வெள்ளி, 29 செப்டம்பர், 2017

கடவுள் அவதரிப்பாரா ?

                                                              Image result for jesus in the manger
கடவுள் அவதரிப்பாரா ?
     எப்போது ? எதற்கு?  ஏன்?  கடவுள் அவதரிக்க வேண்டும். அதற்கு பொத்தாம்  பொதுவாய் ஒரு பேச்சு நிலவுகிறது, உலகில் அதர்மம் அதிகரிக்கும் போது கடவுள் வர வேண்டும், வருவார் .. எல்லோரும் புலம் புலம்பல்  இதுதான் சரி  அப்படியே  வைத்து கொள்வோம் ..

  தீமைகளின் வீதம் முழுவதும் அதிகரித்த பின் யாரை காப்பாற்ற கடவுள் அவதரிக்க வேண்டும் ? என்ற கேள்வி எழுகிறதா .. 


  அதர்மம் அதிகரிக்கும் போது கடவுள் அவதரிப்பார் என்ற கூற்றுக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். தீமைக்கு அளவுகோல்  வைத்திருக்கிறார்கள் 
                                    Image result for quality vs quantity
இது பெரிசு , இது சிறுசு என்று செய்யும் தீமைக்கு.. ஒவ்வொரு  மனிதனின்  எண்ணமும் ஒப்புமை படுத்தி பார்கிறது நான் செய்யும் தீமையை விட  பெரிதனாது இருக்கிறதா.. என்று அப்படி இருந்தால் அவனின் எண்ணம் இப்படியாக இருக்கிறது  முதலில்அவங்களை கடவுள் வந்து போட்டு தள்ளட்டும். நான் செய்வதெல்லாம் சிறுசு, எண்ணம்  மட்டும் தான்.

   'உண்மைக்கு  ஆதரவு தராது என் குற்றமல்ல,  கொடுமையை கண்டும் காணாமல் நான் மட்டும் தப்பித்து கொள்வேன், இதுபோன்றே  மனிதனின்  மனதில் ஓடிக்கொண்டு இருக்கும்.......  கடவுளையும் நிந்தித்து கொண்டிருப்பேன் அவனையும் விட்டு வைக்க மாட்டேன் கண்ணுக்கு தெரிந்தையும் ஒதுங்கி நின்று திட்டுவேன், கண்ணு தெரியாத்தை தைரியமாய் திட்டுவேன்' இதுதான் இன்றைய நிலைமை 
                                       Image result for age of exploration clipart 
   தர்மம் அதர்மம் இது இரண்டும் இன்றைய மனிதரின் அளவு கோல் என்ன என்பதில் நிறைய குழப்பமிருக்கிறது என்றே பார்க்க முடிகிறது 

   என் பதிவுகள் நீண்டு கொண்டே போவதால் படிப்பவருக்கு சிரமம் (*உன் பதிவை படிப்பதே அப்படித்தான்*என்று நினைப்பவர்களுக்கு ஹீ  ஹீ )   வரலாம் சோ இதை தொடரும் என்று விடுகிறேன் ................

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

ஆண்மகனின் பேறுகாலம்


                                             Image result for romantic night with husband




காலை அலுவலகம் செல்கையில்:
எனக்கு தேதி தள்ளி போகுது. Pregnancy Kit வாங்கிட்டு வாங்க.

இரவு 2 மணி:
கணவன் : ஒரு வேலை உண்டாயிருந்தா என்ன பண்றது?
மனைவி : பெத்துகிற நானே கவலை படல.உங்களுக்கு என்ன? தூங்குங்க.

விடியற்காலை 5 மணி:
கணவன் : போய் பாத்துட்டு வாயேன். பயமா இருக்கு.

5:10 மணி:
மனைவி : இந்தாங்க நீங்களே பாத்துக்கோங்க.
கணவன் : (கண்களில் கண்ணீருடன்) கவலைப்படாத, நான் உன்ன பத்திரமா பாத்துக்கிறேன்.
மனைவி : பாத்துக்காம இருந்து தான் பாரேன். 😀

2 ஆம் மாதம்:
மனைவி : Doctor checkup க்கு appointment போட்டியா?
எனக்கு பயங்கரமா தலை சுத்துது.
எந்திரிக்கவே முடிய மாட்டேங்குது.
இடுப்பெல்லாம் வலிக்குது.
கணவன் : நீ rest எடு. நான் பாத்துக்கிறேன்.

