கூடையில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கூடையில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 டிசம்பர், 2017

என் வீட்டு பைரவன்


இன்றுதான் கொஞ்சம் நேரம் கிடைத்தது எழுத இரண்டு நாளாய் என்னை படுத்தி எடுத்தது விட்டு இன்றுதான் அமைதியான என் வீட்டு பைரவன்    பத்து நாள் பயணத்தில் சந்தோஷம் முழுமையாய் இல்லாமல் மனதை ஆக்ரமித்து துக்கத்தில் ஆழ்த்தியவன்

எங்கள் வீட்டு செல்ல குட்டி பைரவன் பெயர் ஜானி இப்போதுதான் ஒருவயது முடிய போகிறது அவன்  எப்போதுமே என்னை வெளியே செல்லவே விடமாடடான்  வீட்டைவிட்டு குலைத்து ரகளை செய்து விடுவான் இந்த பயணத்தை முழுவதுமாய் சந்தோஷத்தோடு வரவேற்க  முடியாமல் அவனை பற்றி  கவலை பட்டு கொண்டிருந்தேன் வீட்டில் மகன் பயணத்தில் கலந்து கொள்ளவில்லை அவனுக்காகவே 
  
முதலில் நான் துணிமணிகளை அடுக்க ஆரம்பித்தவுடனேயே அவனுக்கு எதோ புரிந்துவிட்டது என்னையே சுற்றி சுற்றி வந்தான் நான் பேசுவது எல்லாம் அவனுக்கு புரியும் . மகனிடம் அவனை தனியே நிரம்ப நேரம் விடாமல் எப்படியெல்லாம் பார்த்து கொள்ள வேண்டுமென்று சொல்லி கொண்டு இருந்தையெல்லாம் கவனித்து கொண்டே இருந்தான் .
எப்பொழுது நான் வெளியே கிளம்பினாலும் என் துப்பட்டாவை அசந்த நேரம் எப்படியாவது எடுத்து கொண்டு ஓடி ஒளிந்து கொள்வான் இல்லை கிழித்தே விடுவான் .அவனுக்கு நன்றாக தெரியும் நான் அடிக்கமாட்டேன் சும்மா கத்தி கொண்டே மட்டும் இருப்பேன் திட்டுவது போல் என்று ஊருக்கு செல்லும் நேரமும் வந்துவிட்டது.அவன் முகம் மாறிவிட்டது குரல் மாறி அழுகை குரலில் கூப்பிட ஆரம்பித்துவிட்டான் கேப்பில் ஏறவிடாமல் அப்போதே மனது கஷ்டப்பட ஆரம்பித்துவிட்டது மகன்  கடிந்து கொண்டார் நான் பார்த்து கொள்கிறேன் இப்போ இப்படித்தான் செய்வான் இரண்டு நாளில் சரியாகிடுவான் என்று முதல் நாள் டிரெயினில் போனில் ஒன்றுமில்லை என்று சொன்னான் நல்ல இருக்கான் என்று என்னை சமாதானம் படுத்துவிட்டான் மகன் ட்ரைனிங் பிரியட்டில் இருக்கிறார் காலையில் 9 -ல்  இருந்து மத்தியம் வரை .

அடுத்த நாள்பக்கத்துவீட்டில் இருந்து போன் காலையில்ஜானி அழுது கொண்டே இருக்கிறான்' ரொம்ப பாவமா இருக்கு குரல் கொடுத்தாலும் ரொம்ப கோவப்படறான் 'என்று

ஆம்  அவன் யாரையும் உள்ளே வேறு விடமாட்டான். வீட்டு பக்கத்தில் வந்தாலே கத்தி ஒருவழியாகிவிடுவான். அதனால் யாரும் உள்ளே வரமாட்டார்கள் கேட்டை திறந்து. நாங்கள் வேறு மாடியில் இருக்கிறோம் சொந்த வீடுதான் அவனுக்கு சுற்றிவர நிறைய இடமுண்டு 
மகன் மதியம் வந்தவுடன் கேட்டால் சரியாகிடுவான் நீ அங்கே பார் என்று சொன்னான் தைரியமாய்.

முதல் இரண்டு நாட்கள்   சாப்பிட்டவன் பிறகு சாப்பிடமாட்டேன் என்று அடம் சாப்பாடு வைத்தால்  தடடை தலைகீழ் கவிழ்த்து வைத்துவிட்டானாம். சமாளிக்க முடியவில்லை மகனும் வீடியோக்கால் போட்டு "கூப்பிடுமா அவனை" என்றெல்லாம் சொல்லி பார்த்தான். 
நான்காம்  நாள் என் குரலுக்கு தேடி ஓடி ஓடி பார்த்தவன் பிறகு உர் என்று முகத்தை தூக்கி வைத்து கொண்டானாம் திரும்பவும் சாப்பிட ஸ்ட்ரைக் இரவு வீட்டுக்குள் தான் இருப்பேன் என்று அடம் காலை முதல் மதியம் வரை அழுகை இதையெல்லாம் சொன்னால் நான் நிரம்ப வருத்தப்பட போறேன் என்று மகன் சொல்லமால் இருந்தார். வீட்டினுலேயே பக்கத்திலேயே வைத்து கொண்டு உள்ளார். எல்லோரும் பக்கத்தில்அவன் அழுகிறான் என்று சொல்லியதில் அவனோ அப்போதும் சமாதானமாகவில்லை சாப்பிடவுமில்லை சரியாக.....

நான் அங்கு டில்லியில் திரும்புவதர்காக வண்டி ஏறுமுன் வீடியோ காலில் அவனை கூப்பிட்டால் கோபித்து கொண்டு போயி முலையில் உட்கார்ந்தவன் எழுந்தே வரவில்லையாம் சாப்பிடவுமில்லை அழுகை அழுகை டிரையின் வேறு லேட்டா வறுத்து இரவு பத்துமணி ஆகிவிட்டது  சென்னையில் வந்து கேப் பிடித்து வீட்டு வந்துதான் தெரியும் என் மேல் விழுந்து புரண்டு அழுது எழுந்து கொள்ளவே மாட்டேன் என்று மடிமேல் படுத்து கொண்டான் அப்புறம் மூன்று இட்டிலி யை ஊட்டி சமாதான படுத்தி இரவு 12 மணி

வீட்டில் உள்ளோருக்கு மக்களுக்கும் என்னவருக்கும்  தங்களையெல்லாம் அதிகம் கண்டு கொள்வில்லையென்று ஆச்சரியம் வேறு, மகனோ போன  நாளில் இருந்து அவன் செய்த அடம், கோபம் ,அழுகை எல்லாவற்றயும் சொல்லி சொல்லி மாய்ந்து போனார் 
அவன் சரியாக சாப்பாடு எடுக்காததால் அடுத்தநாளே அவனின் டாக்டரிடம் கூப்பிட்டு போனால் 104 டிகிரி ஜுரம் என்று சொல்கிறார் ரொம்ப பயந்து ஏக்கத்தில் வைத்திருக்கும் என்று ....மாத்திரை அப்பா அவனுக்கு மாத்திரை கொடுப்பது பெரும் பாடு ஊசி போட்டு கூப்பிட்டு வந்தால் இரண்டு நாள் என்னை ஒட்டியே கிடந்தது இப்பொது தான் கொஞ்சம் சமாதானம் ஆனான் செல்லக்குட்டி

வீட்டில் ஒரே திட்டு  இனிமேல் அவனை அதிகம் கொஞ்சக்கூடாது அவனிடம்  பேசி கொண்டே இருக்க கூடாது என்று.....

வெளியேயோ எல்லா வீட்டில் இருந்தும் "அம்மாதாயே நீ எங்கேயும் போகாதே உன் பெறாத மகனைவிட்டு அவன் அழுகை சமாளிக்க முடியலை கிட்டேயும் வரமுடியலை  அவனையும் கூடவே அழைத்து கொண்டு போ இல்லை உன்னவரையாவது  விட்டு போ" அவருக்கும் ரொம்ப செல்லம் அவன்

அவனின் சுட்டித்னத்தை  எல்லாம் சொல்லனுமென்றால் அது ஒரு பெரிய கதை புத்தக்கம் போல் ஆகிவிடும். 

