மருத்துவ அறிவியில் விளக்கங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவ அறிவியில் விளக்கங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஏப்ரல், 2013

பல் போன சொல் போச்சு- ஞானப் பழம் நீ

பல்  போன சொல் போச்சு 
அப்படின்னு பழ மொழி கேள்வி பட்டு இருப்பீங்க நம் உடம்புல பல் அவ்வளவு முக்கியாமான விஷயங்க பல் இருந்தால் தான் நாம உணவை மென்னு சுவைத்து சாப்பிடுவதால் போன  பதிவுல சொன்னஞானப் பழம் நீ -அஜீரணம் அஜீரனமும் வராம வயிற்றையும் பாதுகாக்க  முடியும் .


அந்த காலத்திலெலாம் பல்லை  சுத்தம் செய்வதற்கு இயற்கை வழியை முயற்சித்தனர் அதாவது 
'ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி ' என்ற பழமொழியையும் கேள்வி பட்டு இருப் பீங்க இன்றைய நாகரீக உலகத்தில் அன்றைய மக்கள் ஆலமர குச்சியிலும் வேப்பமர குச்சியையும் பிள்ளை சுத்தம் செய்ய உபயோகித்தார்கள்  என்று சொன்னால் சிரிப்பாங்க அந்த குச்சிகளில் உள்ள மருத்துவ பயனை  அறிந்து அதை ஏற்று கொண்டார்கள்

ஆனால் இன்று  விதவிதமாய் விதமாய் பல்லை  சுத்தம் செ ய் ய பிரஷ் வந்து விட்டது வித விதமாய தினமும் ஒரு விளம்பரத்துடன் பற்பசை வந்து விட்டது அதன் கூடவே பல் மருத்துவ கிளினிக்கும் வந்து விட்டது 

பல் வலி வந்தால் மனித்னுங்கு மூளையே வேலை செய்ய முடியாத அளவிற்கு போயிடுங்க அவ்வளவு சித்தரவதை யாக இருக்கும் இந்த பல் வலி

 இந்த பல்வலி வராம  பாதுகாக்க இந்த பழ வைத்தியத்தில் வழி இருக்கானு  பார்க்க போனா ஒரு வழி சொல்றாங்க 
எலுமிச்சை பழத்தை நறுக்கி பல்லைத் தேய்க்க பற்களில்லுள்ள 
நச்சுக் கிருமிகள்நீங்கும் , 
பற்களில் படிந்துள்ள கரை நீங்கும்,
பற்களில் சில பேருக்கு இரத்தம் கசியும் அவையும் நிற்கும் , இந்த இரத்தம் கசிவது விட்டமின்' சி ' குறைபாடினால் தான் இந்த குறை பாடு  நீங்க 
நாம் அன்னாசிபழம் ,ஆரஞ்சு பழம், திராட்ச்சை பழம்
,எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை எடுத்து கொள்ள வேண்டுமாம் இந்த பழங்களில் விட்டமின் சி அதிகம் காணபடுகிறது 
பல் சாதரணாமா நினைச்சிடாதீங்க இது  காதலுக்கு எதிரியாகிவிடும்

பல்லு சுத்தமா இல்லைனா  .........................விவாகரத்து கூட நடக்குதாம் இதற்காக உதட்டில் முத்த மிடுவது..........







அதுமட்டுமா பல்லுகாக ஒரு   நாள் கூட  கொண்டாட படுகிறது Feb, 28 National Tooth Fairy Day என்று உங்களுக்கு தெரியுமா
 

திங்கள், 15 ஏப்ரல், 2013

ஞானப் பழம் நீ -அஜீரணம்


வந்துவிட்டேன் ..................

