சனி, 30 டிசம்பர், 2017

புத்தாண்டு .... ஆங்கில புத்தாண்டு


புத்தாண்டு .... ஆங்கில புத்தாண்டு  மக்களின் மகிழ்ச்சியை    கொண்டாடி வருகிறதா இல்லை அப்பாடா இந்தாண்டு  போயிற்று இந்த உலகத்தில் என்ற   நோக்கத்தில் கொண்டாட படுகிறதா புரியவில்லை இருந்தும் எனக்கு தெரிந்து  40  வருஷங்களுக்கு  மேல் இருந்து கொண்டாடப்பட்டுத்தான் வருகிறது....
 அதற்க்கு முன்னர் எப்படியோ தெரியவில்லை அவரவர் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தினரோ ? 

இப்பொது இன்றைக்கு நாம் நமக்கு மட்டும்   திடிரென்று அதில் மாற்றம்   கொண்டு வர வேண்டுமென்பது எதிர்பார்க்காத வருத்தத்தை கொண்டு வரத்தான் செய்யும் மக்கள் மனதில் .....
இந்த ஒரு நாள் கொண்டாட்ட  நாள் என்று மனதில்  பதிந்து போய்விட்டது.


கொஞ்ச வருஷத்திற்கு முன்வரை  புத்தாண்டுக்கு பட்டாசு வெடிப்பார்கள் ,புது சினிமா ரிலீஸ் ஆகும் அதற்க்கு முந்தி அடித்து போவார்கள், கோவிலுக்கு போவார்கள் .

இன்று நிலை மாறிவிட்ட்டது கலாச்சரா சீரழிவு என்ற போர்வையை போர்த்தி கொண்டது ஆங்கில புத்தாண்டு .இதன் காரணமாய் பல குற்றங்கள் புதிது புதிதாய் அலங்கரிக்கிறது சமீபமாய் ஒவ்வொரு வருஷமும். 

இன்றைய இளைய  தலைமுறையினர் வரைமுறையற்று கொண்டடாத்தை திண்டாட்டமாய் ஆகிவிடுகிறார்கள் ஆண் பெண் பேதமின்றி 
கண்ணுக்கு தெரிந்து சில குற்றம்  கண்ணுக்கு தெரியாமல் பல ....

அதனால் இந்த நாளை கொண்டாட  கூடாது என்று தடை விதிக்க படுகிறது. 
பல மாநிலங்களில் இதற்க்காக  பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறையினாரால் நடத்தப்பட போகின்றனவாம் 
தலைக்கு தலை நாட்டாமையாகிவிட்டால் என்னவாகுமோ என்ற பயமும் வருகிறது.  அதே சமயம் கொஞ்சம் ஒழுங்கு படுத்த படுமோ என்ற எண்ணமும் தோன்றுகிறது   
இதை எந்த அளவு மக்கள் ஏற்று கொள்வார்கள் என்பது கவலை அளிக்கிறது அப்படி ஏற்று கொள்ளாமல் இருந்தால் சட்டம் ஒழுங்கை கையில் எடுத்தால் கஷ்டப்பட போவது நாமே 
உற்சாகத்தை கொண்டு வருவதற்கு  பதிலாய் வருத்தத்தை தாங்கி விடுமோ இந்த நாள்  என்ற அச்சம் வருகிறது...... 
எந்த பிரச்னைகளும் குற்றங்களுமற்று இந்த நாள் கடந்திட வேண்டுமென்று பிராத்தனை எழுகிறது 

தோழமைகளும் பிராத்தனை செய்து கொள்ளுங்கள் இந்த புத்தாண்டு இனிய  புத்தாண்டாய் கடந்து வர, மலர்ந்துவர...... 



வியாழன், 28 டிசம்பர், 2017

காஃபி பிரியர்களுக்கு.....



ஃபிடேன் காஃபி ரெசிபி  


காஃபி  பிரியர்களுக்கு ஒரு புது காஃபியாம் 
இது என்ன பார்ப்போமா 
அதுவும்  இப்போ குளிர்காலம் எல்லோருக்கும் சூடா காஃபி, டீ  குடித்தால்  நன்றாக இருக்கும் என்று தோன்றும்.... அப்படி இரண்டு மூன்று முறை காஃபி குடிப்பவர்கள் இந்த முறையை ஒரு முறை பயன்படுத்தி  பாருங்கள் 
போதும் போதும்  எப்பதான் குறிப்பை சொல்ல போற மாலை காஃபி குடிக்கும் நேரம் வந்துவிடுவதற்க்கு முன் எல்லோரும் பார்க்கட்டும் ........சரி குறிப்புக்கு போவோமா

காபி பொடி - 2 டேபிள் ஸ்பூன், 
பால் - 1/2 கப் 
கொதிக்கும் நீர் - 1/2 கப், 
சர்க்கரை - தேவையான அளவு

செய்யும் முறை.;- (இது ரொம்ப அளப்பறையா இருக்கே) 

முதலில் ஒரு கப்பில் அல்லது சின்ன கிண்ணத்தில்  காபி பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு அதில் ஒரு ஸ்பூன் பால் விட்டு முட்டை அடிப்பது போல் (முட்டை அடிப்பதுனா ஆம்பிலேட் போடுவதற்க்கு அடிப்போமே (பீட்) அது) ஐந்து நிமிடம் தொடர்ந்து அடிக்கவேண்டும்.  அப்பொழுது அது நிறம் மாறி ஒரு பேஸ்ட் போல் வரும், வர வேண்டும்.

ஒருபக்கம் அடுப்பில் பாலை எவ்வ்ளவு தண்ணீர் நீங்க  காஃபிக்கு சேர்ப்பீர்களோ அந்த அளவு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும் .
பிறகு கொதிக்க வைத்த பாலை அடித்து வைத்துள்ள  காஃபி பேஸ்டுடன்  (பசையில் ) கலக்க வேண்டும் .

இப்போ உங்க  காஃபி தயார் இது எப்போவும் நாம் குடிக்கும் காஃபி போல் இல்லாமல் வித்யாசமான சுவையுடன் அட்டகாசமாய் இருக்குமாம் காஃபி பிரியர்கள் செய்து பாருங்கள். சுவைத்து மகிழுங்கள்  

ஒரு காஃபிக்கு இவ்வளவு பில்டப்பா 
பின்ன வேண்டாமா 
இந்த காஃபி திரவம் காலையிலும்  மாலையிலும் உள்ளே செல்லவில்லையென்றால் நிறைய பேருக்கு பீபீ யே வந்துவிடும். ....
அன்று அவர்கள் மூட் அவுட் ஆகிவிடுவார்கள். 
கொஞ்சமா சாப்பிடுவதால் ஒன்றும் தப்பில்லை உடல் நலத்திற்க்கு கேடு வந்துவிடும் என்ற பயமே மனிதனை நிம்மதி இழக்க செய்யும் ....   மன நிம்மதி முக்கியமில்லையா ............... 


திங்கள், 25 டிசம்பர், 2017

என் வீட்டு பைரவன்


இன்றுதான் கொஞ்சம் நேரம் கிடைத்தது எழுத இரண்டு நாளாய் என்னை படுத்தி எடுத்தது விட்டு இன்றுதான் அமைதியான என் வீட்டு பைரவன்    பத்து நாள் பயணத்தில் சந்தோஷம் முழுமையாய் இல்லாமல் மனதை ஆக்ரமித்து துக்கத்தில் ஆழ்த்தியவன்

எங்கள் வீட்டு செல்ல குட்டி பைரவன் பெயர் ஜானி இப்போதுதான் ஒருவயது முடிய போகிறது அவன்  எப்போதுமே என்னை வெளியே செல்லவே விடமாடடான்  வீட்டைவிட்டு குலைத்து ரகளை செய்து விடுவான் இந்த பயணத்தை முழுவதுமாய் சந்தோஷத்தோடு வரவேற்க  முடியாமல் அவனை பற்றி  கவலை பட்டு கொண்டிருந்தேன் வீட்டில் மகன் பயணத்தில் கலந்து கொள்ளவில்லை அவனுக்காகவே 
  
முதலில் நான் துணிமணிகளை அடுக்க ஆரம்பித்தவுடனேயே அவனுக்கு எதோ புரிந்துவிட்டது என்னையே சுற்றி சுற்றி வந்தான் நான் பேசுவது எல்லாம் அவனுக்கு புரியும் . மகனிடம் அவனை தனியே நிரம்ப நேரம் விடாமல் எப்படியெல்லாம் பார்த்து கொள்ள வேண்டுமென்று சொல்லி கொண்டு இருந்தையெல்லாம் கவனித்து கொண்டே இருந்தான் .
எப்பொழுது நான் வெளியே கிளம்பினாலும் என் துப்பட்டாவை அசந்த நேரம் எப்படியாவது எடுத்து கொண்டு ஓடி ஒளிந்து கொள்வான் இல்லை கிழித்தே விடுவான் .அவனுக்கு நன்றாக தெரியும் நான் அடிக்கமாட்டேன் சும்மா கத்தி கொண்டே மட்டும் இருப்பேன் திட்டுவது போல் என்று ஊருக்கு செல்லும் நேரமும் வந்துவிட்டது.அவன் முகம் மாறிவிட்டது குரல் மாறி அழுகை குரலில் கூப்பிட ஆரம்பித்துவிட்டான் கேப்பில் ஏறவிடாமல் அப்போதே மனது கஷ்டப்பட ஆரம்பித்துவிட்டது மகன்  கடிந்து கொண்டார் நான் பார்த்து கொள்கிறேன் இப்போ இப்படித்தான் செய்வான் இரண்டு நாளில் சரியாகிடுவான் என்று முதல் நாள் டிரெயினில் போனில் ஒன்றுமில்லை என்று சொன்னான் நல்ல இருக்கான் என்று என்னை சமாதானம் படுத்துவிட்டான் மகன் ட்ரைனிங் பிரியட்டில் இருக்கிறார் காலையில் 9 -ல்  இருந்து மத்தியம் வரை .