3 ஆம் மாதம்:
மனைவி : மருத்துவமனைக்கு கூட வருவ தானே?
அந்த கோழியை தின்னுட்டு என் பக்கத்துல வராத. நாத்தம் தாங்கல.
அந்த folic acid மாத்திரை எல்லாம் என் பக்கம் நீட்டாதே. வாந்தி வருது.
நீ முன்ன பின்ன வாந்தி எடுத்திருக்கியா?
கணவன் : இல்ல. நான் வாந்தி எடுக்காமலேயே 28 வயசு வரைக்கும் வளந்துட்டேன். எப்படி இருக்கும் சொல்லு?
மனைவி : கர்ப்பம் ஆகி வாந்தி எடுத்திருக்கியா ? அப்டியே அடிவயிறுல இருந்து வலிக்குது. 🙁
கணவன் : சரி. படுத்துக்கோ. ஒன்னும் சாப்பிட வேண்டாம்.
மனைவி : அப்போ நா பட்டினியா இருந்தா பரவால்ல. நீ மட்டும் கோழி சாப்பிடுவ.

4 ஆம் மாதம்:
இரவு 3 மணி:
மனைவி : எனக்கு பசிக்குது. பிரட் எடுத்துட்டு வரியா?
கணவன் : (தூக்க கலக்கத்தில்) போறேன்.
வருகையில்: Bread, Jam, Nutella, பழங்கள் , தண்ணீர் , பழச்சாறு .
அவள்: :O

5 ஆம் மாதம்:
மனைவி : கால் எல்லாம் எப்படி வலிக்குது தெரியுமா? கைல, கால்ல எல்லாம் நீர் போடுது. மோதிரம் கூட போட முடில.
கணவன் : பாப்பா வளருது. அந்த எடைய தூக்க முடியாம தான் கால் வலிக்குது. நான் அமுத்தி விடறேன்.
மனைவி : என்ன இப்படி அமுக்கற? நீ அமுக்கவே வேண்டாம். வலிக்குது. எங்க நல்லா அமுக்குனா, இவ சும்மா சும்மா நம்மள அமுக்க சொல்லிடுவாளோனு தானே, வேணும்னு இப்படி வலிக்கிற மாதிரி அமுக்குற?

6 ஆம் மாதம்:
மனைவி : முக்கி முனகி எந்திரிக்க முனைகையில்
கணவன் : என்னாச்சு? வலிக்குதா? விடிஞ்சிருச்சா? ambulance கூப்பிடவா? தண்ணி வேணுமா? கொஞ்சம் பொறுத்துக்கோ.
மனைவி : யோவ், எதுக்கு இவ்ளோ சத்தம்? chu chu போகணும், எந்திரிக்க முடில.
கணவன் : இப்போ தானே போன? அதுக்குள்ளயா? நான் வேணும்னா Adult Diaper வாங்கி தரவா? இப்படி 10 தடவை எந்திரிக்க வேண்டாம்.
மனைவி : (முறைத்தபடி) மூடிட்டு தூங்கிடு. இல்ல சாவடிச்சுடுவேன்.

7 ஆம் மாதம்:
கணவன் : பக்கத்தில் அமர்ந்து பார்க்கிறார்.
மனைவி : எதுக்கு என்ன பாக்குற? எதுக்கு சும்மா பாக்குற? வேற எங்கயாவது பாரு. நான் தான் கிடைச்சேனா பாக்க?
கணவன் : பாத்தது ஒரு குத்தமா? அதுக்கு ஏன் அழற?
மனைவி : நான் அப்படி தான் அழுவேன். நீ ஏன் என்ன பாக்குற? நா அழுதா உனக்கு என்ன? இந்த வீட்ல அழ கூட உரிமை இல்லையா? நான் எங்க வீட்டுக்கு போறேன். எனக்கு எங்க அம்மா வேணும்.
கணவன் : சரி. நான் போறேன். உன்ன பாக்கல.
மனைவி : ஆமா. நான் தான் இப்போ குண்டாயிட்டேன். அசிங்கமா இருக்கேன். எப்படி என்ன எல்லாம் பாக்க தோணும். நீ மட்டும் நல்லா ஒல்லியா இருக்க . போ போ. என்ன பாக்காத.