இன்று பழ மருத்துவத்தில் முதலில் நான் குறிப்பு கொடுக்கபோவது அஜீரணத்திற்கு

அஜீரணம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தமிழில் பசியுன்மை ,வயிற்றி; வாயுவின் சீற்றம்,உப்பசம் ,வயிற்று பொருமல்,வயிற்று வலி ,வயிறு எரிச்சல் ,அடிகடி ஏப்பம் ,மலச்சிக்கல் போன்றவைதான்

அஜீரணம் இந்தசொல் அனேகமாக சமஸ்கிரத சொல்லாக இருக்கவேண்டும் இது நம் நடைமுறையில் வந்து விட்டது  ‘ஜீ என்பதற்கு அர்த்தம் இருகிறதா தமிழில் என்று தெரியவில்லை  வேற எங்கயோ போறேன் பாருங்க சரி விஷயதிற்கு வருகிறேன்

ஒரு பழமொழி சொல்லுவாங்க ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும் ‘


இது எதுக்கு பொருந்தாதோ இல்லையோ உணவுக்கு பொருந்துங்க

அதிகமான உணவை உண்பது ஒருபக்கம்னா இன்றைய நவீன  மாறுபட்ட உணவுகள் மிக பெரிய காரணம் இதுக்கு

இன்றைய அவசரயுகத்தில் அதற்கு ஏற்றார் போல் உணவுகள் மேலும் அதையும் அவசரம் அவசரமாக சாப்பிடுதல்

மேலும் சரியான நேரம் காலம் இல்லாமல் உணவை உண்பது  உண்டஉணவிற்கு ஏற்றார் போல் தண்ணீர்  பருகாதது 
தண்ணிருக்கு பதில் சாப்பாட்டுடன்   கோக் போன்ற இரசயானம் கலந்த பானங்கள் பருகுவது

மன அழுத்தம் கூட அஜீரணத்திற்கு காரணமாக முடியுமாம்

இராசயானம் கலந்த உணவு பொருட்களை சாப்பிடுவது இன்று சகஜமாகிவிட்டது  இதுதாங்க பெரிய பிரச்சனையே ........


 இந்த பெண்ணை பாருங்க ஒரே ஒரு ரோட்டி துண்டை வச்சுகிட்டு சாப்பிடலாமா வேண்டாமா என்று பலத்த யோசனை 
  ஏன்?நேற்றைக்கு இரசயானம் கலந்த  அளவுகதிகமான உணவு தூக்கமின்மை இதுலேயே மறுபடியும் அஜீரணம் வந்துவிடும்

 
இவர பாருங்க எவ்வளவு தொல்லையா உணவை நினைத்தால் இப்படி தள்ளுவாரு ஏன்?முதலில் எடுக்கபட்ட அளவுகதிகமான  உணவு  இவரை இப்படி செய்ய வைக்கிறது

இந்த அஜீரணத்தை சரி பண்ண மறுபடியும் இராசயனத்தையே மருந்த எடுத்தா எப்படி அதுக்குதான்


இந்த இயற்கை வைத்தியம் நான் மிகவும் எளிமையான மூன்று குறிப்பு கொடுக்கிறேன்


1 அஜீரணம் ஏற்ப்படும் சமயத்தில் ஒரு கோப்பையை திராட்சைபழ சாற்றை இரண்டுவேளை இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் குணம் தெரியும்


2 இரண்டாவது முறை கொஞ்சம் புளிப்புள்ள ஆப்பிள் பழத்தை காலை வெறும் வயிற்றிலும் இரவும் சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும்


3 மூன்றாவது முறை மிக எளிமையானதும் எளிதில் கிடைக்க கூடியதுமாகும் ஒருபங்கு எலுமிச்சை சாருடன் நான்கு பங்கு தண்ணீர் கலந்து ஒரு வேலை பருகி வந்தால் போதும் அஜீரணம் குணமாகும்