அடுத்த நாள்பக்கத்துவீட்டில் இருந்து போன் காலையில்ஜானி அழுது கொண்டே இருக்கிறான்' ரொம்ப பாவமா இருக்கு குரல் கொடுத்தாலும் ரொம்ப கோவப்படறான் 'என்று

ஆம்  அவன் யாரையும் உள்ளே வேறு விடமாட்டான். வீட்டு பக்கத்தில் வந்தாலே கத்தி ஒருவழியாகிவிடுவான். அதனால் யாரும் உள்ளே வரமாட்டார்கள் கேட்டை திறந்து. நாங்கள் வேறு மாடியில் இருக்கிறோம் சொந்த வீடுதான் அவனுக்கு சுற்றிவர நிறைய இடமுண்டு 
மகன் மதியம் வந்தவுடன் கேட்டால் சரியாகிடுவான் நீ அங்கே பார் என்று சொன்னான் தைரியமாய்.

முதல் இரண்டு நாட்கள்   சாப்பிட்டவன் பிறகு சாப்பிடமாட்டேன் என்று அடம் சாப்பாடு வைத்தால்  தடடை தலைகீழ் கவிழ்த்து வைத்துவிட்டானாம். சமாளிக்க முடியவில்லை மகனும் வீடியோக்கால் போட்டு "கூப்பிடுமா அவனை" என்றெல்லாம் சொல்லி பார்த்தான். 
நான்காம்  நாள் என் குரலுக்கு தேடி ஓடி ஓடி பார்த்தவன் பிறகு உர் என்று முகத்தை தூக்கி வைத்து கொண்டானாம் திரும்பவும் சாப்பிட ஸ்ட்ரைக் இரவு வீட்டுக்குள் தான் இருப்பேன் என்று அடம் காலை முதல் மதியம் வரை அழுகை இதையெல்லாம் சொன்னால் நான் நிரம்ப வருத்தப்பட போறேன் என்று மகன் சொல்லமால் இருந்தார். வீட்டினுலேயே பக்கத்திலேயே வைத்து கொண்டு உள்ளார். எல்லோரும் பக்கத்தில்அவன் அழுகிறான் என்று சொல்லியதில் அவனோ அப்போதும் சமாதானமாகவில்லை சாப்பிடவுமில்லை சரியாக.....

நான் அங்கு டில்லியில் திரும்புவதர்காக வண்டி ஏறுமுன் வீடியோ காலில் அவனை கூப்பிட்டால் கோபித்து கொண்டு போயி முலையில் உட்கார்ந்தவன் எழுந்தே வரவில்லையாம் சாப்பிடவுமில்லை அழுகை அழுகை டிரையின் வேறு லேட்டா வறுத்து இரவு பத்துமணி ஆகிவிட்டது  சென்னையில் வந்து கேப் பிடித்து வீட்டு வந்துதான் தெரியும் என் மேல் விழுந்து புரண்டு அழுது எழுந்து கொள்ளவே மாட்டேன் என்று மடிமேல் படுத்து கொண்டான் அப்புறம் மூன்று இட்டிலி யை ஊட்டி சமாதான படுத்தி இரவு 12 மணி

வீட்டில் உள்ளோருக்கு மக்களுக்கும் என்னவருக்கும்  தங்களையெல்லாம் அதிகம் கண்டு கொள்வில்லையென்று ஆச்சரியம் வேறு, மகனோ போன  நாளில் இருந்து அவன் செய்த அடம், கோபம் ,அழுகை எல்லாவற்றயும் சொல்லி சொல்லி மாய்ந்து போனார் 
அவன் சரியாக சாப்பாடு எடுக்காததால் அடுத்தநாளே அவனின் டாக்டரிடம் கூப்பிட்டு போனால் 104 டிகிரி ஜுரம் என்று சொல்கிறார் ரொம்ப பயந்து ஏக்கத்தில் வைத்திருக்கும் என்று ....மாத்திரை அப்பா அவனுக்கு மாத்திரை கொடுப்பது பெரும் பாடு ஊசி போட்டு கூப்பிட்டு வந்தால் இரண்டு நாள் என்னை ஒட்டியே கிடந்தது இப்பொது தான் கொஞ்சம் சமாதானம் ஆனான் செல்லக்குட்டி

வீட்டில் ஒரே திட்டு  இனிமேல் அவனை அதிகம் கொஞ்சக்கூடாது அவனிடம்  பேசி கொண்டே இருக்க கூடாது என்று.....

வெளியேயோ எல்லா வீட்டில் இருந்தும் "அம்மாதாயே நீ எங்கேயும் போகாதே உன் பெறாத மகனைவிட்டு அவன் அழுகை சமாளிக்க முடியலை கிட்டேயும் வரமுடியலை  அவனையும் கூடவே அழைத்து கொண்டு போ இல்லை உன்னவரையாவது  விட்டு போ" அவருக்கும் ரொம்ப செல்லம் அவன்

அவனின் சுட்டித்னத்தை  எல்லாம் சொல்லனுமென்றால் அது ஒரு பெரிய கதை புத்தக்கம் போல் ஆகிவிடும். 

பயணம் அவ்னின்  கவலையிலேயே கழிந்துவிட்டது மனதில் உற்சகமில்லாமல் திரும்பவும் ஒரு பயணம் இருக்கிறது அடுத்தமாதம் அது நான் மட்டும் தான் ஆனாலும் வீட்டில் கவலை இப்போதிருந்தே என்ன செய்ய செல்லமா செல்ல குட்டியை வளர்த்ததற்கு இப்போ திட்டு அதற்க்கும் அவர்களை அவன் தண்டித்து கொண்டுதான் இருக்கிறான் ஹா ஹா ஹா 

புதன், 20 டிசம்பர், 2017

விடுமுறை விடை பெற்றது

வந்தேன் வந்தேன் மீண்டும் நான் வந்தேன் 
அன்புள்ளம் கொண்ட என் நண்பர்களை  தேடி வந்தேன் 
அவர்களின் சொல்வடிவங்களை படித்து பார்க்க வந்தேன் 

தலைநகரின் தலையங்கம் 
ஊசியாய் குத்தும் குளிர் 
நடுங்க வைத்த  விரல்கள்
இறுக்கி போன கால்கள் 
அப்பப்பா விருந்தோம்பல்களும் 
விசாரிப்பும்  கூட 
புறம் தள்ளவைக்கும்  குளிர் 
திருமண விழாவில்கூட ஜொலிக்கமுடியாமல் 
உல்லனுக்குள் ஒளிந்து  கொள்வைக்கும்குளிரிலில் 
விடுமுறை விடை பெற்றது 


தோழமைகளுக்கு 
எனக்கு கணனி மற்றும் மடிக்கணனி மட்டுமே உபோயோகித்து பழக்கம். கைபேசியில் சரளமாக உபோயோகிக்கும் முறையை பயன் படுத்தும் திறமையை வளர்த்து கொள்ளாத நிலையை  எண்ணி மிகவும் வருந்தினேன்.  இந்த விடுமுறை எனக்கு ஒரு பாடம் ஏற்கனவே எழுதி இருந்த பதிவை  (டிராஃப்ட்டில்)  வரைவுவில்  வைத்திருந்ததை அனுப்பிவிட்டேன். ஆனாலும் பின்னுட்டத்தை (பப்ளிஷ்)வெளியிடுவதில் கொஞ்சம் தடுமாறிவிட்டேன் என்றே நினைக்கிறேன்தோழமைகள்  யாருடைய பின்னுட்டமாவது வெளியிடப்படாமல் போயிருந்தால் இல்லை தவறுதலாய் அழிக்கப்பட்டு இருந்தால் மன்னிக்கவும் 

வியாழன், 14 டிசம்பர், 2017

புத்திசாலி யார்? -நிறைவு பகுதி

புத்திசாலி யார் ? - 1,2,3

போன பதிவில் கதையின் போக்கிற்கு தன் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்து கொண்ட தோழமைகள் அனைவருக்கும் நன்றிகள் பல

நம்முடைய ஆழ்ந்த கவனிப்பை நாம்  தளர்த்தும் போது பிள்ளைகளின் போக்கு எவ்வண்ணம் போகிறது எங்கே நாம் தவற விடுகிறோம் என்பதை பார்த்து வருகிறீர்கள் இனியும் இங்கு என்ன பிள்ளைகளின் சமூகம் அவர்களை எப்படி குழப்பியது அவர்கள் எப்படி தடம்மாறி போனார்கள் என்று நிறைவு பகுதியாக பார்ப்போம்


புத்திசாலி யார் ?

 அடுத்தடவை நீ சுமாரா படிச்சிக்கோ இரண்டு பிட்டு முக்கியமான கோஸ்டினுக்கு ரெடி பண்ணி எடுத்துனு போய்ட்டு செம மார்க்க எடுத்துடு. “ 

“எப்படிண்ணா..மாட்டிக்கிட்டா?

“நான் சொல்லித்தரேன் எப்படினு” சொல்லி கட்டிபிடிச்சிகிறான் டைட்டா. நவீனுக்கு சந்தோஷமாய் இருக்கு.

அடுத்த வாரம் கோச்சிங்க முடிந்து மேட்ச் நடக்குது.. முடிந்தவுடன் அபிஷேக் “அலெக்ஸ் நாங்க ஒரு பார்ட்டிக்கு போறோம் வரியா?”

“எங்கேடா அது?”

“ஒரு பிரண்டு வீட்டில்”

“ம்ம் வரேண்டா எவ்வ்ளவு நேரம் ஆகும்?”

