வெள்ளி, 26 ஏப்ரல், 2013

சொல்லுறதை சொல்லிப்புடேன்


நாம எதிர் நீச்சலில் இன்னிக்கு பார்க்க போவது காத்திருப்பு ஐயோ காத்திருப்பதா காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி ..........அப்படின்னு பாட ஆரம்பிக்காதீங்க

காத்திருனு யாரவது சொல்லிடா அல்லது எதற்காவது காத்திருக்கனும்னா நாம் டென்ஷன் ஆயிடுவோம் ஆனா .....

நாம வாழ்க்கை முழுவதும் எதற்க்காவது காத்து கொண்டுதான் இருக்கிறோம் 5 வயது புள்ளை 10 வயது சைக்கிள் ஓட்டுகிரவனை பார்த்து எப்ப நமக்கு 10 வயதாகும் என்று காத்திருக்கிறது 12வயது பையன் 16 வயதுல்ல தன் அண்ணனின்அல்டாப்பை  பார்த்து அவனை மாதிரி நான் எப்போ ஸ்டையில் பண்ணிப்பேன் என்று காத்திருக்கிறான் 19 வயது எப்பட நானும் இந்த படிப்புலருந்து விடுதலை ஆவேன் என்று வேலைக்கு செல்லும் 23 வயது வாலிபனை  பார்த்து காத்திருக்கிறான் வேலை கிடைச்சா கல்யாணத்திற்கு... கல்யாணம் ஆனா குழந்தைக்கு.... இப்படி சொல்லிகிட்டே போகலாம் ஆனா பாருங்க நமக்கு வாழ்க்கையில் வெற்றியோ அல்லது சரியான விஷயமோ அமையனும் நினைத்தால்  கொஞ்சம் காத்திருந்து அமைக்கனும் 
கொக்கு மாதிரி

இந்த கொக்கு இருக்கு பாருங்க அது தனக்கான மீன் வரும் வரை ஒற்றைகாலில் எவ்வளவு நேரம் காத்திருக்குது  உங்களுக்கு சின்ன வயசிலேயே இந்த கதையெல்லாம் சொல்லிருப்பாங்க கொக்கு ஒரு பழமொழியே இருக்கு

ஓடுமீன் ஓட உருமீன் வருமளவும் 
வாடியிருக்குமாம் கொக்கு

 ஓடுமீன் ஓட என்றால் எத்தனையோ மீன்கள் ஓடிக்கொண்டிருக்க அவற்றைக் கொத்தாமல் ஏன் காத்திருக்கிறது கொக்கு? உறு மீன் வருமளவும் காத்திருக்கும். ஆமாம், அந்தக் கொக்கின் வயிறு நிரம்பும் அளவுக்கு கொழுத்த மீன் வரும் வரையில் அந்தக் கொக்கு காத்திருக்கும்
.அது போலத்தான் நாமும் நமக்குத் தேவையான, தகுதியான வாய்ப்பு
 வரும் வரையில் காத்திருக்கத்தான் வேண்டும்.

ஆனால் ஐந்தறிவு கொண்ட கொக்கே இப்படி அறிவுத் தவம் செய்கிறதே,
ஆறரிவு கொண்ட மனிதர்களாகிய நாம் முயற்சி என்னும் தவத்தை மேற்கொண்டுநல்லவாய்ப்புகளை நல்ல ப் பெற காத்திருக்க வேண்டும்
ஒரு காலில் காத்திருக்கட்டும் நாம் 2 காலில் காத்திருப்போம் நமக்கான மீன் வரும் வரை காத்திருக்க வேண்டும்
(யாரும் எடக்குமுடக்க திங் பண்ண கூடாது நான் சொல்லும் மீன் வெற்றியை குறிக்குது )