பயணம் அவ்னின்  கவலையிலேயே கழிந்துவிட்டது மனதில் உற்சகமில்லாமல் திரும்பவும் ஒரு பயணம் இருக்கிறது அடுத்தமாதம் அது நான் மட்டும் தான் ஆனாலும் வீட்டில் கவலை இப்போதிருந்தே என்ன செய்ய செல்லமா செல்ல குட்டியை வளர்த்ததற்கு இப்போ திட்டு அதற்க்கும் அவர்களை அவன் தண்டித்து கொண்டுதான் இருக்கிறான் ஹா ஹா ஹா 

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

அண்ணன் என்னடா தம்பி என்னடா

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே


இப்படி தான் இன்று  நிலைமை இருக்கிறது ...பெற்றோரை கூட பாரமாய் நினைக்கும் காலம் அவசரம் அவசரம் நேரம் ஒதுக்க முடியாமல் ஆனால் இப்படி பட்ட உலகில் பிரதி பலன் பாராமல் உதவி புரிவர்களும் இருக்கிறார்கள்.  அதை பற்றி பகிர்ந்து நாமும் வியக்கிறோம் எங்கள் பிளாக்கில் வெள்ளி தோறும் அதை பற்றிய குறிப்புகளை வழங்கி சிறப்பிக்கிறார்கள் .மற்றவர்களுக்கும் தெரிவிக்கிறார்கள் .இப்படி பிரதி பலன்  பாராமல் உதவும் தோழமைகள் இங்கு ஏராளம் என்று கேள்வி பட்டுளேன் .

இங்கே ஏன் திடீரென இதை பற்றி பேசுகிறேன் என்று நினைப்பீர்கள்  அப்படி எனக்கும் நான் இந்த பிளாக் என்று ஒன்று ஆரம்பித்த நாள்  2012 முதல்  வந்து ஊக்கம் அளித்த தோழமைகள்  அதிகம் நடுவே இதை தொடராமல் விட்டு விட்டேன் 2013 லேயே அப்பொழுது இருந்த பிரபல வலைப்பதிவாளார்கள்


திரு.வை.கோபாலகிஷ்ணன் ஐயா (இவரை பற்றி எதுவும் இப்பொழுது தெரியவில்லை மிகவும் வருத்தம்)

திரு திண்டுக்கல் தனபாலன்

திரு அவர்கள் உண்மைகள்

திரு கோமதி அரசு

திரு நாஞ்சல் மனோ

திரு பாலகணேஷ்

திரு தமிழ்வாசி

திரு அரசன்

திரு உஷா அன்பரசு

திரு இளமதி

திரு அம்பாள்திரு முரளிதரன் 

திரு ராஜலக்ஷ்மி பரமசிவம்

திரு யாதவன் நம்பி

திரு வெங்கட் நாகராஜ்

திரு ஸ்கூல் பையன்

திரு கணையாழி கண்ணதாசன்

திரு கிரேஸ்

திரு மகேந்திரன், திரு வருண் ,திரு கலியபெருமாள் புதுச்சேரி....... என்று பலர் என் பிளாக்கையும்   பார்வையிட்டு கருத்துக்கள் சொல்லி ஊக்கப்படுத்தியுள்ளார்கள். இன்னும் சில பெயர்கள் விட்டு பட்டு இருக்கலாம் அவர்கள் மன்னிக்கவும் ....அவர்களில்  பலரை இந்த 2017 அதிகம் பார்க்க முடியவில்லை சில பேரை தவிர அவர்களின் பதிவுகளும் அதிகம்  வருவதில்லை அவர்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். நான் ஆரம்பித்த வேகத்தில் சீக்கிரம் விடுமுறையும் கொடுத்துவிட்டேன் என் பிளாக்கு மிகவும் வருத்தம் இப்பொழுது வருகிறது இவர்களையெல்லாம் ரொம்பவும் மிஸ் செய்துவிட்டேனே என்று....

 

மறுபடியும் நான் 2017 பிளாக்கை நீண்ட  இடைவெளிக்கு பிறகு ....இடைவெளியா வருடங்கள் என்று சொல்லனும்  சகோ  திரு திண்டுக்கல் தனபாலன்  'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' என்ற பதிவை படித்தேன். என்னை போன்றொருகாவே எழுத பட்டிருக்கும் பதிவு அதை படித்தவுடன் திரும்பவும் ஒரு புத்துணர்வு மீண்டும் வலைப்பதிவுக்குள் என்னை நுழைத்து கொண்டேன் இப்பொழுதும் நீண்ட இடைவெளிக்கு பின் வந்தாலும் எனக்கு தோழமை கரம் நீட்டி  உற்சாகம் கொடுப்பவர்கள் அன்று  ஊக்கமளித்த பலர் இன்றும் வருகை புரிந்து ஊக்கமளிக்கிறார்கள் அவர்களில் அன்றும்  இன்றும் வருபவர்களை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. DD சகோ, Avargal Unmaigal-நல்ல நண்பர் என் பெயரைதமிழில் எழுதிய பேனரை அளித்தவர் அன்றே பிரதிபலன் பாராமல் அதை கூட போட தெரியாமல் இருந்திருக்கிறேன்  ,சிஸ் கோமதி அரசு, தனிமரம்   இன்று வலைப்பதிவாளர்கள் ஊக்கம் பெரும் இடமாக இருக்கும் எங்கள் Blog என்னும் தளம் நான் அனுப்பிய கதையையும் போட்டு மகிழ்ச்சியை  கொடுத்தவர்கள் இங்கு பல வலைபதிவாளர்களை  புதிதாய்  அறிமுக படுத்தி கொண்டேன்......., தோழமைகள் பலர் அதில்  ரசிக்கவைக்கும் பதிவுகளை அள்ளித்தரும் கில்லர் ஜீ  , 24 மணி நேரத்திற்குள் 2 பதிவுகளை வெளியிடும் ராஜி  ,நகைசுவை மன்னி அதிரா (தேமஸ் நதியின் அன்அவிஷியல் ஓனர்) ,அவரை அந்த இருப்பிலேயே வைத்திருக்கும்அருமை தோழி  ஏஞ்சலின் ,எல்லோரையும் ஊக்கப்படுத்தும் துளசிதரன், கீதா ,அமைதியாக வந்து போகும் மொஹமத் ,சிஸ்  வல்லிசிம்ஹன்,  நெல்லை தமிழன், ஜீவி சார்,  நண்பர் ஏகாந்தன்,தொடருங்கள் என்று ஊக்கமளிக்கும் வருகை புரிந்திருக்கும் நண்பர் ஜீவாலிங்கம்  மற்றும் அனுராதா பிரேம்குமார்   இது போல்  இன்னும் பலர் வலைச்சரத்தில்   என் ஆன்லைன் தோழமைகள்   ராணிமா ,சிந்து ,ஜாஸ்  நல்ல எழுதவீர்கள் என்ற ஊக்கத்தை கொடுத்தவர்கள் என் நலனில் அக்கறை கொண்டவர்கள். 