சரி வயிறை முதலில் சரி செய்து கொள்ளுங்கள்  ஜான் வயித்துகுதான் எல்லா பொழப்பும்

மீண்டும் மற்றொரு குறிப்புடன் வருகிறேன் 

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

ஞானப் பழம் நீ


      மருத்துவம் என்பது இல்லாமல் மனிதன் வாழ முடியுமா என்ற நிலைக்கு மனிதன் தள்ள பட்டுவிட்டான் மருத்துவத்தில் எத்தனையோ முறைகள் வந்துவிட்டன எல்லா வகைகளிலும்  இல்லாவிட்டாலும் சில முறைகள் பக்க விளைவுகள் ஏற்பட தான் செய்யுது அதுக்கும் ஒரு மருத்துவம் பார்க்க வேண்டியிருக்கு முடிவற்ற நிலையாக போகுது

இயற்கை மருத்துவத்தில் இந்த பிரச்னை கொஞ்சம்  குறைவகதான் இருக்கின்றன மேலும் அது  நோயை தீர்ப்பதில் நீண்டநாள் தீர்வாகவும் இருக்குனு நினைக்கிறேன் ப்ளாக் ஆரம்பித்த பொழுது ம்ருத்த்துவ அறிவியல் விளக்கம் என்று நான் படித்ததை பகிர்ந்து இருக்கிறேன் அதே போல் இப்பவும் இயற்கை முறையில் நோய்களுக்கு எப்படி தீர்வுகள் இருக்குனு பகிர்ந்துகலாம் நினைக்கிறேன்

பழ மருத்துவம் எப்படின்னு பார்க்கலாம்

பழம் பிடிக்காதவங்க யாரம் இருக்கமாட்டாங்கன்னு நினைகிறேன் எப்படியும் வாழ்நாள் எல்லோரும் தினுமும் இல்லாவிட்டாலும் பழம் சாப்பிடாத மனிதர்களே இருக்க மாட்டாங்க 
நம்மஔவையார்  கூட சூப்பரா கோபகார முருகனை  பார்த்து பாடிருக்காங்க தமிழையே பழம் என்று சொல்லி



பழம் நீ அப்பா!
ஞானப் பழம் நீ அப்பா!
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!


இப்படி கடவுளுக்கே பழத்தை உதாரணம் காட்டி இருக்காங்க பாருங்க

அப்புறம்  சொல்லபடுவது கடவுளால் படைக்கபட்ட ஆதாமும் ஏவாளும் கூட இந்த உலகத்தை ஜீவ உலகமாக மாற்றியதற்கு ஒரு பழம் தான் காரணாமாக இருந்ததாம்  ஞான பழமா .....




அப்புறம் அதாங்க ஒரு பழத்துகாக நம்ம கடவுள்களே சண்டை போடுகிட்ட கதையெல்லாம்  உங்களுக்கு தெரியும் நினைக்கிறேன் ஏன்னா அதையெலாம் சொல்ல போனா அது ஒரு புது


திருவிளையாடலாய் உருவாகிட போது அப்புறம் எல்லாரும் என்னை ரொம்ப புகழ்வீங்க அது எனக்கு பிடிக்காது பாருங்க

      அதுமட்டும் இல்லைங்க சமைக்க தெரியாதவன் கூட உயிர்வாழ விருப்பதோட சாப்பிட தூண்டும் ஒரு விஷயம் இந்த பழமாதாங்க இருக்க முடியும் நம்ம முனிவருங்க எல்லாம் காட்டில் இருந்தாலும் ஆரோகியமா வாழ்ந்ததற்கு இந்த பழங்கள் தான் காரணமா இருந்து இருக்கு

     அதனாலதான் இப்ப நான் பழத்தை கொண்டு நம்ம உடலில் ஏற்ப்படும் பிரச்சனைகளை எப்படி சரி செய்து கொள்ளலாம் என்பதை பகிர்ந்துகலாம் இருக்கேன் எதோ நம்மளால முடிஞ்ச ஊருக்கு உபகாரம்

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்!
படைத்தவன் படைத்தான் அதற்காகத் தான்!
நான்தான் அதன் பயனையும் புகழையும்
கேட்டேன்.... தினம் காலை-மாலையும்.
உண்பேன்….அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்.
இவ்வளவு சொல்லிட்டு ஒரு குறிப்பு கூட சொல்லிலேயே

நினைக்காதீங்க பதிவு பெரிசா போயிடு இருக்கு அதனால இதை
 தொடருகிறேன் .............

