கொடுமையை அனுபவித்தது ....இன்று தண்ணீரை கண்டு பயந்து நடுங்குகிறது எங்கே செல்கிறோம்     சரி செய்யமுடியாத இடத்தை நோக்கி நகர்ந்துவிட்டோமோ என்று பயம் வருகிறது.

மழை  நீர் சேகரிப்பு நல்ல திட்டம் ஆனால் அது முழுவதும் எல்லா இடத்திலும் சரியாக பராமரிக்க படவில்லை என்பது தான் கண்முன் பார்க்கும் உண்மை நிலவரம்  இதற்கு  யார் காரணம்? மக்களாகிய நாம் தான் நாமே நம்மை கவலைக்கிடமாக  வைத்து கொள்கிறோம் ஆக்கிவிட்டோம். மேலும் அதில் முழுவதும்மண் சேர்ந்து  அடைத்து கொள்கிறது கடலில் போயி சேர்வதற்கு  பதிலாய் ஒவ்வொரு நகரிலும் பொதுவாய் ஒரு அல்லது இரு  பொது  இடத்தை தேர்ந்தெடுத்து   பெரிய அளவில் மழை நீர் சேகரிப்பு கட்டி பராமரிக்கலாம் என்று தோன்றுகிறது .தண்ணீர் கஷ்டமும் கொஞ்சம் குறையும்


இன்னுமொன்று  குப்பை அதுவும் மார்கெட் என்று ஒன்று இருக்கும் இடங்களில் நடக்கும் அடடாகாசம் தாங்கவில்லை எவ்வ்ளவு தான் இடங்களை அவர்களுக்க ஒதுக்கி வைத்தாலும் அவர்கள் அந்த இடத்தை சரிவர பயன் படுத்துவதில்லை நடை பாதையிலேயே  போட்டுவிடுவதில் அவர்களுக்கு என்ன சந்தோசம் வருகிறது என்று புரியவில்லை குப்பை லாரிகள் வரவில்லையென்றால் அந்த இடத்து மக்கள் படும் அவதி சொல்லி வடிக்க முடியாதவையாக இருக்கிறது   ஒழுங்கீனம் ஒழுங்கீனம் என்பதை வாசல்களாக ஆகி  கொண்டோம் இதற்கு சப்பைக்கட்டாய் அரசியல் சூதாடங்கள் மேற்கோள்கள்


அடுத்து அவர் அவர்கள் வீட்டு  வேலைகளுக்கு  நோண்டப்படும்  ரோடுகளை திரும்பவும் செப்பனிட மெனக்கெடுவதில்லை இது சுயநலம் தானே ஒவ்வொருவருக்கும் தோன்ற வேண்டும். தன் வீடு  இருக்கும் ரோட் நல்ல இருக்க வேண்டுமென்று.  வீட்டினுள்ளே  மட்டும் சுத்தம் பத்தம் வெளியே நாற்றம் பற்றி கவலையில்லை வெறுமனே புலம்பல் நாட்டை  குறை கூறி அடுத்தவரை குறை கூறி ....


மேம்பாலங்கள் கட்டி போக்குவரத்தை வழிநடத்தப்பட்டது பலன்களுக்கு பாலத்தின் அடியில் என்ன நிலை இன்று எல்லோருமே பாலத்திலே செல்ல முடியுமா ? நாம் புலம்பும் புலம்பல் எல்லாத்துக்கும் வரிகட்டுறேனே அப்புறம் திரும்பவும் நானே என்னை பார்த்து கொள்வதா ? என்ற கோபமான அலட்சியம்....... சரி இதற்கு முடிவு இப்படித்தான் ஒன்று கூடி  அனுபவிப்போம்..... ஆனால் ஒன்று கூடி  போராடமாட்டோம் நிற்கமாட் டோம் உண்மையாக.... யாரவது பார்த்து கொள்ளட்டும் நான் கை  மட்டும் தூங்குகிறேன் எனக்கு நேரமில்லை என்று ஒதுங்கி ஓடுவோம். ஆம்உங்களுக்கு  நேரமில்லை வாழ........ உன்னை நோக்கி நோயிகளின் அணிவகுப்பு உன் நேரமின்மைக்கு பரிசாய்


பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்
 நானும் ஒதுக்கிட்டு வழிவிட  வேண்டும்
என்ற நிலை இனி  வருமா .................
சிறுவயதில் மழை  வந்தால் குதித்து  நனைந்து காகித கப்பல்விட்டு மகிழ்ந்த காலமெல்லாம் போய்விட்டது....... இன்று மழை வந்தால் ஐயோ! மழை நீர் வடியாதே..... அதனுடன் எந்த சாக்கடை நீர் கலக்கிறதோ பயம் ஐயோ கூரையில்லாத  மக்கள் என்ன செய்கிறார்களோ...... என்ற பயம் மட்டுமே இன்று சென்னைவாசியாய் ஆகி  போனதில் பலபேருடைய ஆதங்கம் ,ஏக்கம் .....மழை புலம்பலில் இருந்து விடிவு  வருமா....... யார்? தரவேண்டும் என்ற கேள்வியை தாங்கி  நானும்....... 


திங்கள், 30 அக்டோபர், 2017

டெடிக்கேஷன் (Dedication) வேண்டும் .

நடப்பது என்ன? -7 


அறியாத வயதில் டீன் ஏஜ்  நட்பு  எப்படி பட்டதாக  அமைந்துவிடுகிறது அது எம்மாதிரியான   பிரச்னைகளை  கொண்டு வந்துவிடுகிறது என்பதனை   பார்த்து வருகிறோம் போன பதிவில் நடப்பது என்ன ?-பகுதி 6ஒரு நிஜமாய் நடந்த சம்பவத்தை பகிர்ந்து இருந்தேன் அதை படித்து கருத்துகள்  பகிர்ந்த அனைத்து தோழமைகளுக்கு நன்றி..... டீன்  ஏஜில் செய்யும் தவறுகள் வெளிச்சத்துக்கு வரும்போது தான் குடும்பத்தையே தலைகுனிய வைத்துவிடுகிறது .



ஏன் இப்படி நடந்திருக்க வேண்டும் .கட்டுப்பாட்டுடன் வளர்ந்திருந்தாலும் வளர்த்திருந்தாலும்  எங்கே தவறிவிடுகிறோம் நாம்...... அது நம் மேல் நாமே சில நேரம் கொண்டுள்ள நம்பிக்கை நான் சரியாக வளர்கிறோம் கண்டிப்புடன் அதனால் தவறு ஏற்பட வாய்ப்பு வராது என்று நினைத்து  கொள்கிறோம். ஆனால் டின் ஏஜ் என்பது எல்லாவற்றுக்கும் அப்பாற் பட்டது அது எந்த நேரம் எதை செய்யும்  என்று நம்மால் கணிக்கவே முடியாது. 



டீன்  ஏஜ் என்பது ஒரு புது உலகம் புரியாத வயது அங்கு பார்க்க படுவதெல்லாம் அவர்களுக்கு பிரமிப்பும் இனம் புரியாத மகிழ்ச்சியையும் கொடுக்கும் வயது .படிப்பை வைத்து  புத்திசாலி என்று இனம்காணப்படும்  பிள்ளைகளிடமும்  திமிராய் இருக்கும் அறிவுத்தனம் ,அறிவுத்தனமாய் இருக்கும் அசட்டுத்தனம் இருக்கும்.  



நாம் செய்ய வேண்டியது என்ன கண்காணிப்பு... கண்காணிப்பு ....கண்காணிப்பு பிள்ளை என்று பெற்றுவிட்டோம் அதுவே நம் வாழ்வின் முதல் கடமை எல்லாவற்றயும் விட    என்ற மனநிலை வரவேண்டும். கொஞ்சம் சோம்பலோ இல்லை வேறு காரணங்கலோ இந்தவிஷயத்தில் தடுப்பாக வர விட கூடாது.



