சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 14 டிசம்பர், 2017

புத்திசாலி யார்? -நிறைவு பகுதி

புத்திசாலி யார் ? - 1,2,3

போன பதிவில் கதையின் போக்கிற்கு தன் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்து கொண்ட தோழமைகள் அனைவருக்கும் நன்றிகள் பல

நம்முடைய ஆழ்ந்த கவனிப்பை நாம்  தளர்த்தும் போது பிள்ளைகளின் போக்கு எவ்வண்ணம் போகிறது எங்கே நாம் தவற விடுகிறோம் என்பதை பார்த்து வருகிறீர்கள் இனியும் இங்கு என்ன பிள்ளைகளின் சமூகம் அவர்களை எப்படி குழப்பியது அவர்கள் எப்படி தடம்மாறி போனார்கள் என்று நிறைவு பகுதியாக பார்ப்போம்


புத்திசாலி யார் ?

 அடுத்தடவை நீ சுமாரா படிச்சிக்கோ இரண்டு பிட்டு முக்கியமான கோஸ்டினுக்கு ரெடி பண்ணி எடுத்துனு போய்ட்டு செம மார்க்க எடுத்துடு. “ 

“எப்படிண்ணா..மாட்டிக்கிட்டா?

“நான் சொல்லித்தரேன் எப்படினு” சொல்லி கட்டிபிடிச்சிகிறான் டைட்டா. நவீனுக்கு சந்தோஷமாய் இருக்கு.

அடுத்த வாரம் கோச்சிங்க முடிந்து மேட்ச் நடக்குது.. முடிந்தவுடன் அபிஷேக் “அலெக்ஸ் நாங்க ஒரு பார்ட்டிக்கு போறோம் வரியா?”

“எங்கேடா அது?”

“ஒரு பிரண்டு வீட்டில்”

“ம்ம் வரேண்டா எவ்வ்ளவு நேரம் ஆகும்?”

“நைட் எட்டு ஆகலாம் வீட்டில் குரூப் ஸ்டெடினு  சொல்லிட்டுவா ஹீ..ஹீ..” அப்பத்தான் அனுப்புவாங்க முடிஞ்சா பணம் எடுத்துகினுவா ஒரு 1000/-துக்கு மேல, “பேய் முழி முழிக்காதடா போற இடம் அந்த மாதிரி சூப்பரா இருக்கும் மச்சி முக்கியமா இந்த அமுல் பேபியை கூட்டிட்டு வராதடா உனக்கு புண்ணியமா போகும்” அபிஷேக்கும் ஹரிஷும் இன்னும் அவன் கூட்டாளிகள் இரண்டு பேர்

“எனர்ஜி பவுடருக்கும் பைசா  கொண்டுவா”

“நீங்க?”

“நீ பார்க் ஸ்டேஷன்கிட்ட வந்துடு அங்கெ ஜாயின்  பண்ணிக்கலாம்”

வீட்டில் ரோஸி “சர்ச்சுக்கு வராம கோச்சிங்கு போவேன்னு அடாவடி.. இப்ப குரூப் ஸ்டெடியா?”

பையில் புக்ஸ்கள் வாரி வைத்து கொள்கிறான் “சும்மா கத்தாதீங்க வேணும்னா நீங்களும் வாங்க பார்க்க”

“டேய் ஈவ்னிங் கெஸ்டு-வேற வராங்கடா.. டாடி எங்கேன்னு கேட்பாரு..கேக்  வேற நான் செய்யணும்..படுத்தாதடா”

“படிக்க போயிருக்கேன்னு சொல்லு.. சரி ஒரு 100/- தா”

“எதுக்குடா படிக்கிறதுக்கு?”

“எல்லோரும் சேர்ந்து ஸ்னேக்ஸ் வாங்கிறோம் பிளான்”

“ஒழுங்கா படி நல்ல மார்க் வரணும் அப்பதான் சயின்ஸ் குரூப் கிடைக்கும்” என்று கொடுத்து அனுப்புகிறார். அலெக்ஸ் போன பிறகு *அட யார் வீட்டில் என்று கேட்க மறந்துட்டேனே*

பார்ட்டிக்கு போய்ட்டு வந்த பிறகு அலெக்ஸ்  இன்னும் மோசமாகிறான். அது போன்ற பார்ட்டி அது…. திரும்பவும் நவீனை கூப்பிட்டு கொண்டு வேறொரு பெண்ணை பின்னால் சுற்றுகிறான். அவன் வயது ஹார்மோன்ஸ் அவனை மிக மோசமாய் ஆட்டி படைக்கிறது. அபி அவனை குழப்புகிறான் பலதும் சொல்லி அபி பெரிய வசதி படைத்தவன் வெளிநாடு பணம்  விளையாடும் வீடு அவனுக்கு ஸ்லாம் போட இந்த மாதிரி அடிமைகள் தேவை என்று பார்த்து வளர்ந்தவன்

“டேய் உன் கூடவே சூப்பர் கழுக்குமொழுக்குன்னு ஆளை வச்சிகிட்டு ஏண்டா வெளியே அலையற”

புரியாமல் முழிக்கிறான் அலெக்ஸ் “உன் கூடவே உன் அடிமையா ஒன்னு சுத்துதே அதுக்கும் கொஞ்சம் லைட்ட வாயில தடவி விடு அப்புறம் நீ சொல்வதையெல்லாம் கேட்பான்”.

அபியால் நவீனின்  சிறு பிராயம் தடம்மாறி போய் விடுகிறது. பணிவு என்பது மருந்துக்குமில்லாமல்பள்ளியில்  மார்கெல்லாம் அலெக்ஸ் ஐடியாவில் நடந்தேறுகிறது அலெக்ஸ் எப்படி வழி  நடத்துகிறானோ அப்படி கேர்புல்லா நடந்து கொள்கிறான். 
சுந்தர் இல்லாதது  அவனுக்கு வசதியாக போய்விடுகிறது ரேணுவை ஈசியாக ஏமாற்ற முடிகிறது.  ரேணுவின் சின்ன சின்ன  நகைகூடகாணாமல் போகிறது. அவள் வேலைக்காரியை  சந்தேகப்பட்டு நிறுத்திவிடுகிறாள், குழம்புகிறாள். நவீனின் மாற்றம் வேறு அவளை குழப்புகிறது.

சுந்தரிடம் போனில் கவலை படுகிறாள் தன்னிடம் அவன் பேசுவது கூட இல்லையென்று  “விடு டீன் ஆரம்பிக்குதில்ல அதனாலயா  இருக்கும் நான் வந்து பார்த்துகிறேன்  அடுத்த வராம் அநேகமா ரிலீவ் ஆயிடுவேன் நினைக்கிறேன்”

இப்பொது புதுவருட ஆரம்பத்திற்க்கு பின் ரோஸிக்கு வேலை பளு இன்னமும் அதிகமாகிறது பள்ளியில் இப்பொழுதெல்லாம் அலெக்சின் மார்க் அவளை நிம்மதி கொள்ள வைக்கிறது அதனால் அவனை எதுவுமே கேட்ப்பதில்லை அவன் ரூமை விட்டு வரவில்லையென்றால் படிக்கிறான் என்று நினைத்து கொள்கிறாள் அலெக்ஸ் போதை, பார்ட்டி, கிரிக்கெட் கோச்சிங்.. என்று தன் நண்பர்களுடன் சுற்றி வருகிறான் படிப்பு என்ற போர்வையில்


 இப்பொழுதெல்லாம் நவீன் யாருடனும் போவதில்லை. பேசுவதில்லை அலெக்ஸை தவிர தனக்குள் ஒடுங்கி போய்விட்டான்.  தனிமையில் அழுகிறான் .அதை பார்த்து அலெக்ஸ் வருந்துகிறான்.. அபியிடம் ஷேர்  செய்கிறான்.நவீனின்  வருத்தத்தை

அபி “அப்படியா விடு அவனை வேற மாதிரி சுறு சுறுப்பாகிடுவோம் என்று சொல்லி இந்த கேமை விளையாட சொல்லு என்ன பண்ணறான் பார்க்கலாம் மீதியெல்லாம் மறந்துடுவான்”.
 “என்ன கேம்டா?”
பாரு அவன் கூடவே இருந்து என்று சொல்லி நவீனுக்கு கேமை விளையாட சொல்லி கொடுத்து போனையும் கொடுக்கிறான்.