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

கொழுப்புசத்தில் நன்மை,தீமை


கொழுப்புசத்தில் நன்மை,தீமை உண்டா?

அதுதாங்க நாம் அடிகடி சொல்வோமே மத்தவங்களை பார்த்து சில சமயம் நம்ம மனசாட்சி கூட நாமளை பார்த்து சொல்லுமே!!!!!!!!!!!!
ரொம்பதான்  கொழுப்பு; கொழுப்பு ஏறி போயிடுச்சி ;கொழுப்பு புடிச்சி இருக்கு இப்படி பல பல  
கொழுப்பு சத்தில் நன்மை செய்யும் கொழுப்பு, தீமை செய்யும் கொழுப்பு என்று உள்ளதா ?

இது உண்மைதான் .

நாம் சாப்பிடும் உணவிலிருந்து பெறப்படும் கொலச்றால் எனும் கொழுப்பு இரத்தில் நேரடியாக கரைவதில்லை குமிழ் போல் மிதந்து கொண்டிருக்கும்.

உடலில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இதனால் தனியாக செல்ல இயலாது புரதங்களுடன் இணைந்து தான் செல்ல இயலும் இதற்கு கொழுப்பு புரதம் என்று பெயர்
இதில் மூன்று வகைகள் உண்டு
குறை அடர்வு கொழுப்புபுரதம் –LOW DENSITY LIPOPROTEIN -LDL
மிகை அடர்வு கொழுப்புப்ரதம் –HIGH DENSITY LIPOPROTEIN –HDL
மிகக்குறை அடர்வு கொழுப்புபுரதம்  -VERY LOE DENSITY LIPOPROTEIN –VLDL
இவற்றுள்  LDL  மற்றும்  VLDL கல்லீரளிருந்து கொழுப்பை இதயத்திற்கு எடுத்து செல்வதால் இவை இதயத்திற்கு தீங்கு செய்யும் கொழப்பு என்று சொல்லபடுகிறது (Bad Cholesterol)

HDL இதயத்திலிருந்து கொழுப்பை விடுவித்து கல்லீரலுக்கு எடுத்து செல்வதால் இது இதயத்திற்கு நன்மை செய்யும் கொழுப்பு என்று சொல்லபடுகிறது  (Good Cholesterol).

கொழுப்புபுரதங்களின் இயல்பு அளவுகள் :-

     பெண்கள் / ஆண்கள்
LDL-  135 மி.கி%     /     130 மி.கி%
HDL-    35   மி.கி%       /     30 மி.கி%
VLDL- <30   மி.கி%        /  <25 மி.கி%
பார்த்துகோங்க பார்த்துகோங்க குறைந்த கொழுப்பு தான் பெண்களுக்கு அதிகமா இருக்கு ஆனா, ஆனானப்பட்ட கொழுப்பெல்லாம் யாருக்கு இருக்கு இப்ப புரியுதா ? பாவங்க பெண்கள் !

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

மருந்துVs மனிதன்


மிச்சமிருக்கும் டானிக்,மருந்துகளை பின்னொரு நாளில் பயன்படுத்தலாமா ?