பிள்ளைகள் யாரிடம் நட்பு வைத்திருக்கிறார்கள்.... . அவர்களின் பின்னனி  எங்கு செல்கிறார்கள்? யாருடன் செல்கிறார்கள்? உங்களிடம் சொல்விட்டு சென்றாலும் சொன்ன இடத்திற்கு தான் சென்று வருகிறார்கள் என்பதயும்.... சில  பல முறை கண் காணிப்பில் வையுங்கள். பழக்க வழக்கத்தில்  சின்ன மாறுதல் வந்தாலும் உஷாராகுங்கள் அவர்களின் உடல்  மொழியையும் கவனியுங்கள். திடிரென்று பணம் கேட்டால் எதற்கு  என்று நன்றாக  விசாரித்த பின் தேவையானவற்றிற்கு  மட்டும் கொடுங்கள்.  



படிப்பில் கவனம் குறைந்தால் வயது என்று காரணம் சொல்லி தள்ளி போட்டு விடாதீர்கள்.... என்னவாக காரணம் இருக்கலாம் என்று துப்பறியுங்கள். கூடா நட்பு வந்துவிட்டால் பதட்டப்பட்டு திட்டி வேறு நிலைக்கு நீங்கள் போகாமல் நாசுக்காக அவர்களை உங்களின் பால் திருப்ப நடவெடிக்கை எடுங்கள். முக்கியமாய் செல்போன் ரகசியமாய் பேசப்படுகிறதா..... கணனி ரகசியமாய்  கையாளப்படுகிறதா .......என்பதை கூர்ந்து  கவனியுங்கள். நான் தான் வாங்கி வைத்துவிட்டேனே  என்று  சமாதானம் படுத்தி கொள்ளாதீர்கள் இந்த வயது நம்மை ஏமாற சொல்லும் வயது. 



பல பிள்ளைகள் செய்யும் தவறுகளுக்கு முன் உங்கள் பிள்ளைகளின் தவறு பெரிதில்லை என்று ஓப்பிட்டு  செய்து தவற விட்டு விடாதீர்கள். தும்பை விட்டு வாலை  பிடித்த கதையாகிவிடும் நாம் கண்டிக்கும் போது அவர்கள் மனஅழுத்தத்திற்கு போவார்கள் இப்பொழுது அவர்களுக்கு நாம் கொடுக்க கூடியது அதிகமான கொஞ்சல் இல்லாமல் உனக்கு  நான் இருக்கிறேன் என்ற தாக்கத்தை கொடுக்கும் அரவணைப்பு. 


முக்கியமாய் தாய் கண்டிக்கும் போது தந்தை அதற்க்கு  எதிரான கருத்துக்கள் கூறுவது தந்தை  கண்டிக்கும் போது தாய்  எதிரான பாசதையும்  தயவையும்  குறிப்பால் உணர்த்துவது போன்ற செயல்கள் அவர்களுக்கு சாதகமாய் போய்விடும். இரண்டு பேருக்குமிடையே சண்டையை மூட்டிவிட்டு அவர்கள் குளிர்  காய்ந்து கொள்வார்கள் அதில் தங்களுக்கு ஆதாயமாய்... கவனம்.

 

எல்லாத்தயும் விட  காதல் என்ற இப்பெயரில் நடக்கும்  கூத்துக்களின்  விளைவால் நிறைய பிள்ளைகள் தங்கள் உயிரை துச்சமென நினைக்கும் மடையர்களாக இருப்பார்கள்  இல்லை இச்சை என்ற மாயைகுள்  சிக்கி கொள்வார்கள் இது மிக பெரிய சங்கிலி  தொடர் போல் தவறுகளை உருவாக்கி விடும்.


 நம்  வாழ்க்கையில் பிள்ளைகளை வளர்ப்பதில்  டெடிகேஷனாக(அர்ப்பணிப்பு )இருக்க வேண்டும்.  எப்படி கடவுளிடம் இருக்கிறோமோ? அப்படி அவர் நம்மை அறிய வேண்டும் நம் வேண்டுதலுக்கு செவி சாய்க்க வேண்டும் என்று இருக்கிறோம் அல்லவா டெடிகேஷனோடு  அப்படி பிள்ளைகளின் மேலும்  இருக்க வேண்டும்.   அப்போதுதான் அவர்களின் உடல், உள்ளம் இரண்டு அலைவரிசையையும்  நம்மால் உணரமுடியும் . வழிகாட்ட  முடியும் தவறுகள் நேரும் முன் காக்கவும் முடியும் 



நாம் நாம்மட்டுமே  அவர்களை காக்கும் கரங்களாக  இருப்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.நாமுடைய  டெடிகேஷன்  அவர்களுடைய உள் உணர்வு அறிய வேண்டும் அவர்கள்  செய்யும் எல்லாமும், எண்ணங்களும் உணரப்படுகிறது என்று அவர்கள் உணர வேண்டும்.  அப்போது அவர்களின் செயல்களில் ஒரு கட்டுக்கோப்பு வர வாய்ப்பு இருக்கிறது . .



இந்த தொடரில் நான் ஆண்  பிள்ளைகள் வளர்ப்பை பற்றி மட்டுமே அலசி உள்ளேன் அவர்கள் செய்யும் தவறுகளின் அதீதத்தை  தொடவில்லை ஏன் என்றால் அது முடிவற்றதாக  இருக்கும். இன்று செய்தி என்று ஒன்றை கேட்க படிக்க  போனால் நாம் பார்ப்பது எல்லாம் கதிகலங்க வைக்கும்  விஷயங்களே இன்னறய இளைய தலைமுறை எதை நோக்கி போகிறது? யார் காரணம்? நாமாக வேண்டாம்........ தவறுகளின் விகிதத்தை  குறைக்க நம்மால் ஆனா முயற்சிகளை  எடுப்போம். 


எனக்கு மனதில் தோன்றியதை இதுவரை பதித்து வருகிறேன் தவறுகள் இருப்பின் எனக்கு  புரிய வையுங்கள் நானும் இன்னமும் பிள்ளை வளர்ப்பை பற்றி கருத்துக்கள் கற்று கொள்ள உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன் .  இதை தொடர்ந்து ஒரு சிறு கதையை  பதிக்கிறேன்  ஒரே டிரையா  போகுதே  கதை வழியாக சொல்லலாமென்று   அடுத்து வரும்  பதிவுகளில் அதற்க்கும்  பின்னர் பெண் பிள்ளைகளின் டீன் ஏஜ்ஜை பற்றி பார்க்கலாம்.

தொடரும் ....
 




சனி, 28 அக்டோபர், 2017

நடப்பது என்ன ?-பகுதி 6

நடப்பது என்ன ?-பகுதி 6



போன பதிவில் டீன் ஏஜ் நட்பு பற்றி  தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி 
நட்பு என்பதை பற்றி ஒரு நிஜ சம்பவம் பகிர்கிறேன் என்று சொன்னேன் அல்லவா அது.......  


அவர்கள் மிக பாரம்பரியம் மிக்கவர்கள் அந்த வீட்டின் பெரியவர் வயது தற்பொழுது 80 தை  கடந்திருக்கும் எல்லோருக்கும் அதாவது அந்த ஏரியாவில் இருக்கும் எல்லோருக்கும் பெரியவராய் இருந்து வருபவர் மதிப்பாய் நல்லது  கெட்டதுக்கு முன்னே நின்று பார்வார் அவர் பஞ்சாயத்தாக  இருந்தாலும் அவரை  அணுகாமல் நடக்காது ....    மொத்தத்தில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பதோடு வாழ்பவர். குடும்பத்தை கட்டுக்கோப்பாய் நடத்துபவர். .அவருக்கு ஏற்ற துணைவியும், வீட்டில் இருப்போரையும்  மேலே சொன்ன க க க வை பின்பற்ற வைப்பவர் உணவு விஷயத்தில் கூட தமிழ் பராம்பரிய உணவை தினமும்  எடுப்பவர் காலையில் களி சாப்பிடுவாங்க வீட்டில் உள்ளோர் அநேகமான  நாட்கள்....... வீட்டில்  தோட்டம் போட்டு கீரைகள் வளர்ப்பார்கள்,மற்றவருக்கும் கொடுப்பார் .தேடிவந்து .... 



