அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

சிப் சிப் சிப் –பசிக்கு ......



என்னனமோ எதைஎதையோ கண்டுபிடித்து கொண்டேதான் இருக்கிறான் மனிதன் தோன்றின காலம் தொட்டு இன்னிக்கு தேதியில் உடலை கச்சிதமாய் வைத்து கொள்வதுதாங்க பெரிய பிரச்சனை 'ஓபிசிட்டி' என்று உலகமே அலறுது உடல் இளைக்க என்ன  என்ன மருந்துங்க தினமும் ஒரு கண்டு பிடிப்பு நித்தம்  ஒரு விளம்பரம் அதுக்குன்னு
ஜிம்முக்கு போறது கடுமையான உடற்பயிற்சி வாக்கிங்கு ரன்னிங்கு இப்படி அடுக்கிட்டே  போகலாம் உடல் பருமன் குறைய அதற்கான அறுவை சிகிச்சையும் கூட மக்கள் செய்து கொள்கிறார்கள்
இங்க பாருங் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற வசனம் போல் விசனம்  சரி இதுகெல்லாம் எது காரணம் பசி சில பேர் உண்மையில் பசிக்காக சாபிட்டால் சில பேர் ருசிகாகவே பசியை வளர்ப்பவங்க இப்படி சாப்பிடால் வயிறு பெருத்துதான் விடும்
அவ்வையும் கூட இதை பற்றி இப்படி பாடி இருக்கிறார் 'உண்டி சுருங்கினால் அழகு' என்றும் சொல்லிருக்கிறார் 'உண்டி' என்றால் 'உணவு'  
இப்படியான நிலைமையில் இப்படி ஒரு கண்டு பிடிப்பு பசியையே கட்டுபடுத்த ஒரு மைக்ரோசிப் ஒன்றை கண்டு பிடித்து இருகிறார்களாம்   ஒரு சிறிய சிப் மூலம் நாம வயிற்று பசிக்கு மூடு விழ கொடுக்கமுடியுமா? முடியும் என்று கண்டுபிடித்து இருக்காங்களாம்  உடல் இளைக்க உதவும் விதமான உடலில் பொருத்தவல்ல மைக்ரோச்சிப் மின்னனுக் கணினிச் சில்லு

ஒன்றை தாங்கள் உருவாக்கியுள்ளதாக ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து

ஆய்வுகளை மேற்கொள்ளும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மூளைக்கு பசியை உணர்த்துவதிலும் உடலின் வேறு பல வேலைகளைக்

கட்டுப்படுத்துவதிலும் உதவுகின்ற  வேகஸ் நவ்ர்ஸ் எனப்படும் நரம்பிலே

சேர்ந்து இருப்பதுபோல இந்தச் சில்லு உடலில்பொருத்தப்படும்


'.
இன்னமும் இது விலங்குகள் மேல் பரிசோதித்து பார்க்க

படவில்லை என்றும் கூறி அதன் பின்னரே மனிதர்களிடத்தில்

பரிசோதித்து பார்க்கபடும் என்று கூறுகின்றனர்


மேலும் வேகஸ் நரம்புகளில் பொருத்தப்பட்ட இந்தச் சில்லுகள் பசி

தொடர்பான இரசாயன அறிகுறிகளை புரிந்துகொள்ளும் என்றும்

அதிகமான பசியை உணர்த்தாத வகையில் மூளைக்கு மின்னனு

சமிக்ஞைகளை அனுப்பும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.சரி தான்

அப்பவும் இதை யாருங்க வாங்க முடியும்? யாருங்க அதை பொருத்திக்க

முடியும்  இவங்கலாலேயா?
சீக்கீரம் கண்டு பிடிசசி நம்ம ஊர் ரேஷனில்

 இலவச அரசி மற்ற பொருட்களுக்கு பதிலா இதை கொடுத்தால் எப்படி ?