உலகத்திலே 75% மக்களுக்கு தோன்ற சந்தேகம் தாங்க இது ஆனாலும் தோணும் போதே அதை  துருவி பாக்கம அலட்சியமும் படுத்திடுவாங்க

ஏன் மருத்துவர்கள் கூட இந்த விஷயத்தில் தன் சொந்த வாழ்கையில் செய்யரவங்கதான்

அதுவும் நாம மக்கள் இருக்காங்க பாருங்க................. இந்த விஷயத்திலே கஞ்சதனத்திற்கு பெயர்போனவங்க! குண்டக்க மண்டக்க செய்யறதில் பலே கிலாடிங்க  ஒரு பழமொழி இருக்கு 
பூசணி காய் போகிற இடம் தெரியாது கடுகு போகிற இடம் தெரியும்னு

புதன், 30 ஜனவரி, 2013

.மழைVs பயம்


மேகம் கருக்குது, மழ வர பாக்குது
வீசி அடிக்குது காத்து........... ,மழை காத்து
எதோ காத்து கருப்பு வந்திட்டாபோல பயப்படுவோம்
மழைனா  என்ன தெரியுங்களா ?
வானம் என்ற ஆண்
பூமி என்ற பெண்ணிடம்
நடத்தும் காதல் தாங்க நாம் காண

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

கசப்புVs இனிப்பு


பாகற்காய் சர்க்கரையை  குறைக்குமா ?  


வர வர உணவு கசக்குதையா 
இந்த இனிப்பு நோயால 
வரவர இந்த உணவு கசக்குதையா .....
மனம் தான் இனிப்பு இனிப்பு அடிக்கும் 
சாப்பிட முடியலைன துடிக்கும் 
உணவு கசக்குதையா இந்த இனிப்பு நோயால..........




தினமும் பாகற்கை சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும் என்பது சரிதானா?


இது ஓரளவு உண்மைதான் .

பாகற்காயிலுள்ள இரண்டு வேதி பொருள்களுக்குச்(அல்கலாய்ட்ஸ்) சர்க்கரையை குறைக்கும் திறன் உள்ளது. இதில் காணப்படும் ஒரு புரதத்தின் வேதிஇயல் அமைப்பு இன்சுலினை ஓரளவிற்கு ஒத்ததாகவும் உள்ளது .

பாகற்காயில் மிகுந்து காணப்படும் நார்ச்சத்து சர்க்கரையை குறைக்க உதவுகிறது .இதிலுள்ள தாதுச்ச்த்துக்கள் மற்றும் வைட்டமின்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் பயன்படுகின்றன .





திங்கள், 21 ஜனவரி, 2013

ஸ்கிப்பிங் Vsஉயரம்


‘ஸ்கிப்பிங் கயிறு ‘ ஆடினால் உயரம் அதிகரிக்குமா ?



‘ஸ்கிப்பிங் கயிறு ‘ ஆடினால் உயரம் அதிகரிக்குமா ?

ஆமாங்க இந்த உயரம் எல்லாதிற்கும்  எல்லாருக்கும் வேணும் தான் உலகமே ஆளா பறக்குது .

ஸ்கிப்பிங் கயிறு ஆடினால் உடல் உயரம் அதிகரிக்கும் என்று சொல்வது உண்மையா ?

உண்மையில்லை.

ஒருவருடைய உடல் உயரத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது அவருடைய மரபணுக்கள் (Genes)தான் அதாங்க .ஜீன் ஜீன் -ங்க (ஜின் இல்ல போட்டுகிற ஜீனும் இல்ல ஒன்னு வயிருகுள் போடறது ஒன்னு காலில் போடுறது )

அம்மா,அப்பா ,தாத்தா ,பாட்டி, ஆகியோரின் உடல் உயரத்தைப் பொறுத்துதான் உயரம் அமையும்
 (அதுசரி அதுக்குன்னு ஷ்ரேயா போல பொண்ணையும் அசின்போல பொண்ணையும் பார்க்கம இருக்கமுடியுதா ) .உடலில் சுரக்கும் வளர்ச்சி இயங்குநீர் உயரவளர உதவுகிறது .

