புதன், 30 ஜனவரி, 2013
திங்கள், 28 ஜனவரி, 2013
அம்மாவின் பெருமுச்சு
நான் உன் அம்மா
என்ற அறிவிப்பு பலகை
உணவு மேசையில்
முன்று வேளையும்
நன்றி என்ற சொல்லை
எப்பொழுது எழுதுவது
இன்று ஒரு தகவலில்
ஏன் பெற்றாய் ?
என்ற கேள்விக்கு
விடை தேடியபோது
அது வெய்டிங் லிஸ்டில் ...........
பரலோகம் போன
என் ஏழாம் தலைமுறையை
காணவில்லை .......
பதில் அளிக்க
தொடரும் ...........
தாறுமாறாய் சிந்திகிறாய்
உன் சிந்தனைக்கு
கடிவாளமிடும் அவசரத்தில் .....
விழுந்துவிட்டேன்
உன் கோபகுளத்தில்
தகிகின்றன என் மனம்
தாங்கவொன்னா
உன் சுடும் மூச்சில் .......
ஞாயிறு, 27 ஜனவரி, 2013
கசப்புVs இனிப்பு
பாகற்காய் சர்க்கரையை குறைக்குமா ?
வர வர உணவு கசக்குதையா
இந்த இனிப்பு நோயால
வரவர இந்த உணவு கசக்குதையா .....
மனம் தான் இனிப்பு இனிப்பு அடிக்கும்
சாப்பிட முடியலைன துடிக்கும்
உணவு கசக்குதையா இந்த இனிப்பு நோயால..........
தினமும் பாகற்கை சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும் என்பது சரிதானா?
இது ஓரளவு உண்மைதான் .
பாகற்காயிலுள்ள இரண்டு வேதி பொருள்களுக்குச்(அல்கலாய்ட்ஸ்) சர்க்கரையை குறைக்கும் திறன் உள்ளது. இதில் காணப்படும் ஒரு புரதத்தின் வேதிஇயல் அமைப்பு இன்சுலினை ஓரளவிற்கு ஒத்ததாகவும் உள்ளது .
பாகற்காயில் மிகுந்து காணப்படும் நார்ச்சத்து சர்க்கரையை குறைக்க உதவுகிறது .இதிலுள்ள தாதுச்ச்த்துக்கள் மற்றும் வைட்டமின்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் பயன்படுகின்றன .
புதன், 23 ஜனவரி, 2013
செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்தமைக்கான அறிகுறி கண்டுபிடிப்பு
செவ்வாய் கிரகத்தின் மேல் பகுதி
செவ்வாய்க் கிரகத்தில் நிலப்பரப்புக்கு கீழேயுள்ள கிடைக்கப்பெறுகின்ற தாதுக்கள் அந்த கிரகத்தில் முன்னொரு காலத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கு இதுவரையில் கிடைத்திருப்பதில் வலுவான ஆதாரம் என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
செவ்வாய்க் கிரகத்தின் சரித்திரத்தில் பெரும்பான்மையான காலங்களுக்கு அதன் மேற்பரப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் வரையான ஆழங்களில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டும் தாதுக்கள் அங்கு காணப்படுவதாக ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர்.
லண்டனின் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் மற்றும் அபெர்டீன் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஈசா ஆகியவற்றின் தரவுகளைக் கொண்டு நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் நேச்சர் ஜியோசயன்ஸ் அருங்காட்சியகத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கிரகங்களை விண்கற்கள் மோதும்போது, நிலப்பரப்புக்கு அடியில் இருக்கின்ற பாறைகள் மேற்பரப்புக்கு கொண்டுவரப்படுகின்றன.