திங்கள், 4 மார்ச், 2013

விழிகாதீர்கள்



இன்றைய இளைய தலைமுறையின் ஆரோக்கிய பிரச்ச்னையில் ஒன்றான  ஒன்றுக்கு விடை  இதோ

இன்றைய நவீன உலகத்தில் இளை  தலைமுறையினரின்  வாழ்க்கை முறையில்
  
நிறைய மாற்றங்கள் அதன் பயன்  அவர்களின் உடல் கூற்றிலும்  மாற்றம்

முக்கியமாய் கார்பரேட் என்ற மிக பெரிய கடலில் மூழ்கி வாழும் தலைஎழுத்து
  
இன்றைய தலைமுறையின் தலையில் இந்த வாழ்வினால் அவர்கள் இழந்த

ஆரோக்கியங்கள் அதிகம் அதில் மிகவும் தலையான ஒன்று  தூக்கமின்மை இது

என்ன பாதிப்பெல்லாம் கொடுக்கிறதோ அதில் முக்கியமான ஒன்று இதோ

தூக்கமின்மை மரபணுக்களை பாதிக்கும் என்று   ஐக்கிய ராஜ்ஜியத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். தூக்கமின்மையானது மனித உடலின் செயற்பாட்டை கடுமையாக பாதிக்கவல்லது என்று இவர்கள் கூறுகின்றனர் எப்படி என்றால்?
ஒரு ஆய்வு நடத்தினர் இதற்காக  26 பேரை ஒரு வார காலம் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் தூங்கவைத்து அவர்களின் ரத்தத்தை எடுத்து பரிசோதனை செய்தனர். அடுத்து இவர்களை ஒரு வாரகாலத்துக்கு ஆறுமணிக்கும் குறைவாக தூங்கவைத்து அதன்பிறகு அவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்தனர்.
இதில் எழுநூற்றுக்கும் அதிகமான மரபணுக்கள் மாற்றமடைந்திருப்பதை இவர்கள் கண்டறிந்தனர். குறிப்பாக மனிதர்களின் அன்றாட செயற்பாட்டுக்கு பெரிதும் தேவைப்படும் மரபணுக்களில் இந்த மாற்றங்கள் கூடுதலாக இருப்பதை இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும்படி செய்யப்பட்டவர்களின்   மரபணுக்களில் நூற்றுக்கணக்கானவற்றில் கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டதாக இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
தூக்கமின்மையானது, மனிதர்களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்
இதன் காரணமாக என்ன என்ன பிரச்சனைகள் தலைதூக்குகின்றன என்று பார்த்தல் தேவைக்கு அதிகமான உடல் பருமன் ,குறைவான மூளைதிறன்
செயல்பாடு ,இதய நோய்கள் ,சர்க்கரை நோய் ஆகியவி என்று கூறுகின்றனர் .
எனவே ஆரோக்கியமான வாழ்வை விரும்புபவர்கள் அவசியம் ஒரு நாளைக்கு எட்டுமணி நேரம் தூங்கவேண்டும் என்பது இவர்களின் அறிவுரை.

புதன், 27 பிப்ரவரி, 2013

துப்பறியும் சிசுகள்





சிசுக்களின் காதுகள் 23 வாரம் கர்ப்பத்தில் இருக்கும்போது வளரத்தொடங்குகின்றன

கர்ப்பப்பையில் இருக்கும்போதே சிசுக்களால் ஒலிகளைக் கேட்க முடியும் என்பது ஏற்கனவே விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட ஒன்றுதான். ஆனால் கூடுதலாக இப்பொழுது சிசுக்களின் வளர்ச்சியின் மற்றொரு அம்சமாக இவை 

பிக்கார்டி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் 'கர்ப்பப்பையில் இருக்கும்போதே குரல்களை உணர முடியும் சிசுக்களால்' என்று கண்டுபிடித்துள்ளனர்

28 வார கர்ப்பத்தில் இருக்கும் சிசுக்களை ஒளி ஸ்கேன்கள் மூலம் சோதனை செய்ததில், அவைகள் வெவ்வேறு வார்த்தைப் பதங்கள் மற்றும் ஆண் , பெண் குரல்களை, சிசுக்களால் பாகுபடுத்திப் பார்க்க முடிகிறது என்று தெரியவந்துள்ளதாக கூறுகின்றனர்.