“நைட் எட்டு ஆகலாம் வீட்டில் குரூப் ஸ்டெடினு  சொல்லிட்டுவா ஹீ..ஹீ..” அப்பத்தான் அனுப்புவாங்க முடிஞ்சா பணம் எடுத்துகினுவா ஒரு 1000/-துக்கு மேல, “பேய் முழி முழிக்காதடா போற இடம் அந்த மாதிரி சூப்பரா இருக்கும் மச்சி முக்கியமா இந்த அமுல் பேபியை கூட்டிட்டு வராதடா உனக்கு புண்ணியமா போகும்” அபிஷேக்கும் ஹரிஷும் இன்னும் அவன் கூட்டாளிகள் இரண்டு பேர்

“எனர்ஜி பவுடருக்கும் பைசா  கொண்டுவா”

“நீங்க?”

“நீ பார்க் ஸ்டேஷன்கிட்ட வந்துடு அங்கெ ஜாயின்  பண்ணிக்கலாம்”

வீட்டில் ரோஸி “சர்ச்சுக்கு வராம கோச்சிங்கு போவேன்னு அடாவடி.. இப்ப குரூப் ஸ்டெடியா?”

பையில் புக்ஸ்கள் வாரி வைத்து கொள்கிறான் “சும்மா கத்தாதீங்க வேணும்னா நீங்களும் வாங்க பார்க்க”

“டேய் ஈவ்னிங் கெஸ்டு-வேற வராங்கடா.. டாடி எங்கேன்னு கேட்பாரு..கேக்  வேற நான் செய்யணும்..படுத்தாதடா”

“படிக்க போயிருக்கேன்னு சொல்லு.. சரி ஒரு 100/- தா”

“எதுக்குடா படிக்கிறதுக்கு?”

“எல்லோரும் சேர்ந்து ஸ்னேக்ஸ் வாங்கிறோம் பிளான்”

“ஒழுங்கா படி நல்ல மார்க் வரணும் அப்பதான் சயின்ஸ் குரூப் கிடைக்கும்” என்று கொடுத்து அனுப்புகிறார். அலெக்ஸ் போன பிறகு *அட யார் வீட்டில் என்று கேட்க மறந்துட்டேனே*

பார்ட்டிக்கு போய்ட்டு வந்த பிறகு அலெக்ஸ்  இன்னும் மோசமாகிறான். அது போன்ற பார்ட்டி அது…. திரும்பவும் நவீனை கூப்பிட்டு கொண்டு வேறொரு பெண்ணை பின்னால் சுற்றுகிறான். அவன் வயது ஹார்மோன்ஸ் அவனை மிக மோசமாய் ஆட்டி படைக்கிறது. அபி அவனை குழப்புகிறான் பலதும் சொல்லி அபி பெரிய வசதி படைத்தவன் வெளிநாடு பணம்  விளையாடும் வீடு அவனுக்கு ஸ்லாம் போட இந்த மாதிரி அடிமைகள் தேவை என்று பார்த்து வளர்ந்தவன்

“டேய் உன் கூடவே சூப்பர் கழுக்குமொழுக்குன்னு ஆளை வச்சிகிட்டு ஏண்டா வெளியே அலையற”

புரியாமல் முழிக்கிறான் அலெக்ஸ் “உன் கூடவே உன் அடிமையா ஒன்னு சுத்துதே அதுக்கும் கொஞ்சம் லைட்ட வாயில தடவி விடு அப்புறம் நீ சொல்வதையெல்லாம் கேட்பான்”.

அபியால் நவீனின்  சிறு பிராயம் தடம்மாறி போய் விடுகிறது. பணிவு என்பது மருந்துக்குமில்லாமல்பள்ளியில்  மார்கெல்லாம் அலெக்ஸ் ஐடியாவில் நடந்தேறுகிறது அலெக்ஸ் எப்படி வழி  நடத்துகிறானோ அப்படி கேர்புல்லா நடந்து கொள்கிறான். 
சுந்தர் இல்லாதது  அவனுக்கு வசதியாக போய்விடுகிறது ரேணுவை ஈசியாக ஏமாற்ற முடிகிறது.  ரேணுவின் சின்ன சின்ன  நகைகூடகாணாமல் போகிறது. அவள் வேலைக்காரியை  சந்தேகப்பட்டு நிறுத்திவிடுகிறாள், குழம்புகிறாள். நவீனின் மாற்றம் வேறு அவளை குழப்புகிறது.

சுந்தரிடம் போனில் கவலை படுகிறாள் தன்னிடம் அவன் பேசுவது கூட இல்லையென்று  “விடு டீன் ஆரம்பிக்குதில்ல அதனாலயா  இருக்கும் நான் வந்து பார்த்துகிறேன்  அடுத்த வராம் அநேகமா ரிலீவ் ஆயிடுவேன் நினைக்கிறேன்”

இப்பொது புதுவருட ஆரம்பத்திற்க்கு பின் ரோஸிக்கு வேலை பளு இன்னமும் அதிகமாகிறது பள்ளியில் இப்பொழுதெல்லாம் அலெக்சின் மார்க் அவளை நிம்மதி கொள்ள வைக்கிறது அதனால் அவனை எதுவுமே கேட்ப்பதில்லை அவன் ரூமை விட்டு வரவில்லையென்றால் படிக்கிறான் என்று நினைத்து கொள்கிறாள் அலெக்ஸ் போதை, பார்ட்டி, கிரிக்கெட் கோச்சிங்.. என்று தன் நண்பர்களுடன் சுற்றி வருகிறான் படிப்பு என்ற போர்வையில்


 இப்பொழுதெல்லாம் நவீன் யாருடனும் போவதில்லை. பேசுவதில்லை அலெக்ஸை தவிர தனக்குள் ஒடுங்கி போய்விட்டான்.  தனிமையில் அழுகிறான் .அதை பார்த்து அலெக்ஸ் வருந்துகிறான்.. அபியிடம் ஷேர்  செய்கிறான்.நவீனின்  வருத்தத்தை

அபி “அப்படியா விடு அவனை வேற மாதிரி சுறு சுறுப்பாகிடுவோம் என்று சொல்லி இந்த கேமை விளையாட சொல்லு என்ன பண்ணறான் பார்க்கலாம் மீதியெல்லாம் மறந்துடுவான்”.
 “என்ன கேம்டா?”
பாரு அவன் கூடவே இருந்து என்று சொல்லி நவீனுக்கு கேமை விளையாட சொல்லி கொடுத்து போனையும் கொடுக்கிறான்.

அது ஒரு அதிநவீன பயங்கரமான சேலஞ்சிங்  கேம் 50 கட்டளைகளை உள்ளடக்கியது ஒரு ஒரு கட்டளையாக வீழ்த்தி வரவேண்டும். அந்த கட்டளைகள் எப்படி பட்டது  என்றால் ஆபத்தானவை நம்மை நாமே பிளேடால் கிழிப்பது, ஊசியால் குத்திக்கொள்வது, மற்றவரை துன்புறுத்துவது இப்படி பல பயங்கரங்களை  அடுக்கடுக்காய் சொல்லி கொண்டே வரும்  கட்டளைகள் இந்த கேமின் பொறுப்பாளர்கள் மூலம் வழங்கப்படும். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஏதாவது திகலை தாங்கியது .

நவீன் இருக்கும் மனநிலைக்கு அந்த பயங்கரங்கள் அவனுக்கு தனக்கு கொடுத்து கொள்ளும் தண்டனையாவே நினைத்து கொள்கிறான். அலெக்ஸை  விட்டு பிரிகிறான்.  அலெக்ஸ் கவனியாமல் அவன் போதை உலகத்தில் இந்த டாஸ்குகளில் வலிகள் கொடுப்பதை மறக்க அலெக்ஸின் மருந்தின் உதவியை நாடுகிறான். 


நடுநடுவே அபி நவீனை பார்க்க வருகிறான் கேமுக்கு உண்டான போன் வசதி செய்து கொடுத்து கேமின் நிலைகளை பார்த்து ரசிக்கிறான். 

ரேணு நவீனின் முகத்தினை பார்த்து “என்னடா ஒரு மாதிரி இருக்க என்ன உடம்பு சரியில்லையா இங்கேவா கையில்  என்ன கட்டு”

 “ஒண்ணுமில்லமம்மி  கோச்ங்கில் கீழே விழுந்துட்டேன் மாஸ்டரே மருந்து போட்டுட்டார்”

“என்ன வா டாக்டர்கிட்ட போலாம்…… 
மம்மி மி மி மி நான் தான் ஒண்ணுமில்ல சொல்றேனில்ல” கத்திவிட்டு உள்ளே போகிறான்
அவன் இரவில்வெளியே செய்ய வரும்  டாஸ்க்கு  ரேணுவிற்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்துவிட்டு போகிறான். அலெக்சின் உதவியை பெற்று அலெக்ஸும் கேம் தானே என்று முடிந்தவுடன் எல்லாம் சரியாகிடும் என்று நினைத்து கொள்கிறான். இதன் நடுவே ஒரு தடவை பிட்டு அடிக்கும் போது  மாட்டி கொள்கிறான் ரோஸிக்கு அவனது பள்ளியில் இருந்து அழைத்து சொல்லப்படுகிறது சாமாளித்து விடுகிறான் ‘இல்லமா என் பிரண்டு எடுத்துட்டு வர சொன்னான் அவனுக்காக தான் பாவம்மா அவங்க அப்பா செம அடி அடிபார்மா’

ரேணு சுந்தருக்கு பேசுகிறாள் “என்ன… சுந்தர் இந்த வாரம் வந்துடுவேன் சொன்னிங்க என்னாச்சு?”