செவ்வாய்க் கிரகத்தில் அவ்வாறு விண்கல் மோதி ஏற்பட்ட ஒரு பள்ளத்தில் காணப்படும் பாறைகளில் உள்ள தாதுக்களை ஆராயும்போது அங்கே உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் தெரிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பூமியில் உயிர்கள் எவ்வாறு தோன்றின என்று இன்னும் தெரியாத நிலையில், செவ்வாய்க் கிரகத்தில் நிலத்துக்குள்ளே நுண்ணியிர்கள் வாழ்ந்தது உறுதிசெய்யப்படுமானால் அது பூமியில் உயிர்கள் தோன்றிய விதத்தை புரிந்துகொள்ளவும் உதவியாக இருக்கும் என்று ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான டாக்டர் ஜோசஃப் மிச்சால்ஸ்கி கூறுகிறார்.
திங்கள், 21 ஜனவரி, 2013
ஸ்கிப்பிங் Vsஉயரம்
‘ஸ்கிப்பிங் கயிறு ‘ ஆடினால் உயரம் அதிகரிக்குமா ?
ஆமாங்க இந்த உயரம் எல்லாதிற்கும் எல்லாருக்கும் வேணும் தான் உலகமே ஆளா பறக்குது .
ஸ்கிப்பிங் கயிறு ஆடினால் உடல் உயரம் அதிகரிக்கும் என்று சொல்வது உண்மையா ?
உண்மையில்லை.
ஒருவருடைய உடல் உயரத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது அவருடைய மரபணுக்கள் (Genes)தான் அதாங்க .ஜீன் ஜீன் -ங்க (ஜின் இல்ல போட்டுகிற ஜீனும் இல்ல ஒன்னு வயிருகுள் போடறது ஒன்னு காலில் போடுறது )
அம்மா,அப்பா ,தாத்தா ,பாட்டி, ஆகியோரின் உடல் உயரத்தைப் பொறுத்துதான் உயரம் அமையும்
(அதுசரி அதுக்குன்னு ஷ்ரேயா போல பொண்ணையும் அசின்போல பொண்ணையும் பார்க்கம இருக்கமுடியுதா ) .உடலில் சுரக்கும் வளர்ச்சி இயங்குநீர் உயரவளர உதவுகிறது .
அவரவர் சாப்பிடும் உணவுகள், உடற்பயிற்சிகள் நோய் வராமல் உடல்நலனைக் காக்கும் முறைகள் ஆகியவற்றை பொருத்தும் உயரம் அமையும் . 18 வயதிற்க்குப் பிறகு உடலின் உயரம் வளராது .அதன்பின்பு எந்தவொரு சக்தியினாலும் உயரத்தை அதிகரிக்க முடியாது(இது என்னாங்க காலில் இரண்டு அடிக்கு மேல இருக்கற காலணியை போட்டுகிட்டா போச்சி)
மேலும் உடல் இடையையும் , உடல் எடையை குறைக்கவும் (முக்கால் வாசி எடையே இடையில்தான் )இப்பயிற்சி உதவுகிறது .(அப்படினா இது ரொம்ப முக்கியமான விஷயம்தாங்க)
ஞாயிறு, 20 ஜனவரி, 2013
புரியாது பூசணிக்கா! - சிறுகதை
கனம் உள்ள கதை பெருங்கதையை சிறுகதையாய் அருமை ....................
அந்த ஆல்பத்தைப் புரட்டியதும் சந்தோஷம் என்னை தொட்டிலில் இட்டு ஆட்டியது போல் தோன்றியது. சில நினைவுகள் தரும் சந்தோஷத்தை எந்தப் பணத்தாலும் விலைக்கு வாங்கவே முடிவதில்லை. ஆல்பத்தை மூடியதும் ஏனோ எனக்கு இன்றைக்கு இந்திராகாந்தி ஞாபகமாகவே இருந்தது.
கூகுல் நாலெட்ஜ் கிராஃப் - வியக்க வைக்கும் புதிய வசதி!
'ராஜா' என்று இணையத்தில் தேடுகிறோம் என்றால், அது ராஜ ராஜ சோழனா அல்லது இளையராஜாவா இல்லை ஏ.எம் ராஜாவா, இல்லை என்றால் ஆ.ராசாவா?