தாயின் கருப்பையில் இருக்கும்  போதே சிசுக்கள், பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே, வெளியில் இருந்து வரும் பேச்சொலிளிகளில் காணப்படும் வேறுபாடுகளைப் புரிந்துகொள்கின்றன என்று பிரெஞ்சு விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மனித மூளைக்கு பேசப்படும் மொழியைப் புரிந்துகொள்ளத்தேவையான உள்ளார்ந்த அறிவுத்திறன்  அவைகளுக்கு இருப்பதாக தாங்கள் நம்புவதாக பிரெஞ்சு விஞ்ஞானிகள் குழு கூறுகிறது.

இனி யாரிடம் பேசுகிறோம்  என்ன பேசுகிறோம் எந்த தொனியில் பேசுகிறோம் என்பதை கருவுற்றிருக்கும் தாய்மார்கள்  உணர்ந்து  செய்தால் நல்லது 


புதன், 20 பிப்ரவரி, 2013

புதனின் புதிர் -வியப்பு



ஆம் புதன் கிரகத்தை பற்றி அறிந்தவைகளை இன்று ம்று ஆலோசனை செய்கிறது அறிவியல் விஞ்ஞானம் 
இதுவரை புதனை சூரியனுக்கு மிகவும் அருகில் இருக்கும் கோளாகவே அறியப்பட்டு வந்தது 
தற்பொழுது  அந்தக் கோள்தான் எப்போதுமே சூரியனுக்கு அருகில் இருந்தததாகக் கூறமுடியாது என்று அறிவியலாளர்கள் இப்போது கருத ஆரம்பித்துள்ளார்கள்.
புதனின் தோற்றம் குறித்து இப்போது ஆய்வாளர்கள் மறுஆய்வு  தொடங்கியுள்ளார்கள்.
அந்தக் கோளில் உள்ள சில வேதியல் பொருட்கள் அதீதமான வெப்பத்தில் உருவாகியிருக்க முடியாது என ஆய்வாளர்கள் எண்ணுகிறார்கள்.
அமெரிக்க தேசிய விண்வெளி அமைப்பான நாசா புதன் கோளை ஆய்வு செய்ய ஏவிய மெஸஞ்சர் என்ற விண்கலம் எடுத்து அனுப்பியப் படங்களை வைத்தே இப்படியான கருத்துக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.
புதன் கோள் நமது சூரிய மண்டலத்துக்கு வெளியே உருவாகி இருக்கலாம் என்றும், பின்னர் அது மிதந்து வந்து இப்போது இருக்கும் இடத்துக்கு வந்திருக்கலாம் என்றும் நாசா விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
பூமியிலிருந்து புதனைப் பார்க்கும்போது மங்கிப் போன பழுப்பு நிற உருண்டையாக தெரியும். ஆனால் அந்தத் தோற்றத்துக்கு மாறாக அதன் மேற்பரப்பு புகைப்படங்களில் வேறு மாதிரியாகக் காணப்படுகிறது என தற்போது கிடைத்துள்ள புகைப்படங்களை பார்த்த பின்னர் நாசா விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
புதிய புகைப்படங்களில் புதனின் பரப்பிலுள்ள எரிமலை பள்ளத்தாக்குகள் ஆரஞ்சு வண்ணத்திலும், சில பகுதிகள் ஆழ்- நீல வண்ணத்திலும் இருப்பது தெரிகிறது.
புதனின்  புதிர் -வியப்பு 
ஒளி ஊடுறுவ முடியாத மர்மமான தாதுப் பொருளையே அந்த ஆழ்-நீல வண்ணம் காட்டுகிறது என அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகத்தின் இயற்பியல் துறை பேராசிரியர் டாக்டர் டேவிட் ப்ளீவெட் கூறுகிறார்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போதே, புதன் வேறு எங்கோ உருவாகி மெல்ல மெல்ல வான் மண்டலத்தில் மிதந்து நகர்ந்து தற்போது இருக்கும் இடத்துக்கு வந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பீடாக உள்ளது.
அந்தக் கோளில் இருக்காது என்று கருதப்பட்ட விஷயங்கள் அங்கு உள்ளன என்றும் அது மேலும் தமது கருத்தை வலுப்படுத்துவதாகவும் அமெரிக்க அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
புதனின் நிழல் படிந்த பெரும் பள்ளங்களில் உறைபனி இருப்பதையும்,அதன் துருவப் பகுதியிலும் அதே போன்று காணப்படுவதாகும் கூறும் விஞ்ஞானிகள், சூரியனுக்கு மிகவும் அருகில் இருக்கும் கோளில் இப்படி உறைபனி இருப்பது வியக்கத்தக்கதாக உள்ளதாக கூறுகின்றனர் 
அதேபோல விரைவில் ஆவியாகக் கூடிய கந்தகம் மற்றும் பொட்டாஷியம் போன்றத் தனிமங்களும் மிக அதிக அளவில் காணப்படுவதாகவும் புகைப்படங்கள் மூலம் தெரிய வருவதாகவும் கூறும் விஞ்ஞானிகள் இவையெல்லாம் பெரும் புதிராக உள்ளன எனவும் கூறுகிறார்கள்.