சரி வேற சொல்லறேன் இந்த மாம்பழம் இருக்கு பாருங்க அது இயல்பா பழுத்து சாப்பிட்டால் எவ்வளவு சுவை ஆனா காத்திருக்காமல் அதை கல் போட்டாம் கெமிகல் போட்டும் பழுக்க வைக்கும் பழம் அவ்வளவு சுவை தருவதில்லை மேலும் உடம்புக்கும் கெடுதல் தருகிறது நல்ல பழ சாப்பிடனும் என்றால் காத்திருகனும்

‘புலி பசித்தாலும் புல்லை தின்னாது ‘அப்படின்னு சொல்லுவாங்க அதுகான இரை வந்ததும்  அதை அது நேரம் பார்த்து குறிவைத்து தன் உணவை புசிக்கும் இது தான் வெற்றி இலக்கு

விதை விதைக்கவேண்டுமென்றால்  ஆடிபட்டம் வரை காத்திருக்கணும் சொல்வாங்க அடைமழைக்கு ஐப்பசி வரை காத்திருக்கத்தான் வேண்டும் வேற வழியே இல்லை

சரி நம்ம புள்ளையாரை எடுத்துகோங்க அவரு பிரம்மசாரின்னு தெரியும் ஏன்? தன் தாய் பார்வதி போல் ஒரு பெண் வேண்டும் என்று காலம் காலமா காத்திட்டு இருக்கார் இதுக்கு அர்த்தம் என்ன சொல்றாங்கனா நல்லதா கிடைக்கனும்ணா கொஞ்சம் காத்திருக்கணும் என்ற கோட்பாட்டை விளக்குவதற்கு தான் பிரம்சாரியான புள்ளையார் உருவம் கதையெல்லாம்

சூப்பரான மட்டுமல்ல மிக நல்ல காதலி கிடைக்கனும்னா ‘தி பெஸ்ட்டுகாக காத்திருக்கத்தான் வேண்டும் சும்மாவே வயசு வந்திடுச்சி லவ்னா அது ‘அட் ஃபஸ்ட் சைட் ‘அப்படி இப்படினு பேத்தினால் ரஜினி டயலாக்தான்
'கிடைக்கிறது கிடைக்காம இருக்காது
கிடைக்காம இருக்கறது கிடைக்காது'


நம்ம சூர்யா ஜோதிக்கா காதலையே உதரணாமா சொல்லலாமா அவங்க லவ் சக்சஸ் ஆகா ரொம்பநாள் காத்திருந்ததாக சொல்லிகிறாங்க   ஒன்றை நல்லதாக அடைய வேண்டுமென்றால் காத்திருக்கணும் தப்பில்லை அவசரபட்டு ஒரு முடிவெடுப்பதை விட காத்திருப்பது மேலானதுன்னு நான் நினைகிறேன் அவசரத்தில் செய்யும் காரியம் அலங்கோலம் ஆகும் என்று நம்ம பெரியவங்க சொல்லி இருகாங்க

அதுக்கு உதாரணமா நம் அவுரங்கசிப்பை எடுத்துகோங்க அப்பா ஷாஜகானிடமிருந்து நாட்டை பிடுங்கி அப்பாவையும் சிறையில் அடைத்து அண்ணனையும் கொன்றுவிட்டு அவசரமா அரியணை ஏறியதால் இன்றுவரை அவன் பழிக்க படுகிறான் சரித்திரத்தில்



சரி அவ்வளவு ஏங்க உங்களுக்கு பூனை குட்டி வேணுமா? யானை குட்டி வேணுமா? நீங்கதான் முடிவெடுக்கணும் யான குட்டி வேண்டுமென்றால் 20 மாதம் காத்திருக்கத்தான் வேண்டும் பூனை குட்டி என்றால் 40 நாளில் கிடைத்து விடும்





பங்குகளின் விலை குறையும் வரை காத்திருக்கத்தான் வேண்டும் முதலீடு செய்ய வேண்டுமென்றால் விற்க வேண்டுமென்றால் அதன் விலை உயரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும் அப்பதான் லாபம் எப்பவோ படித்ததை எல்லாம் நியாபக படுத்தி எனக்கு தெரிந்த அளவில் சொல்லிடேன் அவ்வளவுதான்