அது ஒரு அதிநவீன பயங்கரமான சேலஞ்சிங்  கேம் 50 கட்டளைகளை உள்ளடக்கியது ஒரு ஒரு கட்டளையாக வீழ்த்தி வரவேண்டும். அந்த கட்டளைகள் எப்படி பட்டது  என்றால் ஆபத்தானவை நம்மை நாமே பிளேடால் கிழிப்பது, ஊசியால் குத்திக்கொள்வது, மற்றவரை துன்புறுத்துவது இப்படி பல பயங்கரங்களை  அடுக்கடுக்காய் சொல்லி கொண்டே வரும்  கட்டளைகள் இந்த கேமின் பொறுப்பாளர்கள் மூலம் வழங்கப்படும். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஏதாவது திகலை தாங்கியது .

நவீன் இருக்கும் மனநிலைக்கு அந்த பயங்கரங்கள் அவனுக்கு தனக்கு கொடுத்து கொள்ளும் தண்டனையாவே நினைத்து கொள்கிறான். அலெக்ஸை  விட்டு பிரிகிறான்.  அலெக்ஸ் கவனியாமல் அவன் போதை உலகத்தில் இந்த டாஸ்குகளில் வலிகள் கொடுப்பதை மறக்க அலெக்ஸின் மருந்தின் உதவியை நாடுகிறான். 


நடுநடுவே அபி நவீனை பார்க்க வருகிறான் கேமுக்கு உண்டான போன் வசதி செய்து கொடுத்து கேமின் நிலைகளை பார்த்து ரசிக்கிறான். 

ரேணு நவீனின் முகத்தினை பார்த்து “என்னடா ஒரு மாதிரி இருக்க என்ன உடம்பு சரியில்லையா இங்கேவா கையில்  என்ன கட்டு”

 “ஒண்ணுமில்லமம்மி  கோச்ங்கில் கீழே விழுந்துட்டேன் மாஸ்டரே மருந்து போட்டுட்டார்”

“என்ன வா டாக்டர்கிட்ட போலாம்…… 
மம்மி மி மி மி நான் தான் ஒண்ணுமில்ல சொல்றேனில்ல” கத்திவிட்டு உள்ளே போகிறான்
அவன் இரவில்வெளியே செய்ய வரும்  டாஸ்க்கு  ரேணுவிற்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்துவிட்டு போகிறான். அலெக்சின் உதவியை பெற்று அலெக்ஸும் கேம் தானே என்று முடிந்தவுடன் எல்லாம் சரியாகிடும் என்று நினைத்து கொள்கிறான். இதன் நடுவே ஒரு தடவை பிட்டு அடிக்கும் போது  மாட்டி கொள்கிறான் ரோஸிக்கு அவனது பள்ளியில் இருந்து அழைத்து சொல்லப்படுகிறது சாமாளித்து விடுகிறான் ‘இல்லமா என் பிரண்டு எடுத்துட்டு வர சொன்னான் அவனுக்காக தான் பாவம்மா அவங்க அப்பா செம அடி அடிபார்மா’

ரேணு சுந்தருக்கு பேசுகிறாள் “என்ன… சுந்தர் இந்த வாரம் வந்துடுவேன் சொன்னிங்க என்னாச்சு?”

“என்னபண்ணறது ரேணு கூட வேலை செய்யறவன் மிஸ்டேக் பண்ணாலும் பிராஜெக்ட் டிலே ஆகுதே”

“போங்க சுந்தர் உங்களை நம்பி நான் பேசாம எங்க அப்பாம்மாவையாவது வரவழைச்சு இருப்பேன் நீங்கதான் உங்க பேர்ன்ஸ் ஏதாவது நினைச்சுக்குவாங்கனு வேண்டாம் சொல்லிட்டீங்க இப்ப உங்க பையனை சமாளிக்கவே முடியலை ஒரே அடம் எப்போதும் அலெக்ஸ் கூட இல்லனா ரூம்குள்ள டல் ஆயிட்டான் சம்திங் ராங் மாதிரி இருக்கு நான் அப்பம்மாவை வர சொல்ல போறேன்”

“சரி சரி புலம்பாதே அவனை கூப்பிட்டு .....
"அவன் எங்கே இங்கே அவங்க வீட்டில் இருக்கான் சரி சீக்கிரம் வர ட்ரை பண்றேன் அவனை ரொம்ப திட்டுரியா  திட்டதே அவனை பிரீயாவிடு”

இரண்டு நாள் கழித்து அப்பார்ட்மெண்டிலிருந்து  அழைப்பு “மேம் நீங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்க கிளம்பி”  “என்ன என்னாச்சு?” 
“நீங்க வாங்க மேம்........... மேல. யாரவது ஏறுங்க குவிக் பையர் இஞ்சனுக்கு போனை போடுங்க” போன் வைக்கப்படுகிறது. .இதெல்லாம் போன் வழியாக கேட்கிறாள் ரேணு ஒன்று புரியவில்லை வீட்டுக்கு விரைகிறாள் எதோ நெருப்பு பிடித்துவிட்டது என்று….. 

இவள் உள்ளே நுழைய மாடியிலிருந்து நவீன் கீழே குதிக்கிறான் “சாரிமா……”
 என்று கத்தி கொண்டே 
எல்லா வீட்டு ஆட்களும் வீல் என்று அலறுகிறார்கள். 
ரேணு அதை பார்த்து ஓடி வருகிறாள் என்ன என்று அங்கெ தன் மகனை ரத்தவெள்ளத்தில் பார்த்து மயங்கி விழுகிறாள். 
அதற்குள் பக்கத்தில் இருந்த ஆஸ்பிடலில் இருந்து ஆம்புலன்ஸ் வந்து கீழே விழுந்த நவீனை எடுத்து கொண்டு செல்கிறது. 
எல்லோரும் ரேணுவை தூக்கி மயக்கம் தெளியவைத்து கூப்பிட்டு கொண்டு ஓடுகிறார்கள் ஆஸ்பிடலுக்கு… ரேணு பிரமை பிடித்தவளாய் நிற்கிறாள். 

அவள் அப்பவும்அம்மாவும் அங்கே அப்போது வருகிறார்கள். தலை தலையா அடித்து கொண்டு கதறி கொண்டும் வந்து ரேணுவை பளார் பளாரென்று அறைகிறார் அவள் அம்மா “என்னடி என்னடி ஆச்சு நேற்று தானே போன் பண்ண அவனுக்காக வாம்மா என்று வரத்துக்குள் பிள்ளையை விட்டுட்டியேடி பாவி பாவி”… என்று அடிக்கிறாள்.

ரேணுவின் அப்பா “ஏம்மா ஏன் அவன் இன்னைக்கு ஸ்கூலுக்கு போகாம வீட்டில் இருந்தான் ஏன் நீ அவனை விட்டுட்டு ஆபிஸ் போன?”


 “தெரியலையேப்பா….. தெரியலையே ஒன்னும் புரியலையே ஐயோ அவர் வந்து கேட்ட நான் என்ன சொல்லுவேன் நான் அனுப்பினேன் ப்பா எப்படி வீட்டுக்கு வந்தான்”…. 

அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேனை நோக்கி ஓடுகிறாள் “அண்ணே  நீங்க காலைல வேன்  வந்தப்ப இவன் பார்கலையா?”

“அவன்தான் வந்து இன்னிக்கு அம்மா கூட போவேன் சொல்லிட்டு போனான்  சரிதான் நானும் நினைச்சுக்கிட்டேன் நீயும் நான் பின்பக்கம் மோட்டார் போட போயிருக்கும் போது  போய்ட்டு இருக்க போல இவன் எங்கே இருந்தான்  எப்ப மொட்டைமாடிக்கு போனான் தெரியலையேமா மேலே ஏறி நிக்கும் போதுதான் பார்த்தேன் என்னடானா நம்ம நவீனு மாதிரி இருக்கேனு பாவி பையன் இப்படி பண்னண்ணிட்டானே ராசாத்தி”….. 