அந்த ஏரியா சொந்தமாய் ஒரே ஊரிலிருந்து வந்து ஒரே இடத்தில பணிக்கு சேர்ந்து ஒன்றாய் வீடுகள் வாங்கி வசிக்கும் ஒரு மிடில்கிளாஸ் ஏரியா....... இப்படி பட்டவருக்கு அவருக்கு ஒரு  மகன்  திருமணமாகி 2 பேரன்கள்  எல்லோரும் ஒன்றாய் வசிப்பவர்கள் .இரண்டு  பசங்களும்  வளர்கிறார்கள் மிகவும் மரியாதையுடன் அந்த தெருவில் உள்ளோர்களிடம் அவர்கள் பேசும் போது பேச்சில் அவ்வளவு  பணிவு மரியாதை தென்படும் அந்த பிள்ளைங்களை பார்த்து கற்றுக்கொள் அக்கம் பக்கமுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் கூறுவார்கள். 



அதிகம் அந்த பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே வந்து விளையாட மாடடார்கள் சிறுவயதில்........... டீன் ஏஜ் எட்டி பார்த்தவுடன் விளையாட மற்ற்வர்களுடன் வெளியே தலையை காண்பித்தாயிற்று......... இதில் முதல் பேரன் கொஞ்சம் கலகல டைப்பு வளவளவென்று பேசுவான் கொஞ்சம் வாலு அதிகமாய் திட்டுவாங்குபவன் படிப்புக்காகவும் , இரண்டாவது பையன்  ரொம்ப சூட்டிகை ,அழகும் கூட, திருத்தமாய் பேசும், நல்ல படிப்பவன்  அவர்கள் வீட்டின் செல்லப்பிள்ளை... தாத்தாவால் பாட்டியால் பெருமை பேசப்பட்டவன். இப்படி பட்ட பையன் நட்பினால் எப்படி வாழ்வை சிக்கலாகி கொண்டான் என்று இன்று வரை புரியவில்லை இது எங்களை பொறுத்த வரை பெற்றோரின் கவனகுறைவு என்றே  நினைக்கிறேன் சம்பவம்  நடந்து பேப்பரில் வந்த பின்பும் கூட நம்ப முடியவில்லை 


யாரால் எப்படி இந்த மாதிரி நட்பை பழகி கொண்டான் என்று புரியவில்லை படிக்க டியூஷன் அனுப்பி இருக்காங்க பத்தாவது என்று அங்கெ பழக்கம் வந்து இருக்கிறது...... போதை வஸ்துவை   எடுக்கும் நான்கு பிள்ளைகளுடன்  கூடாநட்பு அங்கெ பிடித்தது ஏழரைநாட்டு சனி...... இவனுக்கும் அந்த பழக்கம் தொற்றி கொண்டுள்ளது. அவனுடைய நடத்தையில்  மாற்றம் வந்திருக்கிறது படிப்பில் நேரம் கழித்து  விட்டு திரும்பல் படிப்பை காரணம் காட்டுதல் இப்படி நடந்து இருக்கிறது.   இங்கு அவனின் அம்மா, பாட்டி அதை பெரியவரை கவனத்திற்கு கொண்டு போகாமல் சமாளித்து இருந்திருக்கிறார் .இவர்களுக்குள் கண்டித்து இருக்கிறார்கள். முக்கியமாய் வெளியே தெரியாமல் இவனோ அந்த நட்புகளுடன்  ஐக்கியம் ஆக்கிவிட்டு இருக்கிறான் . 


பணம் தேவைபட்டு இருக்கிறது போதை வாங்க சின்ன பணதிருட்டு நடந்து இருக்கிறது பணம் பற்றவில்லை இதில் அந்த நட்புக்குள் ஒரு பையனுடைய ஒன்னுவிட்ட தாத்தா தனியாக வசிப்பவர் அந்த பையனின்  வீடு தான் அவருக்கு வேண்டிய உதவிகள் செய்து வருபவர்கள் இவனும் அவருக்கு துணையாக இருப்பவன் அப்போ அப்போ அவரின் பணவரவு வீட்டில் பணமிருக்குமிடம் என்ன பொருட்கள் உள்ளது என்பதையெல்லாம் அறிந்தவன் அங்கெ இருந்து பணத்தை திருடி இருக்கிறான் சில சமயம் இருந்தும் அவர் ரொம்ப உஷார் போல ஏதோ மோப்பம் பிடித்து விட்டு இருக்கிறார்  இதனால் இந்த பிள்ளைகள் கூட்டு சேர்ந்து அவர் வீட்டில்  திருடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டதுங்க இரவில்....... பிளான் போட்டு போயிருக்குதுங்க எல்லாமும் சேர்ந்து அங்கெ சத்தம் கேட்டு அவர் முழித்துவிட்டார்  பார்த்துவிட்டு இருக்கிறார் சத்தமிட்டு இருக்கிறார் அவரை இந்த பிள்ளைகள்  ஆளுக்கு  ஒரு பக்கம் பிடித்து தலையணை வைத்து அழுத்தி கொன்றுவிட்டதுகள் ஒட்டியும் விட்டார்கள் 



மறுநாள் போலிசாரால் கண்டு பிடுக்கப்படுகிறது யாரென்றும் விதி வலியது இங்கு இந்த தெருவிற்கு போலீஸ் விசாரணைக்கு வந்துவிட்டது கைதும்  செய்தாகிவிட்டது கூடா  நட்பு என்ன கொடுத்துவிட்டது...... இன்றுவரை அந்த குடும்ப உறுப்பினர்களை அதிகம்  வெளியே பார்க்க முடியவில்லை.... பேச்சில்லை  பாவம் அந்த பெரியவர் ஒடுங்கி போய்விட்டார். அவரின் மனைவியை பார்த்தே வருடங்கள் கடந்துவிட்டது. மகன் ரொம்ப சாது 40 வயதிலேயே கிழவனாய் தோற்றம் அடைந்துவிட்டார்  பிள்ளையை ஜாமினில் எடுக்க அள்ளும் பகலும் புழலின் வாசலில் என்ன செய்ய பாசம் கொல்கிறதே ...........


கண்ணால் பார்த்து வளர்ந்த பிள்ளையின் வாழ்வில் வந்த கூடா  நட்பு அவன் வாழ்வை கேள்விக்குறியாய் ,கேலியாக ஆகியதை யோசித்ததில் மனம் கனக்கிறது .இன்றைய கால பிள்ளைகளை வளர்ப்பது ஒரு கம்பி மேல் நடக்கும்  பயணம் போல் இருக்கிறது  மிகவும் கவனமுடன் நடக்க வேண்டும் இல்லை கீழே தான் விழ வேண்டும் என்பதை காட்டுகிறது இந்த சம்பவம் 



தொடர்கிறேன்.....




புதன், 25 அக்டோபர், 2017

நடப்பது என்ன ?--பகுதி 5


நடப்பது என்ன ?--பகுதி 5
செல்போன் என்னும் தேவதை என்னும் அரக்கன்  பற்றி  சில விஷயங்களை அலசினோம் முந்திய  பதிவில்  அதற்கு  பின்னுடத்தில்  தோழமைகளுடைய கருத்துக்களையும் நானும் தெரிந்து... புரிந்து கொண்டேன்  நன்றி...... இன்று பிள்ளைகளின் நட்பு பற்றி கொஞ்சம் அலசலாம் அதில் உள்ள சாதக பாதகங்கள்  என்ன என்று பார்ப்போம் ..