நான்  பிளாக் என்ற வலைநுட்பத்தை பற்றி  சிறுக சிறுக அறிந்து வந்து கொண்டு இருக்கும் போதே கன்னிமுயற்சியிலேயே  அதிலிருந்து விலகி நின்றதால் இன்று மீண்டும் பிளாக்கில் நுழைந்தவுடன் ஒன்று புரியவில்லை கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் ......கையிருப்பில் பழையது இருந்ததை  போட்டுவிட்டு முழித்து கொண்டு இருந்தேன். பின்னர் மெல்ல மெல்ல ஒன்று ஒன்றாய் மீண்டும் பிளாக் என்பதை பற்றி படிக்கச் ஆரம்பித்தென் நான் ஆரம்பிக்கும் போது .com இருந்த பிளாக் பின்னர் கூகுள் .in என்று மாற்றி இருக்கிறது கில்லர்ஜி யால்  தமிழ்மணம் என்ற திரட்டி ஏன் வேலை செய்யவில்லை என்ற கேள்வியால் இதையே அறிந்தேன் ...தமிழ்மணம் என்ற திரட்டியை கொடுத்திருப்பதையெல்லாம் மறந்துவிட்டேன் ...இப்போ தோழமைகள் சிலர் 'அடிப்பாவி' என்றும் சிலர்' ம்கூம் கிழிஞ்சு போ லச்சனம்' என்று மனசுக்குள் சொல்வீர்கள்.... என்னது?? இதுவேறயா பிளாக்லேயே திட்டுறோம் இரு  என்று நினைத்தாலும் வாங்கி கொள்கிறேன் truth பிளாக்கு போயி வந்தற்கு  அடையாளமாய்  அரசியலில் இதெல்லாம் சகஜம்பா என்று நானும் சொல்லிவிடலாம் என்று நம்பிகை இன்று திரும்பவும் விவரங்களை நான் தேடும் போது பார்கிறேன் சகோ திண்டுக்கல் தனபாலன் அவர்களும் அதை  பற்றி விளக்களுடன் சொல்லி கொடுத்து இருக்கிறார்.அவர் சொல்லியிருந்தவை என் பிளாக்கில் எடுக்கவில்லை எரர் என்றே காண்பித்தது அவரிடம் கேட்டேன் ஒன்று புரியவில்லை என்று

இப்பொழுது நீயெதுவும் குழம்ப வேண்டாம் என்று பிரதிபலன் பாராமல் உதவி புரிந்தவர் சகோ திண்டுக்கல் தனபாலன் ஆச்சிரியமாய் இருக்கிறது இவர்களை  போன்றவர்களை பார்க்கும் பொழுது சந்தோஷமாய்  இருக்கிறது .....நம்பிக்கையும் வருகிறது .....என்னால் இனியும் என்னுள் தோன்றுவதை பிடித்ததை உபோயோகமாய்  தோன்றியவற்றை பதிக்க  முடியும் தமிழ் மொழியில்.....மனதுக்கு திருப்தியாய் நம் எழுத்தை நாம் பார்க்க அடுத்தவர் முன் வைக்கும் போது ....அந்த அடுத்தவர்கள் பார்வைக்கும், பழக்கத்திற்கும் வெளியே நிற்பவர்கள்..... நட்பாய்  கிடைத்து நம் எழுத்தை அவர்கள்  ரசிக்கும்  போது வரும் ஆனந்தமிருகே வார்த்தையில் சொல்லமுடியாது..... என்ன பெரிசா எழுதிட்ட.... அப்படி தெரியும் இருந்தாலும் மனதில் வரும் உவகை மேலும் மேலும் கிறுக்க சொல்லி தூண்டுகிறது.  நாட்கள்  வீணடித்து விட்டோமே  நினைகிறேன் இப்போது  என்ன   பெரிய மனத்துவளல்,அதனால் எழுந்த  சோம்பல்   இங்கேயே இருந்திருந்தால் ஆறுதல்  கொடுக்க தோழமைகள்  இருந்திருப்பார்களே இன்னும் உற்ச்சாகமாய் இருந்திருக்கலாமே என்று தோன்றுகிறது.....


இவரை போன்றவர்கள் இருத்தால்வலைத்தளத்தை பற்றி A டு Z  அறியாத  என்னை போல் இருக்கும் கத்துக்குட்டிகள் பிழைத்து கொள்வார்கள்.இவருடைய பின்னுட்டத்தை அநேகமாய் எல்லா வலைச்சரத்தில் பார்க்கமுடியும் ஊக்கம்  கொடுப்பதில் வள்ளல் என்று பலர் நினைத்திருப்பீர்கள்   எனக்கு இவர் உதவியது போல் பலர் பலருக்கு(புதிய பதிவாளருக்கு)  இங்கு  உதவியிருப்பார்கள் ......


நீங்க நல்லாயிருக்கோணும்  தமிழ் வலையுலகம் முன்னேறதமிழ் வலையில் இருக்கும் பதிவர்களின் பதிவுகள் முன்னேறஎன்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே

 

என் பதிவுகளை பார்வையிட்டு தனது   கருத்தை  சொல்லி செல்லும்  வலைச்சர தோழமைகள் அனைவருக்கும்  நன்றி...... பார்வையிட்டு செல்வோர்க்கும்  நன்றி ..... என் பதிவை படித்து நிறை குறைகளை கூறி ஊக்கமளித்து வழி நடத்த  கேட்டு கொள்கிறேன்.

நேற்று என் பதிவில் 2 கீதா சிஸ் வருவதில் ஒன்னு மிஸ் ஆகிவிட்டது அவர் கீதாசாம்பசிவம் உங்களை விட்டுவிட்டேனே என்று நினைக்காதீர்கள் சிஸ் இன்று சேர்த்துவிட்டேன் 


ஞாயிறு, 1 அக்டோபர், 2017

கடவுள் அவதரிப்பாரா ?-2

        கடவுள் அவதரிப்பாரா என்பதின் தொடர்ச்சியை  பாருங்க 

கருத்து சொன்னவர்களுக்கும் என்னை போல் ஐயம் இருப்பது புரிகிறது ஏனென்றால் எனக்கு தான் அதிக பட்ச்சமாக தோன்றுகிறதோ  என்று ஒரு குழப்பம் இருந்தது .