அவரவர் சாப்பிடும் உணவுகள், உடற்பயிற்சிகள்    நோய் வராமல்  உடல்நலனைக் காக்கும் முறைகள் ஆகியவற்றை பொருத்தும் உயரம் அமையும் . 18 வயதிற்க்குப் பிறகு உடலின் உயரம் வளராது .அதன்பின்பு எந்தவொரு சக்தியினாலும் உயரத்தை அதிகரிக்க முடியாது(இது என்னாங்க காலில் இரண்டு அடிக்கு மேல இருக்கற காலணியை போட்டுகிட்டா போச்சி)

  எனவே ஸ்கிப்பிங் கயிறு ஆடினால் உடல் உயரம் அதிகரிக்கும் என்று சொல்வது தவறு தவறு என்றாலும், இது ஒரு ஏரோபிக் பயிற்சி ஸ்கிப்பிங் கயிறு ஆடினால் உடலின் வளர்ச்சியை தூண்டுகிறது மேலும் இந்த பயிற்ச்சியின் போது கை,கால்,மார்பு,வயிறு,தொடை போன்றவற்றின் தசைகள் இயங்குகின்றன .இதனால் அவை இரத்தத்திலிருந்து அதிக அளவு பிராணவாயுவை பெற்று கொண்டு அங்கு சேர்ந்துள்ள கழிவுகளை உடனுக்குடன் வெளியேற்றி விடுகின்றன. இதனால் உறுப்புகள் சுறுசுறுப்பு அடைகின்றன .
மேலும் உடல் இடையையும் , உடல் எடையை குறைக்கவும் (முக்கால் வாசி எடையே இடையில்தான் )இப்பயிற்சி உதவுகிறது .(அப்படினா இது ரொம்ப முக்கியமான விஷயம்தாங்க) 

வெள்ளி, 18 ஜனவரி, 2013

வெண்டைக்காய் Vsஅறிவு




வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளருமா ?

இது இன்னைக்கு நேத்திக்கு குழப்பமில்ல ரொம்பநாளா தாய்மாருங்க தகப்பன்மாருங்க நம்மளோட 5வயசிலேயே எத்திவிட குழப்பங்க
பார்த்துபிடுவோம்ங்க அது என்னான்னு .............

வியாழன், 10 ஜனவரி, 2013

உதட்டில் முத்த மிடுவது..........


உதட்டில் முத்த மிடுவது பாதிக்குமா ?



காதலின் சின்னம் உயிர் மூச்சு இதை பற்றி கொடுத்துவிட்டேன் என்று வருந்துவோ சங்கத்திற்கு தெரியாமல் போகட்டும் இந்த பதிப்பு (தப்பிகனுமில்ல )மிதி பேர் பாருங்கப்பா என்னதான் சொல்ல வரோமுனு .......

திங்கள், 7 ஜனவரி, 2013

இரத்த கொதிப்பு


உணவில் உப்பை குறைத்து கொண்டால் இரத்த கொதிப்பு கட்டுப்படுமா?


உணவில் உப்பை குறைத்து  கொண்டால் மட்டும் போதும் இரத்த கொதிப்பு நோய் கட்டுப்பட்டுவிடும் என்று சொல்வது சரியா?

சரியில்லை .
உணவில் உப்பை குறைத்து கொள்வதால் மட்டும் இரத்த கொதிப்பை முழுவதுமாக கட்டுபடுத்திவிட முடியாது .உப்புக்கும் இரத்த கொதிப்புக்கும் தொடர்பு உள்ளது உண்மைதான் .

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

உடல் சூடாகி


உடல் சூடாகி  வாய்புண் வருகிறதா ?


மாத்திரை ,மருந்துகளை நிறைய சாப்பிடால் உடல் சூடாகி வாயில் புண் வந்து விடும் என்று கூறிகிறார்களே இது சரியா?

இல்லை.    
மாத்திரை மருந்து சாப்பிடுவதால் உடம்பு சூடாவதில்லை.
ஆண்டிபயாடிக்ஸ்(Antibiotics) என்று அழ்க்கப்படுகிற நுண்ணயிர் கொல்லி மருந்துகளை அளவுக்கதிகமாக சாப்பிடும் போது நம் குடலிலும்,வாயிலும் புண் ஏற்பட வாய்ப்பு இருகிறது.