இதற்குள் போலீஸ் வருகிறது விசாரணை நடக்கிறது. 

ஆப்ரேஷன்  ரூமில் இருந்து வரும்   டாக்டர்களை நோக்கி பாய்கிறாள் ரேணு “மேம் பிளேட் ஆரேஞ்சு பண்ணுங்க சீக்கிரம்” என்று ஓடுகிறார்கள். நிற்காமல் …..அப்பார்ட்மெண்டில் உள்ளவர்கள் உதவுகிறார்கள். ரேணுவை கேள்வி மேல் கேள்வி கெடுக்கிறார்கள் என்ன? ஏன்?.... என்று எல்லாவற்றிற்கும் ரேணு ….புரியலையே என்று தலையில் அடித்து கொள்கிறாள். 

மிக கடுமையான நேரம் நகர்கிறது. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஆப்பிரேஷ்ன் தியேட்டரில் இருந்து டாக்டர் வெளியே வந்து உயிர் இருக்கிறது ஆனால் கோமாவில் என்று சொல்லி செல்கின்றார். 

இதற்குள் நவீனின் ஸ்கூல் பேக் மாடியில் இருந்து கண்டுபிடிக்கப்படுகிறது அதில் ஒரு உயர்ரக செல்போன் மற்றும் ஸ்கூல்நோட்டில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட  கடிதம்  அதில் விரிவாய் இல்லாமல் தான் இந்த கேமுக்காக இறப்பதாக எழுதி இருக்கிறான்…. அப்போதும் அலெக்ஸை காப்பாற்றுகிறான் அந்த சிறுவன் .

இதற்கு நடுவே இங்கே போதைமருந்து வாங்கும் போது கிரைம் போலீசால் வளைத்து பிடிக்கப்படுகிறார்கள். 
ஹரிஷும்,அலெக்ஸும்….. அபி தப்பித்து கொள்கிறான் இவர்களை முன்னேவிட்டு. க்ரீமும் தப்பித்து ஓடுகிறான் ரோடில் .... பொதுமக்கள் .பிரஸ்காரங்க படம் பிடிக்கிறார்கள். 
தகவல் போகிறது. அலெக்ஸ் வீட்டிற்க்கு….. ஜார்ஜும் ரோஸியும்  போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடுகிறார்கள். 
போலீஸ் இரண்டும் இரண்டும் நாலு என்று கணக்கு போட்டு நடந்தவைகளை கண்டு பிடிக்கிறது. 
பெற்றோர்களை இப்படி எதுவும் கவனிக்காமல் இருப்பீர்களா என்று கண்டிக்கிறது.  
இரு பெற்றோரும் தலை குனிந்து மனம் உடைந்து என்று நிற்கிறார்கள். அப்பார்மெண்டில் எல்லோரும் பாவமாய் பார்கிறார்கள். 

ஒரு சிறுவன் கோமாவில் ,சமூக சீர்திருத்த பள்ளியில் ஒருவன் .காலம் என்ன வைத்திருக்கிறது இவர்களுக்கு வாழ்வுக்கு தெரியாது 

இன்றைய  பெற்றோராகிய நாம் மிகவும் கவனமுடன் பிள்ளைகளை கையாளனும் கவனித்து ஏனென்றால் இன்று இருக்கும் விஞ்ஞான வளர்ச்சியினால் அவர்கள் நம்மைவிட புத்திசாலிகளாக ஆகிவிடுகிறார்கள்  அந்த புத்திசாலித்தனம்  நன்மைக்கும் உதவும் தீமைக்கும் உதவும்.



டிஸ்கி --எல்லா பிள்ளைகளும் இப்படியா என்றால் ..........நூற்றில் ஒரு பிள்ளைக்கு இப்படி நடக்க வாய்ப்புகள் வந்துவிடும் .அந்த நூற்றில் ஒரு பிள்ளை நம் பிள்ளையாகாமல் காப்பது பெற்றோரின் கடமை



குறிப்பு - ரேணு செய்யாதவறியவை பிள்ளையின் அளவுக்கு மீறிய நடவடிக்கைளை கவனிக்காமல் விட்டது.... கவலை வந்தும் உடனடி தீர்வு காணாமல் அதை தள்ளி போட்டது. ரேணு சொன்னால் கவலைகளை ஆராயாமல் போனது சுந்தரின் தவறு  பெற்றோர் இருவரும் வேளைக்கு போகும் பட்ச்த்தில் இருவரும் ஒருவர் மாறி ஒருவர் நேரம் அமைத்து கொண்டு பிள்ளைகளின் நடவடிக்கைளை கூர்ந்து கவனித்து வழி நடத்த வேண்டும்
பிள்ளைகளின் வளர்ப்பை பற்றி இவர் கூறுவதையும் கேளுங்கள் நேரம் ஒதுக்கி 




ஞாயிறு, 10 டிசம்பர், 2017

புத்திசாலி யார் ?-3

புத்திசாலி யார் ? 1,2 கதையின் முதல் பதிவுகள் 

போன பதிவில் கருத்துக்கள் பகிர்ந்து கொண்டு தங்கள் எண்ணங்களையும் அனுமானங்களையும் பகிர்ந்து கொண்ட தோழமைகளுக்கு நன்றிகள் பல

அலெக்சின் மன சுணக்கம் அத்தையை தொடர்ந்து கிரிக்கெட் கிரவுண்டில் நடக்கும் விஷயங்களை பார்த்தோம் மேலும் என்ன நடக்கிறது அவனுக்கு என்று பார்ப்போம்


 புத்திசாலி யார் ? -3


எல்லோரும் அலெக்ஸையே பார்கிறார்கள் அவனுக்கு வெட்கமாய் போயி அழுகை வந்துவிடுகிறது. கிரவுண்டயே விட்டு ஓரமாய் போகிறான் தனியான இடத்திற்கு போயி உட்கார்ந்து அழுகிறான்.
அப்போது அங்கே  வருகிறார்கள் இரண்டு பேர், கரீம் ,கிஷன்சிங் “நல்ல தெரியுமா இங்கதான் வர சொன்னானா அந்த பையன்..? ..ம்ம்.. இது எதோ கிரவுண்டு மாதிரி இருக்கு”
“போன்ல இங்கேதான் இருக்கானு காமிக்குது”
அப்போது அங்கெ ஓடிவருகிறன் அபிஷேக், “பாய் ரெடியா?”

“ஹாங் ரெடி பைசா ரெடியா?”

“எஸ், இந்தாங்க சீக்கிரம்” சொல்லி சில நூறுகளை கொடுக்கிறான் அபி, வாங்கி கொண்டு அவனிடம் இரு சிறிய பாக்கெட்டை கொடுக்கிறான் கரீம், கொடுத்தவுடன் அந்த இடத்தைவிட்டு நகர்கிறான், போகும் போதே சொல்கிறான் “நிம்பள் போன் பண்ண வேணாம் அடுத்து நானே மெசஜ் கொடுக்கான் ஓகே.”

அவர்கள் போன பின் அங்கே ....”கெடச்சிடுச்சாடா?” கேட்டவாறு ஹரிஷ் வருகிறான், 

அபி-“நீயெண்டா இப்போவந்த? மாஸ்டர் பார்த்திட போறான்.”
அப்போ அவர்கள் பேசும் சின்ன மதிலுக்கு பின்புறம் அலெக்ஸ் உட்கார்ந்திருப்பதை பார்க்கிறான் அபி, ஒரு நிமிஷம் திக்கென்று ஆகிறது அவனுக்கு, பிறகு இவன்தான் அழுமூஞ்சி எதுவும் புரியாது என்று 

“டேய் என்னடா அழுமூஞ்சி,  இங்கே உட்கார்ந்து அழுதுனு இருக்கியா?”