“என்னபண்ணறது ரேணு கூட வேலை செய்யறவன் மிஸ்டேக் பண்ணாலும் பிராஜெக்ட் டிலே ஆகுதே”

“போங்க சுந்தர் உங்களை நம்பி நான் பேசாம எங்க அப்பாம்மாவையாவது வரவழைச்சு இருப்பேன் நீங்கதான் உங்க பேர்ன்ஸ் ஏதாவது நினைச்சுக்குவாங்கனு வேண்டாம் சொல்லிட்டீங்க இப்ப உங்க பையனை சமாளிக்கவே முடியலை ஒரே அடம் எப்போதும் அலெக்ஸ் கூட இல்லனா ரூம்குள்ள டல் ஆயிட்டான் சம்திங் ராங் மாதிரி இருக்கு நான் அப்பம்மாவை வர சொல்ல போறேன்”

“சரி சரி புலம்பாதே அவனை கூப்பிட்டு .....
"அவன் எங்கே இங்கே அவங்க வீட்டில் இருக்கான் சரி சீக்கிரம் வர ட்ரை பண்றேன் அவனை ரொம்ப திட்டுரியா  திட்டதே அவனை பிரீயாவிடு”

இரண்டு நாள் கழித்து அப்பார்ட்மெண்டிலிருந்து  அழைப்பு “மேம் நீங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்க கிளம்பி”  “என்ன என்னாச்சு?” 
“நீங்க வாங்க மேம்........... மேல. யாரவது ஏறுங்க குவிக் பையர் இஞ்சனுக்கு போனை போடுங்க” போன் வைக்கப்படுகிறது. .இதெல்லாம் போன் வழியாக கேட்கிறாள் ரேணு ஒன்று புரியவில்லை வீட்டுக்கு விரைகிறாள் எதோ நெருப்பு பிடித்துவிட்டது என்று….. 

இவள் உள்ளே நுழைய மாடியிலிருந்து நவீன் கீழே குதிக்கிறான் “சாரிமா……”
 என்று கத்தி கொண்டே 
எல்லா வீட்டு ஆட்களும் வீல் என்று அலறுகிறார்கள். 
ரேணு அதை பார்த்து ஓடி வருகிறாள் என்ன என்று அங்கெ தன் மகனை ரத்தவெள்ளத்தில் பார்த்து மயங்கி விழுகிறாள். 
அதற்குள் பக்கத்தில் இருந்த ஆஸ்பிடலில் இருந்து ஆம்புலன்ஸ் வந்து கீழே விழுந்த நவீனை எடுத்து கொண்டு செல்கிறது. 
எல்லோரும் ரேணுவை தூக்கி மயக்கம் தெளியவைத்து கூப்பிட்டு கொண்டு ஓடுகிறார்கள் ஆஸ்பிடலுக்கு… ரேணு பிரமை பிடித்தவளாய் நிற்கிறாள். 

அவள் அப்பவும்அம்மாவும் அங்கே அப்போது வருகிறார்கள். தலை தலையா அடித்து கொண்டு கதறி கொண்டும் வந்து ரேணுவை பளார் பளாரென்று அறைகிறார் அவள் அம்மா “என்னடி என்னடி ஆச்சு நேற்று தானே போன் பண்ண அவனுக்காக வாம்மா என்று வரத்துக்குள் பிள்ளையை விட்டுட்டியேடி பாவி பாவி”… என்று அடிக்கிறாள்.

ரேணுவின் அப்பா “ஏம்மா ஏன் அவன் இன்னைக்கு ஸ்கூலுக்கு போகாம வீட்டில் இருந்தான் ஏன் நீ அவனை விட்டுட்டு ஆபிஸ் போன?”


 “தெரியலையேப்பா….. தெரியலையே ஒன்னும் புரியலையே ஐயோ அவர் வந்து கேட்ட நான் என்ன சொல்லுவேன் நான் அனுப்பினேன் ப்பா எப்படி வீட்டுக்கு வந்தான்”…. 

அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேனை நோக்கி ஓடுகிறாள் “அண்ணே  நீங்க காலைல வேன்  வந்தப்ப இவன் பார்கலையா?”

“அவன்தான் வந்து இன்னிக்கு அம்மா கூட போவேன் சொல்லிட்டு போனான்  சரிதான் நானும் நினைச்சுக்கிட்டேன் நீயும் நான் பின்பக்கம் மோட்டார் போட போயிருக்கும் போது  போய்ட்டு இருக்க போல இவன் எங்கே இருந்தான்  எப்ப மொட்டைமாடிக்கு போனான் தெரியலையேமா மேலே ஏறி நிக்கும் போதுதான் பார்த்தேன் என்னடானா நம்ம நவீனு மாதிரி இருக்கேனு பாவி பையன் இப்படி பண்னண்ணிட்டானே ராசாத்தி”….. 

இதற்குள் போலீஸ் வருகிறது விசாரணை நடக்கிறது. 

ஆப்ரேஷன்  ரூமில் இருந்து வரும்   டாக்டர்களை நோக்கி பாய்கிறாள் ரேணு “மேம் பிளேட் ஆரேஞ்சு பண்ணுங்க சீக்கிரம்” என்று ஓடுகிறார்கள். நிற்காமல் …..அப்பார்ட்மெண்டில் உள்ளவர்கள் உதவுகிறார்கள். ரேணுவை கேள்வி மேல் கேள்வி கெடுக்கிறார்கள் என்ன? ஏன்?.... என்று எல்லாவற்றிற்கும் ரேணு ….புரியலையே என்று தலையில் அடித்து கொள்கிறாள். 

மிக கடுமையான நேரம் நகர்கிறது. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஆப்பிரேஷ்ன் தியேட்டரில் இருந்து டாக்டர் வெளியே வந்து உயிர் இருக்கிறது ஆனால் கோமாவில் என்று சொல்லி செல்கின்றார். 

இதற்குள் நவீனின் ஸ்கூல் பேக் மாடியில் இருந்து கண்டுபிடிக்கப்படுகிறது அதில் ஒரு உயர்ரக செல்போன் மற்றும் ஸ்கூல்நோட்டில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட  கடிதம்  அதில் விரிவாய் இல்லாமல் தான் இந்த கேமுக்காக இறப்பதாக எழுதி இருக்கிறான்…. அப்போதும் அலெக்ஸை காப்பாற்றுகிறான் அந்த சிறுவன் .

இதற்கு நடுவே இங்கே போதைமருந்து வாங்கும் போது கிரைம் போலீசால் வளைத்து பிடிக்கப்படுகிறார்கள். 
ஹரிஷும்,அலெக்ஸும்….. அபி தப்பித்து கொள்கிறான் இவர்களை முன்னேவிட்டு. க்ரீமும் தப்பித்து ஓடுகிறான் ரோடில் .... பொதுமக்கள் .பிரஸ்காரங்க படம் பிடிக்கிறார்கள். 
தகவல் போகிறது. அலெக்ஸ் வீட்டிற்க்கு….. ஜார்ஜும் ரோஸியும்  போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடுகிறார்கள். 
போலீஸ் இரண்டும் இரண்டும் நாலு என்று கணக்கு போட்டு நடந்தவைகளை கண்டு பிடிக்கிறது. 
பெற்றோர்களை இப்படி எதுவும் கவனிக்காமல் இருப்பீர்களா என்று கண்டிக்கிறது.  
இரு பெற்றோரும் தலை குனிந்து மனம் உடைந்து என்று நிற்கிறார்கள். அப்பார்மெண்டில் எல்லோரும் பாவமாய் பார்கிறார்கள். 

ஒரு சிறுவன் கோமாவில் ,சமூக சீர்திருத்த பள்ளியில் ஒருவன் .காலம் என்ன வைத்திருக்கிறது இவர்களுக்கு வாழ்வுக்கு தெரியாது 

இன்றைய  பெற்றோராகிய நாம் மிகவும் கவனமுடன் பிள்ளைகளை கையாளனும் கவனித்து ஏனென்றால் இன்று இருக்கும் விஞ்ஞான வளர்ச்சியினால் அவர்கள் நம்மைவிட புத்திசாலிகளாக ஆகிவிடுகிறார்கள்  அந்த புத்திசாலித்தனம்  நன்மைக்கும் உதவும் தீமைக்கும் உதவும்.



டிஸ்கி --எல்லா பிள்ளைகளும் இப்படியா என்றால் ..........நூற்றில் ஒரு பிள்ளைக்கு இப்படி நடக்க வாய்ப்புகள் வந்துவிடும் .அந்த நூற்றில் ஒரு பிள்ளை நம் பிள்ளையாகாமல் காப்பது பெற்றோரின் கடமை



குறிப்பு - ரேணு செய்யாதவறியவை பிள்ளையின் அளவுக்கு மீறிய நடவடிக்கைளை கவனிக்காமல் விட்டது.... கவலை வந்தும் உடனடி தீர்வு காணாமல் அதை தள்ளி போட்டது. ரேணு சொன்னால் கவலைகளை ஆராயாமல் போனது சுந்தரின் தவறு  பெற்றோர் இருவரும் வேளைக்கு போகும் பட்ச்த்தில் இருவரும் ஒருவர் மாறி ஒருவர் நேரம் அமைத்து கொண்டு பிள்ளைகளின் நடவடிக்கைளை கூர்ந்து கவனித்து வழி நடத்த வேண்டும்
பிள்ளைகளின் வளர்ப்பை பற்றி இவர் கூறுவதையும் கேளுங்கள் நேரம் ஒதுக்கி 




செவ்வாய், 12 டிசம்பர், 2017

விடுமுறை கடிதம்



விழாக்கள் விருந்துண்ண அழைக்கின்றன
விதிமுறை விளக்கங்களோடு
அடையாளம் தெரியாமல்
அலைய வேண்டுமாம்
தலைநகரின்  குளிரில்
முகமூடியிட்டு தலை குல்லாவோடு

விருந்தின் வாசம் பிடித்தாலும் சரி பிடிக்காவிட்டாலும்  சரி
கை நனைக்கும்  கட்டாயம்
கல  கலப்புக்கு பஞ்சமில்லை
கை செலவுக்கும் பஞ்சமில்லை

பத்து நாட்கள்
வலையை வாசல் தெளித்து 
கோலமிட வகையில்லை
முணுமுணுப்புகள்  ரீங்காரமிட போகின்றன
'இருந்துட்டாலும்  வகை வகையாய்
கோலமிட்டதுபோல் தினமும் '
ஹி ஹி ஹி  ஹி
 