வியாழன், 7 பிப்ரவரி, 2013

என் செல்லத்துக்கு ஆப்பு வருமா ?

என் செல்லத்துக்கு ஆப்பு வருமா ?


வரும் பிப்ரவரி 16  தேதி அன்று நம்  வாழும் வீட்டை கடந்து செல்ல ஒரு விருந்தாளி  வர போவதாக விஞ்ஞானிகள் அது நம் வீட்டை உரசி   செல்லும் வாய்ப்பு இருக்கிறதா என்று கணிக்க முயற்சித்ததில் கொஞ்சம் குறைவான வாய்ப்பு தான் என்று சொல்கின்றனர் ஆனால் அது நம் வீட்டை எட்டி பார்ப்பதால் நம் உடலோடு24 மணி நேரமும்  ஒட்டி உறவாடும் செல்லதிற்கு ஆப்பு வருமோ ?

அட புரியலையா ?

விளக்கம் ;-
வரும் பிப்ரவரி16- ம் தேதி அன்று நம் நம் பூமியை கடந்து செல்ல பெரிய  பாறை ஒன்று வர இருப்பதாக விஞ்ஞானிகள் கணித்து இருக்கிறார்கள் 
அதன் பெயர் -டி.எ 14
அதன் எடை சுமார் கிட்டதட்ட 30  ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருக்கும் என்கின்றனர் .
இது பூமிக்கு அருகே வந்தாலும் பூமியை உரசி செல்லும் வாய்ப்பு மிக குறைவு என்றே கணிகின்றனர்.ஆனால் இது நம் அருகே வருவதனால் நம் செயற்கை கோள்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக நினைகின்றனர் . இதனால் நம் செல்ல போன்களுக்கு ஆப்பு வந்துவிடுமோ ?அன்று சிக்கனலில். 
நல்ல வேளை பிப்ரவரி யை அது பூமியை  தொட விரும்பவில்லை 
காதல் தெய்வீ கமானதுதான் இல்லையா ?

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

ஆண்டிபயாடிக் சாப்பிட்டால் வைரஸ் சாகுமா?


ஆண்டிபயாடிக் சாப்பிட்டால் வைரஸ் சாகுமா? - அறிவியலில் கற்பிதங்கள்

ஆண்டிபயாடிக் மருந்து சாப்பிட்டால் வைரஸ்

கிருமிகள் சாகும் என்ற ஒரு நம்பிக்கை நம்மில் பலரிடையே இருக்கிறது. சளிக்கும் இருமலுக்கும்

மருத்துவரிடம் செல்லாமல் நாமாகவே மருந்து கடைகளுக்கு சென்று ஆண்டிபயாடிக்

மாத்திரைகளை வாங்கிப் போட்டுக்கொள்ளும் ஒரு வழக்கத்தை இந்தியாவில் பார்க்கலாம்.

உண்மையில் ஆண்டிபயாடிக் மருந்துகள் வைரஸ்களைக் கொல்லுமா? பாக்டீரியா என்று

சொல்லப்படுகின்ற நுண்ணுயிரிகளைத்தான் ஆண்டிபயாடிக் மருந்துகள் கொல்லுமே ஒழிய

வைரஸ்களைக் கொல்லாது. ஏனென்றால் வைரஸ்கள் என்பவற்றை ஒரு வகையில் பார்த்தால்

உயிருள்ள வஸ்துக்கள் என்றே சொல்ல இயலாது. எனவே சளி இருமல் எல்லாம் வந்தால்,

ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொண்டு அவற்றை குணப்படுத்த முடியாது. வைரஸ் தொற்றுக்கு

ஆண்டிபயாடிக் சாப்பிட்டால் பல சந்தர்ப்பங்களில் பிரச்சினை மோசமாகத்தான் செய்யும், உடலின்

நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துபோகும். எனவே மருத்துவர்கள் சொல்லும்போது மட்டுமே

ஆண்டிபயாடிக் சாப்பிடுங்கள்.


