இன்றுதான் கொஞ்சம் நேரம் கிடைத்தது எழுத இரண்டு நாளாய் என்னை படுத்தி எடுத்தது விட்டு இன்றுதான் அமைதியான என் வீட்டு பைரவன் பத்து நாள் பயணத்தில் சந்தோஷம் முழுமையாய் இல்லாமல் மனதை ஆக்ரமித்து துக்கத்தில் ஆழ்த்தியவன்
எங்கள் வீட்டு செல்ல குட்டி பைரவன் பெயர் ஜானி இப்போதுதான் ஒருவயது முடிய போகிறது அவன் எப்போதுமே என்னை வெளியே செல்லவே விடமாடடான் வீட்டைவிட்டு குலைத்து ரகளை செய்து விடுவான் இந்த பயணத்தை முழுவதுமாய் சந்தோஷத்தோடு வரவேற்க முடியாமல் அவனை பற்றி கவலை பட்டு கொண்டிருந்தேன் வீட்டில் மகன் பயணத்தில் கலந்து கொள்ளவில்லை அவனுக்காகவே
முதலில் நான் துணிமணிகளை அடுக்க ஆரம்பித்தவுடனேயே அவனுக்கு எதோ புரிந்துவிட்டது என்னையே சுற்றி சுற்றி வந்தான் நான் பேசுவது எல்லாம் அவனுக்கு புரியும் . மகனிடம் அவனை தனியே நிரம்ப நேரம் விடாமல் எப்படியெல்லாம் பார்த்து கொள்ள வேண்டுமென்று சொல்லி கொண்டு இருந்தையெல்லாம் கவனித்து கொண்டே இருந்தான் .
எப்பொழுது நான் வெளியே கிளம்பினாலும் என் துப்பட்டாவை அசந்த நேரம் எப்படியாவது எடுத்து கொண்டு ஓடி ஒளிந்து கொள்வான் இல்லை கிழித்தே விடுவான் .அவனுக்கு நன்றாக தெரியும் நான் அடிக்கமாட்டேன் சும்மா கத்தி கொண்டே மட்டும் இருப்பேன் திட்டுவது போல் என்று ஊருக்கு செல்லும் நேரமும் வந்துவிட்டது.அவன் முகம் மாறிவிட்டது குரல் மாறி அழுகை குரலில் கூப்பிட ஆரம்பித்துவிட்டான் கேப்பில் ஏறவிடாமல் அப்போதே மனது கஷ்டப்பட ஆரம்பித்துவிட்டது மகன் கடிந்து கொண்டார் நான் பார்த்து கொள்கிறேன் இப்போ இப்படித்தான் செய்வான் இரண்டு நாளில் சரியாகிடுவான் என்று முதல் நாள் டிரெயினில் போனில் ஒன்றுமில்லை என்று சொன்னான் நல்ல இருக்கான் என்று என்னை சமாதானம் படுத்துவிட்டான் மகன் ட்ரைனிங் பிரியட்டில் இருக்கிறார் காலையில் 9 -ல் இருந்து மத்தியம் வரை .
அடுத்த நாள்பக்கத்துவீட்டில் இருந்து போன் காலையில்ஜானி அழுது கொண்டே இருக்கிறான்' ரொம்ப பாவமா இருக்கு குரல் கொடுத்தாலும் ரொம்ப கோவப்படறான் 'என்று
ஆம் அவன் யாரையும் உள்ளே வேறு விடமாட்டான். வீட்டு பக்கத்தில் வந்தாலே கத்தி ஒருவழியாகிவிடுவான். அதனால் யாரும் உள்ளே வரமாட்டார்கள் கேட்டை திறந்து. நாங்கள் வேறு மாடியில் இருக்கிறோம் சொந்த வீடுதான் அவனுக்கு சுற்றிவர நிறைய இடமுண்டு
மகன் மதியம் வந்தவுடன் கேட்டால் சரியாகிடுவான் நீ அங்கே பார் என்று சொன்னான் தைரியமாய்.
முதல் இரண்டு நாட்கள் சாப்பிட்டவன் பிறகு சாப்பிடமாட்டேன் என்று அடம் சாப்பாடு வைத்தால் தடடை தலைகீழ் கவிழ்த்து வைத்துவிட்டானாம். சமாளிக்க முடியவில்லை மகனும் வீடியோக்கால் போட்டு "கூப்பிடுமா அவனை" என்றெல்லாம் சொல்லி பார்த்தான்.