“ஹா ஹா டேய் அந்த கிழவன் ரொம்ப தாளிச்சிடான்டா இன்னிக்கு இவன” என்று ஹரிஷ் சிரிக்கிறான் 

அதை பார்த்து அலெக்ஸ் திரும்பவும் காலில் முகத்தை புதைத்து கொள்கிறான். “டேய் சீ! எழும்பிவா அவன் திட்னதுக்கெல்லாம் சோகமாய் ஆயிடுவியா? லூசா விடு” என்கிறான் அபி அதற்குள் 

ஹரிஷ் “அபி எனக்கு எப்படா தருவ? எவ்வளவுடா? சீக்கிரம் சேம்பிள் கொஞ்சம் காட்டேன் மேட்ச் சூப்பரா விளையாடலாம்”

“இர்ரா..அவசரப்படாதே” பாக்கெட்டை பிரித்து ஒரு துளி எடுத்து ஹரிஷ் கையில் வைக்கிறான். 

ஹரிஷ் அதை மோர்ந்து பார்த்து நக்கி எடுக்கிறான் 
அலெக்ஸ் நிமிர்ந்து பார்கிறான். 
அபி-“அழுமூஞ்சி உனக்கு  வேணுமா? எல்லா சோகமும் பறந்து போயிடும் மறந்து போயிடும் ஒருதுளி எடுத்தா” 
ஆர்வமாகிறான் அலெக்ஸ் “என்னது அது?”
“அதுவா  எனர்ஜி பவுடர்”
“இத போட்ட மேட்ச் சூப்பரா ஆடலாம்னு சொல்லறானே… நிஜமாவா?”
“ஆமாண்டா வெண்ண.. பிச்சு உதிரலாம் பிச்சு எகிற இதை போட்டவுடன்”
“ஏ பிளீஸ் டா  எனக்கும் தாடா”
“உனக்கா? வேணாம்பா நீ போய் எல்லார்கிட்டயும் உளறி வச்சனா அவ்வளவுதான்”
“இல்லடா இல்லடா பிளீஸ் சொல்லமாட்டேண்டா”
“தரேன்.. ஆனா யார்கிட்டயும் சொல்லக்கூடாது. இதனாலதான் நாம நல்ல விளையாடுறோம் தெரிந்தா மாஸ்டர் வூட்டுக்கு சொல்லிடுவான்.. தள்ளி வச்சிடுவான்.. அப்புறம் சும்மா தரமுடியாது, விலைக்குத்தான் தருவேன். அவன்கயில குடுத்தேன் பார் ஒரு துளி அது நுறு ரூபா.. இருக்கா?”
“நுறு ரூபாவா?..இன்னிக்கு மேட்சுல தோத்துட்டா பார்ட்டி கொடுக்க காசுபோட தான் எடுத்துட்டுவந்தேன்”
“போடா லூசு இப்ப நீ எங்க டீம் கீழ் வந்துடுவ சோ ஜெயிக்க போறது நாமதான்”
“ஹாங்?!” வாயை பிளக்கிறான் அலெக்ஸ் “நிஜமாவா? உங்க டீம்லயா? அப்ப  சரி இந்தா” என்று நுறு ரூபாய் எடுத்து நீட்டுகிறான். யோசனையோடு பார்கிறான் அபி “டேய் உளறி வச்ச அவ்வளவுதான் அடுத்தவாரம் விளையாட கால் இருக்காது”
“இல்லடா சொல்லமாட்டேன் நீங்களும் நான் வாங்குனதை சொல்லாதிங்கடா”
“சரி கையை காட்டு” என்று அவனுக்கும் தடவுகிறான் ஒரு துளி பிறகு கிரவுண்டுக்குள் போகிறார்கள் 
கிளாஸ் முடிகிறது நவீன் ஓடி வருகிறான் “எங்கண்னா போனீங்க நேத்திக்கும் அந்த பொண்ணால சோகமாயிட்டீங்க இன்னிக்கு மாஸ்டர் திட்டிட்டார்”
“ஹான்?!” என்று இப்போது ஹரிஷும் அபியும் அலெக்ஸை பார்கிறார்கள்  அலெக்ஸ் நெளிகிறான் தலைகுனிந்து கொள்கிறான் “என்னடா விஷயம்” காதை கடிக்கிறார்கள். “சும்மா”.. 
ஹா ஹா ஹா சிரிக்கிறார்கள். 
நவீன் ஒன்றும் புரியாமல் முழிக்கிறான். அதற்க்குள் அலெக்ஸ்க்கு மெல்ல மெல்ல போதை ஏறுகிறது …..அவன் தனனை மிக லேசாக உணர்கிறான் வாய்விட்டு சத்தமாய் சிரிக்கிறான். 
நவினை கட்டி பிடித்து கொள்கிறான் “தேங்க்ஸ்ட்டா தேங்க்ஸ்ட்டா” என்று அபிக்கு கை கொடுக்கிறான். 
நவீன் முக்கியமான குரூப்பு கூட அலெக்ஸ் சேர்ந்துவிட்டதில் மிகவும் உற்சகமாகிறான் அவன் கண்னுக்கு அலெக்ஸ் ஹீரோபோல் தோன்றுகிறான்.

நாட்கள் நகர்கிறது இப்பொழுதெல்லாம் அலெக்ஸ் நடவெடிக்கையில் நிறைய மாற்றம்.. படிப்பில் கவனமற்று போய்விட்டான்.. வீட்டில் கேள்விகேட்டால் சத்தம் போட்டு கத்துகிறான்.. தான் செத்து போகிறேன் என்று பயம்புறுத்துகிறான் ரோஸியை . இதன் காரணமாய் ரோஸி அவனிடம் பேச பயப்படுகிறார்…மார்க் கம்மி என்று கேட்க போயி ஏதாவது செய்து விட போகிறான் என்று பிள்ளை பாசத்தில் மெல்ல மெதுவாய் அட்வைஸ் மட்டும் கூறுகிறார். ‘ஏன் இப்படி திடீரென்று’ என்று யோசிக்க தவறிவிடுகிறார். 
இப்பொழுதெல்லாம் புதிய பிரண்ட்ஸ்களுடன்தான் சுற்றல். எப்போதும் அவர்கள் என்னென்ன சொல்கிறார்களோ அதையெல்லாம் அடிமை போல் செய்கிறான். பதிலுக்கு அவனுடனே சுற்றி கொண்டிருக்கும் நவீனை இவனது அடிமையாய் நடத்தி கொள்கிறான்.

“நவீன் ஒரு ஹெல்ப்புடா.. என் பாக்கெட் மணி தீர்ந்து  போயிடுச்சிடா ..இந்த தடவை அபிக்கு கப்பம் வைக்கலானா நம்மள மேட்ச்சில் அவங்க சைடில் இருந்து தூக்கிடுவான் டா. ஒரு தீரி ஹன்ரட் எடுத்துட்டுவாடா நீ சின்னப்பையன் உன்ன சேர்த்துக்கமாட்டேன் சொன்னாங்க உனக்காக நான் எவ்வளவு பேசி இருக்கேன்.” 
கிரிக்கெட் ஆசையில் நவீன் வீட்டில் ரேணுவின் ஹன்பேக்கில் இருந்து தெரியாமல் பணத்தை எடுத்து கொண்டு வருகிறான், அலெக்சிடம் தருகிறான். 
“எதுடா? என்ன சொல்லி வாங்கன?” நவீன் மெதுவாய் தெரியாமல் எடுத்து வந்தாய் சொல்கிறான்... 
“டேய் மூஞ்சியை இப்படி வச்சிக்காத மாட்டிக்குவ”
“பயமா இருக்குண்ணா”
“விடுடா  சின்ன அமோன்ட் தானே தெரியாது” மெல்ல மெல்ல இதுபோல் எப்போதும் தொடர்கிறது இருவர் வீட்டிலும் 1,2 நூறுகள் தொலைவது.