நடப்பது என்ன என்பதில் மிக முக்கியமான விஷயம் டீன் ஏஜ் நட்பு ....


டீன்  ஏஜில்  வரும் நட்பு அது வகைதொகை இல்லாததாக தான்  இருக்கும். நட்பை  ஆராய்ந்து தான் வைக்கணும் என்ற விஷயம் அவர்களுக்கு சிரிப்பையும் எரிச்சலையும் கொடுக்கும் .அவர்களை பொறுத்தவரை இந்த வயதில்  நட்பு புனிதமானது என்று ஒரு மாயைக்குள் இருப்பார்கள். நட்புக்காக எதையும் செய்ய துணிவார்கள் .தன்னால்  முடிந்தது, முடியாது அதை பற்றினா பெருமை, தாழ்வுமனப்பான்மை இதை பற்றி கூட்டாக  பேசி கொள்ளும் போது  ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருப்பதாக எண்ணி கொள்கிறார்கள். இது பெரியவர்கள் நமக்குமே பொருந்தும் ...



 பெற்றோரின் அரவணைப்பை இழக்கும் பிள்ளைகள் நட்பில் மிக இறுக்கமாய் பலமாய் பொருந்தி போவார்கள்.அவர்களுக்கு வேண்டிய அரவணைப்பு என்பது வேறு பாதுகாப்பு என்பது வேறு இங்கு பாதுகாப்பையும் சில நேரம் பெற்றோராகி  நாம் ஆண்பிள்ளைகள் விஷயத்தில் தளர்த்துகிறோம்... இது மிகவும் தவறு பல பெற்றோர்கள் இந்த வயதுக்கு இருக்கும் முக்கிய தகுதியாக நினைப்பது எதிர்பாலினத்தின் மேல் ஆர்வம் கொள்ளாமல் இருப்பதைத்தான் மீதி எல்லாவற்றையும்  புறம் தள்ளிவிடுகிறார்கள். ஆண்பிள்ளை ஆண்பிள்ளை கூடத்தானே நட்பாய் இருக்கான் கொஞ்சம் முன்னாபின்ன இருந்தாலும் பரவா  இல்லை என்று பல பேர் இந்த இடத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள் .



இந்த வயதில்  அவர்கள் உடலில்  வரும் ஹார்மோன்ஸ் செயல்பாடுகளினால் தோன்றும் உணர்வுகளை.... நட்புகளுடன் ஈஷி கொள்வதிலும், முறைதவறி பேசி கொள்வதிலும், இணைந்து சுற்றுவதிலும் தீர்த்து கொள்வதாக இருக்கிறது. நண்பன்  என்ன உடை உடுத்துகிறானோ அதற்கேற்றாற் போல் தன்னையும் மாற்றி கொள்வது  பிடிக்கவில்லையென்றாலும் ரசனைகளை மாற்றி கொள்வது என்பது போன்ற செய்கைகள் ஆரம்பிப்பது இந்த நேரத்தில் தான் சில பிள்ளைகள் வயது ஏற ஏற திரும்பவும் தான் குழந்தையில் இருந்து வழிநடத்தப்பட்ட ரசனைக்கு திரும்பி வந்துவிடுவார்கள். சில பிள்ளை அப்படி வருவதை தன்னுடைய ஈகோ அடிபடுவதாக நினைத்து கொள்வார்கள் தாமாகவே  ஒரு அரணை அமைத்து கொள்வது.புகுந்து கொள்வது .



ஒரு சொல் வழக்கு இருக்கிறது உன் நட்பை காண்பி உன்னை அறிந்து கொள்ளமுடியுமென்று....... இதை நாம் ஆராயாமல் எடுத்து கொள்வோம் நாம் மிக அறிவாளிகள்   நடை உடை  பாவனைகள் மட்டுமே முக்கியமானது  நிர்ணயித்து கொள்வோம்  நல்லது என்பதை அளக்க... இதுதான் பல தவறுகளுக்கு வழிவகுக்கிறது.



டீக்கா டிரெஸ் செய்து  கொண்டு இருந்தால் அவன் நல்லவன் தப்புதண்டா  அதுவும் செய்யமாட்டான் என்று அவன் கூட பழகினால் பிரச்னை எதுவுமில்லை அப்படி இல்லாமல் இருப்பவன் செய்தாலும் செய்வான் என்று நினைத்துகொள்ளும்  அறிவாளிகள் நாம். இரண்டாவது படிப்பு நல்ல மார்க் எடுப்பவன் தவறே செய்யமாட்டான் என்னும் குருட்டாம்  போக்கு எண்ணம் கொண்டு உள்ளோம் இன்று விஞ்ஞானம் அதிகம் கற்று கொண்டவன் தான்  அதைவைத்து தீமையையும் செய்கிறான் .இன்று நவீன கருவிகளை கையாளும் திறமை கொண்டு பல கொடுமைகள் நடந்தேறுகிறது .



நாம்  ஆண்பிள்ளைகளின்  இந்த வயதில் அவர்கள் யாரிடம்? எப்படி? எவ்வளவு?  நட்பு வைத்திருக்கிறார்கள் என்பதை  கவனிக்காமல் விடுவதால் மிக பல இழப்புகளை  சந்தித்து  கொண்டு இருக்கிறோம். நிறைய இடத்தில் 'பெண்பிள்ளைகள்நட்பு சோகத்தை  கொடுக்கிறது ஆண்பிள்ளைகளின் நட்பு ஆபத்தை கொடுக்கிறது '.



 டீன் ஏஜ் பிள்ளைகளின் நட்பு என்பது என்பதை பற்றி தொடந்து பார்ப்போம் .....   இந்த நட்பினால் ஏற்பட்ட ஒரு உண்மை சம்பவம் பகிர்கிறேன் என்று சொன்னேன் அதையும் அடுத்த பதிவில் பார்க்கலாம்  தோழமைகள் உங்கள் கருத்துக்களையும் அறிந்து கொள்ள கற்று கொள்ள காத்திருக்கிறேன்......


 தொடரும் .............

திங்கள், 16 அக்டோபர், 2017

இனிய தீப ஒளி நாள் மலரட்டும்

 
  இனிய நண்பர்களே, நல்லோர்களே.... 
                                                       




                                                   Image result for தீபாவளி வாழ்த்துக்கள் தமிழில்


தீப திருநாளில் 
ஒளியே திக்விஜயம் செய்திடு
தரணியெங்கும் 
நல்லோர் வாழ்வில்  இருளை ஒழித்திடு

திணறுகிறது தினவெடுத்து 
தீமைகளின் விகிதம்
தின்றே  தீருவேன் என்று 
கொக்கரிக்கிறது  பூமிதாயையை
ஆயிரமாயிரம் நரகாசுரங்களை 
நால்திக்குமிருந்து 
தடம் தெரியாமல் அழித்திடு 

ஒளியின் ஒளியே முழுவீச்சில் வந்திட்டு 
உன் உண்மை வெப்பத்தில் 
பஸ்மாம்மாக்கட்டும் 
தீமைகளின் தினவுகள் 
நல்லோர் நினைவில்  நடனமாடிடு
இனிய தீப ஒளி நாள் மலரட்டும்

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

நடப்பது என்ன?-3

                                                          

                    போன பதிவுக்கு விஷயங்களை அலசி  கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.