இருந்தாலும் அடுத்த வீட்டு கோலத்தை
ரசிப்பதில் இருக்கிறதே ஆர்வம்
அது ரங்கோலியா ,பூ கோலமா
தேர் கோலமா ,தேரை நடுவில் இழுத்துவிட்ட கோலமா
புள்ளி கோலமா  ,புன்னகை கோலமா
புதுமை கோலமா ,அருள் கோலமா
பயண கோலமா, பண்பு கோலமா 
அடாது கோலமா ,அடக்க கோலமா
நேர் புள்ளி கோலமா, ஊடுபுள்ளி கோலமா 
என்பதை ரசித்து
உணர்ந்ததை உரைத்திட
உவகை வருகிறதே

சரிதான் 
நீ சொல்லவிட்டால் வண்ணம் தீட்டாமல்
போய்விடாது அலட்டி கொள்ளாதே
அலங்காரமாய் இருக்க விடுமுறை அழைக்கிறது
விடை பெற்று கொள்
வந்து உன் வியாக்கியானங்களை வைத்து கொள்
நீ இல்லையென்று
உன் வலை  தூசியும் ஒட்டடையும்
அடையாமல் இருக்க வேண்டுகோள் வைத்து கொள்


ஞாயிறு, 10 டிசம்பர், 2017

புத்திசாலி யார் ?-3

புத்திசாலி யார் ? 1,2 கதையின் முதல் பதிவுகள் 

போன பதிவில் கருத்துக்கள் பகிர்ந்து கொண்டு தங்கள் எண்ணங்களையும் அனுமானங்களையும் பகிர்ந்து கொண்ட தோழமைகளுக்கு நன்றிகள் பல

அலெக்சின் மன சுணக்கம் அத்தையை தொடர்ந்து கிரிக்கெட் கிரவுண்டில் நடக்கும் விஷயங்களை பார்த்தோம் மேலும் என்ன நடக்கிறது அவனுக்கு என்று பார்ப்போம்


 புத்திசாலி யார் ? -3


எல்லோரும் அலெக்ஸையே பார்கிறார்கள் அவனுக்கு வெட்கமாய் போயி அழுகை வந்துவிடுகிறது. கிரவுண்டயே விட்டு ஓரமாய் போகிறான் தனியான இடத்திற்கு போயி உட்கார்ந்து அழுகிறான்.
அப்போது அங்கே  வருகிறார்கள் இரண்டு பேர், கரீம் ,கிஷன்சிங் “நல்ல தெரியுமா இங்கதான் வர சொன்னானா அந்த பையன்..? ..ம்ம்.. இது எதோ கிரவுண்டு மாதிரி இருக்கு”
“போன்ல இங்கேதான் இருக்கானு காமிக்குது”
அப்போது அங்கெ ஓடிவருகிறன் அபிஷேக், “பாய் ரெடியா?”

“ஹாங் ரெடி பைசா ரெடியா?”

“எஸ், இந்தாங்க சீக்கிரம்” சொல்லி சில நூறுகளை கொடுக்கிறான் அபி, வாங்கி கொண்டு அவனிடம் இரு சிறிய பாக்கெட்டை கொடுக்கிறான் கரீம், கொடுத்தவுடன் அந்த இடத்தைவிட்டு நகர்கிறான், போகும் போதே சொல்கிறான் “நிம்பள் போன் பண்ண வேணாம் அடுத்து நானே மெசஜ் கொடுக்கான் ஓகே.”

அவர்கள் போன பின் அங்கே ....”கெடச்சிடுச்சாடா?” கேட்டவாறு ஹரிஷ் வருகிறான், 

அபி-“நீயெண்டா இப்போவந்த? மாஸ்டர் பார்த்திட போறான்.”
அப்போ அவர்கள் பேசும் சின்ன மதிலுக்கு பின்புறம் அலெக்ஸ் உட்கார்ந்திருப்பதை பார்க்கிறான் அபி, ஒரு நிமிஷம் திக்கென்று ஆகிறது அவனுக்கு, பிறகு இவன்தான் அழுமூஞ்சி எதுவும் புரியாது என்று 

“டேய் என்னடா அழுமூஞ்சி,  இங்கே உட்கார்ந்து அழுதுனு இருக்கியா?”

“ஹா ஹா டேய் அந்த கிழவன் ரொம்ப தாளிச்சிடான்டா இன்னிக்கு இவன” என்று ஹரிஷ் சிரிக்கிறான் 

அதை பார்த்து அலெக்ஸ் திரும்பவும் காலில் முகத்தை புதைத்து கொள்கிறான். “டேய் சீ! எழும்பிவா அவன் திட்னதுக்கெல்லாம் சோகமாய் ஆயிடுவியா? லூசா விடு” என்கிறான் அபி அதற்குள் 

ஹரிஷ் “அபி எனக்கு எப்படா தருவ? எவ்வளவுடா? சீக்கிரம் சேம்பிள் கொஞ்சம் காட்டேன் மேட்ச் சூப்பரா விளையாடலாம்”

“இர்ரா..அவசரப்படாதே” பாக்கெட்டை பிரித்து ஒரு துளி எடுத்து ஹரிஷ் கையில் வைக்கிறான். 

ஹரிஷ் அதை மோர்ந்து பார்த்து நக்கி எடுக்கிறான் 
அலெக்ஸ் நிமிர்ந்து பார்கிறான். 
அபி-“அழுமூஞ்சி உனக்கு  வேணுமா? எல்லா சோகமும் பறந்து போயிடும் மறந்து போயிடும் ஒருதுளி எடுத்தா” 
ஆர்வமாகிறான் அலெக்ஸ் “என்னது அது?”
“அதுவா  எனர்ஜி பவுடர்”
“இத போட்ட மேட்ச் சூப்பரா ஆடலாம்னு சொல்லறானே… நிஜமாவா?”
“ஆமாண்டா வெண்ண.. பிச்சு உதிரலாம் பிச்சு எகிற இதை போட்டவுடன்”
“ஏ பிளீஸ் டா  எனக்கும் தாடா”
“உனக்கா? வேணாம்பா நீ போய் எல்லார்கிட்டயும் உளறி வச்சனா அவ்வளவுதான்”
“இல்லடா இல்லடா பிளீஸ் சொல்லமாட்டேண்டா”
“தரேன்.. ஆனா யார்கிட்டயும் சொல்லக்கூடாது. இதனாலதான் நாம நல்ல விளையாடுறோம் தெரிந்தா மாஸ்டர் வூட்டுக்கு சொல்லிடுவான்.. தள்ளி வச்சிடுவான்.. அப்புறம் சும்மா தரமுடியாது, விலைக்குத்தான் தருவேன். அவன்கயில குடுத்தேன் பார் ஒரு துளி அது நுறு ரூபா.. இருக்கா?”
“நுறு ரூபாவா?..இன்னிக்கு மேட்சுல தோத்துட்டா பார்ட்டி கொடுக்க காசுபோட தான் எடுத்துட்டுவந்தேன்”
“போடா லூசு இப்ப நீ எங்க டீம் கீழ் வந்துடுவ சோ ஜெயிக்க போறது நாமதான்”
“ஹாங்?!” வாயை பிளக்கிறான் அலெக்ஸ் “நிஜமாவா? உங்க டீம்லயா? அப்ப  சரி இந்தா” என்று நுறு ரூபாய் எடுத்து நீட்டுகிறான். யோசனையோடு பார்கிறான் அபி “டேய் உளறி வச்ச அவ்வளவுதான் அடுத்தவாரம் விளையாட கால் இருக்காது”
“இல்லடா சொல்லமாட்டேன் நீங்களும் நான் வாங்குனதை சொல்லாதிங்கடா”
“சரி கையை காட்டு” என்று அவனுக்கும் தடவுகிறான் ஒரு துளி பிறகு கிரவுண்டுக்குள் போகிறார்கள் 
கிளாஸ் முடிகிறது நவீன் ஓடி வருகிறான் “எங்கண்னா போனீங்க நேத்திக்கும் அந்த பொண்ணால சோகமாயிட்டீங்க இன்னிக்கு மாஸ்டர் திட்டிட்டார்”
“ஹான்?!” என்று இப்போது ஹரிஷும் அபியும் அலெக்ஸை பார்கிறார்கள்  அலெக்ஸ் நெளிகிறான் தலைகுனிந்து கொள்கிறான் “என்னடா விஷயம்” காதை கடிக்கிறார்கள். “சும்மா”.. 
ஹா ஹா ஹா சிரிக்கிறார்கள். 
நவீன் ஒன்றும் புரியாமல் முழிக்கிறான். அதற்க்குள் அலெக்ஸ்க்கு மெல்ல மெல்ல போதை ஏறுகிறது …..அவன் தனனை மிக லேசாக உணர்கிறான் வாய்விட்டு சத்தமாய் சிரிக்கிறான். 
நவினை கட்டி பிடித்து கொள்கிறான் “தேங்க்ஸ்ட்டா தேங்க்ஸ்ட்டா” என்று அபிக்கு கை கொடுக்கிறான். 
நவீன் முக்கியமான குரூப்பு கூட அலெக்ஸ் சேர்ந்துவிட்டதில் மிகவும் உற்சகமாகிறான் அவன் கண்னுக்கு அலெக்ஸ் ஹீரோபோல் தோன்றுகிறான்.

நாட்கள் நகர்கிறது இப்பொழுதெல்லாம் அலெக்ஸ் நடவெடிக்கையில் நிறைய மாற்றம்.. படிப்பில் கவனமற்று போய்விட்டான்.. வீட்டில் கேள்விகேட்டால் சத்தம் போட்டு கத்துகிறான்.. தான் செத்து போகிறேன் என்று பயம்புறுத்துகிறான் ரோஸியை . இதன் காரணமாய் ரோஸி அவனிடம் பேச பயப்படுகிறார்…மார்க் கம்மி என்று கேட்க போயி ஏதாவது செய்து விட போகிறான் என்று பிள்ளை பாசத்தில் மெல்ல மெதுவாய் அட்வைஸ் மட்டும் கூறுகிறார். ‘ஏன் இப்படி திடீரென்று’ என்று யோசிக்க தவறிவிடுகிறார். 
இப்பொழுதெல்லாம் புதிய பிரண்ட்ஸ்களுடன்தான் சுற்றல். எப்போதும் அவர்கள் என்னென்ன சொல்கிறார்களோ அதையெல்லாம் அடிமை போல் செய்கிறான். பதிலுக்கு அவனுடனே சுற்றி கொண்டிருக்கும் நவீனை இவனது அடிமையாய் நடத்தி கொள்கிறான்.