8 ஆம் மாதம்:
நடுஇரவில்:
மனைவி : ஏன் தூங்குற?
கணவன் : இப்போ நான் தூங்கிறது பிடிக்கலையா? இல்ல உனக்கு தூக்கம் வரலையா?
மனைவி : ரெண்டுமே இல்ல. நீ ஏன் குப்புற படுத்து தூங்குற? நான் மட்டும் அப்படி தூங்க முடில. நீயும் தூங்காத. என் புள்ள மட்டும் இல்ல.உன் புள்ள கூட தான்.
கணவன் : சரி. நான் திரும்பியே படுத்துகிறேன்.

9 ஆம் மாதம்:
மனைவி : ரொம்ப வலிக்கும் தானே? எப்படி தாங்கிப்பேனோ? ரொம்ப பயமா இருக்கு.
கணவன் : பயப்படாத. நான் பக்கத்துலயே இருப்பேன். நான் பாத்துக்கிறேன்.
மனைவி : நீ பக்கத்துலயே இருப்ப. ஆனா உனக்கு வலிக்குமா? எனக்கு தான வலிக்கும். என் வலிய நீ வாங்கிப்பியா? இல்லேல. அப்போ பேசாத. வலில இருக்கும் போது, “push, push” னு கூவுனா, கொரவளைய கடிச்சு வெச்சுடுவேன்.
கணவன் : சரி மா, நான் எதும் சொல்ல மாட்டேன்.
மனைவி : ஒரு பாப்பா நான் பெத்துக்கிறேன். அடுத்தது, நீ தான் பெத்துக்கணும். என்னால முடியாது.
கணவன் : கண்டிப்பா நானே பெத்துக்கிறேன். இந்த பாப்பா மட்டும் நீ பெத்துக்கோ.

10 ஆம் மாதம்:
மனைவி : என்னங்க, வலிக்குது. தாங்க முடில. ஏதாவது ஊசி போட்டு என்ன கொன்னுடுங்க. இதுக்கு மேல முடியாது.
கணவன் : கவலைப்படாத மா. நான் பக்கத்துலயே இருக்கேன். எங்கயும் போகல. கொஞ்சம் நேரம் தான்.

கூடவே இருந்து, முதல் மாதத்திலுருந்து , பத்தாம் மாதம் வரை, நாம் செய்யும் அலப்பறைகளை பொறுத்து, நமக்கு வேண்டியவற்றினை செய்து , நம்மிடம் திட்டும் வாங்கி, ஏன் திட்டுகிறாள், அழுகிறாள் என தெரியாமல் பேந்த பேந்த என முழித்து , அதற்கும் நம்மிடம் வாங்கி கட்டிக்கொண்டு , எந்த நேரத்தில் வலி வருமோ என நாம் எண்ணுவதைக் காட்டிலும், எப்போதும் பாதி தூக்கத்தில் இருந்து, இயற்க்கை அழைப்புக்கு அழைத்துச் செல்வதிலிருந்து சகலமும் செய்து, ” கொசு கடித்தாலே கூவுவாள், பேறுகாலத்தை எப்படி தாங்கி கொள்வாளோ ” என பயந்து, வலி வந்தவுடன் , தாயும் சேயும் பத்திரமாக இருக்க வேண்டுமே எனப் பிரார்த்தித்து, எங்கே பயத்தை முகத்தில் காண்பித்தால் அவளும் பயந்து விடுவாளோ என மனதிற்குள்ளே வைத்து, வெளியே சிறு புன்னகையுடன், அவளுக்கு தைரியம் சொல்லி, தாயுடன் சேர்ந்து , மனதளவில் இரண்டு மடங்காய் சோர்ந்து, கடைசியில் குழந்தை பிறந்தவுடன் , தன் இரு உயிர்களையும் முத்தமிட்டு, கண்களினோரம் கண்ணீருடன், வெளியே வந்து, உறவினர்களுக்கு நா தழுதழுக்க செய்தியை சொல்லுமிடத்தில் இருக்கிறது “ஆண்களின் பேறுகாலம்” .