        தர்மம் அதர்மம் இரண்டுக்கும் மனிதனில் அளவுகோலில் உள்ள குழப்பம்  என்னவென்றால்... 
                                                                 Image result for black money in temples
   கொள்ளை அடித்துவிட்டு கடவுளுக்கு அதில் பங்கு, வறியவருக்கு பிச்சை என்று கொடுத்துவிடுவதே தர்மம் என்றும் அது என்னை காக்கும் என்று நினைத்து கொள்கிறார்கள் அதன் தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்ககும் என்ற நினைப்பு ... கொஞ்சம் அதிகம் போயி பீற்றி கொள்ளவும் செய்கிறார்கள் தாங்கள் செய்யும் தர்மத்தின் அழகை  இது கொள்ளை மட்டுமல்ல சில அடாது செயலுக்கும், கொடுமைக்கும் கூட அளவு கோடாக வைத்திருக்கிறார்கள்.இன்றைய மனிதர்கள்.
 இது சாரணமக்களுக்கும் பொருந்துமா? அவன் வேண்டுதலில் சுயநலமே மேலோங்கி இருக்கிறது எனக்கு இதை கொடு.. அதை கொடு கடவுளையும்  டார்ச்சர் (இம்சை )செய்யும் மனநிலை மேலும் அவன் அவன் லெவெலில் வேண்டிய அளவு சிறு சிறு தீமையும் செய்ய தான் துணிகிறான். தீமை என்பதை வளர்த்து விடுபவன். கண்ணுக்கு தெரியாமல் கண்ணுக்கு  தெரிந்தும்.   
 வறியவருக்கு பொருந்துமா? அவனும் இந்த மனநிலைதான் கொண்டுள்ளான் எப்படிலாமோ சம்பாதிக்கிறான், எப்படிலாமோ வாழ்கிறான்,நமக்கும் கொஞ்சம் அதில்கொடுக்கட்டும் கொடுத்தே ஆகவேண்டும் என்ற பிடிவாத மனநிலையை கொண்டு இருக்கிறான் . மற்றவன் தீமையில் பங்கு கேட்க  தாயாராக இருக்கிறான்.  
  இப்பொது யாரை தான் காப்பாற்ற கடவுள் அவதரிக்க வேண்டும்? நன்மை என்பது குறிக்கோளாய் இல்லை தீமையை என்பதை ஒதுக்கும் தைரியமும் இல்லை .
  இன்றைக்கு நடக்கும் கொடுமைகளில் இருந்து இளைய  தலைமுறையை வழி படுத்த கூட  முடியாமல் இந்த அளவு கோல் தடுக்கிறது.. உதாரணமாக ஒரு இளைஞ்சனை தவறான படங்களையோ பேச்சுகளையோ விட்டுவிடு உன்னை அழித்துவிடும் என்று சொன்னால்.. 'உலகத்தில் நிஜமா கொடுமை  பண்ணுகிறவன், பண்ணியவன் எல்லாம் நல்லாத்தான் இருக்கான் இதுவொன்னும் பெரிய விஷயமில்லை' என்று புறம் தள்ளிவிடுகிறார்கள். அவர்களை அறியாமல் தீமைகளின் பக்கம் சாய்ந்துவிடுகிறார்கள்.
   ஏன் ஒரு குடும்பத்திலேயே இருந்து இந்த சாய்த்தல் ஆரம்பித்துவிடுகிறது இளையவனை  வழி நடத்தினால் அவர்கள் கை மூத்தவனை நோக்கி போகிறது 'அவனை எதுவும் சொல்லமாட்டிங்க என்னை மட்டும் ஏன்?' என்ற கேள்வி.. தீமைக்கு உரம் போடுகிறது. 99% பெற்றோர்களும் தீமை செய்யயும் பிள்ளைகளுடன் தன் பிள்ளைகளின் தீமையின் அளவை ஒப்பிட்டு சமாதானம் ஆகிவிடுகிறார்கள் அவர்களாக தீர்மானித்து கொள்கிறார்கள். கெட்டது என்பதற்க்கு  அளவுகோல் வைத்து. 'நல்லதை நாடு, நல்லத்துக்கு துணையாக நில்' என்பதை சொல்லி கொடுக்க தவறிவிடுகிறார்கள். அப்பொழுது  மிக மெல்லியதாக அதர்மத்தின் நூலின் முனையினை பிடித்துவிடுகிறோம் எல்லோரும் .
  தர்மத்தின் வாழ்வுதனை சூத்து கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்று சொல்லி கொடுத்தால் இருக்கட்டும் இருந்து விட்டு போகட்டும்  தீமை எல்லாரையும் புரட்டி எடுத்த பிறகு அது வென்றால் என்ன வெல்லவிட்டால் என்ன என்ற  கேள்வியே இன்று எல்லோறையும்  சூழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் கேள்வி... 
                                           Image result for ram it down judas
கடைசியாக அப்படி கடவுள் வந்தாலும் 
இதை தான் சொல்லுவார் என்று நினைக்கிறேன்.....
 'இவ்வளவு நாள் நீங்க என்னடா கிழிச்சிட்டு இருந்திங்க உங்களுக்குனு கொடுத்ததை  சரியா பராமரிக்க முடியாமல் இருக்கும் போது எதற்க்கு  உங்களுக்கு இது(உலகம்) காப்பாற்ற பட வேண்டும் உங்கள் பசிக்கு உங்களையே இரையாகி கொள்ளுங்கள்" 
இவ்வாறு எல்லாம்  கேள்வி எழுப்பமாட்டார் என்பதே  மனிதனின் பக்தி கடவுள் அவதரிப்பார் என்ற நம்பிக்கையில் மனிதன் செய்வதை மறந்து மன்னித்து பக்தி பூஜை என்று மாயம் செய்து கொள்கிறான்.
                              Image result for tsunami new zealand 2016
    ஒருபக்கம் இயற்கையோ கோபத்தோடு காத்திருக்கிறது மனிதனின் வளர்ந்துவிட்ட முட்டாள் தனத்திற்கு பரிசு கொடுக்க 
 'விதி என்பதை உலகத்தில் உள்ளவைகளுக்குமட்டுமல்ல உலகுக்கும்(பூமிகோள்) விதி என்பது எழுதப்பட்டிருக்க வேண்டும் இந்த கோட்பாட்டில் இந்த விதமான நியதியில் மட்டுமே இயக்கம் இருக்க வேண்டும் இல்லையேல் முடிவுக்கு வரவேண்டும் என்பது கடவுளின் தியரி' 
சீரியஸா சொன்ன அழகாச்சி  வந்திட போகுதுனு புலம்பலாய்......
ஒரு வழியா புலம்பியாச்சு  நீங்களும் வந்து என் புலம்பல்  சரியா? தவறா? சொல்லிட்டு போங்கோ  



வெள்ளி, 29 செப்டம்பர், 2017

கடவுள் அவதரிப்பாரா ?

                                                              Image result for jesus in the manger
கடவுள் அவதரிப்பாரா ?
     எப்போது ? எதற்கு?  ஏன்?  கடவுள் அவதரிக்க வேண்டும். அதற்கு பொத்தாம்  பொதுவாய் ஒரு பேச்சு நிலவுகிறது, உலகில் அதர்மம் அதிகரிக்கும் போது கடவுள் வர வேண்டும், வருவார் .. எல்லோரும் புலம் புலம்பல்  இதுதான் சரி  அப்படியே  வைத்து கொள்வோம் ..

  தீமைகளின் வீதம் முழுவதும் அதிகரித்த பின் யாரை காப்பாற்ற கடவுள் அவதரிக்க வேண்டும் ? என்ற கேள்வி எழுகிறதா .. 


  அதர்மம் அதிகரிக்கும் போது கடவுள் அவதரிப்பார் என்ற கூற்றுக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். தீமைக்கு அளவுகோல்  வைத்திருக்கிறார்கள் 
                                    Image result for quality vs quantity
இது பெரிசு , இது சிறுசு என்று செய்யும் தீமைக்கு.. ஒவ்வொரு  மனிதனின்  எண்ணமும் ஒப்புமை படுத்தி பார்கிறது நான் செய்யும் தீமையை விட  பெரிதனாது இருக்கிறதா.. என்று அப்படி இருந்தால் அவனின் எண்ணம் இப்படியாக இருக்கிறது  முதலில்அவங்களை கடவுள் வந்து போட்டு தள்ளட்டும். நான் செய்வதெல்லாம் சிறுசு, எண்ணம்  மட்டும் தான்.

   'உண்மைக்கு  ஆதரவு தராது என் குற்றமல்ல,  கொடுமையை கண்டும் காணாமல் நான் மட்டும் தப்பித்து கொள்வேன், இதுபோன்றே  மனிதனின்  மனதில் ஓடிக்கொண்டு இருக்கும்.......  கடவுளையும் நிந்தித்து கொண்டிருப்பேன் அவனையும் விட்டு வைக்க மாட்டேன் கண்ணுக்கு தெரிந்தையும் ஒதுங்கி நின்று திட்டுவேன், கண்ணு தெரியாத்தை தைரியமாய் திட்டுவேன்' இதுதான் இன்றைய நிலைமை 
                                       Image result for age of exploration clipart 
   தர்மம் அதர்மம் இது இரண்டும் இன்றைய மனிதரின் அளவு கோல் என்ன என்பதில் நிறைய குழப்பமிருக்கிறது என்றே பார்க்க முடிகிறது 

   என் பதிவுகள் நீண்டு கொண்டே போவதால் படிப்பவருக்கு சிரமம் (*உன் பதிவை படிப்பதே அப்படித்தான்*என்று நினைப்பவர்களுக்கு ஹீ  ஹீ )   வரலாம் சோ இதை தொடரும் என்று விடுகிறேன் ................