இப்படியாக ஒரு நாள் நவீன் பள்ளியில் இருந்து அழைப்பு வருகிறது, “அரையாண்டு முடிந்து என்னடா மார்க் சரியா வாங்கலையா இரு அப்பா போன் வரட்டும் உனக்கு இருக்கு” என்று நவீனிடம் கத்துகிறாள் ரேணு

சுந்தர் பிராஜெக்டுக்காக சிங்கப்பூர் சென்று இருக்கிறான் 2 மாதமாய். பேரண்ட் மீட்டில் நவீனின் கிளாஸ் டீச்சர் அவனுடைய  போரொக்கரசை பற்றி குறை சொல்கிறார். 
படிப்பில் கவனமில்லை என்று  வீட்டுக்கு வந்தவுடன் ரேணு நவீனை திட்டுகிறாள் “இனிமே கிரிக்கெட் அது இதுனு ஏதாவது பார்த்த பாரு.. எப்பப்பாரு கிரிக்கெட்டு… படிப்பு வீணா  போச்சி.. கோச்சிங்கை விட்டு நிறுத்திவிடுகிறேன்.”
நவீன் அழுது கொண்டே சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிக்கிறான் அலெக்சிடம்  போயி சொல்கிறான் அழுது கொண்டே

“டேய் அழாதடா.. நான் வந்து ஆண்டிகிட்ட பேசறேன்… லூசு முதலிலேயே என்கிட்ட சொல்றது தானே.. சரியா படிக்கலைனா வேற ஏற்பாடு பண்ணி இருக்கலாமில்ல ..சரியா படிக்கலைனா இரண்டு  பிட்டு  எடுத்துனு போயிடனும், அப்புறம் பாஸ்தான்.. அடுத்தடவை நீ சுமாரா படிச்சிக்கோ இரண்டு பிட்டு முக்கியமான கோஸ்டினுக்கு ரெடி பண்ணி எடுத்துனு போய்ட்டு செம மார்க்க எடுத்துடு. “

“எப்படிண்ணா..மாட்டிக்கிட்டா?”


தொடரும் ...

அலெக்சின் நடத்தையின் மாற்றம் நவீனை எப்படிஎல்லாம்  ஆட்டி படைக்கிறது என்பதை பார்த்து  கொண்டிருக்கிறோம்... இங்கு யார்? யார்? என்ன செய்திருக்கலாம், யார் மேல் தவறு என்று உங்கள் எண்ணங்களில் தோன்றும் நியாயங்களை பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்.

பிள்ளை வளர்ப்பை பற்றி இவர் எவ்வளவு  தெளிவாக சொல்கிறார் என்றும் பாருங்கள்



  .



செவ்வாய், 5 டிசம்பர், 2017

புத்திசாலி யார் ?

இன்று கதை ஒன்று 

நடப்பது என்ன ?1,2,3,4,5.6,7 என்ற பதிவுகளை தொடர்ந்து  அந்த விஷயங்களை தாங்கிய கதை பகிர்கிறேன் என்று சொல்லியிருந்தேன் . 
சிறு பிள்ளைகளை பற்றியது என்பதால் கொஞ்சம் போர் அடிக்கலாம்..... ஆனால் இதில் யார் பக்கம் தவறு என்று படித்தால் சொல்லமுடியும் உங்கள் கருத்தயும் .... 
அதை இங்கே தொடர்ந்து சிறு பதிவுகளாக கொடுக்கிறேன் இது ஒரு முழு கதை ....படித்து உங்கள் எண்ணங்களையும் கதையின் நிறை குறைகளையும் பகிருங்கள்.



 புத்திசாலி யார் ?  



“நவீன்… நவீன்… கிளம்பிட்டியாடா… வந்து டிபன் சாப்பிடு..பஸ் வந்திடும்.”

நவீன் “ம்ம் இதோ வரேன்”, கண்கள் என்னமோ டீவியில் சுவரசியமாய் நேற்று நடந்த கிரிக்கட் மேட்ச் செய்தி தொகுப்பை பார்த்து கொண்டு, கைகள் சாக்ஸ் அணிகிறது .

“ஓ காட் என்னடா பண்ற இப்பபோயி டிவி பார்த்து கொண்டு”

ஜாகிங் முடித்து உள்ளே வரும் சுந்தரை பார்த்தவுடன் அவசரமாய் எழுந்து ஒடுக்கிறான் டைனிங் டேபிளுக்கு சாப்பிட .

“ஸ்ஸ் அப்பாடா கொஞ்சம் சீக்கிரம் வாங்கனு டெயிலி சொல்லறேன் காதில் வாங்கறிங்களா..உங்க தலை பார்த்தா ஒழுங்கு அப்படியே வந்து குவிஞ்சிடும் ராசாக்கு..என்னைய பார்த்தா திமிரு..முளைத்து மூணு இல்லை விடல” புலம்பி கொண்டே கிச்சனுக்குள் நுழைந்து கொள்ளும் ரேணு
 
“டேய் என்.ஸி.ஸி கேம்புல சேர்ந்துட்டியா..?” சோபாவில் இருந்து குரல் வருகிறது

நவீனுக்கு விக்கல் எடுக்கிறது, கேள்வியில் கிச்சனில் இருந்து எட்டி  பார்கிறாள், அம்மாவை பார்த்து வாயசைக்கிறான் “பிலீஸ்மா..”

“துரைக்கு என்.ஸி.ஸி வேண்டாமாம்.. கிரிக்கெட் கிளாஸ்ல சேரணுமாம்..”

முறைக்கிறான் சுந்தர் “நான் என்ன சொன்னேன் கொஞ்சம் பெரியவனாகு சேர்ந்துக்கலாம், இப்ப யாராவது உன்னை கொண்டு போயி கூட்டிட்டு வரணும், எங்க ரெண்டு பேருக்கும் டைமில்ல, 12 வயசுக்கு பிறகு சேர்ந்தினா நீயே போயி நீயே வரலாம் இன்னும் ஒரு 2 வருஷம் போகட்டும்.”

“இல்ல அப்பா நம்ம அப்பார்ட்மென்டுலியே பக்கத்து பிளாக்ல இருக்கற அலெக்ஸ் அண்ணா போறான் பா நான் அவங்க போற டைம்ல போறேன் பா அவங்க கூட, பிளீஸ் பா நீங்க சொன்னா அந்த அண்ணா கூட்டிட்டு போவான் பா.”

சுந்தர் ரேணுவை பார்கிறான் என்ன சொல்ற என்பது போல்.. “நான் கேட்டு பார்கிறேன் முதலில், அதாங்க ஜார்ஜ் சாரோட பையன்”

“தேங்க்யூ மா……” என்று சத்தமாய் சத்தம் நவீன்.

மாலை மணி 7 மெயின்கேட்டிலேயே காத்திருக்கும் நவீன்,ரேணுவின் வருகையை பார்த்து.

வாசலில் கேப் வந்து நிற்கிறது ரேணு ‘பை’ சொல்லி இறங்கி திரும்பினாள் நவீன்…. “என்னடா இங்கே நிக்கற ஹோம் வொர்க் முடிச்சிட்டியா?...”

 “முடிச்சிட்டேன்…சரிவா..அம்மாஆஆஆஆ”.... “ஏண்டா இப்படி கத்தற..?”

“நீ அந்த அண்ணா கிட்ட கோச்சிங் பத்தி கேட்கிறேன் சொன்ன…?”

“விடமாட்டியே இப்பதானே வந்தேன் இரு முகமாவது கழுவிட்டு வரேன்”

“சரி நான் கீழயே இருக்கேன் நீங்க வாங்க”

ரேணு வருகிறாள் “வாடா” இருவரும் அலெக்ஸ் வீட்டு கதவின் முன்,காலிங் பெல் அடிக்கிறாள் அலெக்சின் அம்மா ரோஸ்மேரி வெளியே எட்டி பார்கிறார், “ஹேய் ரேணு வா வா.. என்ன அதிசியம்”

“ஹாய் ஆண்டி, இதோ இந்த வாலு இழுத்துட்டு வந்து இருக்கு”

“அப்படியா வெரிகுட்.. டா பையா , சரி உட்காருங்க ,என்ன விஷயம், முதலில் என்ன சாப்பிடற காபி டீ..?”