நியாயமான வெற்றிக்கு காத்திருத்தல் அவசியம் அதுதான் நிலையானதாக  இருக்கும்

சொல்லுறத்தை சொல்லிப்புடேன்
செய்யறதை செஞ்சிடுங்க
நல்லதுனா கேட்டுகோங்க
கெட்டதுனா விட்டுடுங்க

முன்னால வந்தவங்க
என்னனமோ சொன்னாங்க
மூளையிலே ஏறுமுன்னு
முயற்ச்சியும் செஞ்சாங்க

குடியிருந்தும் மூட்டைகளாய்
மூச்சிருந்தும் கட்டைகளாய்
வெளியிருந்தும் கொட்டைகளாய்
விழுந்து கிடக்க போறீங்களா

முறையை தெரிஞ்சு நடந்து
பழைய நெனப்ப மறந்து
உலகம் போற பாதையை
உள்ளம் தெளிஞ்சு வாரீகளா

சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையுள்ள ஞானிகளும்
எத்தனையோ எழுதி எழுதி
வச்சாங்க
எல்லாதான் படிச்சீங்க
என்ன பண்ணி கிழுச்சீங்க

ஒண்ணுமே நடக்காமே
உள்ளம் நொந்து செத்தாங்க
என்னால ஆகாதுன்னு
எனக்கும் தெரியுமுங்க    

புதன், 24 ஏப்ரல், 2013

பல் போன சொல் போச்சு- ஞானப் பழம் நீ

பல்  போன சொல் போச்சு 
அப்படின்னு பழ மொழி கேள்வி பட்டு இருப்பீங்க நம் உடம்புல பல் அவ்வளவு முக்கியாமான விஷயங்க பல் இருந்தால் தான் நாம உணவை மென்னு சுவைத்து சாப்பிடுவதால் போன  பதிவுல சொன்னஞானப் பழம் நீ -அஜீரணம் அஜீரனமும் வராம வயிற்றையும் பாதுகாக்க  முடியும் .


அந்த காலத்திலெலாம் பல்லை  சுத்தம் செய்வதற்கு இயற்கை வழியை முயற்சித்தனர் அதாவது 
'ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி ' என்ற பழமொழியையும் கேள்வி பட்டு இருப் பீங்க இன்றைய நாகரீக உலகத்தில் அன்றைய மக்கள் ஆலமர குச்சியிலும் வேப்பமர குச்சியையும் பிள்ளை சுத்தம் செய்ய உபயோகித்தார்கள்  என்று சொன்னால் சிரிப்பாங்க அந்த குச்சிகளில் உள்ள மருத்துவ பயனை  அறிந்து அதை ஏற்று கொண்டார்கள்

ஆனால் இன்று  விதவிதமாய் விதமாய் பல்லை  சுத்தம் செ ய் ய பிரஷ் வந்து விட்டது வித விதமாய தினமும் ஒரு விளம்பரத்துடன் பற்பசை வந்து விட்டது அதன் கூடவே பல் மருத்துவ கிளினிக்கும் வந்து விட்டது 

பல் வலி வந்தால் மனித்னுங்கு மூளையே வேலை செய்ய முடியாத அளவிற்கு போயிடுங்க அவ்வளவு சித்தரவதை யாக இருக்கும் இந்த பல் வலி

 இந்த பல்வலி வராம  பாதுகாக்க இந்த பழ வைத்தியத்தில் வழி இருக்கானு  பார்க்க போனா ஒரு வழி சொல்றாங்க 
எலுமிச்சை பழத்தை நறுக்கி பல்லைத் தேய்க்க பற்களில்லுள்ள 
நச்சுக் கிருமிகள்நீங்கும் , 
பற்களில் படிந்துள்ள கரை நீங்கும்,
பற்களில் சில பேருக்கு இரத்தம் கசியும் அவையும் நிற்கும் , இந்த இரத்தம் கசிவது விட்டமின்' சி ' குறைபாடினால் தான் இந்த குறை பாடு  நீங்க 
நாம் அன்னாசிபழம் ,ஆரஞ்சு பழம், திராட்ச்சை பழம்
,எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை எடுத்து கொள்ள வேண்டுமாம் இந்த பழங்களில் விட்டமின் சி அதிகம் காணபடுகிறது 
பல் சாதரணாமா நினைச்சிடாதீங்க இது  காதலுக்கு எதிரியாகிவிடும்

பல்லு சுத்தமா இல்லைனா  .........................விவாகரத்து கூட நடக்குதாம் இதற்காக உதட்டில் முத்த மிடுவது..........