பெண்கள் தரும் இன்னல்களை முகஞ்சுளிக்காமல் பொறுத்துக்கொள்ளும் ஒவ்வொரு ஆணும் ஒரு தாய் தான்.

பெண்கள் பேறுகாலம் என்னமோ பத்து மாதம் தான். ஆனால் ஆண்களுக்கு வாழ்நாளெல்லாம்.

பெண்களுக்கு வயிற்றில். ஆண்களுக்கு மனதில்.
பெண்களுக்கு சேய். ஆணகளுக்கு தாயும் சேயும்.

சூப்பரா இருந்தது அதனால் பகிர்ந்து கொண்டேன் படித்ததில் பிடித்தத
                                                  Image result for sweet love quotes for husband

தத்துவம் புரியுமா ?

என்ன எழுதுவது ம்ம்ம் சரி கேப்போம் யார்கிட்டேனா யோசனையை 
"ஹாய் ......ஹீ ஹீ 
"என்ன ஆச்சு போனை போடு இப்படி சத்தம் கொடுக்கிற என்ன பண்ற?
"ஒண்ணுமில்ல சும்மா சிரிச்சேன் ?
"என்னது ? என்ன உடம்பு சரியில்லையா ?
"சே சே நல்லாத்தான் இருக்கேன் நீ இப்ப பிரீயா ?
"ஹான் ! பிரீ தான் ஏன் கேக்குற ?
"இல்ல பிளாக்குள்ள என்ன எழுதர்துன்னு ஒரே யோசனை அதான் உன்கிட்ட ஐடியா கேட்க்கலாம்னு..... 
"ஹாங்! நீ கிறுக்கறதுக்கு நான்தான் கிடச்சனா இன்னக்கி .....
"இல்லல்ல ஏதாவது டாபிக் ஒன்னு சொல்லேன் ...
"அரசியல் பத்தி  போடு .....
"அரசியலா அடாது செயலையும் ...அடக்கமா பேசணும் நமக்கு அது ரொம்ப குஷ்டமாச்சே ........
"சரி வுடு.. நீ எதாவது  போட யாரவது வம்புக்கு வர போறாங்க ...சினிமா ?
"ஐயோ சினிமாவா முன்னனா பரவாயில்லை கொஞ்சம் விஷயமிருந்தது இப்ப கதையிருந்தா ஆளைக்காணோம் .....,ஆள் இருந்த கதையை காணோம் ......2 ம்  இருந்தா அழகை காணோம் ....
"அழகு எதுக்கு ?
 "நிஜத்தில்தான் மேக்கப்பில்லாம... மேக்கப்போட்டு கலைஞ்சி என்ற பயத்தையெல்லாம் பார்கிறோம் சினிமாவாலயாவது ஒரு கெத்துவெனவா???? 
"சரி ஆன்மீகம்  பத்தி கொடு 
"இந்த 2ம் கூட பரவாயில்லை இது ரொம்ப டேஞ்சர் எல்லாத்துக்கும் ருசு கேட்டு அடம்பிடிப்பாங்க ......
ஸ்ஸ்ஸ்ப்பா முடியலையே இவ தொல்ல .Related image...."வியாபாரம் பத்தி சொல்லு "
"ஐயையோ...... உன் பிளாக்குல ஒரு விளம்பரம் வைக்க துப்பில்லை நீ வியாபாரம் பத்தி எழுத்தறியான்னு வீட்டுல மண்டயயை உருடுவாங்களே" 

அடியே .......இவளோட சரி தத்துவம் எழுதி தொலை 
"ஆன் இது ரொம்ப ஈஸி இல்லImage result for imagem de carinha feliz சூப்பர் அதுதான் யாருக்கும் புரியாது கேள்வியே வராது" 

இப்ப .....நமக்கு தெரிந்தையெல்லாம்  எடுத்துவிடுவோம் ரொம்ப மூளையை கசக்க வேண்டாம் 

1-டவுளிடம் சொல்லாதோ, உன் பிரச்சனைகள் எவ்வளவு பெரியது என்று..
உன் பிரச்சனைகளிடம் சொல், உன் கடவுள் எவ்வளவு பெரியவர் என்று..