இது போன்ற கேள்விகளுக்கான விடையை தேடல் முடிவாக அளிக்கும் புதிய வசதியை தான் முன்னணி தேடியந்திரமான கூகுல் அறிமுகம் செய்துள்ளது.'கூகுல் நாலெட்ஜ் கிராஃப்' என்று குறிப்பிடப்படும் இந்த வசதி, தேடலில் அடுத்த அத்தியாயம் என்று வர்ணிக்கப்படுகிறது.தேடல் கலையை மேலும் புத்திசாலித்தனமானதாக மாற்றக்கூடியது என்றும் கருதப்படுகிறது.
தேடியந்திர உலகில் கூகுல் எப்போதோ நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட்டாலும், தன்னை நாடி வருபவர்களின் தேடல் அனுபவத்தை மேம்படுத்தித் தரும் வகையில் இன்னும் சிறப்பாக தேடல் முடிவுகளை வழங்க முயன்று கொண்டே இருக்கிறது கூகுல். புதிய புதிய வசதிகளையும் அம்சங்களையும் அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் கூகுலின் லேட்டஸ்ட் அறிமுகம் நாலெட்ஜ் கிராஃப் வசதி.
இது போன்ற கேள்விகளுக்கான விடையை தேடல் முடிவாக அளிக்கும் புதிய வசதியை தான் முன்னணி தேடியந்திரமான கூகுல் அறிமுகம் செய்துள்ளது.'கூகுல் நாலெட்ஜ் கிராஃப்' என்று குறிப்பிடப்படும் இந்த வசதி, தேடலில் அடுத்த அத்தியாயம் என்று வர்ணிக்கப்படுகிறது.தேடல் கலையை மேலும் புத்திசாலித்தனமானதாக மாற்றக்கூடியது என்றும் கருதப்படுகிறது.
தேடியந்திர உலகில் கூகுல் எப்போதோ நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட்டாலும், தன்னை நாடி வருபவர்களின் தேடல் அனுபவத்தை மேம்படுத்தித் தரும் வகையில் இன்னும் சிறப்பாக தேடல் முடிவுகளை வழங்க முயன்று கொண்டே இருக்கிறது கூகுல். புதிய புதிய வசதிகளையும் அம்சங்களையும் அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் கூகுலின் லேட்டஸ்ட் அறிமுகம் நாலெட்ஜ் கிராஃப் வசதி.
வெள்ளி, 18 ஜனவரி, 2013
புதன், 16 ஜனவரி, 2013
இந்தியனின் கால்கள் எங்கெல்லாம் ......
ஆஸ்திரேலியா - இந்தியா இடையே 4000-வருட மரபணுத் தொடர்பு
ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களுடைய
மரபணுக்கூறுகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய கண்டத்துக்கு
நாலாயிரம் ஆண்டுகள் முன்னரே குடியேற்றம் நடந்துள்ளது என்பதற்கான அறிகுறிகள்
தெரிவதாகக் கூறுகின்றனர்.
திங்கள், 14 ஜனவரி, 2013
ஞாயிறு, 13 ஜனவரி, 2013
உலகத்தின் கடைசிநாள் !
உலகத்தின் கடைசிநாள் !
சலசலப்புக்கு
ஓர் முற்றுபுள்ளி
மாயமாய் போனதே
மாயனின் மதிப்பீடு
கிறிஸ் மஸ் தாத்தாவின்
மணியோசையும் வந்து போனதே
"13"ன் கரகோஷம்
கரையை கடந்ததே
.
.
இன்று புதிதாய் பிறந்தோமோ
கண்பட்டு விட்டதே !!!!!
இந்த பூமிகிரகதிற்கு
சுத்தி போட்டுவிடுவோம்
நம் சந்தோஷ கூக்குரலால் ......