அதுமட்டுமா பல்லுகாக ஒரு   நாள் கூட  கொண்டாட படுகிறது Feb, 28 National Tooth Fairy Day என்று உங்களுக்கு தெரியுமா
 

திங்கள், 22 ஏப்ரல், 2013

காதல் நெறி




காதல் நெறியாம்
கவிதை படைப்பது
என்னவென்று
விழைந்தால் அது
காவியமாய்
கண்ணை கட்டுது
இட்டுகட்டி நிரப்பலாம்
என்றால் ....
இலக்கணம் உதைக்குது
இடைவிடாது சிந்தித்தாலும்
இயல்பை ....
இயம்ப முடியவில்லை
இறுதியில்

காகிதசட்டியில்
எழுத்துகளை அள்ளியிட்டு
வதக்கி விட்டேன்
பதார்த்தமாய் ...
பதமாய் வந்ததா தெரியாது

பரிமாறிவிட்டேன் 
கூட குறைச்சல் இருந்தால்
ஊறுகாயாய் என்
காதலை இட்டு நிரப்பிவிடுகிறேன்
ஏற்று கொள் என் காதலை 
  
  

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

பருவத்தே பயிர் செய்




அப்படினா பருவத்தில் நல்லா அந்த வயதை என்ஜாய் செய்யணும் அர்த்தமா ?இப்பதான் நான் நிம்மதியா இருக்க முடியும் என்று பல இளைஞ்சர்கள் சொல்வதை நாம் பார்கிறோம் அப்புறம் வாழ்க்கைனாலே கஷ்ட்டம் தான் பேசி திரிந்து அவர்கள் வாழ்வின் முன்னேறத்தை தாமத படுத்த விரும்புகிறார்கள்





காலம் என்பது பொன்போன்றது அட என்னங்க நீங்க அது ஏறுத்து இறங்குது அதை போய் காலத்து கூட ஓப்பிடால் எப்படி  பொன் என்பதற்க்கு எப்பவுமே  மதிப்பு உண்டு சில நேரம் காலத்தை பொன்னைவிட மேலானது என்று சான்றோர்கள் சொல்லி இருக்கிறார்கள் பொன் போன கூட வாங்க முடியும் காலம் போன வரவே வராது

எனக்கு பொழுது போகவில்லை என்று சொல்பவர்கள் காலத்தின் அருமை உணரதவங்க இன்று இளஞ்சர்கள் இப்படிதான் சொல்கிறார்கள் சும்மாவே உட்கார்ந்து கொண்டு ‘இன்னிக்கு செம போருடாஅப்படினு வெட்டியாய் பேசி அலைகிறார்கள்


ஓர் ஆண்டு முழுவதும் படித்தவன் முழு ஆண்டு தேர்வில் தோல்வி கண்டால் அவனுக்குத்தான் ஓர் ஆண்டின் அருமை தெரியும் அப்புறம் மூஞ்சிய தொங்க போட்டு அலைவது எதுக்கு இது

தினக் கூலி வாங்கும் ஆளுக்கு ஒரு நாள் வேலை இல்லையென்றால் அவனுக்கு ஒரு நாளின் அருமை தெரியும் அடுத்த வேலை சாப்பாடிற்கு என்ன செய்வது என்று

