உப்பில்லாத கோபமா??? 
கோப படாதே....
இன்னெரு பக்கம்
ரௌத்திரம் பழகு இப்படியும் சொல்லுறாங்க ..இது என்னங்க
இரண்டும் ஒண்ணுதானே ஆமாம்ங்க
ஆமாம். கோபம் என்பது ரௌத்திரம் என்பதின்
சாதரண சொல் அதாவது
பேச்சு மொழியில் சொல்வது
அது செந்தமிழ் சொல்(ஹீ ... ஹீ... உன்னை அப்படினு
பல்லை கடிக்க
கூடாது பல் வீணா போயிடும் நான் பொறுப்பில்லை) அப்படினா இதுவே சொல்லுது
விஷயத்தை சாதாரணமான விஷயத்திற்கு கோபபடாதே ......இன்னொரு சொல் வழக்கும்
இருக்குங்க அது
‘உப்பு
பெறாத விஷயதிற்க்கு எல்லாம் கோபப்படாதே’
அப்படினு சொல்லறாங்க இது என்னங்க நியாயம்.. ஒரு நாள் உப்பு கொஞ்சம்
கம்மியா இல்லை போட மறந்து
சமைச்சி வச்சிருந்தா 'என்னது
இது? சே மனுஷன்
திம்பான இந்த சாப்பாடை
நாயி கூட சாப்பிடாது ' அப்படினு கோப கல்லு வந்து உழும்
. அதில் கண்ணுல இருந்து
உடனே உப்பு வரவப்பாங்க அதாங்க கண்ணீர் .. ஸ்வீடவா
இருக்கு கூடவே மைண்ட் வாய்ஸ் ஓடும்
( நாய்க்கு
உப்பு போட்டு சாப்பாடு
போட கூடாதுனு கூடவா தெரியாது
இந்த மனுஷனுக்கு ) சரி உப்பு பெறாத விஷயம்
சொல்லிட்டு கூடவே இப்படியும் வருது ' உப்பிட்டவரை உள்ளவும் நினை',(நேத்து
உப்பு போட்டு சமைச்சி
வச்சிருந்தேன் நினைச்சி எங்கே பாக்கிறாங்க.. அதுக்கும் தான் பேச்சி
வந்துச்சு இப்படியா உப்ப கொட்டுவனு )' உப்பில்லா பண்டம் குப்பையிலே',(இது உடனே தலையாடுவாங்க) .இப்படி பல வகையா உப்புக்கு டெவெனிஷின் வச்சி குழப்பி வச்சி இருக்காங்க நம்ம ஆளுங்க ....அடக்கடவுளே டிராக் எங்கேயோ
போதே வாங்க நாம விஷயத்திற்கு போவோம்.
நியாமான விஷயத்திற்கு தான் ரௌத்திரம் பழகணும்ங்க..... அநீதியை பார்த்து
கோபப்படணும். அநீதி னா? அப்டினா ருசு இல்லாம
செய்யற அந்நியத்திற்கு கோப படவேண்டாமா? நீதி மறுத்தாலும் என்ற கேள்வி எழுப்ப
கூடாது.... விடுங்க
அது வேற டிராக்
நாம அந்த பக்கம்
போக வேண்டாம் .
என்ன ,என்ன? சொல்ல வர நாட்டுல
நடக்கிற மக்களுக்கு எதிரான அநீதி அரசியல்
பிரச்னையில் தலையிட்டு போலீஸ்கிட்ட மாத்து வாங்க சொல்லுறியா? அப்படினு பிலு பிலுன்னு புடிக்காதிங்க.. கோபத்தை நாட்டுல
நடக்கற அரசியல் விஷயத்தில் மட்டும் தான் காண்பிக்குனும் இல்லைங்க
.....
அட்லீஸ்ட் உங்க பக்கத்தில் என்ன அநியாயம்
நடக்குதுன்னு பாருங்க ரேஷன் கடையில்
நிக்கறீங்க உங்களை இடிச்சி
தாண்டி கொண்டு போயி நிக்கரவனை தட்டி கேளுங்க
இல்லை யாருக்காவது அது நடந்தாலும் நமக்கில்லையினு திரும்பி நிற்காதீங்க....
நீங்க பயணிக்கும் போது உங்களுடன் பயணிக்கும் பெண்ணுக்கு பிரச்சனையோ, வம்பு செய்ப்பவர்கள் இருந்தால் என்னனு கவனிங்க
எதிர்த்து குரல் கொடுங்கள் ...இதற்க்கு முதலில்
நீங்க உங்க கண்ணை போனில் இருந்து
எடுக்கணும்ங்க அப்பத்தான் உங்களை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியும். இன்று மிக பெரிய டிராபெக்கே இது தான் .......இப்ப இருக்கிறவங்க பயணிக்கும் போது போனில் பாட்டுகேட்டிறேன்னு ஒன்னு காதில்
மாட்டி கண்ணை முடிக்கிறாங்க, இல்ல தலையை அதில் புதைச்சிக்கிறாங்க......... அப்புறம் எப்படி
பக்கத்தில் நடக்கும் ரகசிய சிலுமிஷன்கள் கண்னுக்கு தெரியும்.. இந்த கண்ராவியை பார்கணுமா ?அப்படி னு கேட்காதீங்க.. கொழுப்பெடுத்ததை விட்டு விடுங்கள் .......சொல்லமுடியாமல் தவிப்பவருக்கு உதவுங்கள்.