“அத்தலம் வேண்ணாம் ஆண்டி
ஸ்கூல் ஒர்க் எல்லாம் எப்படி போகுது..?”

“ம்ம் இன்னும் எக்ஸாம் வரும் போது தான் வேலை பெண்டை  கழட்டும்

"உங்க சன்னும்  10th ஆச்சே..”

“எப்போ சமசீர் சிலபஸ் வந்ததோ அப்பதிலிருந்து எல்லாத்துக்கும் குளிர்விட்டு போயிடுச்சி ஈஸி ஈஸி-னு, கிரிக்கெட் கோச்சிங்கில் இருந்தே இன்னும் வரவில்லை..கேட்ட நான் படிச்சுக்குவேன் நீ கவலை படாதேனு சொல்லவேண்டியது..எனக்கும் 12th போர்ஷ்ன் சீவியரா  ஆரம்பிச்சசுனா வீட்டுக்கு கூட வர லேட் ஆயிடும், என்ன பண்ண போறேன் தெரியலை ரேணு.. அங்கிள் தான் பார்க்கணும் சொல்லி இருக்கேன்”

ரேணு மணியை பார்க்கிறாள் 8 “இவ்வளவு நேரம் ஆகுமா ஆன்டி கிளாஸ் முடிய..?”

”கோச்சிங் செய்யறவரை  பொறுத்துனு சொல்லுறான் ..இப்ப வேண்டாமென்றாலும் கேட்காமல் கிரிக்கெட் பைத்தியம் பிடிச்சி ஆட்டுது”

“ம்ம் இதோ இந்த வாலையும் தான்.. இப்பவே இவருக்கு கோச்சிங்கில்  சேரணுமாம்.. அதான் கேட்டுட்டு போலாம்னு வந்தேன்”

“ஓ.. அதன் இந்த பக்கமா..”

“ஆமாம் ஆன்டி நாங்க  இரண்டு பேரும்  வர இவ்வளவு லேட் ஆகிடும் சில நேரம் கூப்பிட்டு போயி கூப்பிட்டு வர முடியாது.. சொன்னா கேக்க மாட்டறான் அடம்புடிக்கிறான் அதான் உங்க பையன் போகும் நேரத்தில் சேர்த்துவிட்டா அவன் கூப்பிட்டு போயி வருவானா ஹெல்ப் கேக்கலாம்னு வந்தேன்”

“அதுக்கென்ன ரேணு இப்ப வந்திருவான் கேட்கலாம்.... இதோ வந்திட்டானே..  வாடா உனக்காதான் ஆண்டி காத்திருக்காங்க”

“ஹாய்”,

நவீன் எழுந்து ஓடி போயி அவன் கையைப்பிடித்து கொள்கிறான். “என்னடா..?”
 
“ஹாய்ண்ணா”..

“ஹாய் அலெக்ஸ், கோச்சிங் எப்படி போகுது..?”

“அங் சூப்பர் ஆன்டி”

“இவனுக்கும்  சேரணுமாம்  என்னாலயும் அவங்க அப்பாவாலையும் முடியாது சோ அதனாலதான் உன்கிட்ட  ஹெல்ப் கேட்கவந்தேன், நீ போகும்நேரம் இவனையும் கூப்பிட்டு போயி சேர்த்து டெயிலி  கூப்பிட்டுடு போயி வர முடியுமா..?” என்று தயங்கி கேட்கிறாள்.

”ஓ ஸூர்! நோ பிராப்ளம் ஆன்டி.”

“ஆனா இவ்வளவு லேட் ஆகும் அதுதான் யோசனையா இருக்கு.. இவன் ஹோம்வொர்க் பண்ணனும்..படிப்பு பாதிச்சா அங்கிள் வேற திட்டுவாங்க”

“அம்மா அம்மா பிளீஸ் மா நான் ஸ்கூல் விட்டு வந்தவுடன் செஞ்சு  வச்சிடறேன்”

“ஸ்கூல் வொர்க்ல ஏதாவது பிராப்ளம் வந்துச்சி.. உங்கப்பா அவ்வளவு தான்.”

“விடு ரேணு அவன்தான் செஞ்சு வச்சிடுறேன் சொல்றானே இப்ப 5th தானே எதுக்கு இப்பவே புடிச்சி பயப்படுற” யோசித்து கொண்டே ஓகே சொல்கிறாள்.

ஜார்ஜ் வருகிறார் “வாம்மா..”

“ஹாய் அங்கிள்” மணியை பார்கிறாள் 8.45 போன் .எடுத்து பார்கிறாள் நிறைய மிஸ்டு கால்ஸ் சுந்தரிடமிருந்து “ஓகே ஆன்டி வரேன்… அங்கிளும் இப்பதான் வந்திருக்கார் கவனிங்க ..நிறைய நேரம் ஆகிவிட்டது ..அலெக்ஸ் நாளைக்கு கூப்பிட்டுட்டு போறியா..?”

“ஓகே ஆன்டி… ஈவ்னிங் 5'க்கு ரெடியா இருடா”

“ஓகேன்னா பாய்,..... பாய்”

அடுத்த நாள் ஈவ்னிங் 5'ஓ கிளாக் நவீன் குதித்து கொண்டு அலெக்ஸை தேடி வருகிறான்.

“வாடா வந்துட்டியா இரு போகலாம் உட்கார் இதோ வரேன்” என்று உள்ளே போகிறான்.

ரோஸி வேலையில்இருந்து வருகிறார் “ஹாய் நவீன் கிளம்பிட்டியா பால் குடிச்சி சாப்பிட்டியா ஏதாவது..?” என்று கேட்டு கொண்டே உள்ளே போகிறார்.

“மாம் நான் கிளம்பறேன்.. வாடா”

“அலெக்ஸ் டிபன் வச்சிருத்தேனே சாப்பிட்டியா..?”

“அதுவேண்டாம் நான் ஜூஸ் குடிச்சிட்டேன்..பை!”

பெஸ்ட் காஸ்ட்லீ ஹீரோ சைக்கிள் அவனிடமிருக்கிறது அதனால் அவனுக்கு நவீனை  கூப்பிட்டு போவது சிரமமாக தெரியவில்லை.

கிளம்பி இரண்டு ரோட் கிராஸ் செய்த்தவுடன் அலெக்ஸ் சைக்கிளை நிறுத்திவிடுகிறான்.

“எண்ணா இங்கே நிறுத்திட்டீங்க..?”

“கொஞ்சம் இருடா ஒரு 5 மினிட்ஸ்” என்று ஒரு புக்கை எடுத்து பார்த்து கொண்டிருப்பது போல் பாவலா செய்கிறான், 
நவீனுக்கு ஒன்றும் புரியவில்லை முழித்து கொண்டு நிற்கிறான், 

அப்போது ஒரு 13 வயது பெண் அவர்களை கிராஸ் செய்து நடக்கிறாள் இவர்களை பார்த்த்து கொண்டே.. அலெக்ஸ் நவீனை பார்த்து “டேய் இப்ப போச்சே அந்த கேர்ள் திரும்பி பார்க்க்கிறாளா பாரு சீக்கிரம் ஜல்தி” 
நவீனும் புரியாமல் பார்த்து கொண்டே இருக்கிறான்.

“ஆமாம்ண்ணா பார்க்கிறாங்க ஆனா போயிட்டாங்க.. யாருண்ணா அவங்க?”

“அதுவா..என் டாவு”

“டாவா..?” !!!!!

தொடரும் .....
நவீனுக்கு எவ்வளவு  புரிகிறது என்று பார்ப்போம் இனி....... 
இங்கு நடப்பது என்ன யார் என்ன செய்கிறார்கள்? 

செவ்வாய், 28 நவம்பர், 2017

தேவதை என்னும் அரக்கன்-நிஜம்

நடப்பது என்ன ?

                                                                    

தேவதை என்னும் அரக்கன் செய்யும்  விபரீதத்தை பாருங்க இந்த செல்போன் என்னும் அரக்கன் செய்யும் அட்டுழியங்கள் பல என்று   முன்பே பதிவு போட்டு இருக்கிறேன் கொஞ்சம் கவன குறைவாய் இருந்தாலும் சரி நம்  இழப்பை  ஈடு செய்ய முடியாமல் போய்விடும்.
இதை  பற்றி ஒரு நிஜம் இங்கே...................