“நவீன் ஒரு ஹெல்ப்புடா.. என் பாக்கெட் மணி தீர்ந்து  போயிடுச்சிடா ..இந்த தடவை அபிக்கு கப்பம் வைக்கலானா நம்மள மேட்ச்சில் அவங்க சைடில் இருந்து தூக்கிடுவான் டா. ஒரு தீரி ஹன்ரட் எடுத்துட்டுவாடா நீ சின்னப்பையன் உன்ன சேர்த்துக்கமாட்டேன் சொன்னாங்க உனக்காக நான் எவ்வளவு பேசி இருக்கேன்.” 
கிரிக்கெட் ஆசையில் நவீன் வீட்டில் ரேணுவின் ஹன்பேக்கில் இருந்து தெரியாமல் பணத்தை எடுத்து கொண்டு வருகிறான், அலெக்சிடம் தருகிறான். 
“எதுடா? என்ன சொல்லி வாங்கன?” நவீன் மெதுவாய் தெரியாமல் எடுத்து வந்தாய் சொல்கிறான்... 
“டேய் மூஞ்சியை இப்படி வச்சிக்காத மாட்டிக்குவ”
“பயமா இருக்குண்ணா”
“விடுடா  சின்ன அமோன்ட் தானே தெரியாது” மெல்ல மெல்ல இதுபோல் எப்போதும் தொடர்கிறது இருவர் வீட்டிலும் 1,2 நூறுகள் தொலைவது.

இப்படியாக ஒரு நாள் நவீன் பள்ளியில் இருந்து அழைப்பு வருகிறது, “அரையாண்டு முடிந்து என்னடா மார்க் சரியா வாங்கலையா இரு அப்பா போன் வரட்டும் உனக்கு இருக்கு” என்று நவீனிடம் கத்துகிறாள் ரேணு

சுந்தர் பிராஜெக்டுக்காக சிங்கப்பூர் சென்று இருக்கிறான் 2 மாதமாய். பேரண்ட் மீட்டில் நவீனின் கிளாஸ் டீச்சர் அவனுடைய  போரொக்கரசை பற்றி குறை சொல்கிறார். 
படிப்பில் கவனமில்லை என்று  வீட்டுக்கு வந்தவுடன் ரேணு நவீனை திட்டுகிறாள் “இனிமே கிரிக்கெட் அது இதுனு ஏதாவது பார்த்த பாரு.. எப்பப்பாரு கிரிக்கெட்டு… படிப்பு வீணா  போச்சி.. கோச்சிங்கை விட்டு நிறுத்திவிடுகிறேன்.”
நவீன் அழுது கொண்டே சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிக்கிறான் அலெக்சிடம்  போயி சொல்கிறான் அழுது கொண்டே

“டேய் அழாதடா.. நான் வந்து ஆண்டிகிட்ட பேசறேன்… லூசு முதலிலேயே என்கிட்ட சொல்றது தானே.. சரியா படிக்கலைனா வேற ஏற்பாடு பண்ணி இருக்கலாமில்ல ..சரியா படிக்கலைனா இரண்டு  பிட்டு  எடுத்துனு போயிடனும், அப்புறம் பாஸ்தான்.. அடுத்தடவை நீ சுமாரா படிச்சிக்கோ இரண்டு பிட்டு முக்கியமான கோஸ்டினுக்கு ரெடி பண்ணி எடுத்துனு போய்ட்டு செம மார்க்க எடுத்துடு. “

“எப்படிண்ணா..மாட்டிக்கிட்டா?”


தொடரும் ...

அலெக்சின் நடத்தையின் மாற்றம் நவீனை எப்படிஎல்லாம்  ஆட்டி படைக்கிறது என்பதை பார்த்து  கொண்டிருக்கிறோம்... இங்கு யார்? யார்? என்ன செய்திருக்கலாம், யார் மேல் தவறு என்று உங்கள் எண்ணங்களில் தோன்றும் நியாயங்களை பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்.

பிள்ளை வளர்ப்பை பற்றி இவர் எவ்வளவு  தெளிவாக சொல்கிறார் என்றும் பாருங்கள்



  .



வியாழன், 7 டிசம்பர், 2017

புத்திசாலி யார் ? -2

புத்திசாலி யார்?  (முதல் பகுதியின் லிங்க் இது) என்ற கதையை தொடர்கிறேன் 
முதல் பகுதிக்கு கருத்து சொன்ன அனைத்து  தோழமைக்கும் நன்றி 
நான் சொல்ல நினைப்பது மற்றவருக்குள்ளும் இருக்கிறதா அப்படி இருந்தால் படிப்பவர்களுக்கு  வழி காட்டுதலாக  இருக்கும் பல பேர் ஒருமித்த கருத்தை வழிமொழியும் போது 
இனி தொடர்ந்து  அலெக்ஸின் போக்கையும் அதனால் நவீனனின் மாற்றத்தையும் இங்கு   பெற்றோரின் நடவடிக்கையும் பார்க்கலாம் ..


புத்திசாலி யார்? -2

“அதுவா..என் டாவு” 



“டாவா..?” தொடரும் ....


“அமாம் என் கிளாஸ் தான்  உனக்கு  புரியாது  போலாம்.. இதோ பார் நவீன் நம்ம செய்ர சீக்கிரட் நமக்குள்ள மட்டும் தான் இருக்கணும்… வீட்டுலையோ வேற எங்காயாவது  சொன்னே நா வேற டைம் மாத்திக்குவேன் நீயே போயிகோனு..” 


“ஐயோயோ வேண்டாண்ணா யார்கிட்டயும் உங்களை  பற்றி  எதுவும் சொல்லமாட்டேன். நீங்க என் தோஸ்த்துண்ணா.”


இருவரும் hi fi போட்டு கொள்கிறார்கள்.


நவீன் வெற்றிகரமாய் கோச்சிங்கில் சேர்ந்து ஒரு மாதம் கடக்கிறது. தினமும் இரண்டு ரோட் கிராஸ் செய்தவுடன் அலெக்ஸ்க்காக நிற்பதும் நடக்கிறது. கோச்சிங்கில் வசதி படைத்த மேல் மட்ட பசங்களும் வருகிறார்கள். ஒரு சிலபசங்க ஒரு குரூப் போல் தனியாக இருக்கிறார்கள், பிராக்டிஸில் தவறு செய்தால் இவர்களை அதிகம் திட்டும் மாஸ்டர் அவர்களை அந்தந்தளவுக்கு திட்டுவதில்லை. நவீன் சிறுவன் என்பதால் லேசான பிராக்டிஸ் மட்டுமே.


வீட்டில் நவீனின் ஆட்டம்பாட்டம் குறைகிறது. எப்போதும் அலெக்ஸ் கூடவே சுத்தி கொண்டு திரிகிறான் அவனோடேயே அவன் வீட்டில் இருக்கிறான், இரவு உணவுநேரம் வரை படிப்பும் அங்கேயே செய்கிறேன் என்று சொல்கிறான், ரேணுவும் சரி டீச்சர் வீட்டில் தானே அவன் படிக்கும் போது இவனும் அமைதியாக படிப்பான் தொந்தரவு என்றால் சொல்லுவார்கள் என்று விட்டுவிடுகிறாள்.


இதற்க்கு  நடுவே  சனி ஞாயிறு அலெக்ஸ் கிட்டார், ஸ்விம்மிங் கிளாஸ் போகிறான் என்று நவீனும் சேர்ந்து கொள்கிறான். சுந்தரிடமும் இதே காரணத்தையே கூறிவிடுகிறாள் “விடுங்க, வீட்டில் இருந்தால் எப்போதும் டிவி முன்னாடியே உட்க்கார்ந்து இருப்பான், இப்போ அதவிட்டானே அதுவே போதும், ஹோம் வொர்க் எல்லாம்  அவனே செய்துவிடுகிறான் அந்த பையனை கேட்டு.”, என்று இவர்களாக சமாதானம் ஆகி கொள்கிறார்கள். எல்லா இடத்திற்கும் அலெக்ஸே  சேர்கிறான்..... பணம் மட்டும் கொடுக்கிறார்கள்.



இரண்டு மாதம் கழித்து ஒரு நாள் ரோடில் எப்போதும் போல் நிற்கும் போது “நவீன் ஒரு ஹெல்ப் பண்ணுறியா..?”

”சொல்லுண்ணா” 


“அந்த பொண்ணுகிட்ட இந்த லெட்டரை கொடுக்கிறியா”


“நானா..?”


“ம்ம் போ சீக்கிரம் அவ கிராஸ் பண்ணுறாப்பாரு”,


நவீன் அந்த பெண்ணிடம் ஓடி போயி லெட்டரை கொடுத்து அந்த அண்ணா கொடுக்க சொன்னாங்கக்கா என்று திணித்து விட்டு ஓடியே வந்துவிடுகிறான்.


இருவரும் சைக்கிளில் ஏறி பறந்து விடுகிறார்கள். 


அடுத்த நாள் நவீன் அலெக்ஸை தேடி போகும் போது அவன் சோகமாய் படுத்து இருக்கிறான் அழுது கொண்டு..”என்னண்ணா ஏன் இப்படி இருக்கீங்க.. உடம்பு சரியில்லையா..? கிளாஸ் வேண்டாவா..?”