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

இராமாயணமும் கேள்விகளும்

இராமாயணமும் என் கேள்விகளும்
இராமாயணத்தை பற்றி எப்பொழுதும் விவாதங்கள் ஆண்டு ஆண்டாண்டு  காலமாய் வந்து கொண்டே இருக்கிறது எனக்கும் அதை படித்ததிலிருந்து கேள்விகள் உண்டு
இராமாயணம் உயர்ந்த கருத்துக்களை உள்ளடக்கியதா எக்காலத்திலும் ஏற்று கொள்ள  படுவதாயிருக்கிறதா .....
எந்த  தீமையை ஒழித்து அறத்தை நிலைநாட்டினார் ....
இதுவரை பல விளக்கங்கள்  விவாதங்கள் கேட்டாலும் படித்தாலும் சொல்வது ஒருபுறம் ஏற்புடையதாக இருந்தாலும் தவிர்க்க முடியாத கேள்விகள் எழத்தான் செய்கிறது என்னுள் இராமன்  மனிதனாக காண்பிக்க பட்ட  ஒரு அவதார  புருஷன்    தந்தை சொல் மீறாதவன் அரசனானவன் நல்லாட்சி புரிந்தவன் ஹான்  இங்குதான் கேள்வியே எழும்பியது மேதாவியான எனக்கு 
ராமன் நல்லாட்ச்சி புரிந்தான் என்றிருந்தால் ஏன்  மக்கள் கீழான எண்ணப்போக்குக்கு உட்பட்டவர்களாக ஆளாக வேண்டும் ஸீதையும்  ஒரு பிரஜை தான் அங்கு அப்படி பார்த்தல் மற்றவருக்காக அவளுக்கு துரோகம் இழைத்து போல்தோற்றம்  ஆகவில்லையா தீர்ப்பு என்பது ஒரு பட்சமாக  ஆகலாமா என்னதான் பெருந்தன்மையாக சீதை கணவனுக்கு உதவ வந்தாலும் (காட்டுக்கு போவது தீக்குளித்தல தள்ளிவைக்கப்படுவது) அப்பொழுது  நாட்டில் ஆண்மக்கள் பிறன் மனைவியை சந்தேகிக்கும் உரிமையும் எல்லோரும் தீக்குளித்து நிரூபிக்க உட்படுத்த பட வேண்டும் என்பது நிர்பந்தமாகிறது அல்லவா  அதையும் ஒரு அரசன் கைக்கொள்ளும் போது
சந்தேகம் என்னும் மாய பிசாசை வளர்த்து கொண்டே போகலாம் என்று மீண்டும் கருவுற்ற பெண்ணை தள்ளிவைக்கிறான் எப்படிஇது சரியாகும் நல்லாட்ச்சி என்பது அறிவற்ற செயல்களுக்கு எண்ணங்களுக்கும் உடன்படுவதா இது தியாகமா ?
சரி மற்றோரு பெண்ணை காதலிக்கவில்லை காமம்  கொள்ளவில்லை என்பது உயர்வாக  காண்பிக்க படுகிறது ஏன் ஆண்  என்றால் இவையெல்லாம் எப்போது கைக்கொள்ளத்தான் வேண்டுமா பிடிக்கவில்லை  தோன்றவில்லை என்ற உணர்வு ஆட்படுபவர்களாக இருக்க கூடாதா எப்போதும் இந்த உணர்வுகளை கொண்டேதான் வாழ வேண்டுமா

வால்மீகி அவனை சாதரண மனிதனாகவே சித்தரித்து இருந்தாலும் அவதரமாக சித்தரித்து இருந்தாலும் தவறு தவறுதானே....

எங்கே நீயோ நானும் அங்கெ உன்னோடு என்று பின் பற்றி வருகிறாள்  இன்னொரு அரசன் சிவ தவம்  இருப்பவன் அழகுக்காக தன்னிலை இழப்பனாம் மேஜிக் செய்து அவளை கவர்ந்து செல்வானாம்  லாஜிக்கே இல்லாமல்..... 
கலியுகத்தில்தான் படங்கள்  கதைகளுக்கு லாஜிக் தேவையில்லை என்று சாபாமேற்றுள்ளோம்  என்று பார்த்தல் ......
திரேதா யுகத்திலும் லாஜிக் இல்லாமல் தான் வாழ்ந்து இருக்கிறார்கள் போல்.....
இவனும் தன் சொந்த விருப்பத்திற்காக போர் என்ற செயலில் இறங்குகிறான். மக்களை பணயம் வைக்கிறான். இது போதிக்கும் நூல் என்றால் எதை போதிக்கின்றது என்ற  குழப்பம் வருகிறது இன்றைய வளர்ந்துவரும் இளைய சமுதாயத்திற்கு சுருக்கமாக நல்லவை என்று சொல்வதற்கு ஏதேனும் உள்ளதாக மறுக்க முடியாமல் என்றால் எனக்கு தோன்றியவரை இல்லை என்பதுதான். 
அரசர்கள் நெறிமுறையற்றவர்களாகவே  காண்பிக்கப்பட்டுள்ளார்கள். மக்களை பற்றிய தனியாக உயர்வாக சொல்லும் படி எதுவும் வருவது போல் இல்லை துதி பாடுவதும் சாபம் விமோசனமும் மட்டுமே பிரதானமாக கான்பிக்கப்படுள்ளது. போர் என்பதே முக்கியமாக கான்பிக்கப்பட்டுள்ளது. 
தனிப்படட ஒருவனுக்காக எல்லோரும் போரில் இறங்குவதாக காண்பித்தது என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை...... 
கடவுள் ஸ்தானத்தில் காண்பிக்க பட்ட இராமனுடன் ஏன் சீதை வாழ்வில்லை பூமி பிளந்து புவியன்னையை  ஏன் சரண் அடைய வேண்டும்????? 
என்ன மாரல்........காண்பிக்கிறது இங்கு  இது போல் இன்னும் கேள்விகள் பல உண்டு இங்கு நான் அரசன் என்பவன் பற்றி மட்டுமே காண்பித்துளேன் இராமனுக்கு போரில்  உதவியவர்கள் எல்லாம் ஆறறிவு படைத்தவர்கள் இல்லை ஏன் இவ்வாறாக எழுதப்பட்ட்து   என்ன உள்  நோக்கம்


கடைசியாக பெண் என்பவள் எல்லா யுகத்திலும் சோதனைக்கு உட்படுத்தப்படுபவளாகவே.... சமூகத்தினரால் பிரச்னை உட்படுத்தப்படுபவளாகவே.......
இன்னும் நிறைய கேள்விகள் இருக்கிறது இத்துடன் .... இங்கு.இன்று முடிக்கிறேன் . 

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

நாம ரொம்ப கில்லாடி

பாம்பு பால் குடிக்கும் ......
நினைச்சுகிட்டு இன்னைக்கும் பால் ஊத்திட்டு வரும் அன்பர்களுக்கெல்லாம் ஒரு தகவல் பகிர்ந்து கொள்ளிகிறேன்ங்க......
யாரும் சாபம் கொடுத்திடாதீங்க உன் கனவுல பாம்பு வந்து பயம் புறுத்தட்டும்னு மீ பாவம் 
காலம்காலமா நம்மவங்க பாம்புக்கு  வந்து முட்டைப்பால் வைத்து கொண்டு வ்ரோமில்லைங்களா அது எதுக்கு அதோட ஸ்ட்ரென்த்கா .......இரண்டையும் கலந்து குடிச்சிட்டு நல்ல வளரடுமுனுஆ ......
பாம்பு பால் குடிச்சி யாருங்க பார்த்திருக்க அப்படினா நம்ம அடுப்படிவரை  வந்துடு போகாதா பூனை மாதிரி ...
பாம்பு பால் எல்லாம் குடிக்காதுங்க அது என்ன சாப்பிடும் நமக்கெல்லாம் தெரியும் தெரிஞ்சும் ஏன் இப்படி பாம்பு புற்றுக்கு பாலும் முடடையும்   வைக்கும் பழக்கம் வந்தது
ஆதிகாலத்தில் மனுஷனுக்கு கான்கிரீட் வீடு வாசல் கதவு இல்லாத அப்ப இந்த பாம்புங்க அவர்கள் வாழ்வாதரத்திற்கு பெரும் பிரச்சனையா இருந்திருக்குங்க
பாம்பை தேடி தேடி கொல்ல  மனுஷனுக்கு போரடிச்சு இருக்கு ....அப்ப அவன் கண்டுபிடிப்பு ஒண்ணுதான் பாம்புக்கு பால் வார்ப்பது
பாம்போட இன பெருக்கத்தை குறைப்பதற்காகவாம்...... அதாவது பெண் பாம்பு தன் உடலில்  ஒரு வித வாசனை திரவத்தை அனுப்பிவிடுமாம்  குறிப்புக்கு அதை நுகரும் ஆண்  பாம்பு தன் இணையை தேடி வருமாம்
அதனால் அது உடம்பு வாசனையை தடுப்பதற்கு இப்படி ஒரு பாயிண்டடை கண்டு பிடிச்சி இருக்கான்........ பால் முடடை அதன் வாசனையை கட்டுப்படுத்துகிறது ......இன  பெருக்கம் குறைவதற்கு வழி முறையாக கடைபிடிக்க பட்டது.......... என்று இது   மூடநம்பிக்கையாய் மாறியது யார் அறிவார் பராபரமே  