வாரம் ஒரு முறை வரும் இதழை வெளியிடும் ஆசிரியருக்குத்தான் ஒரு வாரம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது புரியும் எவ்வாறு பக்கங்களை நிரப்புவது எதை வெளியிடுவது என்று தலையை பிச்சி கொள்ளும் அவருக்குதான் தெரியும் ஒரு வாரத்தின் அருமை




எப்பவும் நாம் முடிந்த பிறகுதான் அடடா இதை இப்படி செய்து இருக்கலாமே, அப்படி செய்து இருக்கலாமே என்று அங்கலாயிப்போம்

ஒரு நிமிட தாமதமாக இரயில் நிலையம் வந்ததால் வண்டியை தவற விட்டவர்களுக்குதான் தெரியும் நிமிடத்தின் மதிப்பு ‘சே ஒரு நிமிஷத்தில் வண்டிய விட்டுடேனே என்று பலர் புலம்புவதை கேட்டு இருப்பீர்கள்

ஓட்ட பந்தியத்தில் கஷ்ட்டபட்டு ஓடி ஒரு வினாடியில் வெற்றி பெரும் வாய்ப்பை  இழந்தவருக்குதான் தெரியும் வினாடியின் மதிப்பு

ஒரு மாதம் முன்னதாக பிறந்துவிடும்  குழந்தைளை காப்பாற்ற போராடும் மருத்துவனுக்கும் அந்த குழந்தையின் தாயிக்கும் தான் ஒரு மாததின் அருமை புரியும்




ஆண்டவன் என்னமோ நமக்கு அளித்த24 மணி நேரத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைபொறுத்து தான் நம்முடைய வெற்றி தோல்வி நிர்ணயிக்க படுகிறது வெற்றி பெருவத்ர்ர்கு நிறைய பிளான் போட்டாலும் அதை நிறைவேற்ற கடும் உழைப்பே வெற்றியை மூலதனமாகிறது

இதைதான் நம் வள்ளுவரும் சொல்லிருகிறார்

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமாக் கலன் .

என்ன சொல்கிறார் என்றால் நம்முடைய தேவையற்ற காலாதாமதம் ,மறதி ,சோம்பல்,எபோழுதும் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆகிய இந்த நான்கு இயல்புகளையும் கொண்டிருந்தால் ஒன்னை சரி பண்ண ஒன்னு 
செய் வேண்டி வரும் அதாவது தன் தவறுகளுக்கு மற்றவரை குறை கூறும் தன்னமை அல்லது கெடுதல் செய்யும் குணம் மேலோங்கி, அதுவே அவர்களின் வாழ்க்கையாகி ஆகிவிடும்   


பூமி தினம் 

      




  இன்று உலக பூமி தினமாம் பாருங்க இந்த பூமியை காப்பாற்ற நாம் நம் காலத்தை நேரத்தை நல்ல முறையில் உபயோக படுத்தி காத்து கொள்ளவோம் நாம் நாம் செய்யும் ஒர்வொரு செயளையும் உணர்ந்து செய்வோம் நம்மை தாங்கி வாழ்வளிக்கும் இந்த பூமியை அதற்கு ஊறு விளைவிக்கும் இன்றை பிரச்னை எதுவென்று கண்டறிந்து அதை முடிந்த வரை களைய போராடுவோம்  




           

வியாழன், 18 ஏப்ரல், 2013

பார்த்தாய நம்பிக்கை என்பது இதுதான் .........


கடவுள் நம்பிக்கை


மக்களே நான் இன்னிக்கு ஒரு கதை சொல்ல போறேன்

இந்த கடவுள் நம்பிக்கையை பற்றி  ரொம்பவே சர்ச்சை இருக்குங்க கடவுள் இருக்காரா? இல்லையா?காண்பிக்க முடியுமா கேள்வி சரி கடவுள் இருகார் என்று ஆதாரங்கள் எல்லாம் என்னால சொல்லமுடியுமா தெரியலைங்க கடவுள் இருக்காருன ஏன் இவ்வளவு கொடுரம் துன்பம் என்று எல்லாம் கேட்க்கிரவங்க  இருப்பாங்க எதை படைத்தாலும் அதுக்கு முடிவும் வேணுமே அதனாலதான் மனுஷன் உருவானான் ஐயோ இத பற்றி பேச ஆரம்பிச்ச அதுக்கு முடிவே வராதுங்க  அதனால் இந்த சிறு கதையை சொல்லாம் நாமளா முடிஞ்ச உதவியை செய்வோம்னு இறங்கிடேன்ங்க நானும் குடைச்சல் கொடுக்க

கடவுள் நம்பிக்கை என்பது..........