“ம்ம் போலாம்..” அவன் சோகம் தாங்காமல் “என்னண்ணா என்கிட்ட சொல்லுங்க” “டேய் அந்த பொண்ணு கோச்சிக்கிட்டு டீச்சர் கிட்ட சொல்லிடுவேனு  சொல்லுதுடா”


“ஐயையோ அப்புறம்?!”


“சொன்னா சொல்லிக்கிட்டும் டா.. ஆனா என்ன லவ் பண்ணமாட்டேனு சொல்லிடுச்சுடா.. அதுதான் செம கடுப்பா இருக்கு.. இன்னிக்கு மூட் இல்லைடா, நாளைக்கு கோச்சிங் போலாம்.” 


“ஓகேண்ணா.”


ரூமைவிட்டு இரவு உணவுக்கு கூட வெளியே வராமல் படுத்துவிடுகிறான், ரோஸியும் அவள் வேலை பளுவின் காரணமாய் அவன் உள்லிருந்தே பதில் அளித்ததை கேட்டுவிட்டுவிடுகிறாள். 


அடுத்த நாள் சனிக்கிழமை காலையிலேயே  கோச்சிங் இருந்ததால் இருவரும் கிளம்புகிறார்கள்.


சனிக்கிழமைகளில் கோச்சிங்கில் இருக்கும் பசங்க டீமாய் பிரிந்து மேட்ச் விளாயாடுவார்கள் இதில் மேல்மட்ட பசங்க டீமை தீர்மானிப்பார்கள். தோற்ற டீம் ஜெயித்தவர்களுக்கு சின்னதாய் பார்ட்டி போல் கொடுக்க வேண்டும். ரொம்ப சின்ன பசங்களை சில நேரம் இதில் ஒதுக்கிவிடுவார்கள்.


இன்று கோச்சிங்கில் “டேய் என்னடா ஆடுறா ஸ்பின் பாலை எப்படி ஹாண்டில் செய்யணும்னு சொன்னேன்.. அறிவுகெட்ட மூதீ.. கண்ணை என்ன பிடரியிலா வச்சிருக்க.. போடா பிச்ச விட்டு வெளியே போயி உட்கார்ந்து பாரு..இரிடேட் பண்ணுறதற்குகே வருதுங்க..” மாஸ்டர் அலெக்சின் முகத்தை பாராமல் திட்டி கொண்டே கைதட்டி அடுத்தவனை கூப்பிட்டுகொண்டே போகிறார்.. எல்லோரும் அலெக்ஸையே பார்கிறார்கள். 


அவனுக்கு வெட்கமாய் போயி அழுகை வந்துவிடுகிறது. கிரவுண்டயே விட்டு ஓரமாய் போகிறான் தனியான இடத்திற்கு போயி உட்கார்ந்து அழுகிறான்.


அப்போது அங்கே  வருகிறார்கள் இரண்டு பேர், கரீம் ,கிஷன்சிங் “நல்ல தெரியுமா இங்கதான் வர சொன்னானா அந்த பையன்..? ..ம்ம்.. இது எதோ கிரவுண்டு மாதிரி இருக்கு”...


“போன்ல இங்கேதான் இருக்கானு காமிக்குது”



அப்போது அங்கெ ஓடிவருகிறன் அபிஷேக், “பாய் ரெடியா?”




தொடரும் ...
ஏற்கனவே மனசுணக்கத்தோடு இருக்கும் அலெக்ஸ் மற்றவர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறானா என்பதை இனி ......


இந்த பகுதியில் நடந்த விஷயத்திற்கு  உங்கள் கருத்துக்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்...

முடிந்தால் நேரம் ஒதுக்கி இதையும் கேளுங்கள் மிக அழகா இன்றைய நிலைமையை எடுத்துரைத்துள்ளார் 
















செவ்வாய், 5 டிசம்பர், 2017

புத்திசாலி யார் ?

இன்று கதை ஒன்று 

நடப்பது என்ன ?1,2,3,4,5.6,7 என்ற பதிவுகளை தொடர்ந்து  அந்த விஷயங்களை தாங்கிய கதை பகிர்கிறேன் என்று சொல்லியிருந்தேன் . 
சிறு பிள்ளைகளை பற்றியது என்பதால் கொஞ்சம் போர் அடிக்கலாம்..... ஆனால் இதில் யார் பக்கம் தவறு என்று படித்தால் சொல்லமுடியும் உங்கள் கருத்தயும் .... 
அதை இங்கே தொடர்ந்து சிறு பதிவுகளாக கொடுக்கிறேன் இது ஒரு முழு கதை ....படித்து உங்கள் எண்ணங்களையும் கதையின் நிறை குறைகளையும் பகிருங்கள்.



 புத்திசாலி யார் ?  



“நவீன்… நவீன்… கிளம்பிட்டியாடா… வந்து டிபன் சாப்பிடு..பஸ் வந்திடும்.”

நவீன் “ம்ம் இதோ வரேன்”, கண்கள் என்னமோ டீவியில் சுவரசியமாய் நேற்று நடந்த கிரிக்கட் மேட்ச் செய்தி தொகுப்பை பார்த்து கொண்டு, கைகள் சாக்ஸ் அணிகிறது .

“ஓ காட் என்னடா பண்ற இப்பபோயி டிவி பார்த்து கொண்டு”

ஜாகிங் முடித்து உள்ளே வரும் சுந்தரை பார்த்தவுடன் அவசரமாய் எழுந்து ஒடுக்கிறான் டைனிங் டேபிளுக்கு சாப்பிட .

“ஸ்ஸ் அப்பாடா கொஞ்சம் சீக்கிரம் வாங்கனு டெயிலி சொல்லறேன் காதில் வாங்கறிங்களா..உங்க தலை பார்த்தா ஒழுங்கு அப்படியே வந்து குவிஞ்சிடும் ராசாக்கு..என்னைய பார்த்தா திமிரு..முளைத்து மூணு இல்லை விடல” புலம்பி கொண்டே கிச்சனுக்குள் நுழைந்து கொள்ளும் ரேணு
 
“டேய் என்.ஸி.ஸி கேம்புல சேர்ந்துட்டியா..?” சோபாவில் இருந்து குரல் வருகிறது

நவீனுக்கு விக்கல் எடுக்கிறது, கேள்வியில் கிச்சனில் இருந்து எட்டி  பார்கிறாள், அம்மாவை பார்த்து வாயசைக்கிறான் “பிலீஸ்மா..”

“துரைக்கு என்.ஸி.ஸி வேண்டாமாம்.. கிரிக்கெட் கிளாஸ்ல சேரணுமாம்..”

முறைக்கிறான் சுந்தர் “நான் என்ன சொன்னேன் கொஞ்சம் பெரியவனாகு சேர்ந்துக்கலாம், இப்ப யாராவது உன்னை கொண்டு போயி கூட்டிட்டு வரணும், எங்க ரெண்டு பேருக்கும் டைமில்ல, 12 வயசுக்கு பிறகு சேர்ந்தினா நீயே போயி நீயே வரலாம் இன்னும் ஒரு 2 வருஷம் போகட்டும்.”

“இல்ல அப்பா நம்ம அப்பார்ட்மென்டுலியே பக்கத்து பிளாக்ல இருக்கற அலெக்ஸ் அண்ணா போறான் பா நான் அவங்க போற டைம்ல போறேன் பா அவங்க கூட, பிளீஸ் பா நீங்க சொன்னா அந்த அண்ணா கூட்டிட்டு போவான் பா.”

சுந்தர் ரேணுவை பார்கிறான் என்ன சொல்ற என்பது போல்.. “நான் கேட்டு பார்கிறேன் முதலில், அதாங்க ஜார்ஜ் சாரோட பையன்”

“தேங்க்யூ மா……” என்று சத்தமாய் சத்தம் நவீன்.

மாலை மணி 7 மெயின்கேட்டிலேயே காத்திருக்கும் நவீன்,ரேணுவின் வருகையை பார்த்து.

வாசலில் கேப் வந்து நிற்கிறது ரேணு ‘பை’ சொல்லி இறங்கி திரும்பினாள் நவீன்…. “என்னடா இங்கே நிக்கற ஹோம் வொர்க் முடிச்சிட்டியா?...”

 “முடிச்சிட்டேன்…சரிவா..அம்மாஆஆஆஆ”.... “ஏண்டா இப்படி கத்தற..?”

“நீ அந்த அண்ணா கிட்ட கோச்சிங் பத்தி கேட்கிறேன் சொன்ன…?”

“விடமாட்டியே இப்பதானே வந்தேன் இரு முகமாவது கழுவிட்டு வரேன்”

“சரி நான் கீழயே இருக்கேன் நீங்க வாங்க”

ரேணு வருகிறாள் “வாடா” இருவரும் அலெக்ஸ் வீட்டு கதவின் முன்,காலிங் பெல் அடிக்கிறாள் அலெக்சின் அம்மா ரோஸ்மேரி வெளியே எட்டி பார்கிறார், “ஹேய் ரேணு வா வா.. என்ன அதிசியம்”

“ஹாய் ஆண்டி, இதோ இந்த வாலு இழுத்துட்டு வந்து இருக்கு”

“அப்படியா வெரிகுட்.. டா பையா , சரி உட்காருங்க ,என்ன விஷயம், முதலில் என்ன சாப்பிடற காபி டீ..?”

“அத்தலம் வேண்ணாம் ஆண்டி
ஸ்கூல் ஒர்க் எல்லாம் எப்படி போகுது..?”

“ம்ம் இன்னும் எக்ஸாம் வரும் போது தான் வேலை பெண்டை  கழட்டும்

"உங்க சன்னும்  10th ஆச்சே..”

“எப்போ சமசீர் சிலபஸ் வந்ததோ அப்பதிலிருந்து எல்லாத்துக்கும் குளிர்விட்டு போயிடுச்சி ஈஸி ஈஸி-னு, கிரிக்கெட் கோச்சிங்கில் இருந்தே இன்னும் வரவில்லை..கேட்ட நான் படிச்சுக்குவேன் நீ கவலை படாதேனு சொல்லவேண்டியது..எனக்கும் 12th போர்ஷ்ன் சீவியரா  ஆரம்பிச்சசுனா வீட்டுக்கு கூட வர லேட் ஆயிடும், என்ன பண்ண போறேன் தெரியலை ரேணு.. அங்கிள் தான் பார்க்கணும் சொல்லி இருக்கேன்”

ரேணு மணியை பார்க்கிறாள் 8 “இவ்வளவு நேரம் ஆகுமா ஆன்டி கிளாஸ் முடிய..?”