புதன், 2 ஆகஸ்ட், 2017

பழ ஜோசியம் பழக்க ஜோசியம்

எல்லாவற்றிலும் ஜோசியம் பார்த்தாச்சு  பழத்தை வைத்து பார்த்திருக்கீங்களா இப்ப பார்த்திடுவோம்
ரொம்ப பிடிச்ச பழம் பயபுள்ள குணத்தை  புட்டு புட்டு வைத்திடுமாம்
அப்ப நாம என்ன பழம் சாப்பிடறமோ அதை பார்க்கிறவங்க நம்மை எடை போட்டுவார்களா ம்ம் .'பழசை எடைக்கு போட்டு பழம் வாங்கி சாப்பிட்டது' போய் பழம் வாங்கி சாப்பிட்டா நம்மையே எடை போட முடியுமாம்
மாம்பழம் 
 Image result for alphonso mangoமாம்பழம் பிரியரா நீங்கள் ..
1. நீங்கள் எடுக்கும் முடிவுகளில் உறுதியாக இருப்பீர்கள்.
2.உங்கள் மனம் மாற்றுவது என்பது மிகவும் கடினமானது.
3.எல்லாரையும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்க முயல்வீர்கள்.
4.க்ரியேட்டிவான விடயங்களை சாதரணமாக செய்யக் கூடியவராக இருப்பீர்கள்.
உள்ளே இருக்கும் கொட்டையை வைத்து கணித்து இருப்பார்களோ

பப்பாளி
Image result for papaya and passion fruitபப்பாளி பிரியராக நீங்கள் .  ,
1.நீங்கள் மனதளவில் நினைக்கும் எந்தவொரு காரியத்திலும் வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். ஆனால் மனம் வைப்பது என்பது தான் மிகவும் கடினம்.
2.எந்தவொரு செயலில் ஈடுபட்டாலும், அதில் உடனடியாகப் பலன் கிடைக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.
இதற்கு கம்மியான பாயிண்டுங்க தான்
வாழைப்பழம்
Image result for myth bananas are the most fattening fruitsவாழைப்பழம் பிரியராக நீங்கள் ,
1.நீங்கள் மிகவும் மென்மையானவராக, பிறருடன் இரக்கத்துடன் பழகுவீர்கள். ஆனால் உங்களுக்குக் கூச்ச சுபாவம் அதிகம் இருக்கும். அதனால் பிறருடன் கலந்து பழக மாட்டீர்கள்.
2.உங்களுக்கு தன்னம்பிக்கையும் மிகவும் குறைவு. அதனால் உங்கள் மென்மையான குணத்தினை சிலர் அவர்களுடைய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வார்கள்.
என்னடா இது குழந்தைகளுக்கும் வயதினவர்களுக்கும் ஏற்ற பழம் என்ற பெயர் பெற்றதினால் இப்படியா  கடவுளின் அருளை பெற்றதுமான பழத்திற்கு இப்படியொரு நிலைமை
ஆரஞ்சு
Image result for mandarin orangesஆரஞ்சுப் பழம் பிரியராக நீங்கள் ,
1.நீங்கள் அதிக அளவு பொறுமையும் அதே அளவு திடமான மன உறுதியும் உள்ளவராக இருப்பீர்கள்.
2.கடின உழைப்பின் மூலம் உங்கள் இலக்கை அடைவது உங்கள் நோக்கமாக இருக்கும்.
3.நம்பிக்கைக்குரிய நண்பராக இருப்பீர்கள்.
4.சண்டை சச்சரவை விரும்பாத நீங்கள் மிகுந்த அழகுணர்ச்சியை உடையவர்.
5.உங்கள் வாழ்க்கைத் துணையை அதிகக் கவனத்துடன் தேர்ந்தெடுப்பீர்கள்.
கண்ணை கவரும் ஆரஞ்சு கருத்தையும் கவரும் போல இருக்கே ...
அன்னாசி
Image result for play & learn english screenshot 5அன்னாசிப் பழம் பிரியராக நீங்கள்,
1.நீங்கள் எந்த விடயத்தையும் ஆலோசித்து நிதானமாக செயல்படுத்துவீர்கள். லாபம் ஏற்படும் தொழிலாக இருந்தால்,அதில் எத்தனை முறை வேண்டுமானாலும் துணிவுடன் தொழிலை மாற்றிக் கொள்வீர்கள்.
2.தன்னிறைவு, நேர்மையை கொண்ட நீங்கள் எளிதில் யாரிடமும் நட்புக் கொள்ள மாட்டீர்கள்.
3.அன்பை வெளிக்காட்டத் தெரியாததால், வெறுப்பிற்கு ஆளாகுவீர்கள்.
முரட்டு தனமான பழம் என்பதால் இருக்குமோ
திராட்சை
திராட்சை பிரியராக நீங்கள், ,
Image result for esperanza rising las uvas
1.உங்களுக்கு அதிக் கோபம் வரும். ஆனால் அதே வேகத்தில் போய்விடும்.
2.உங்கள் தோழமையான அணுகுமுறையாலும் வெளிப்படையாகப் பாராட்டும் குணத்தினாலும் உங்களுடையா நட்பு பலராலும் விரும்பப்படும்.
3.நீங்கள் செய்யும் எந்தவொரு விடயத்தையும் அதிக ரசனையுடன் செய்வீர்கள்.
உலகத்தில் முக்கியமான இடத்தை பிடித்தது மயக்கத்தை தரவல்லத்தின் குணம் ஓரளவுக்கு மேட்ச் ஆகுது பழத்திற்கு
செர்ரி
செர்ரி பழத்தின் பிரியராக நீங்கள் ,
Related image
1.உங்களுக்குப் பிடித்த இடம் உங்கள் வீடு மட்டுமே. குடும்பமும் நெருங்கிய உறவுகளும் சூழ இருப்பதையே நீங்கள் அதிகம் விரும்புவீர்கள்.
2.ஆனால் உங்கள் தொழிலில் உங்களுக்கென்று ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க இயலாது.
3.தொழிலில் எப்பொழுதும் ஏற்றமும் இறக்கமுமாக இருக்கும்.
4உங்களுக்குக் கற்பனைத் திறனும் படைப்பாற்றலும் அதிகம் உண்டு. ஆனால் ஒரே மாதிரியான சலிப்பான வேலைகளை விரும்ப மாட்டீர்கள்.
பார்றா பெண்களின் வர்ணனைக்கு உவமேயமாக உபயோக படுத்தப்படும் பழமும் பெண்ணின் இயல்பை கொண்டே இருக்கிறது
சீதாப்பழம்
Image result for सीता फलசீதாப்பழம் பிரியராக ,
1.நீங்கள் எதையும் ஆழ்ந்து சிந்தித்து முடிவு செய்வீர்கள். ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதைக் கண்டிப்பாக அடைந்து விடுவீர்கள்.
2.விரிவான விளக்கம் அல்லது புள்ளி விவரங்கள் தொடர்பான பணி உங்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். புற அழகு, குணங்களை விட அறிவுத்திறன் வாய்ந்த துணையை மட்டும் விரும்புவீர்கள்.
ஆப்பிள்
ஆப்பிள் பழத்தின் பிரியராக ,
Image result for fruits for increase blood in body
1.நீங்கள் எந்தவொரு செலவுகளையும் தாராளமாக செய்ய விரும்புவீர்கள். ஒரு குழுவை வழி நடத்திச் செல்லக்கூடிய ஆற்றல் உங்களிடம் இருக்கும்.
2.மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக பேசும் உங்களுக்கு உணர்சிகளை கட்டுப்படுத்த தெரியாது.
3.எந்த வேலையைக் கொடுத்தாலும் அதீத ஆர்வத்துடன் எடுத்து செய்வீர்கள்.
ராஜா பழத்தின் அம்சமும் ராஜாவை போல்
மாதுளம்பழம்
மாதுளம் பழத்தின் பிரியராக நீங்கள் ,
Image result for fresh pomegranate
1.நீங்கள் ஒரு சிறிய விடயத்திற்கு கூட டென்ஷன் ஆகுவீர்கள்.
2.நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் கச்சிதமாக நேர்த்தியாக இருப்பது போல் பிறரும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். அதனால் அடுத்தவர்களிடம் நிறையக் குற்றம் கண்டுபிடிப்பீர்கள். அதுவே உங்கள் குறைபாடாகும்.
உரித்து சாப்பிடுவதற்கு தான் தொல்லையாக இருக்குமென்றால் அம்சத்திலுமா