நான்காம் நாள் என் குரலுக்கு தேடி ஓடி ஓடி பார்த்தவன் பிறகு உர் என்று முகத்தை தூக்கி வைத்து கொண்டானாம் திரும்பவும் சாப்பிட ஸ்ட்ரைக் இரவு வீட்டுக்குள் தான் இருப்பேன் என்று அடம் காலை முதல் மதியம் வரை அழுகை இதையெல்லாம் சொன்னால் நான் நிரம்ப வருத்தப்பட போறேன் என்று மகன் சொல்லமால் இருந்தார். வீட்டினுலேயே பக்கத்திலேயே வைத்து கொண்டு உள்ளார். எல்லோரும் பக்கத்தில்அவன் அழுகிறான் என்று சொல்லியதில் அவனோ அப்போதும் சமாதானமாகவில்லை சாப்பிடவுமில்லை சரியாக.....
நான் அங்கு டில்லியில் திரும்புவதர்காக வண்டி ஏறுமுன் வீடியோ காலில் அவனை கூப்பிட்டால் கோபித்து கொண்டு போயி முலையில் உட்கார்ந்தவன் எழுந்தே வரவில்லையாம் சாப்பிடவுமில்லை அழுகை அழுகை டிரையின் வேறு லேட்டா வறுத்து இரவு பத்துமணி ஆகிவிட்டது சென்னையில் வந்து கேப் பிடித்து வீட்டு வந்துதான் தெரியும் என் மேல் விழுந்து புரண்டு அழுது எழுந்து கொள்ளவே மாட்டேன் என்று மடிமேல் படுத்து கொண்டான் அப்புறம் மூன்று இட்டிலி யை ஊட்டி சமாதான படுத்தி இரவு 12 மணி
வீட்டில் உள்ளோருக்கு மக்களுக்கும் என்னவருக்கும் தங்களையெல்லாம் அதிகம் கண்டு கொள்வில்லையென்று ஆச்சரியம் வேறு, மகனோ போன நாளில் இருந்து அவன் செய்த அடம், கோபம் ,அழுகை எல்லாவற்றயும் சொல்லி சொல்லி மாய்ந்து போனார்
அவன் சரியாக சாப்பாடு எடுக்காததால் அடுத்தநாளே அவனின் டாக்டரிடம் கூப்பிட்டு போனால் 104 டிகிரி ஜுரம் என்று சொல்கிறார் ரொம்ப பயந்து ஏக்கத்தில் வைத்திருக்கும் என்று ....மாத்திரை அப்பா அவனுக்கு மாத்திரை கொடுப்பது பெரும் பாடு ஊசி போட்டு கூப்பிட்டு வந்தால் இரண்டு நாள் என்னை ஒட்டியே கிடந்தது இப்பொது தான் கொஞ்சம் சமாதானம் ஆனான் செல்லக்குட்டி
வீட்டில் ஒரே திட்டு இனிமேல் அவனை அதிகம் கொஞ்சக்கூடாது அவனிடம் பேசி கொண்டே இருக்க கூடாது என்று.....
வெளியேயோ எல்லா வீட்டில் இருந்தும் "அம்மாதாயே நீ எங்கேயும் போகாதே உன் பெறாத மகனைவிட்டு அவன் அழுகை சமாளிக்க முடியலை கிட்டேயும் வரமுடியலை அவனையும் கூடவே அழைத்து கொண்டு போ இல்லை உன்னவரையாவது விட்டு போ" அவருக்கும் ரொம்ப செல்லம் அவன்
அவனின் சுட்டித்னத்தை எல்லாம் சொல்லனுமென்றால் அது ஒரு பெரிய கதை புத்தக்கம் போல் ஆகிவிடும்.
பயணம் அவ்னின் கவலையிலேயே கழிந்துவிட்டது மனதில் உற்சகமில்லாமல் திரும்பவும் ஒரு பயணம் இருக்கிறது அடுத்தமாதம் அது நான் மட்டும் தான் ஆனாலும் வீட்டில் கவலை இப்போதிருந்தே என்ன செய்ய செல்லமா செல்ல குட்டியை வளர்த்ததற்கு இப்போ திட்டு அதற்க்கும் அவர்களை அவன் தண்டித்து கொண்டுதான் இருக்கிறான் ஹா ஹா ஹா



அன்னாசிப் பழம் பிரியராக நீங்கள்,

சீதாப்பழம் பிரியராக ,










.jpg)