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கருப்பையா நகரைச் சேர்ந்தவர் ஜெயம்.இவர் ஒரு  ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியை, இவருடைய மகன் செந்தில், டிகிரி முடித்துள்ளார்.


கடந்த சில தினங்களாக. செந்திலின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்துள்ளது. நாள் செல்ல செல்ல, பெற்ற தாய் என்றும் பாராமல் ஜெயத்தை அடித்து துன்புறத்தத் துவங்கியுள்ளார்.காரணம் புரியாமல் அந்த தாய் தவித்துள்ளார்


செந்திலின் கொடுமை உச்சக்கட்டம் அடைய, வேறு வழி அற்று ஜெயம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் .

போலீசும் நடவெடிக்கையில் இறங்கியது, 



செந்திலிடம் போலீசார் விசாரிக்கையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதில், கடந்த சில தினங்களாக புளூவேல் விளையாட்டை விளையாடியதாகவும், விளையாட்டில் கொடுக்கப்பட்ட கட்டளைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வந்ததாகவும் செந்தில் கூறினார்.
தொடர்ந்து, புளூவேல் விளையாட்டில், தாயை அடிக்கச் சொல்லி கட்டளை வந்ததாகவும், அதன்படி தாயை அடிதத்தாகவும் கூறியுள்ளார்.


இவனை போல் மாக்கான்கள் இருக்கும் வரை சைக்கோ தனமாய் விளையாட்டுகளை உற்பத்தி பண்ணும் சைக்கோக்களுக்கு வசதிதான்......


விளையாட்டில் கொடுக்கப்பட்ட கட்டளைக்காக, பெற்ற தாயையே மகன் அடித்து கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம் அனைவரையும் அதிரச்சிக்குள்ளாக்கியுள்ளது.இப்ப அதிர்ச்சி ஆகி என்ன செய்வது முதலிலேயே கவனித்து இருக்கனும் நம்ம வீட்டுது  சைக்கோ ஆகிறதா என்று .......

செவ்வாய், 14 நவம்பர், 2017

கேட்டிங்களா கேட்டிங்களா கதையை


                        மகாத்மா காந்தினாலே  அவர் கண்ணாடியை  தாம் முதலில் நினைவு கொள்வோம் ஏதாவது புதிர் காம்படீஷன் வந்தால் கூட  அந்த கண்ணாடியை வைத்தே கண்டுபிடித்துவிடும் அளவுக்கு மகத்துவம் பெற்ற அவர் கண்ணாடி அடையாள சின்னம்- இது தூய்மை இந்தியாவின் அடையாள சின்னமாக உள்ளது.



                          சரித்திரம் படைத்த இந்த கண்ணாடியை மாற்ற சொல்லி இந்தியாவிற்கு பயணம்  வந்த ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி லியோ ஹெல்லர்   சொல்லிட்டார் எப்படின்னா  "தூய்மை இந்தியா திட்டத்தின் சின்னமான மகாத்மா காந்தியின் கண்ணாடியைப் பார்த்தேன். இது மோசமான நிலைமை. விரைவில் காந்தியின் கண்ணாடியில் மனித நேயத்தின் லென்ஸை மாட்ட வேண்டும்" 

                           தூய்மை படுத்த ஐடியா கொடுப்பாங்கனு பார்த்தா இவங்க கண்ணாடியை மாற்று வேஷ்டியை மாற்று என்று டிரெஸ் சென்ஸ்க்கு  சொல்விட்டு போயிருக்காரு ... 



                          இது பயங்கர சர்ச்சையை கிளப்பியுள்ளது  நாமதான் சர்ச்சயை கொண்டாடுவதில் வல்லவர்கள்  ஆச்சே 



                          அரசு தரப்பில் இருந்து "மகாத்மா காந்தி மனித உரிமைகளுக்கு(இதபாருங்க ஜோக்கு மனித உரிமையாம் இதுதான் புரியமாட்டேங்குது இதெல்லாம் நல்ல சொல்றாங்க ஆனா பின்பற்றுகிறார்களா  இதைமட்டும் கேட்க கூடாது )  முன்னுரிமை அளித்தவர் என்பது உலகத்தில் அனைவருக்கும் தெரியும். சுகாதாரதைப் பேண தனி கவனம் செலுத்தினார். தூய்மை இந்தியா திட்டத்திற்கு அவரது கண்ணாடி மிகவும் பொருத்தமானது" என்று பதிலை கொடுத்து இருக்கிறது. இதுமாதிரி ஒண்ணுமில்லாத விஷயத்திற்கு தீர்ப்பு சொல்லனும்னா தெளிவா உடனே சொல்லுவோமில்ல  


ஞாயிறு, 12 நவம்பர், 2017

புதுமை என்பது இதுதான்

புதுமை என்பது இதுதானா .....




                    இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலை கழகங்களில் ஒன்று பூனே பல்கலை கழகம்  இங்கு நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். திடிரென்று இந்த  பல்கலைக்கழக மாணவர்களுக்கு தங்க பதக்கம் வழங்க, பல்கலைக்கழக நிர்வாகம் புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளதாம் .                     

                 

                     அது என்னவென்றால்  இங்கு படிப்பை மட்டும் அடிப்படையாக கொண்டு தங்கப்பதக்கம் இனி வழங்கப்படமாட்டாது 


பின்னர் எப்படி  தங்க பதக்கம் வாங்குவது ?

                    


                       தங்க பதக்கத்தை  விரும்பும் மாணவர்கள், படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டும் போதாதாம்...... அவர்கள்  அசைவம் சாப்பிடாதவர்களாக இருக்க வேண்டுமமாம் ...... அதுமட்டுமில்லை மிக முக்கியமான புதுமை , மாணவர்கள் மது அருந்தாமல் டீடோட்டலர்களாக இருக்க வேண்டும் என்றும் புனே பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாம்  இப்படித்தாங்க மாற்றத்தை கொண்டுவரனும் .ஆனா அப்படி மதுவே அருந்தவர்கள் எப்படி கண்டுபிடிப்பாங்க மருத்தவம் காண்பிக்குமோ? 


                  மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் தங்கப்பதக்கம் வழங்கப்படாது என்றும் மாணவர்களின் பழக்க வழக்கங்களை பொறுத்தே வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளதால் பழக்கவழக்கம் என்பது நெறிமுறை படுத்தபடுமா? இப்பொழுதே அங்கே போயி இதை பற்றி  ஆராயவேண்டுமென்று வேகம் வருகிறதே....... எப்படி இதை கண்காணிக்க போகிறர்கள் என்று ...


                    இதுமட்டுமல்ல பதக்கம் வாங்கும் மாணவர்கள் ஷெலர் மாமா.! என்று பட்டபெயரும் கொடுக்கப்படுமாம் இந்த விதிகளுக்கு உட்படடவர்கள் இங்கு சேர்வதற்க்கான விண்ணப்பங்கள் நவம்பர் 15ஆம் தேதி வரை பெறப்படும் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறதாம்   ஏன் இப்படி திடீரென்ற முடிவு குற்றங்களை குறைக்கவா ?மாமிசம் என்பது மதுவுடன் சம்பந்த படுகிறது என்ற நோக்கத்திற்காகவே இப்படி மாமிசத்தையும் சேர்த்து தடை செய்திருக்கிறார்களா??

                     

                     இதை பெற்றோர்களே வரவேற்பார்களா என்பது சந்தேகமாகவே  இருக்கிறது ஏனென்றால் மாமிசம் மட்டுமே சாப்பிட்டு வாழும்  சமூகதினரிடமிருந்து இதற்கு  வரேவேற்பு நிச்சியம் இருக்காது.   

                    

புனே பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் பயங்கர எதிர்ப்பை கிளப்பியிருக்கிறதாம் . மாணவர்களிடையே பிளவை ஏற்படுத்தும் செயல் என்று பல்வேறு அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


உணவு என்பது பிளவை கொடுக்குமா? 
    