தர்பூசணி
தர்பூசணி பழத்தின் பிரியராக ,
Image result for Watermelon
1.நீங்கள் மிகவும் எளிமையானவராக இருப்பீர்கள்.
2.விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் உங்களுக்கு அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் உங்கள் மீது ஏதேனும் தவறு இருந்தால், அதற்கு மன்னிப்பு கேட்க தயங்க மாட்டீர்கள்.
எல்லோராலும் ஈஸியா வாங்க கூடியதும் ஈஸியா சாப்பிட கூடியதும் பிரதிபலிப்பதும் அதையே

பழ ஜோசியத்திற்கு இங்கே முற்று புள்ளி வைத்துவிடலாமா இனிமே  பழங்களை சாப்பிடும் போது   யோசனையோடவே பார்ப்போமா
தெரிந்ததை சுவரசியமாய தோன்றியதை பகிர்ந்து கொண்டேன் ........அட  கிரகமே சொல்லப்படாது 

வியாழன், 18 ஏப்ரல், 2013

பார்த்தாய நம்பிக்கை என்பது இதுதான் .........


கடவுள் நம்பிக்கை


மக்களே நான் இன்னிக்கு ஒரு கதை சொல்ல போறேன்

இந்த கடவுள் நம்பிக்கையை பற்றி  ரொம்பவே சர்ச்சை இருக்குங்க கடவுள் இருக்காரா? இல்லையா?காண்பிக்க முடியுமா கேள்வி சரி கடவுள் இருகார் என்று ஆதாரங்கள் எல்லாம் என்னால சொல்லமுடியுமா தெரியலைங்க கடவுள் இருக்காருன ஏன் இவ்வளவு கொடுரம் துன்பம் என்று எல்லாம் கேட்க்கிரவங்க  இருப்பாங்க எதை படைத்தாலும் அதுக்கு முடிவும் வேணுமே அதனாலதான் மனுஷன் உருவானான் ஐயோ இத பற்றி பேச ஆரம்பிச்ச அதுக்கு முடிவே வராதுங்க  அதனால் இந்த சிறு கதையை சொல்லாம் நாமளா முடிஞ்ச உதவியை செய்வோம்னு இறங்கிடேன்ங்க நானும் குடைச்சல் கொடுக்க

கடவுள் நம்பிக்கை என்பது..........

கடவுளுக்கு சந்தேகம் வருதோ இல்லையோ இந்த கலகமூட்டரவங்க எங்கேயும் இருப்பாங்க அவங்களுக்கு யாரையாவது குடைச்சல் கொடுக்கலைன மண்டையே வெடிச்சிடும் இப்ப நம்ம நாரதரற்க்கு அந்த மாதிரி ஒரு நிலைமை நாம இந்த கடவுள் நம்பிக்கையை பத்தி பேசரதை எல்லாம் ஒட்டு கேட்டுட்டு போய் கடவுள் கிட்ட வத்தி வைக்கிறாரு




நாராயண!!! நம்ம நாராயணன் நிம்மதியாய் தூங்கிகிட்டு இருக்காரு

இவரு விட்டாதானே நாராயணா !!!!!!!!!

இவருக்குதான் வந்த வேலையை முடிக்கலைனா மண்டை வெடிச்சிடுமே

வந்துடியா இன்னைக்கு தூங்கினா போலதான் ம்ம் “என்ன நாரத எதற்கு என்னை அன்புடன் அழைத்தாய்

இம்கும் காட்டு கத்தல் கத்திகிட்டு இருகேன் இப்போதான் அன்புடன் கொம்புடனு டயலாக் விடறாரு ....சரி வந்த விஷயத்தை பத்தவைப்போம்


“நாராயணா நீயோ இந்த அகண்ட உலகத்தை படைத்து உயிர்களையும் படைத்து பராமரிக்கிறாய் ஆனா இந்த நன்றி கெட்ட ஆறறிவு கொடுத்த விட்ட ஒரே காரணத்திற்காக இந்த மனிதன் மட்டும் ஏதேதோ கண்டுபிடித்து உன் ப்ராஜக்டை சீக்கரம் கவிழ்த்து விட வேண்டும் என்று பார்கிறான் நீ வைத்திருக்கும் காலகெடுவிற்க்கும் முன்னரே இந்த உலகத்தை அழித்து விடவேண்டுமென்று துடிக்கிறான் போலிருக்கிறதே  அதில் வேறு உன்னையே நீ படைத்த உயிர்களில் பாதி நம்ப மறுக்கிறதே இவ்ர்களுகெல்லாம் எப்படி மோட்சம் வழங்க போகிறீர்கள்

“அப்படியா இது உனக்கு எப்படி தெரிந்தது நீ பூலோகம் சென்றாயா ?

“இல்லை பிரபோ நாம் வைத்திருக்கும் வெப்சைடில் பார்வையிட்டபோது கூகுள் ஒன்னை நம்மளுடையத்தை போலவே  கண்டு பிடித்து வைத்திருகிறார்கள் நமக்கெதிராக அதில்தான் இப்பவெல்லம் நான் பார்த்து தெரிந்து கொள்வது 

“நமக்கு வாய்த்த அடிமைகளல் மிக மிக புத்திசாலிகள் சரி உனகென்ன சந்தேகம் தீர வேண்டும் என்னை நம்புகிறார்களா இல்லையா?என்று தானே யார் யார் எப்படி எவ்வகையில் நம்புகிறார்கள் யார் மோட்சம் பெற தகுதியுடைவர்கள் என்று கண்டு வா போ

இவர தூண்டி விடலாம் என்று பார்த்தால் நமக்கே வேலை கொடுத்து விடுவாரே .........சரி பாப்போம் வேலையை  பூலோகம் வருகிறாற் நாரதர்.

மூன்று பேரை சந்திகிறார் ஒருவன் பணக்காரான் ஒருவன் மெத்த படித்தவன் ,ஒருவன் விவசாயி மூன்று பேரிடமும் மோட்ச்சத்தை பற்றி பேசுகிறார்

மூவரும் எங்களுக்கு “மோட்சம் கிடைக்குமா என்று கேட்டனர் அதற்கு என்ன தகுதி வேண்டும் ? என்றனர்

“இதற்கு நான் பதில் சொல்ல முடியாது மகாவிஷ்ணுவிடம் கேட்டு சொல்கிறேன் என்றார்

வைகுண்டம் வருகிறார் நாரதர் மூவரும் கேட்ட வரத்தை  பற்றியும் நாராயனனிடம் சொல்கிறார்

அதற்கு மகாவிஷ்ணு இப்போது “ஊசியின் காதுக்குள் யானையை நுழைத்து கொண்டிருப்பதாக சொல்

என்ன இதுவா பதில் என்பது போல் பார்கிறார் என்ன உன் லீலை என்கிறார் நாரதர்



மீண்டு பூலோகம் வந்த நாராதர் முதலில் மெத்த படித்தவனை சந்திக்கிறார்

அவன் ஆவலுடன் “என்ன நாராதரே எனக்கு மோட்சம் கிடைக்குமா? என்கிறான்

அதற்கு நாரதர் “அய்யா நான் சென்ற போது மகாவிஷ்ணு ஊசியின் காதுகுள் யானையை நுழைத்து கொண்டிருந்தார் அதனால் பேச முடியவில்லை இதை கேட்ட நம்ம படிச்சவரு “என்ன ஊசியின்  காதுகுள்ள யானையை நுழைப்பதா ? வேடிக்கையாக இருக்கே நீங்க சொல்லவது என்று நக்கலா சிரிக்கிறான் மேதாவி