புதன், 23 ஜனவரி, 2013

செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்தமைக்கான அறிகுறி கண்டுபிடிப்பு



செவ்வாய் கிரகத்தின் மேல் பகுதி
செவ்வாய்க் கிரகத்தில் நிலப்பரப்புக்கு கீழேயுள்ள கிடைக்கப்பெறுகின்ற தாதுக்கள் அந்த கிரகத்தில் முன்னொரு காலத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கு இதுவரையில் கிடைத்திருப்பதில் வலுவான ஆதாரம் என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
செவ்வாய்க் கிரகத்தின் சரித்திரத்தில் பெரும்பான்மையான காலங்களுக்கு அதன் மேற்பரப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் வரையான ஆழங்களில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டும் தாதுக்கள் அங்கு காணப்படுவதாக ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர்.
லண்டனின் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் மற்றும் அபெர்டீன் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஈசா ஆகியவற்றின் தரவுகளைக் கொண்டு நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் நேச்சர் ஜியோசயன்ஸ் அருங்காட்சியகத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கிரகங்களை விண்கற்கள் மோதும்போது, நிலப்பரப்புக்கு அடியில் இருக்கின்ற பாறைகள் மேற்பரப்புக்கு கொண்டுவரப்படுகின்றன.
செவ்வாய்க் கிரகத்தில் அவ்வாறு விண்கல் மோதி ஏற்பட்ட ஒரு பள்ளத்தில் காணப்படும் பாறைகளில் உள்ள தாதுக்களை ஆராயும்போது அங்கே உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் தெரிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பூமியில் உயிர்கள் எவ்வாறு தோன்றின என்று இன்னும் தெரியாத நிலையில், செவ்வாய்க் கிரகத்தில் நிலத்துக்குள்ளே நுண்ணியிர்கள் வாழ்ந்தது உறுதிசெய்யப்படுமானால் அது பூமியில் உயிர்கள் தோன்றிய விதத்தை புரிந்துகொள்ளவும் உதவியாக இருக்கும் என்று ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான டாக்டர் ஜோசஃப் மிச்சால்ஸ்கி கூறுகிறார்.

புதன், 16 ஜனவரி, 2013

இந்தியனின் கால்கள் எங்கெல்லாம் ......


ஆஸ்திரேலியா - இந்தியா இடையே 4000-வருட மரபணுத் தொடர்பு
ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களுடைய மரபணுக்கூறுகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய கண்டத்துக்கு நாலாயிரம் ஆண்டுகள் முன்னரே குடியேற்றம் நடந்துள்ளது என்பதற்கான அறிகுறிகள் தெரிவதாகக் கூறுகின்றனர்.

மனிதனின் அறிவு பசிக்கு மனிதனின் பலி.....

                                 ற்றும் ஓர் கொடுமைகளுக்கு வித்திட்டவுள்ளது அறிவியல் முன்னேற்றம் . 
மனிதன் மனிதனை வேட்டையாட புதிய கண்டு பிடிப்புகள் .
மனிதனின் அறிவு பசிக்கு மனிதனின் பலி நடக்காமல் இருந்தால் சரி .............(எத்தனையோ  கொடுமைகள் பார்த்துவிட்டோம் இது என்ன ஜுஜுபி )








பிரிட்டனின் முதலாவது கை-மாற்று அறுவை சிகிச்சை

வியாழன், 10 ஜனவரி, 2013

புதிய கண்டுபிடிப்பு ....... ஸ்டெம் செல்




புதிய கண்டுபிடிப்பு ....... ஸ்டெம் செல் அணுகுமுறை எலிகளின் பார்வை மீண்டும்.............

ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் ஸ்டெம் செல் வைத்து குருட்டு  எலிகளின் மேல் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டது அதன் விளைவு,