2-தயக் கண்ணாடி உடையும் போதும் அதன் சில்லுகள் பிறர் காலை கீறிவிடாமல் பார்த்துக் 
கொள்ள வேண்டும்.

3-ண்கள் குருடாகலாம். ஆனால் கருத்து குருடாகக் கூடாது. உள்ளிருப்பதுதான் வெளியிலும், என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.

ரொம்ப போர் அடிக்காதோ Image result for imagenes de sospechaசரி ஒரு கதையா போடுவோம் ....

 குருவுக்கு வயசாகிவிட்டது. மரணப் படுக்கையில் கிடக்கிறார். சீடர்களைக் கூப்பிட்டார்.
‘‘இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்’’ என்று கூறிவிட்டார். சீடர்களுக்கு கவலை.
.மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். ‘‘ஏய்… என்ன மடத்தனம் பண்ணுகிறாய்… குரு மரணப்படுக்கையில் கிடக்கும்போது அப்படி என்ன அவசரமாக வாங்க வேண்டியிருக்கு?’’ என்றனர் மற்றவர்கள்.
மூத்த சீடர், ‘‘குருநாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை பிரியம். அதை வாங்கத்தான் போகிறேன்!’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
எல்லோரும் கவலையோடிருந்தனர். குரு கண்களைத் திறப்பதும் யாரையோ தேடுவதும் பின் மூடிக் கொள்வதுமாக இருந்தார்.
மூத்த சீடர் வந்ததும், ‘‘வந்து விட்டாயா… எங்கே நாவல்பழம்?’’ என்றார்.
அவர் கையில் நாவல் பழத்தைக் கொடுத்ததும், சற்றும் நடுக்கமின்றி, மலர்ச்சியோடு அதை வாங்கிக் கொண்டார்.
ஒரு சீடர் குருவிடம், ‘‘குருவே… தள்ளாத வயதிலும் உங்கள் கைகளில் நடுக்கமில்லையே?’’ என்றார்.
குரு சிரித்தபடி, ‘‘என் கைகள் ஒருபோதும் நடுங்கியதில்லை. ஏனென்றால் எப்போதும் எதற்கும் நான் பயந்ததே இல்லை!’’ என்று சொல்லிவிட்டு நாவல் பழத்தை ருசித்து தின்னத் தொடங்கிவிட்டார்.
இன்னொரு சீடர் குருவிடம் பணிந்து, ‘‘ஐயா, தாங்கள் சீக்கிரமே இந்த உலகை விட்டுப் பிரியப் போகிறீர்கள். நாங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தங்களின் இறுதி உபதேசம் என்ன?’’ என்று கேட்டார்.
எல்லோரும் அவர் முகத்தையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.குரு சிரித்தபடி, ‘‘இந்த நாவல்பழம் என்ன அருமையான சுவையுள்ளதாக இருக்கிறது,’’ என்று சொல்லிவிட்டு தன் மூச்சை நிறுத்திக் கொண்டார்!

சரி இன்னொரு தத்துவம் போட்டுவைப்போம்  Image result for emoji tongue sticking out

ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் தன் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.
எதிரே வந்த முல்லா "என்ன கழுதையுடன் வாக்கிங் போகிறீர்கள்?" என்று கிண்டலாகக் கேட்க தலைவருக்குக் கோபம் வந்து விட்டது.