போன பதிவை படிக்க https://poovizi.blogspot.in/2017/10/blog-post_12.html

 

         எதுவும் புதிதாய் சொல்லவில்லையே ஏற்க்கனவே பல பேர் சொல்லியவை நினைப்பில் தோன்றுவது போல் இருக்கிறதுதானே என்று நினைப்பீர்கள். எல்லா பாடங்களும் எல்லோர் வாழ்விலும் தொடர்ந்து வராது ஆனால் கணக்கு பார்முலா  மட்டும் எல்லார் வாழ்விலும் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருப்பது அதை எத்தனை முறை பார்த்தாலும் நியாபகத்தில்  இருத்தி கொள்ளாமல் போக  வாய்ப்பிருக்கிறது.  அது போல் இந்த விஷயங்களும் நமக்கு என்று வரும் போது  சில நேரம் மறந்து இடறிவிட வாய்ப்பு வந்துவிடுகிறது. சூழல்கள் அதற்கு காரணம்.  அதுமட்டுமல்லாமல் நான் முன்னரே பலரால் பகிரப்பட்டதை வைத்து பயன் அடைந்துவிட்டேன். சோ இப்ப நானும் எனக்கு புரிந்ததை பகிரலாம் என்றே இங்கே இவ்வாறு.....

                  
                  

         அரவணைப்பு தொடுகை என்பது இந்த (நண்பனா அன்பான  ஆறுதலை கொடுக்கவல்ல கட்டிப்புடி வைதியம் என்று சொல்லி கொள்ளலாமா)வயது வரும் ஆண் பிள்ளைகளுக்கு மட்டுமே தேவையாக கருதுகிறேன் அதன் பின் இதன் தேவை இருக்காது அவர்களும் வளர்ந்துவிடுவார்கள்  புரிதலில் இறங்க ஆரம்பித்துவிடுவார்கள் அந்த புரிதலுக்கு அழைத்து போகத்தான் இந்த அரவணைப்பு, தொடுகை  அதன் பின் அரவணைப்பு என்பது புரிதலிலேயே அடங்கி விடும் தொடுகை தேவையில்லை..... தேவைப்படாது என்றே நினைக்கிறேன் .


                 செலவு என்பது 14,15 வயது பிள்ளைகளுக்கு  அளவுக்கு மீறிய செலவுகள் என்ன என்பதை பற்றிய விவரம் உங்கள் பார்வைக்கு வர வேண்டும். இது பிள்ளைகளுக்கு பொதுவான விதியாக வேண்டும் மேலே கீழே நடுவே என்று பாகுபாடு இல்லாமல்.


சைக்கிள் வாங்கி கொடுப்பது என்பது சரியான வயது இந்த வயது. இது எல்லோராலும் செய்யமுடியும். இதை விட்டு வசதி படைத்தவர் என்ற காரணத்தினால் மோட்டார் வண்டி வாங்கி கொடுப்பது, சில உயர்மட்டம் காரே கொடுத்துவிடுகிறது. வயதுக்கு  மீறி..... இதனால் நாம் சமூகத்தில் பார்த்து கொண்டிருப்பது என்ன ஆபத்துகள், விபத்துகள் .இந்த பிள்ளைகளின் ஆர்வத்திற்கும், ஆசைக்கும் அளவில்லாமல் இருக்கலாம் பெற்றோராகிய நாம் சிந்திக்க வேண்டும்.

            

எனக்கு தெரிந்தவர்களுக்கு நடந்தது 14 வயது பையனின்  கட்டுப்பாடு அற்ற வண்டி ஓட்டத்தினால் அந்த 50 வயது லேடி மேல் மோதி அவர்கள் பாவம் இடுப்பு பிராக்ச்சர் ஆக்கி இன்னும் சரியாகாமல்  இருக்கிறார் . 

 

இதற்க்கு  யாரை குற்றம் சொல்வது சிறு வீதிகளில் எல்லாம் டிராவிக்  போலிஸ் வைக்க முடியுமா ?ஏன் இந்த இளைஞ்சர்களின் அதீத ஆர்வ கோளாறில் நானே வண்டியில் அடிபட்டு இருக்கிறேன் இது போல் இங்கு படிக்கும் பலருக்கு நடந்து இருக்கலாம்.


டிஸ்கி - அப்படி நிறைய பணவரவு உள்ளவர்கள் வாங்க முடியாதவர்களுக்கு ஒரு சைக்கிள் வாங்கி தரலாமே தேவைக்கு அதிகமாய் வண்டி வாங்கி தரும் செலவில் ......

 
                       
 
                           
ஆமினாவும் ஜபினும் ஹாலில் உட்கார்ந்து லேப்டாப்பை நொண்டி கொண்டிருக்கிறார்கள் "ஏன் ஜபின் துறக்க மாட்டேங்குது"
"அம்மீ  அவன் பாஸ்வேர்ட் போட்டு வச்சிருக்கான் அவன் வந்த வுடன் கேளு ஏன்னு வாப்பா பொதுவாத்தானே வாங்கி கொடுத்திருக்கார் அவன் மட்டுமே வெச்சிக்குவானா"


"சரி விடு நான் பக்கத்துக்கு விட்டு சாரா ஆண்டிகிட்ட கேட்டு செஞ்சு தரேன் அவங்களுக்கு நல்ல வரும் இதெல்லாம் போ""அம்மீ இப்படித்தான் சொல்லுவா அப்புறம் செஞ்சு தரமாட்ட  அதான்"....


.
அப்போது கதவை திறந்து உள்ளே  நுழைகிறான் பள்ளிவிட்டு இப்போதுதான் வருகிறான் சையத்ஹாலில் இவர் இருவரும் லேப்டாப்புடன் இருப்பதை  பார்த்தவுடன் அவனுக்கு கோபம் பொங்குகிறது.




"ஏய் சாத்தனே இதை எதுக்கு எடுத்து வந்தே" பாய்ந்து வந்து பிடுங்குகிறான். வேகமாய் ஆராய்கிறான் லேப்பை


பயந்து போகிறார் ஆமினா "இல்ல சையது நான் தான் கேட்டேன் கேக்கு செய்ரது எப்படினு பாக்க்கோனும்னு"


 "அம்மீ மீ மீ எம் ரூமில் இருந்து என்னை கேட்க்காம எதையும் எடுக்காதே""சரி கோபப்படாதே போயி உடம்ப சுத்தம் பண்ணி  ஓதிட்டுவா சாப்பிட ரெடி பண்ணுறேன்" கிச்சனுக்கு போகிறாள்.

அவனை முறைத்துவிட்டு   பின்னோடு போகிறாள் அவனை விட ஒரு வயது சின்னவள்


"அம்மீ உங்களை என்ன சொன்னேன் இவ்வளவு நேரம்  ஏன்? அவனை சாயங்காலம் மைதானத்தில் யாரை பார்த்தான்  கேளுங்க  என்று சொன்னேனே  அவனிஷ்டத்திற்கு திமிரு பிடிச்சி ஆட்டுடறான்"



"ஜபின்  ,,,,பொம்பளபிள்ளயா லஸ்ட்சணமா வாயை அடக்கி பழகு நான் பார்த்துகிறேன் நீ போ அவனை கோபமூடாதே"
"அம்மீ  யாரோடோ பெரிய பசங்க அம்மீ இவன் பேசி கொண்டிருந்தான் தனியாக""யாராவது பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க நின்றிருப்பான்"
ஜபின் முறைத்துவிட்டு "அம்மீ அது பெரிய பசங்கனு சொன்னேன் 
ஏன்? அம்மீ அவனை எதுவும் கேட்கறதுக்கு இப்படி பயப்படுற?10வது தானே படிக்கிறான்"



"ஜபின் உனக்கு வாய் ஜாஸியாகி விட்டது குறைய சொல்லும் படி நடந்துக்கறவன் கிடையாது படிப்பில் எப்போதும் முதலில் வருபவன். எது அவனை கேள்வி கேட்கணும்? "சரி நீ போயி அவனை போல் எப்போதும் முதல் ரெங்க எடுக்கும் வேலையை  பார் அவன் கிளாஸ் டீச்சர் எவ்வ்ளவு பெருமையா இவனை பத்தி சொன்னாங்க தெரியுமா 10வதில் ஸ்டேட் ரேங்கு கூட  வாய்பிருக்காம் சும்மா அவனை குறை சொல்லி  அவனை நோண்டிக்கொண்டு இருக்காதே"



"ம்கூம்.... அவன் படிப்பில் முதலில் வரான்னு அவனை எதுவுமே கேட்காதே அவன் லெட்டவந்தாலும் சரி..... சுத்திட்டு வந்தாலும் சரி..... இரு அடுத்தடவை நானும் பர்ஸ்ட் வந்ததுது ஊரை சுத்திட்டு வறேன்" சொல்லிவிட்டு போகிறாள்.