சனி, 5 ஜனவரி, 2013

தாவர எண்ணைய்கள் கொழுப்பு


தாவர எண்ணைய்கள்  கொழுப்பு அற்றவையா ?
இது உண்மையா ?


முழு உண்மையில்லை

பாதி உண்மை

தாவர எண்ணைய்கள் எல்லாமே உடல் நலத்திற்கு நல்லது  என்று கூறிவிட முடியாது அதில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு.

புதன், 2 ஜனவரி, 2013

இரத்த தானம்


இரத்த தானம் செய்தால் உடல் பலவீனம் ஆகுமா ?


இரத்த தானம் செய்தால் உடல் பலவீனம் அடைந்து விடும் என்று கூறுகிறார்கள் .இது சரிதானா?

இல்லை இப்படி கூறுவது சரியில்லை.

    நம் உடம்பில் சராசரியாக 5 லிட்டர் இரத்தம் உள்ளது .இதில் ஒருவரிடம் இருந்து சுமார் 350 மி.லி. இரத்தம் தான் எடுக்கமுடியும் .இதனால் உடம்பு பலகீனம் அடைய வாய்ப்புஇல்லை .

கத்திரிக்காயால்


கத்திரிக்காயால் சொறி சிரங்கு வருமா ?


அடிகடி கத்திரிகாய் சாப்பிட்டால் சொறிசிரங்கு வந்துவிடும் என்று கிராமங்களில் சொல்வதுண்டு இது உண்மையான தகவலா ?


இல்லை

கத்திரிகாய்க்கும் சொரிசிரங்குக்கும் துளி கூட தொடர்பில்லை.
சொறி சிரங்கு ‘சார்க்கோப்டிஸ் ஸ்கேபி(Sarcoptes Scabiei) என்னும் ஓட்டுன்னிக்கிருமிக்ளால் ஏற்படுகிறது .இது தொட்டாலே ஒட்டிக்கொள்ளும் தொற்றுநோய் சிரங்கு உள்ளவர்களின் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்துவதாலே இந்த நோய் பரவுகிறது கத்திரிகாய்க்கு இதற்கும் சம்பந்தமில்லை .

சிவப்புநிற காய்கறிகள் ...


சிவப்புநிற காய்கறிகள் இரத்தவிருத்தி செய்யுமா ?



இரத்தம் போல் சிவப்பாக உள்ள பீட்ருட் போன்ற காய்கறிகள் இரத்த அபிவிருத்திக்கு அவசியம் என்பது உண்மையா?சொல்வது சரியா ?

உண்மையில்லை .

வியாழன், 27 டிசம்பர், 2012

சமைத்த உணவை


சமைத்த உணவை சுடவைத்தால் சத்து குறையுமா?

இது உண்மைதான் .

எந்த உணவையும் முதல் சுடு ஆறுவதற்கு முன்பே சாப்பிடுவதால் அதிலிருக்கும்  முழுசத்தின் பலனும் நமக்கு கிடைக்கும் .

புதன், 26 டிசம்பர், 2012

சமைத்தால் சத்து போகுமா?


மருத்துவ அறிவியில்  விளக்கங்கள்
Tell  Me Why



‘எப்போர்ருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொரு காண்பது அறிவு ‘
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெய்வப்புலவர் சொல்லிச்சென்ற இக்கருத்தை இன்னும் நாம் முழுமையாக கடைபிடிக்கவில்லை ,
எந்தவொரு நோய் வந்தாலும் அது எதனால் வந்தது அதன் தீவிரம் என்ன,
என்ன சிகிச்சை மேற்கொள்வது எப்படி போன்றவற்றை அறிந்து கொள்ள அறிவியல் பூர்வமான அணுகுமுறை தேவை