கடவுளுக்கு சந்தேகம் வருதோ இல்லையோ இந்த கலகமூட்டரவங்க எங்கேயும் இருப்பாங்க அவங்களுக்கு யாரையாவது குடைச்சல் கொடுக்கலைன மண்டையே வெடிச்சிடும் இப்ப நம்ம நாரதரற்க்கு அந்த மாதிரி ஒரு நிலைமை நாம இந்த கடவுள் நம்பிக்கையை பத்தி பேசரதை எல்லாம் ஒட்டு கேட்டுட்டு போய் கடவுள் கிட்ட வத்தி வைக்கிறாரு




நாராயண!!! நம்ம நாராயணன் நிம்மதியாய் தூங்கிகிட்டு இருக்காரு

இவரு விட்டாதானே நாராயணா !!!!!!!!!

இவருக்குதான் வந்த வேலையை முடிக்கலைனா மண்டை வெடிச்சிடுமே

வந்துடியா இன்னைக்கு தூங்கினா போலதான் ம்ம் “என்ன நாரத எதற்கு என்னை அன்புடன் அழைத்தாய்

இம்கும் காட்டு கத்தல் கத்திகிட்டு இருகேன் இப்போதான் அன்புடன் கொம்புடனு டயலாக் விடறாரு ....சரி வந்த விஷயத்தை பத்தவைப்போம்


“நாராயணா நீயோ இந்த அகண்ட உலகத்தை படைத்து உயிர்களையும் படைத்து பராமரிக்கிறாய் ஆனா இந்த நன்றி கெட்ட ஆறறிவு கொடுத்த விட்ட ஒரே காரணத்திற்காக இந்த மனிதன் மட்டும் ஏதேதோ கண்டுபிடித்து உன் ப்ராஜக்டை சீக்கரம் கவிழ்த்து விட வேண்டும் என்று பார்கிறான் நீ வைத்திருக்கும் காலகெடுவிற்க்கும் முன்னரே இந்த உலகத்தை அழித்து விடவேண்டுமென்று துடிக்கிறான் போலிருக்கிறதே  அதில் வேறு உன்னையே நீ படைத்த உயிர்களில் பாதி நம்ப மறுக்கிறதே இவ்ர்களுகெல்லாம் எப்படி மோட்சம் வழங்க போகிறீர்கள்

“அப்படியா இது உனக்கு எப்படி தெரிந்தது நீ பூலோகம் சென்றாயா ?

“இல்லை பிரபோ நாம் வைத்திருக்கும் வெப்சைடில் பார்வையிட்டபோது கூகுள் ஒன்னை நம்மளுடையத்தை போலவே  கண்டு பிடித்து வைத்திருகிறார்கள் நமக்கெதிராக அதில்தான் இப்பவெல்லம் நான் பார்த்து தெரிந்து கொள்வது 

“நமக்கு வாய்த்த அடிமைகளல் மிக மிக புத்திசாலிகள் சரி உனகென்ன சந்தேகம் தீர வேண்டும் என்னை நம்புகிறார்களா இல்லையா?என்று தானே யார் யார் எப்படி எவ்வகையில் நம்புகிறார்கள் யார் மோட்சம் பெற தகுதியுடைவர்கள் என்று கண்டு வா போ

இவர தூண்டி விடலாம் என்று பார்த்தால் நமக்கே வேலை கொடுத்து விடுவாரே .........சரி பாப்போம் வேலையை  பூலோகம் வருகிறாற் நாரதர்.