சையத் வருகிறான் சாப்பாடு மேஜைக்கு ஆமினா உணவு பரிமாறிக்கிறார் "சையத் வாப்பா கடைக்கு வர சொன்னார் நீ சீக்கிரம் வந்தால்" ..............
"ம்ம்"  அப்பொழுது அவநின் செல்போன் அடிக்கிறது..... எடுத்து பார்கிறான் அவசரமாய் சாப்பிடுவதை விட்டு எழுந்து போயி வெளியே சென்று விடுகிறான்.


ஆமினா ஐயோ பிள்ளை  சாப்பிடும் போது போன் வந்து விட்டதே கவலை படுகிறார். பால்க்கனியில் இருந்து எட்டி  பார்கிறார். ரோட்டில் நின்று சையத் பேசுவது தெரிகிறது சரி இங்குதான் பேசுகிறான் வந்துவிடுவான் என்று மீண்டும் சூடாக ஆப்பம் ஊற்றலாம் உள்ளே திரும்போகிறார் .



 இங்கும் நடப்பது என்ன ?



இதை பற்றி அடுத்த பதிவில்  பார்ப்போம் உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறேன் வாருங்கள் .

             




           




வியாழன், 12 அக்டோபர், 2017

நடப்பது என்ன ?-2

போன பதிவுக்கு கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி. 

/poovizi.blogspot.in/2017/10/blog-post_11.html இதன் முதல் பதிவு 

                           எல்லோரும் டீன் ஏஜ் பிள்ளைகளின் பெரும் தவறுகளுக்கு பெற்றோர்கள் ஒரு வகையில் காரணம் என்பதை சொன்னீர்கள். எப்படி என்று பார்ப்போம்

                            போன பதிவில் அருணை வயது 14 லில் இருந்து 15 ..இந்த வயது பெண் பிள்ளைகளைவிட ஆண்பிள்ளைகளுக்கு கடுமையான வயது என்றே எனக்கு தொன்று கிறது ஒரு பெண் இந்த நேரத்தில் வயது வந்துவிட்டால் என்று அவளை கண்ணும் கருத்துமாய் மிகவும் அதீத கவனத்தோடும் பாதுகாப்பு பற்றியும் ஆரோக்கியம் பற்றியும் கொடுக்கப்படும் கவனிப்பு இங்கு ஆண்பிள்ளைகளுக்கு சரி வர வழங்கப்படுவதில்லை.

 

      

அவனும் அந்த வயதில் தான் வயதுக்கு  வருகிறான் இதுவரையும் கூட இருந்த கவனிப்பு இந்த வயதிலிருந்து அவனுக்கு விலக்களிக்க படுகிறது அவன் கேளாமலேயே பெற்றோர்கள் செய்யும் தவறு இங்குதான் ...இதுவரை அவனை தொட்டு, சாப்பாடு ஊட்டி, உரசி, கொஞ்சியவர்கள். இந்த வயதில் இருந்து அவனிடமிருந்து விலகி நிற்கிறார்கள் . முக்கியமாய் அம்மாக்கள்..... திடீரென்று அவனுக்குள் வந்த மாற்றம் குழப்பத்தை ஏற்படுத்தும் நேரத்தில் இந்த தள்ளி வைப்பு அவனுக்குள் ஒரு அசூயை கொண்டு வருகிறதோ என்று நினைக்கிறேன்.

       

     தோள்  தடவி, தலை தடவை ,அரவணைப்பு தேவை படும் நேரம் சரியாக விலகி வைக்க படுகிறான். அப்போ என்ன வயது வந்த பிள்ளையை தடவி தடவி கொஞ்ச சொல்லுறியா ?என்று கேட்டல் ஆம். இன்றைய பிள்ளைகளுக்கு அந்த அரவணைப்பு கிடைப்பது அரிதானதாக்கி போனது ... அப்போதெல்லாம் பாட்டி ,தாத்தாக்கள் யாரவது கூடவே இருப்பார்கள். அவர்கள் அந்த பிள்ளையாய் பக்கத்தில் இருந்து இதையெல்லாம் செய்வார்கள். நாம் இன்று அதை கடந்து வந்துவிட்டோம் கால மாற்றத்தினால் நம் தேவை மாற்றத்தினால்.... 

    

    ஒன்றை இழந்தால் ஒன்று கிடைக்கும் என்பது போயி அந்த ஒன்றை இழப்பதால் இன்னும் ஒன்றையும்  இழக்கும் நிலைக்கு தள்ள பட்டுவிட்டோமோ என்று தோன்றுகிறது சரியா? நான் சாதாரண  விஷயங்களை மட்டுமே இங்கு சொல்லிருக்கிறேன் இன்னும் அதிகம் இருக்கிறது .என்ன ஆரம்பிக்கிறேன் எங்கே சென்று கொண்டு இருக்கிறேன் என்றே புரியவில்லை இங்கு தொடர்பாய் இருக்கிறதா? இல்லை கோபத்தை கொடுக்கிறதா என்றும் புரியவில்லை....

முதல் வீட்டில் அவன் வழிநடத்த படுகிறான என்றால்? இங்கு நேரமின்மை ஒரு காரணம் ... அம்மாவுக்கு வேலை வெளியேயும், வீட்டிலும் அவளின் சக்தி  அளவுக்கு அதிகமாய் செலவழிக்கப்படுகிறது. உடல் ஒய்வு ஒய்வு என்று உள்ளே அலறுகிறது.

 

அப்பாவும் பல மன அழுத்திற்கு ஆள்கிறார்கள் எதிர்கால பராமரிப்பு திட்டம் அதை நோக்கிய ஓட்டம் வீட்டில் மனைவிக்கும் உதவி  (நடக்கிறதா அப்படி ஒன்று என்றா கேள்விக்கு மற்றோரு அது தொடர்புடைய பதிவில் பார்க்கலாம்  டிராக் மாறக்கூடாது இல்லையா )   அதன் காரணமாய் அவர்களுக்கு மனதை திசை திருப்பும்  நேரம் கொஞ்சம் தேவை படுகிறது (ரிலாக்ஸேஷன்)  . நாளையை  ஓட்டத்திற்கு....


அடுத்து கண்காணிக்க படுகிறானா?  என்றால் இல்லை  முக்கியமாய் 90% பெற்றோரும் செய்யும் தவறு..... நம்பிக்கை தன்பிள்ளை தவறே செய்யமாட்டான் என்று நினைப்பது .சில இடங்களில் டீச்சர் கூப்பிட்டு வார்ன் பண்ணினாலும் நம்ப மறுத்து டீச்சரை குறை சொல்வதும் நடக்கிறது. தானும் அந்த வயதை கடந்து வந்துள்ளோம் கடந்த கால நினைவுக்குள் போக மறந்துவிடுகிறது இல்லை இன்று வளர்ந்துவிட்ட கர்வம் கண்ணை மறைத்து விடுகிறது .


அவனுடைய செலவினங்கள் என்ன என்று ஆராய படுகிறதா அதுமில்லை காலம் மாறிடுச்சு என்று பொத்தாம் பொதுவாய் சொல்லி கொள்வது தேவைக்கு  அதிகமான வசதிகள் நிறைவேற்றபடுகிறது .... படுகிறதா? என்று குழப்பம் வருகிறது.செலவுகள் என்பது வரையறுக்க படணும் வயது தகுந்த மாதிரி இரண்டாவது தேவைகள் என்பது எதை நோக்கி என்பதையும் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.             