”கோச்சிங் செய்யறவரை  பொறுத்துனு சொல்லுறான் ..இப்ப வேண்டாமென்றாலும் கேட்காமல் கிரிக்கெட் பைத்தியம் பிடிச்சி ஆட்டுது”

“ம்ம் இதோ இந்த வாலையும் தான்.. இப்பவே இவருக்கு கோச்சிங்கில்  சேரணுமாம்.. அதான் கேட்டுட்டு போலாம்னு வந்தேன்”

“ஓ.. அதன் இந்த பக்கமா..”

“ஆமாம் ஆன்டி நாங்க  இரண்டு பேரும்  வர இவ்வளவு லேட் ஆகிடும் சில நேரம் கூப்பிட்டு போயி கூப்பிட்டு வர முடியாது.. சொன்னா கேக்க மாட்டறான் அடம்புடிக்கிறான் அதான் உங்க பையன் போகும் நேரத்தில் சேர்த்துவிட்டா அவன் கூப்பிட்டு போயி வருவானா ஹெல்ப் கேக்கலாம்னு வந்தேன்”

“அதுக்கென்ன ரேணு இப்ப வந்திருவான் கேட்கலாம்.... இதோ வந்திட்டானே..  வாடா உனக்காதான் ஆண்டி காத்திருக்காங்க”

“ஹாய்”,

நவீன் எழுந்து ஓடி போயி அவன் கையைப்பிடித்து கொள்கிறான். “என்னடா..?”
 
“ஹாய்ண்ணா”..

“ஹாய் அலெக்ஸ், கோச்சிங் எப்படி போகுது..?”

“அங் சூப்பர் ஆன்டி”

“இவனுக்கும்  சேரணுமாம்  என்னாலயும் அவங்க அப்பாவாலையும் முடியாது சோ அதனாலதான் உன்கிட்ட  ஹெல்ப் கேட்கவந்தேன், நீ போகும்நேரம் இவனையும் கூப்பிட்டு போயி சேர்த்து டெயிலி  கூப்பிட்டுடு போயி வர முடியுமா..?” என்று தயங்கி கேட்கிறாள்.

”ஓ ஸூர்! நோ பிராப்ளம் ஆன்டி.”

“ஆனா இவ்வளவு லேட் ஆகும் அதுதான் யோசனையா இருக்கு.. இவன் ஹோம்வொர்க் பண்ணனும்..படிப்பு பாதிச்சா அங்கிள் வேற திட்டுவாங்க”

“அம்மா அம்மா பிளீஸ் மா நான் ஸ்கூல் விட்டு வந்தவுடன் செஞ்சு  வச்சிடறேன்”

“ஸ்கூல் வொர்க்ல ஏதாவது பிராப்ளம் வந்துச்சி.. உங்கப்பா அவ்வளவு தான்.”

“விடு ரேணு அவன்தான் செஞ்சு வச்சிடுறேன் சொல்றானே இப்ப 5th தானே எதுக்கு இப்பவே புடிச்சி பயப்படுற” யோசித்து கொண்டே ஓகே சொல்கிறாள்.

ஜார்ஜ் வருகிறார் “வாம்மா..”

“ஹாய் அங்கிள்” மணியை பார்கிறாள் 8.45 போன் .எடுத்து பார்கிறாள் நிறைய மிஸ்டு கால்ஸ் சுந்தரிடமிருந்து “ஓகே ஆன்டி வரேன்… அங்கிளும் இப்பதான் வந்திருக்கார் கவனிங்க ..நிறைய நேரம் ஆகிவிட்டது ..அலெக்ஸ் நாளைக்கு கூப்பிட்டுட்டு போறியா..?”

“ஓகே ஆன்டி… ஈவ்னிங் 5'க்கு ரெடியா இருடா”

“ஓகேன்னா பாய்,..... பாய்”

அடுத்த நாள் ஈவ்னிங் 5'ஓ கிளாக் நவீன் குதித்து கொண்டு அலெக்ஸை தேடி வருகிறான்.

“வாடா வந்துட்டியா இரு போகலாம் உட்கார் இதோ வரேன்” என்று உள்ளே போகிறான்.

ரோஸி வேலையில்இருந்து வருகிறார் “ஹாய் நவீன் கிளம்பிட்டியா பால் குடிச்சி சாப்பிட்டியா ஏதாவது..?” என்று கேட்டு கொண்டே உள்ளே போகிறார்.

“மாம் நான் கிளம்பறேன்.. வாடா”

“அலெக்ஸ் டிபன் வச்சிருத்தேனே சாப்பிட்டியா..?”

“அதுவேண்டாம் நான் ஜூஸ் குடிச்சிட்டேன்..பை!”

பெஸ்ட் காஸ்ட்லீ ஹீரோ சைக்கிள் அவனிடமிருக்கிறது அதனால் அவனுக்கு நவீனை  கூப்பிட்டு போவது சிரமமாக தெரியவில்லை.

கிளம்பி இரண்டு ரோட் கிராஸ் செய்த்தவுடன் அலெக்ஸ் சைக்கிளை நிறுத்திவிடுகிறான்.

“எண்ணா இங்கே நிறுத்திட்டீங்க..?”

“கொஞ்சம் இருடா ஒரு 5 மினிட்ஸ்” என்று ஒரு புக்கை எடுத்து பார்த்து கொண்டிருப்பது போல் பாவலா செய்கிறான், 
நவீனுக்கு ஒன்றும் புரியவில்லை முழித்து கொண்டு நிற்கிறான், 

அப்போது ஒரு 13 வயது பெண் அவர்களை கிராஸ் செய்து நடக்கிறாள் இவர்களை பார்த்த்து கொண்டே.. அலெக்ஸ் நவீனை பார்த்து “டேய் இப்ப போச்சே அந்த கேர்ள் திரும்பி பார்க்க்கிறாளா பாரு சீக்கிரம் ஜல்தி” 
நவீனும் புரியாமல் பார்த்து கொண்டே இருக்கிறான்.

“ஆமாம்ண்ணா பார்க்கிறாங்க ஆனா போயிட்டாங்க.. யாருண்ணா அவங்க?”

“அதுவா..என் டாவு”

“டாவா..?” !!!!!

தொடரும் .....
நவீனுக்கு எவ்வளவு  புரிகிறது என்று பார்ப்போம் இனி....... 
இங்கு நடப்பது என்ன யார் என்ன செய்கிறார்கள்? 

வியாழன், 30 நவம்பர், 2017

படித்தில் பிடித்தது.....

                                                                 
                                

தன் தோள்களில் தாங்கியதை இறங்குவதே இல்லை கடைசிவரை....... சுகமாய் பயணித்ததை உணரும் தருணம் எப்போது .......



                தஞ்சையில் இருந்து சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, 
“ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)
அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)
மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.
ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம்.
ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன்.
மை டியர் சன் (my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் ( my dear sin) என்று தட்டச்சியிருந்தது.
ஆங்கிலத்தில் Sin என்றால் “பாவம்” என்று பொருள்.
அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் “சின்” என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது.
அந்த மணியார்டர் பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன்.
அப்பாவுக்கு போய்ச் சேர்ந்தது பணம். அவருக்கு அதிர்ச்சி. உடனடியாக என் அலுவலகத்துக்கு தொலைபேசினார்.
“ஏம்பா பணம் திரும்பி வந்துருச்சு” என்றார் பதட்டமாக.
அப்பாவிடம் எப்போதுமே வெளிப்படையாகவே பேசுவேன்: “மைடியர் சின் அப்படின்னு இருந்துச்சுப்பா… அது சரிதானேன்னு தோணுச்சு… அதான் “ என்றேன்.
அப்பா சிரித்தார். நான் அவரை மிக கவனித்திருக்கிறேன். பெருந்துன்ப நேரங்களி்ல் அவர் சிரிக்கவே செய்திருக்கிறார். அப்படியானதொரு துயரத்தை வெளிப்படுத்திய அந்த சிரிப்பை இனம் கண்டுகொண்டேன்.
அப்படியே போனை வைத்துவிட்டார் அப்பா.
அப்போது நான் பணியாற்றியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில்.
மறுநாள் காலை.. அலுவலகத்தில்
இருந்த எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு. என்னைப் பார்ப்பதற்கு அப்பா வந்திருப்பதாக தகவல் சொன்னார்.
இரண்டாவது மாடியிலிருந்து ஓடி வந்தேன்.
செக்யூரிட்டி அலுவலகத்தில் அப்பா அமர்ந்திருந்தார்.
உள்ளுக்குள் ஏதோ செய்தாலும், சாதாரணமாக முகத்தை வைத்தபடி, “என்னப்பா திடீர்னு..” என்றேன்.
அப்பா என் தலைவருடி, “தம்பி.. அப்பா உன்னை சின்.. அதான் பாவம்னு நினைப்பேனா..? உனக்கென்ன ராஜா… நீதான் என் சொத்து… அந்த டைப்ரட்டிங்காரர் ஏதோ அவசரத்துல தப்பா டைப் அடிச்சுட்டார். இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? பணத்தை திருப்பி அனுப்பிட்டியே.. சிரமப்படுவேல்ல.. . அதான் கொடுக்க வந்தேன்” என்றார் அப்பா.
முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு ஏதேதோ பேசினேன்.
யோசித்துப் பார்க்கையில் பிள்ளைகள் என்போர், பெற்றவர்களுக்கு “சின்” என்றுதான் தோன்றுகிறது.
ஆனால், அப்பாக்கள் வரம்...