பின்பு பணக்காரனை சந்திகிறார் அவனும் “மோட்சம் கிடைக்குமா ?என்ன
சொன்னார் மகாவிஷ்ணு என்கிறான்

“ஊசியின் காதுகுள் மகாவிஷ்ணு யானையை நுழைத்து கொண்டிருந்ததால் என்னால் பேச முடியவில்லை-நாரதர்

இதை கேட்ட நம் அப்பாடக்கருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை விழுந்து விழுந்து சிரிகிறான்



மனம் தளராத விக்ரமாதித்தன் போல் நாரதர் விவசாயியையும்
சந்திகிறார் அவனும் தன் மோட்ச்ச்சத்தை பற்றி மகாவிஷ்ணு என்ன சொன்னார்? என்று கேட்கிறான். மத்தவங்க கிட்ட சொன்ன டயலாக்கையே இவனிடமும் சொல்றாரு நாரதர்

இதை கேட்டவுடன் விவசாயி “ஆஹா ஆஹா கடவுள் சக்தியே சக்தி !

“ஊசி காதினுள் யானையை அவரை தவிர யாரால் நுழைக்க முடியும்

“சின்ன விதை மூலம் பெரிய மரத்தை உருவாக்குபவரால் இதுவும் முடியும் 


நாரதருக்கு  ஆச்சரியம் தாங்க முடியவில்லை 
வைகுண்டம் வருகிறார் மகாவிஷ்ணுவிடம்  நடந்தை சொல்கிறார்




பார்த்தாய நம்பிக்கை என்பது இதுதான் .........



உங்களுக்கும் புரிந்திருக்கும் நினைக்கிறேன் அந்த விவசாயி நிம்மதியா போயிடு இருப்பான் எல்லாம் நடக்கும் நடக்கும் போது என்று ஆனா மற்ற இரண்டு பேர் யானை நுழைந்தா முடியுமா எப்படி என்று மன வாதத்தில் தூக்கம் வராமல் பாயை பிறாண்டி கொண்டு இருப்பாங்க




  

தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
சிலை என்றால் வெறும் சிலை தான்

உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
இல்லை என்றால் அது இல்லை...


திங்கள், 8 ஏப்ரல், 2013

திருக்குறளும் காந்தியும் .......


       



என்னடா இது நேற்று தான் எதோ பழ மருத்துவத்தை பகிர போவதாய்  சொல்லிவிட்டு இன்று வேறொன்றுக்கு தவிவிட்டேன் நினைப்பது புரியுது நேற்றைய குறிப்புகாக ஔவை பாடலை பகிரும் போது இது நியாபகம் வந்துவிட்டது நம் உயிர் மூச்சு தமிழ் பற்றியது அல்லவா  ... ஒரு ஆவல்



  தமிழனாய் பிறந்ததில் கர்வம் கொள்வோம்...! உங்க எல்லோருக்கும் திருக்குறள் பற்றி சொல்லவேண்டாம்  உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவி இருக்கும் இந்த இரண்டடி செய்யுள் அல்லது கவிதை  அல்லது அறிவுரை அல்லது நீதி நெறி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இன்றுவரை இதை பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கிறது இது  உலககின் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கபட்டு உள்ளது இதன் மகத்துவம் அறிந்தவர்களால்  நம்மை உலகம் திரும்பி பார்க்கவைத்த இந்த நூலின் பெருமை நாம் அறிந்திருக்கிறோமோ இல்லையோ மற்றவர்கள் இதன் பயனையும் புகழையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் அப்படி பட்டவருள் ஒருவர் தான்......


உலக புகழ் பெற்ற லியோ டால்ஸ்டாய்  இவர் ஒரு தலைசிறந்த எழுத்தாளர் இவர் நம் திருக்குறளின் பெருமையை உணர்ந்தவர் இவருக்கும் நம் தேசத்தந்தை காந்தியடிகளுக்கும்  நட்பும் கடித போக்குவரத்தும் இருந்தன ஒரு சமயம் ஒரு கடிததில் காந்தியடிகள் இவருக்கு கடிதம்  எழுதிய போது டால்ஸ்டாய் எழுதிய வரிகளை நினைவு கூறி பெருமை படுத்தி எழுதுகிறார் காந்தியடிகள் அந்த வரிகள்
    
அக்கடிதத்தில் 'தம்மைத் துன்புறுத்து வோரையும் தண்டிக்காது மன்னிக்கும் குணம் பற்றித் தாங்கள் கூறியிருக்கும் செய்தி, என்னை மிகவும் கவர்ந்தது'

இதை படித்த டால்ஸ்டாய் அவ்வரிகளை தமதாக்கி  கொள்ளவா விரும்புவார்  அவர்தான் திருக்குறளை படித்து புரிந்தவர் ஆயிற்றே உடனே அவர் காந்தியாடிகளுக்கு பதில் அனுப்பினாராம்  ....

'இந்தப் பெருமையும், புகழும் எனக்கு உகந்ததல்ல. உங்கள் தேசத்தில், தமிழ்நாட்டில் பிறந்து, திருக்குறள் எனும் அற்புத நூலைப் படைத்த திருவள்ளுவரையே சாரும். இதோ, அப்பொருள் உணர்த்தும் குறள்' என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளைக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் குறள்...

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்து விடல்


அட என்று காந்தியடிகளுக்கு வியப்பு தோன்றி ஆங்கிலத்தில்
மொழி பெயர்க்கபட்ட திருக்குறளை படித்து பார்த்து மனம் உவகை கொண்டு 'நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும். ஏன் தெரியுமா? ஆங்கிலத்தில் படிக்கும்போதே... இத்தனை சுவையாக இருக்கிற திருக்குறளின் மூலநூலை தமிழ்மொழியில் படிக்க வேண்டும். அதற்காகவே, நான் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்' என்றாராம்
இப்படி நம் மொழின் ஆதிகத்தையும் பெருமையையும்  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமக்கு அளித்து போன நம் முன்னோர்களின் என்னவென்று புகழ்வது நானும் தமிழன் தமிழச்சி என்று சொல்வதை விட முடிந்தவரை குறைந்த பட்ச அளவிலாவது திருக்குறளின் நீதியை  பின்பற்றினால்  வாழ்வு சுபிட்சம் பெரும்
.

திருக்குறள் இறை நூல் என்றும் போற்ற படுகிறது இந்நூல் கி.முக்கும் முன்னரே வந்தக கண்டறியபட்டதால் இதன் காரணமாகவே இது இன்று வரை ஆராய்ச்சிக்கு  உட்பட்டுள்ளதாக இருக்கிறது அதுமட்டுமல்ல
இது உலக பொதுமறை  நூல் என்று சொல்ல படுகிறது  ஏனென்றால் இதில் இனம் ,நாடு ஒருவருக்கு மட்டும் உரித்தான காலாச்சாரம் என்று எந்த அடையாளங்களும்  தன்னடயாளமாக இந்த நூலில் இல்லையாம் ஒன்றே ஒன்று இது தமிழ் மொழில் எழுதபட்டுள்ளது இது இது ஒன்றே போதுமே நாம் பெருமை கொள்ள காலத்தின்  கோலம் எப்படி போகும்..... அவர் அவர்க்கு இது தீர்வாக கொள் என்று இறைவனே.... வந்து சட்டம் என்று கொண்டாலும் சரி நீதி என்று நினைத்தாலும் சரி என்று இயற்றிவிட்டு போனதோ !!!!!!!!
விழித்து கொண்டால் விழித்து கொள்ளுங்கள் இல்லையேல் ........

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்-உன்போல்
குறட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்!

தமிழும் வாழ வேண்டும் மனிதன்
தரமும் வாழ வேண்டும்
அமைதி என்றும் வேண்டும் ஆசை
அளவு காண வேண்டும்!