சரி அடுத்த வீட்டு கதவை தட்டுவோம்


2வது வீட்டில் ....இரவு 8.30


வரவேற்பறை  டீவியின் முன் அம்மா சீரியலில் மூழ்கி கை பூண்டு உரித்து கொண்டு இருக்கிறது . பெட்ரூமினுள் அப்பா தன் லேப்டாப்பில் வேலையுடன்....

  

மெயின் டோரை திறந்து வருகிறான் ஜோசப்  ".என்னடா நேரமாகிவிட்டது டியூஷன் சார் லேட் பண்ணிட்டாரா ?" "வண்டி நின்று விட்டது பெட்ரோல் இல்லாமல் தள்ளி கொண்டு வந்தேன் " அச்சச்சோ .... சரி போயி ரெஸ்ட் எடு இதோ டிபன்  தரேன்" என்று இவ்வளவும் டிவியைவிட்டு கண்ணெடுக்காமல் நடை  பெறுகிறது  .



"எனக்கு வேண்டாம் சையத் வாங்கி கொடுத்துத்தான். அம்மாஆஆ .....இங்க பார் கொஞ்சம்  அப்பாகிட்ட  மணி  வாங்கி வச்சுக்கோ 500/- எனக்கு மறந்துட்டேன் சொல்லாதே..... நாளைக்கு மேச்  இருக்கு அப்புறம் வீட்டுலேயே  உட்க்கார்ந்துடுவேன் டியூஷன் போகாம பார்த்துக்கோ "

 

"உங்க அப்பாகிட்டாதானே.......நீ கேட்காதே  எல்லாத்தையும் என் தலையில கட்டிட்டு  போ ஆமாண்டா ....10 வது படிக்கும் போதே இவ்வளவு என்று அவர் என்னை முறைகட்டும், ஆனா உன்னை கேள்வி கேட்கமாட்டார் ..... வாங்கி வைக்கிறேன் நடுவுல தொனதொணன்னு  பேசாதே "

 

உள்ளிருந்து "ஆனி ஈஈ இங்கே மனுஷன் வேலை செய்யணுமா? வேணாமா? அந்த கதவை சாத்திட்டு கத்து " அப்பாவின்  குரல் கேட்டவுடன் அருண் அம்மாவை முறைத்து  பார்த்து சைகையில்' வாங்கி வை 'என்று சொல்லிவிட்டு ரூமினுள் நுழைந்து கொள்கிறான் .



இங்கும் நடப்பது என்ன


தொடர்வோம் .........வாருங்கள் கருத்துரைக்க..... 


புதன், 11 அக்டோபர், 2017

நடப்பது என்ன ?

இன்று டீன் ஏஜ் பிள்ளைகளை சரியாக வழிநடத்துகிறோமா ?  பல பெரும் தவறுகள் நடக்காமல் இருக்க பெற்றோரின் பெரியவர்களின் பங்களிப்பு என்னவாக இருக்கிறது ஒரு அலசல் பார்ப்போமா ?

வீடு  வீ டாய்  ஒரு அலசல் செய்வோமா ?            


இரவு 8.30

ஒரு அப்பர்லோயர்மிடில்கிளாஸ் அப்பார்ட்மென்ட்

 1st வீட்டில் 


           "அருண் அருண்  என்னடா செய்யற கதவை மூடிக்கிட்டு உள்ள போனா வெளியே வருவதே இல்லை இதே  தொல்லையா போச்சி உன்னோட சாப்பிட எவ்வ்ளவு நேரம் கூப்பிட்டுனு இருக்கேன் சீக்கிரம் வாடா சாப்பிட்டன எல்லாத்தயும் எடுத்து போட்டுட்டு போயி படுப்பேன் நாளைக்கு வேற சீக்கிரம் எழுந்துக்கணும் நான் சீக்கிரம் வேளைக்கு போகணும் " 

"இவரை பாரு அப்படியே டீவியை விட்டு அப்படி இப்படினு செய்ய மாட்டார்  ,சங்கர் நாளைக்கு நான் சீக்கரம் வேலைக்கு போகணும் ஆட்டிங் இருக்கு. "இந்த உங்க புள்ளையை பாருங்க இன்னும் வெளியே வரலை கொஞ்சம் போயி என்ன செய்றான்னு பாருங்க "

"நீதான் கூப்பிட இல்ல சும்மா நயி நயி னு பண்ண அவனுக்கு எரிச்சல் வரும் விடு  வரட்டும் இல்லைனா சாப்பாட எடுத்து வச்சிட்டு நீ போ உன் வேலையை முடிச்சிட்டு  நான் இந்த மேச் முடிய இன்னும் அரைமணி இருக்கு நேரமிருக்கு நான்  வரும் போது சொல்லிட்டு வரேன் "


"ஆமாம் ஒரு வேலை கூட சேர்ந்து சாப்பிடாதீங்க அவன் படிப்பை பத்தி விசாரிப்போம்... கிடையாது 10 th போர்ஷ்ன் ஆரம்பிச்சிட்டாங்களானு? கேட்கணும் நினைத்தேன். நீங்க கேளுங்க  , சரி இன்னும் ஒரு சாப்பத்தி வைச்சிக்கோங்க எழுந்து வந்து" " நான் காய் கட் பண்ணிட்டு  இருக்கேன் " 

          சிறிது நேரத்தில் அம்மா தூங்க போய்விட்டாள் .அப்பா அருணின்  ரூம்  கதவை தட்டி .... கதவு தட்டும் சத்தத்தில் கேட்  பர பர வென லெப்பை  முடுக்கிறான்.... பென்  டிரைவ்வை மறைகிறான்.  அருண்   என்ற சத்தத்தில்  "எஸ் டாட் " டேபிளில் சாப்பாடு இருக்கு சாப்பிட்டு போயி வேலையை பாரு குட் நைட்" 

 அருண்  கதவை திறந்து" டாட் 500 /- வேணும் போன்க்கு, ஜெராக்ஸ் எடுக்கணும்" 

"அப்படியா 10th சிலபஸ் ஆரம்பிச்சிட்டாங்களா? சரி டேபிளை வைக்கிறேன் ..." அவன் பதில் கொடுக்கு முன்னரே இவர் உள்ளே போய்விடுகிறார். 

அருண்ம் ' ஸ்ஸ் போயிடார்ட்டா அப்பாடா ' சொல்லி குஷியோடு கதவை சார்த்தி கட கடவென லெப்பை ஓபன் செய்து பென்  டிரைவ் போடு உண்டாகார்ந்து... நெளிந்து...... நெளிந்து நகத்தை கடித்து சின்சியாராய் லெப்பை பார்க்க ஆரம்பிக்கிறான் .


இது முதல் வீட்டில் இருக்கும் பிள்ளையின் வாழ்க்கைஇங்கே பெற்றோர் இருவரும் வேலைக்கு போகிறார்கள்

 
இங்கு அருணின்   வயது என்ன ?

அவன் வழி நடத்த படுகிறானா?  

சரியாக  கண்காணிக்க படுக்கிறானா ? 

அவனுடைய செலவினங்கள் என்ன என்று ஆராய படுகிறதா ?


தொடர்ந்து பார்ப்போம்

நடப்பது என்ன ? 

முடிந்தால் பதிவை  படித்தவர்கள் பதில் தாருங்கள் ....

நடுநிலை பதில்களை அலசி கொடுங்கள்..... 

விவாதிக்கலாம் எல்லோரும் புரிதலோடு.....

ஏனென்றால் நான் மட்டும் இதர்கு பதில் சொல்வதாக இருந்தால் என்னுடைய கண்ணோட்டம் மட்டும் இருக்கும்.