மூன்று பேரை சந்திகிறார் ஒருவன் பணக்காரான் ஒருவன் மெத்த படித்தவன் ,ஒருவன் விவசாயி மூன்று பேரிடமும் மோட்ச்சத்தை பற்றி பேசுகிறார்

மூவரும் எங்களுக்கு “மோட்சம் கிடைக்குமா என்று கேட்டனர் அதற்கு என்ன தகுதி வேண்டும் ? என்றனர்

“இதற்கு நான் பதில் சொல்ல முடியாது மகாவிஷ்ணுவிடம் கேட்டு சொல்கிறேன் என்றார்

வைகுண்டம் வருகிறார் நாரதர் மூவரும் கேட்ட வரத்தை  பற்றியும் நாராயனனிடம் சொல்கிறார்

அதற்கு மகாவிஷ்ணு இப்போது “ஊசியின் காதுக்குள் யானையை நுழைத்து கொண்டிருப்பதாக சொல்

என்ன இதுவா பதில் என்பது போல் பார்கிறார் என்ன உன் லீலை என்கிறார் நாரதர்



மீண்டு பூலோகம் வந்த நாராதர் முதலில் மெத்த படித்தவனை சந்திக்கிறார்

அவன் ஆவலுடன் “என்ன நாராதரே எனக்கு மோட்சம் கிடைக்குமா? என்கிறான்

அதற்கு நாரதர் “அய்யா நான் சென்ற போது மகாவிஷ்ணு ஊசியின் காதுகுள் யானையை நுழைத்து கொண்டிருந்தார் அதனால் பேச முடியவில்லை இதை கேட்ட நம்ம படிச்சவரு “என்ன ஊசியின்  காதுகுள்ள யானையை நுழைப்பதா ? வேடிக்கையாக இருக்கே நீங்க சொல்லவது என்று நக்கலா சிரிக்கிறான் மேதாவி



பின்பு பணக்காரனை சந்திகிறார் அவனும் “மோட்சம் கிடைக்குமா ?என்ன
சொன்னார் மகாவிஷ்ணு என்கிறான்

“ஊசியின் காதுகுள் மகாவிஷ்ணு யானையை நுழைத்து கொண்டிருந்ததால் என்னால் பேச முடியவில்லை-நாரதர்

இதை கேட்ட நம் அப்பாடக்கருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை விழுந்து விழுந்து சிரிகிறான்



மனம் தளராத விக்ரமாதித்தன் போல் நாரதர் விவசாயியையும்
சந்திகிறார் அவனும் தன் மோட்ச்ச்சத்தை பற்றி மகாவிஷ்ணு என்ன சொன்னார்? என்று கேட்கிறான். மத்தவங்க கிட்ட சொன்ன டயலாக்கையே இவனிடமும் சொல்றாரு நாரதர்

இதை கேட்டவுடன் விவசாயி “ஆஹா ஆஹா கடவுள் சக்தியே சக்தி !

“ஊசி காதினுள் யானையை அவரை தவிர யாரால் நுழைக்க முடியும்

“சின்ன விதை மூலம் பெரிய மரத்தை உருவாக்குபவரால் இதுவும் முடியும் 


நாரதருக்கு  ஆச்சரியம் தாங்க முடியவில்லை 
வைகுண்டம் வருகிறார் மகாவிஷ்ணுவிடம்  நடந்தை சொல்கிறார்




பார்த்தாய நம்பிக்கை என்பது இதுதான் .........



உங்களுக்கும் புரிந்திருக்கும் நினைக்கிறேன் அந்த விவசாயி நிம்மதியா போயிடு இருப்பான் எல்லாம் நடக்கும் நடக்கும் போது என்று ஆனா மற்ற இரண்டு பேர் யானை நுழைந்தா முடியுமா எப்படி என்று மன வாதத்தில் தூக்கம் வராமல் பாயை பிறாண்டி கொண்டு இருப்பாங்க




  

தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
சிலை என்றால் வெறும் சிலை தான்

உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
இல்லை என்றால் அது இல்லை...