'பொங்கலோ பொங்கல் '
வான் எட்டட்டும் ,முட்டடும்
கிரகங்களுக்கு வாழ்த்து
சொல்லட்டும்
கரும்பின் இனிமை
கயிலாயத்தை எட்டுதே
'தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா'!!
என்ற பொன்மொழியை
உணர்ந்திடுவோம் ,உணர்த்திடுவோம் .
தொடரட்டும் ..........
இந்த வையகம் உள்ளவரை
தமிழின் புகழ்
தமிழரின் புகழ்
இது
தமிழ் திருநாளின்
உறுதிமொழியாகட்டும்.
முறைதவறிய முறைகேடுகள்
முறிந்து போகட்டும்
பொங்கி எழுவோம் புயலாய்
களைந்திடுவோம் கசடுகளை
கைகொள்வோம் நல்லொழுக்கத்தை
வந்ததே இனிய நாள்!
தருமே இனிய வாழ்க்கை !!!!!
வியாழன், 10 ஜனவரி, 2013
திங்கள், 7 ஜனவரி, 2013
இரத்த கொதிப்பு
உணவில் உப்பை
குறைத்து கொண்டால் மட்டும் போதும் இரத்த
கொதிப்பு நோய் கட்டுப்பட்டுவிடும் என்று சொல்வது சரியா?
சரியில்லை .
உணவில் உப்பை
குறைத்து கொள்வதால் மட்டும் இரத்த கொதிப்பை முழுவதுமாக கட்டுபடுத்திவிட முடியாது
.உப்புக்கும் இரத்த கொதிப்புக்கும் தொடர்பு உள்ளது உண்மைதான் .
ஞாயிறு, 6 ஜனவரி, 2013
உடல் சூடாகி
மாத்திரை
,மருந்துகளை நிறைய சாப்பிடால் உடல் சூடாகி வாயில் புண் வந்து விடும் என்று
கூறிகிறார்களே இது சரியா?
இல்லை.
மாத்திரை
மருந்து சாப்பிடுவதால் உடம்பு சூடாவதில்லை.
ஆண்டிபயாடிக்ஸ்(Antibiotics) என்று அழ்க்கப்படுகிற நுண்ணயிர் கொல்லி மருந்துகளை அளவுக்கதிகமாக சாப்பிடும் போது
நம் குடலிலும்,வாயிலும் புண் ஏற்பட வாய்ப்பு இருகிறது.
சனி, 5 ஜனவரி, 2013
புதன், 2 ஜனவரி, 2013
இரத்த தானம்
இரத்த தானம்
செய்தால் உடல் பலவீனம் அடைந்து விடும் என்று கூறுகிறார்கள் .இது சரிதானா?
இல்லை இப்படி
கூறுவது சரியில்லை.
நம் உடம்பில் சராசரியாக 5 லிட்டர் இரத்தம் உள்ளது .இதில்
ஒருவரிடம் இருந்து சுமார் 350 மி.லி. இரத்தம் தான் எடுக்கமுடியும் .இதனால் உடம்பு
பலகீனம் அடைய வாய்ப்புஇல்லை .
கத்திரிக்காயால்
அடிகடி
கத்திரிகாய் சாப்பிட்டால் சொறிசிரங்கு வந்துவிடும் என்று கிராமங்களில் சொல்வதுண்டு
இது உண்மையான தகவலா ?
இல்லை
கத்திரிகாய்க்கும்
சொரிசிரங்குக்கும் துளி கூட தொடர்பில்லை.
சொறி சிரங்கு ‘சார்க்கோப்டிஸ் ஸ்கேபி’(Sarcoptes Scabiei) என்னும் ஓட்டுன்னிக்கிருமிக்ளால் ஏற்படுகிறது .இது தொட்டாலே
ஒட்டிக்கொள்ளும் தொற்றுநோய் சிரங்கு உள்ளவர்களின் பொருட்களை மற்றவர்கள்
பயன்படுத்துவதாலே இந்த நோய் பரவுகிறது கத்திரிகாய்க்கு இதற்கும் சம்பந்தமில்லை .