அப்புறம்
பக்கத்துக்கு வீட்டுல நடக்குற
திருட்டுக்கு உடைந்தையா ஆகாம ஆயிடாதீங்க . நீங்க உங்க விட்டு
டீவி சௌண்டயை உங்க வீட்டுக்கு அந்த ரூமுக்கு மட்டும்
வச்சி கேளுங்க அப்ப அப்ப டீவியை
விட்டு எழுந்து வெளியே
தலை நீட்டி பாருங்க இதனால் திருடன்
மட்டுமல்ல வேற எல்லா விஷமங்களும் கூட கொஞ்சம் பயப்படும். இப்ப பிக் பாஸ்னு ஒன்று நடந்தது
பாருங்க ரோடே ஜிலோன்னு
இருந்தது என்ன கொடுமை
நடந்தாலும் தெரிஞ்சுச்சு இருக்காது மக்களுக்கு இவ்வளவு அடிக்ட்டா ஆகுவது
பிள்ளைகளுக்கும் பள்ளி பருவத்தில் இருந்தே இதை பழக்கிவிடுங்கள். பள்ளியில் ஏதாவது
சம்பவம் நடந்தால் சொல்ல வந்தால் உங்கள் அவசர வாழ்க்கையில் 'நீயேன் அதயெல்லாம் பார்கிற.. நீ எதிலேயும் தலையிடாதே.. மிஸ் மார்க்
குறைச்சிடுவாங்க உனக்கு பிளாக் மார்க்
வைத்துவிடுவார்கள்' என்று பட படத்து
அந்த பிள்ளையை டம்மி பீஸ்ஸா வளர்காதிங்க.. என்ன நடந்தது?
விஷயம் என்ன? என்று கேட்டு
புரிய வைங்க.. பிரச்னை
இருந்தா அணுகும்முறை, ஒத்துழைப்பு தாருங்கள்.
இப்ப பாருங்க’
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுனு’
ஒரு சொல் வழக்கு
இருக்கு. அது என்னனா
ஒரு சின்ன உதாரணம்
படிச்சதை சொல்லுறேன் உதாரணத்திற்கு ....
தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் விரைந்து கொண்டிருந்தது. எத்தனையோ
கனரக வாகனங்களை முந்திக்கொண்டு ,சாமர்த்தியமாக ஓட்டிக்கொண்டிருந்தார் ஓட்டுனர்
. , திடீரென்று சாலையின் குறுக்கே
ஒரு வயதானவர் ஓடினார். சடாரென பிரேக்
பிடித்தும், வண்டி நிலை தடுமாறி,
அந்த பெரியவரை நோக்கி
முன்னேறிக்கொண்டிருக்க .. எப்படியோ
சமயோசிதமாக நிலமையை சமாளித்து,பெரியவரை மோதாமல் காரை நிறுத்திவிட்டு, பெருமூச்சிவிட்டார் ஓட்டுனர் . அதன் பின்
கண்ணிமைக்கும் நேரத்தில் காரை விட்டு
இறங்கி ஓடி" யோவ்! சாவுகிராக்கி. . . இந்நேரம் செத்து பரலோகம்
பொயிருப்ப. நீ செத்து
ஒழியரதுமில்லாம என்னையுமில்ல கோர்ட்டு
கேசுன்னு அலைய வச்சு சாகடிச்சிருப்பே ! " அடிக்குரலில் கத்திக்கொண்டே வந்த கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல்,அந்த பெரியவரை
ஓங்கி ஒரு அரைவிட்டார், அடுத்த நொடி அந்த பெரியவர்
சுருண்டு விழுந்து இறந்தார்.
இப்ப என்ன ஆயிற்று
விபத்து என்னமோ நடக்கல..
கொஞ்சம் கார் இருந்த
தண்ணிய குடிச்சி இருக்கலாம் பட படப்பு குறைய ..ஆனா அந்த ஆத்திரகார மட்டு அவன் கோப கூற்றை
அவனே உண்மையாகிட்டான் அவன் ஆத்திரத்தால்........ இனி சமயோசித்தமவும் இருங்க நியாமான விஷயத்துக்கு கண்டும் காணாம
இருப்பதையும் விடுங்க