"என்ன உனக்குக் கண் சரியாகத் தெரியவில்லையா? இது என் நாய்" என்றார்.
முல்லா தலைவரிடம் சொன்னார். "அது நாய் என்று எனக்குத் தெரியும்.
நான் கேள்வி கேட்டது அந்த நாயிடம்" என்றார்.
தலைவருக்கு தன்னைக் கழுதை என்று முல்லா பரிகாசம் செய்கிறார் என்று தெரிய சிறிது நேரம் தேவைப்பட்டது. எல்லோரும் தன்னை தலைவா என்று மரியாதையுடன் அழைக்கையில் முல்லா கழுதை என்கிறாரே என்று உடனே வெகுண்டு நீதிமன்றத்தில் முல்லா மீது வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி முல்லா ஒரு புகழ் பெற்ற தலைவரை கழுதை என்றழைத்தது தவறு என்றும் அந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.
முல்லா நீதிபதியிடம் ஒரு சந்தேகம் கேட்டார். "ஐயா நான் கழுதையைத் தலைவா என்றழைப்பதில் சட்டத்தில் ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா?"
"இல்லை" என்றார் நீதிபதி.
சரி என்ற முல்லா அந்தத் தலைவரிடம் சென்று "தலைவா என்னை மன்னித்து விடுங்கள்" என்று கேட்க நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பலைகள்

 ஸ்ஸ் அப்படா தெரிஞ்சவங்க... புரிஞ்சவங்க விட்டுடுங்கோ .......
மீதி பேர் ?????? 
Image result for animated angry smiley இப்படி நினைக்கபடாது 
அடுத்தவாட்டி  நிஜமா ட்ரை பண்ணுறேன் superaaaaaaa கொடுக்க 


ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

இராமாயணமும் கேள்விகளும்

இராமாயணமும் என் கேள்விகளும்
இராமாயணத்தை பற்றி எப்பொழுதும் விவாதங்கள் ஆண்டு ஆண்டாண்டு  காலமாய் வந்து கொண்டே இருக்கிறது எனக்கும் அதை படித்ததிலிருந்து கேள்விகள் உண்டு
இராமாயணம் உயர்ந்த கருத்துக்களை உள்ளடக்கியதா எக்காலத்திலும் ஏற்று கொள்ள  படுவதாயிருக்கிறதா .....
எந்த  தீமையை ஒழித்து அறத்தை நிலைநாட்டினார் ....
இதுவரை பல விளக்கங்கள்  விவாதங்கள் கேட்டாலும் படித்தாலும் சொல்வது ஒருபுறம் ஏற்புடையதாக இருந்தாலும் தவிர்க்க முடியாத கேள்விகள் எழத்தான் செய்கிறது என்னுள் இராமன்  மனிதனாக காண்பிக்க பட்ட  ஒரு அவதார  புருஷன்    தந்தை சொல் மீறாதவன் அரசனானவன் நல்லாட்சி புரிந்தவன் ஹான்  இங்குதான் கேள்வியே எழும்பியது மேதாவியான எனக்கு 
ராமன் நல்லாட்ச்சி புரிந்தான் என்றிருந்தால் ஏன்  மக்கள் கீழான எண்ணப்போக்குக்கு உட்பட்டவர்களாக ஆளாக வேண்டும் ஸீதையும்  ஒரு பிரஜை தான் அங்கு அப்படி பார்த்தல் மற்றவருக்காக அவளுக்கு துரோகம் இழைத்து போல்தோற்றம்  ஆகவில்லையா தீர்ப்பு என்பது ஒரு பட்சமாக  ஆகலாமா என்னதான் பெருந்தன்மையாக சீதை கணவனுக்கு உதவ வந்தாலும் (காட்டுக்கு போவது தீக்குளித்தல தள்ளிவைக்கப்படுவது) அப்பொழுது  நாட்டில் ஆண்மக்கள் பிறன் மனைவியை சந்தேகிக்கும் உரிமையும் எல்லோரும் தீக்குளித்து நிரூபிக்க உட்படுத்த பட வேண்டும் என்பது நிர்பந்தமாகிறது அல்லவா  அதையும் ஒரு அரசன் கைக்கொள்ளும் போது
சந்தேகம் என்னும் மாய பிசாசை வளர்த்து கொண்டே போகலாம் என்று மீண்டும் கருவுற்ற பெண்ணை தள்ளிவைக்கிறான் எப்படிஇது சரியாகும் நல்லாட்ச்சி என்பது அறிவற்ற செயல்களுக்கு எண்ணங்களுக்கும் உடன்படுவதா இது தியாகமா ?
சரி மற்றோரு பெண்ணை காதலிக்கவில்லை காமம்  கொள்ளவில்லை என்பது உயர்வாக  காண்பிக்க படுகிறது ஏன் ஆண்  என்றால் இவையெல்லாம் எப்போது கைக்கொள்ளத்தான் வேண்டுமா பிடிக்கவில்லை  தோன்றவில்லை என்ற உணர்வு ஆட்படுபவர்களாக இருக்க கூடாதா எப்போதும் இந்த உணர்வுகளை கொண்டேதான் வாழ வேண்டுமா