எனக்கும் வழிகாட்டுதல் வேண்டும். ரொம்ம்ப நாளாக நினைத்து கொண்டிருந்தேன்  இப்படி கேட்கணும் பலருடைய கருத்துகளை ஆனால் தயக்கம் எப்படி எடுத்து கொள்வார்களோ என்று இருந்தும் முயற்சிக்கிறேன். 

சோ பிளீஸ் .....எல்லோரும் உங்கள் கருத்துக்களை பதியுங்கள் 2 வரி  இந்த விஷயத்திற்கு..... நன்றி, தொடர்வோம் ........உங்களை எல்லோரையும் அழைக்கிறேன். 

"அவரவர் வாழ்க்கையில் மனதினில்  ஆயிரம் ஆயிரம் ஓடங்கள் ஓட்டங்கள் "       

திங்கள், 9 அக்டோபர், 2017

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று சங்கே முழங்கு

                புதுமை எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று சங்கே முழங்கு
தமிழர் அடையாளத்திற்க்கு   விளம்பரம்...... அது கொடுப்பதோ ஆடம்பரம்... எந்த வகையில் பார்த்தாலும் ஆடம்பரத்தை விட்டொழிக்க  மனிதர்கள் விரும்ப போவதில்லை என்பது நிச்சயமாகிறது.  எளிமையே  பேஷன் என்று சொல்லி எளிமைக்கு ஆடம்பரமாய் செலவுகள் வைக்க ஆரம்பிப்பது தான்  இன்றைய பேஷன். கல்யாணங்கள் எல்லாம் கலாசாரத்தை காப்பாற்றுகிறேன் என்று அன்று எளிமையான கிடைக்க கூடிய பொருட்களில் கலாசாரம் என்று சொன்னதை  பின்பற்றினார்கள்  இன்றோ  அந்த பொருட்கள் எல்லாம் விவசாயம் போல் காண கிடைக்காத பொருள்களாய் மாறிவிட்டது இதற்கென்று  பிரத்யேகமாய் விளைவிக்கப்படுகிறதோ என்னும் படி விலை உயரத்தில் அதுவும் வித விதமாய்  கண்ணை கவரும் ஆடம்பர  அலங்காரத்தில்  ஜொலிக்க வைக்கப்பட்டு வாங்க படுகிறது

                                                                             தமில் தாலி

              எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று சங்கே முழங்கு என்று எல்லோரும் கிளம்பிவிட்டார்கள் தமிழ் மொழி, நாகரிகம், கலாசாரம்.. எல்லாத்தையும்  கட்டி காப்பேன் என்று உறுதி எடுத்தது போல்.... நன்மையும்  இருக்கிறது, சாதி அடையாளத்தை இது விட்டொழிக்க ஒரு வகையில் உதவுகிறது.
                                                         
        இப்போ லேட்டஸ்ட் ஒரு விளம்பரம் தமிழ் திருமணத்தற்க்கு பாண்டிசேரியில் முதலில்  பத்திரிகை பனை ஓலையில் விவசாயியை காப்பாற்ற மங்கலமாய்  ஆரம்பிப்போமே இந்த விஷயம் மனதிற்க்கு நிறைவை கொடுக்கிறது.
                                                                   
         அடுத்து   மணப்பெண் உடையிலும் மணமகனின் உடையிலும் தமிழ் தழுவி கொண்ட படுகிறது அதாவது மணப்பெண்ணி சேலையில் தமிழ் கலைகளும் உடல் பகுதியில் தமிழ் வட்டெழுத்துகள் தொடங்கி வழக்கில் உள்ள தமிழ் எழுத்துகளும், முந்தானையில் பெண்கள் பறையிசைக்கும், சிலம்பம் ஆடும் காட்சிகளும் நெய்யப்பட்டுள்ளது மணமகனின்  தோள்  துண்டில் சங்ககால கல்வெட்டுகளி்ல் இருக்கும் தமிழர் பண்பாடு சார்ந்த சுவடுகள் வரையப்பட்டிருக்கிறதாம் இதன்  வழியாக வரும் நன்மை  தறி  வைத்திருப்பவர்களின் வாழ்வாதரம் உயர்த்தப்படும் மிக மகிழ்ச்சி

                                                                பறை

       இரண்டாவது நன்மை எதுவென்றால் உறங்கி கிடந்த  தமிழ் மரபு இசைகளுக்கு  விழிப்புகள் கிடைத்தது .அந்த திருமணத்தில் பறை என்னும் மேளங்கள் இசைக்கப்படுகிறது மணமகள் வருகையை சொல்ல
       இது வரை சரி ஆனால் புதுமை புகுத்துகிறேன் என்று வடநாடு ஸ்டைலும் உள்ளே திணித்துவிடப்படுள்ளது தான் வேடிக்கை
      மணமகள் பல்லக்கில் வருகிறாள் அவளை எதிர் நோக்கி நிற்கும் மணமகன் பல்லக்கு நின்றதும் மணமகளை கைகளில் ஏந்தி மேடைக்குத் தூக்கிச் செல்லும் காட்சி தாலி கட்டுமுன் இது எதற்க்கு ? வீரத்தை நிரூபிக்கவா ?
       இன்னறய இளைஞ்சர்களின் புதுமை பாராட்டுக்கு உகந்தவையாய்  எப்படி மாறிக்கொள்வது மன்டையை உடைத்து கொள்கிறார்களோ யோசித்து யோசித்து 

                                                           திருமாங்கல்யம்

       இங்கு இந்த திருமணத்தின் ஹைலைட் புதுமை என்னவென்றால் பெண்ணுக்கு மட்டும்  ஏன்  தாலி கட்டும் சடங்கு ஆணுக்கும் வைப்போம் என்பதே  பெண்ணால் ஆணுக்கு கட்டப் படுகிறது .... நல்லாத்தான் இருக்கு சமத்துவம். ஆனா ஏற்கனவே தங்கம் விலை தலைக்குமேல் இங்கு மிளிரும்  புதுமையில் கையெட்டாத  தூரத்திற்கு போய்விட வாய்ப்பு உள்ளதோ ஏற்க்கனவே ஒருத்தர் இவ்வளவுதான் தங்கம் வைத்து கொள்ள  வேற சட்டம் சரி திறமைசாலிங்க நாமெல்லாம் எவ்வ்ளவு சட்டம் வந்தாலும் சந்துல சிந்து பாடுவோமில்ல .அந்த தாலியிலும் 'அ' வடிவம் பொறிக்கப்பட்டதாம் , அதில் ஒரு கரு உள்ளதுபோன்றும், அதன் மேல் ஓர் ஆண், பெண் உருவமும் இருப்பது போல் இந்த கற்பனையும் அழகு கொல்லர்களுக்கும் வேலை ..
         ஐந்திணை பூக்கள் கொண்டு வரப்படுகிறது இதுவும் நல்லாத்தான் இருக்கு தமிழ் இலக்கண பாடத்தில் படிப்பதை நேரில் நிஜத்தில் பார்த்து தெரிந்து கொள்ள உதவுகிறதே பிள்ளைகளுக்கு ஏன்? நமக்கும் தான் மறந்துவிட பாடத்தை நினைவு படுத்த உதவுகிறதே 

                                        Image result for seeds images

         கடைசியாக மிகவும் உயர்ந்த விஷயம் விதைகளை தாம்பூலமாய் கொடுப்பது கண்டிப்பாய்  பயனுக்குரிய விஷயம் வாங்குபவர் தன் வீட்டில் இடமில்லை என்றாலும் வாங்கியதற்காவது வளர்க இடமிருப்பவரிடம் பகிரப்படும் இல்லை காலி மனைகளில் வீசி எறிந்தாலும் நல்ல விதைகள் காலூன்றி தன்னை  வெளிப்படுத்தத்தான் செய்யும்
ஆடம்பரமாய் இருந்துவிட்டு போகட்டும் இதனை நன்மைகள் கிடைக்குமென்றால் என்ன சொல்றீங்க ......