வால்மீகி அவனை சாதரண மனிதனாகவே சித்தரித்து இருந்தாலும் அவதரமாக சித்தரித்து இருந்தாலும் தவறு தவறுதானே....

எங்கே நீயோ நானும் அங்கெ உன்னோடு என்று பின் பற்றி வருகிறாள்  இன்னொரு அரசன் சிவ தவம்  இருப்பவன் அழகுக்காக தன்னிலை இழப்பனாம் மேஜிக் செய்து அவளை கவர்ந்து செல்வானாம்  லாஜிக்கே இல்லாமல்..... 
கலியுகத்தில்தான் படங்கள்  கதைகளுக்கு லாஜிக் தேவையில்லை என்று சாபாமேற்றுள்ளோம்  என்று பார்த்தல் ......
திரேதா யுகத்திலும் லாஜிக் இல்லாமல் தான் வாழ்ந்து இருக்கிறார்கள் போல்.....
இவனும் தன் சொந்த விருப்பத்திற்காக போர் என்ற செயலில் இறங்குகிறான். மக்களை பணயம் வைக்கிறான். இது போதிக்கும் நூல் என்றால் எதை போதிக்கின்றது என்ற  குழப்பம் வருகிறது இன்றைய வளர்ந்துவரும் இளைய சமுதாயத்திற்கு சுருக்கமாக நல்லவை என்று சொல்வதற்கு ஏதேனும் உள்ளதாக மறுக்க முடியாமல் என்றால் எனக்கு தோன்றியவரை இல்லை என்பதுதான். 
அரசர்கள் நெறிமுறையற்றவர்களாகவே  காண்பிக்கப்பட்டுள்ளார்கள். மக்களை பற்றிய தனியாக உயர்வாக சொல்லும் படி எதுவும் வருவது போல் இல்லை துதி பாடுவதும் சாபம் விமோசனமும் மட்டுமே பிரதானமாக கான்பிக்கப்படுள்ளது. போர் என்பதே முக்கியமாக கான்பிக்கப்பட்டுள்ளது. 
தனிப்படட ஒருவனுக்காக எல்லோரும் போரில் இறங்குவதாக காண்பித்தது என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை...... 
கடவுள் ஸ்தானத்தில் காண்பிக்க பட்ட இராமனுடன் ஏன் சீதை வாழ்வில்லை பூமி பிளந்து புவியன்னையை  ஏன் சரண் அடைய வேண்டும்????? 
என்ன மாரல்........காண்பிக்கிறது இங்கு  இது போல் இன்னும் கேள்விகள் பல உண்டு இங்கு நான் அரசன் என்பவன் பற்றி மட்டுமே காண்பித்துளேன் இராமனுக்கு போரில்  உதவியவர்கள் எல்லாம் ஆறறிவு படைத்தவர்கள் இல்லை ஏன் இவ்வாறாக எழுதப்பட்ட்து   என்ன உள்  நோக்கம்


கடைசியாக பெண் என்பவள் எல்லா யுகத்திலும் சோதனைக்கு உட்படுத்தப்படுபவளாகவே.... சமூகத்தினரால் பிரச்னை உட்படுத்தப்படுபவளாகவே.......
இன்னும் நிறைய கேள்விகள் இருக்கிறது இத்துடன் .... இங்கு.இன்று முடிக்கிறேன் .