நீங்களும் சொல்லுங்களேன்......... 


வியாழன், 9 நவம்பர், 2017

தவறு செய்துவிட்டேனா?

தோழமைகளே உங்களிடம் இப்பொழுது திணறலாய் தோன்றும் விஷயத்தை பகிர போகிறேன் உங்கள் கருத்துக்களை  பகிர்ந்து கொள்ளுங்கள் ....


என் மகன் கல்லூரி இப்பொது தான் முடித்தார்.... அவரின் சிறு வயதில் இருந்து அவருடன் பலவறறையும்  டிஸ்கஸ் செய்வேன்.  நானே அவனின் முதல் தோழியாக இருக்கவேண்டுமென்ற பேராசையும் ....அவனின் குறை நிறைகளை அவனின் கஷ்ட்ட துக்கங்களை என்னிடம் அவன் பகிர வேண்டும் கலந்தாய்வு  செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்...... சினிமா, சமூகம்,  அரசியல் எல்லாவற்றையும் பற்றி குறித்து  டெயிலி செய்திகளில் வருவதை  விவரிப்பேன், பேசுவேன். 


அவரின் 14, 15 வயது வரை அவர் கருத்துக்களை கேட்பார் நானும் அவரின் தந்தையும் அவரின் கேள்விகளுக்கு முடிந்தவரை   பதில் அளிப்போம். எப்பொழுது அவர் ஒட்டு போடும் வயது வந்ததோ அப்பொழுது முதல் எல்லாவிஷயங்களும் விவாதமாய்  மாறிவிட்டது. அவரும் கருத்து சொல்ல கிளம்பி இதில் எதை பேசினாலும் நாட்டை  பற்றியே போயி முடிவுற்றது. எல்லா விஷயங்களும் அவரும் அதிகம் தெரிந்து கொள்ள ஆரம்பித்தார் தனிச்சையாக சமீபமாக நடக்கும் விஷயங்கள் சூடு பரப்பும்  விவாதங்களாக மாறுகிறது.

 

இன்றைய  இளைய தலைமுறை பற்றி பேச போனால் பயங்கர விவாதம் பெரியவர்கள் நாம் தான் சரி வர வளர்க்க தெரியவில்லை என்று குற்ற சாட்டை முன் வைப்பார்  இன்னறய அரசியலை பற்றி பேசினால் புலம்பினால் அவருக்கு பயங்கர கோபம் வருகிறது  "  நாட்டில் நடக்கும் குற்றங்களை தட்டி கேட்க  நீங்கள் உங்கள் பிள்ளைகளை வளர்கிறீர்களா?  ஒற்றுத்தான் கொள்கறிர்களா? இல்லை.......  நல்லா படி  நல்லா சம்பாதி...... எந்த பிரச்னைக்கும் போகாதே நியுண்டு உன் வேலையுண்டு என்று இரு...... இப்படித்தானே சொல்லி சொல்லி வளர்க்கறீங்க" 


"இது என்ன சினிமாவா  தனியொருவன் கேட்க" என்று கேட்டால்



 "கும்பலாய் கேட்டாலும் போலீசை காட்டி பயம்புறுத்துகிறீகள்" போன தலைமுறையெலாம் இரண்டாங்கெட்டானாய் வாழ்ந்துவரும் தலைமுறைகள் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று சாடுகிறார் .
"யார் சொல்லி தருகிறீர்கள்...... இது தப்பு என்ற சொல்லி தந்தவர்கள்......  அதை தட்டி கேள் என்று சொல்லி தரவில்லை..... ஒதுங்கி போ...  படி படி..... நீ பெரியஆள்  ஆகு பணம்.... பணம் தேடி ஓடு..... காசுகொடுத்து எல்லா வேலைகளையும் முடித்து கொள்ளலாம் இது தான் நிலைமை..... என்று தவளை போல் கத்தி கொண்டு இருக்கும் கூட்ட்மாய் இருக்கிங்க"


  "நாடு இப்படித்தான் இருக்கும் அப்போ..... பக்கத்தில் தப்பு செய்யும் ஒரு பையனை கூட கேட்க முடியாமல் தான்  நிறைய பேர் வெறுப்புடன்....... ஏன்னா  வீட்டில் உனகெதுக்கு  பிரச்னை நாளைக்கு போலிசு கேஸுன்னு வந்தா படிப்பு கெட்டுவிடும் சொந்தக்காரங்களாம் ஒருமாதிரி பார்ப்பாங்க இப்படி பயமுறுத்தியே வாழ சொல்லி கொடுக்கறீங்க...... ஏன்? நீங்க விடுவிங்களா   உங்க பிள்ளையை?" கோபமாய் கேள்வி கேட்க   திணறித்தான் போகிறேன். 


என் அம்மாவோ  அவனது பாட்டி என்னை எப்போதும் சமீபமாய் அதிகம் திட்டுகிறார் நீதான் காரணம் எல்லாத்துக்கும் எல்லவரையும் அந்த பையனிடம் பேசி குழப்பி வச்சு இருக்க....  அவன் தோழர்களுக்கு ஏதாவது பிரச்னைனா முதல இவனை தான் கூப்பிட்டு போறானுங்க இவன்தான் பேசுவானு...... ஜல்லிக்கட்டு போராடம்  நடந்த அப்ப எல்லா நாளும்  பழியா கிடந்தது உனக்கு  கொஞ்சம் கூட பயமே இல்லை என்னா  புள்ளையை  வளர்க்கற' உனக்குத்தான்  இந்த மாதிரி இருந்தேனே நாளைக்கு கஷ்ட்ம் வாழக்கையில என்று சொன்னா...   கல்யாணமெல்லாம் பன்னிக்கமாட்டேன் இந்தமாதிரி தட்டி கேட்க  போயிட்டேனா' என்று பேசுது எல்லாம் உன்னால தான் என்று கொஞ்சி  தள்ளறாங்க   2015 வெள்ளத்தில் உதவ போனபோதும் இப்படித்தான் வீட்டில் உள்ளோரிடம் திட்டு அவனுக்கு ஏதாவது ஆச்சி பாரு என்று பயமுறுத்தல்

 

அவனுடைய தோழர்கள்  திட்டுகிறார்கள்  என்ன ஆன்டி ஒரு சினிமா பார்த்த கூட இவன் அதுலயும் இப்படி இருக்கனும் இது சரியில்ல இது நொல்லைனு நுணுக்கமா ஆராயச்சி  பண்ணிட்டே இருக்கான்

 இதில்சமீபமாய்  2 மாதம் முன்பு ஒரு தோழனின் புல்லட் பைக் திருடு  போய்விட்ட்டது  விடியற்காலையில் போன் இவன் கிளம்பிவிட்டான் அப்படியே போட்டிருக்கும் பனியன் ஷார்ட்ஸோடு ...... போலீஸ் கம்பிளைன்ட் கொடுக்க இழுத்து போயிட்டான் அங்கே இவனை யாரு நீ என்று கேட்க விஷயத்தை சொல்லி இருக்கான் ஷார்ட்ஸோடு எல்லாம் போல்ஸ்  ஸ்டேஷன் வரகூடாது என்று சொல்ல இவனுக்கு கோபம் வண்டி காண்வில்லையின்னு பதறி ஓடிவந்தா இப்படித்தான் வரமுடியும் என்று சொல்லி இருக்கிறான் அவங்க அஸ்யுஷ்வல்  CSR  போடவே   இப்பவா அப்பவா என்று இழுத்து அடிச்சு இருக்காங்க அதையும் முடிச்சா மற்ற பார்மாலிட்டிஸ் முடித்து FIR போட இழு இழு என்று இழுக்க எல்லாம் காசுக்காகத்தான். இவன் கொடுக்கமுடியாது என்று முரண்டு.... 2 மாதம் ஆகிவிட்டது அவன் தோழன் புலம்புகிறான் இன்னும் அந்த வண்டிக்கு டியூவே (கடன்)  முடியலை இன்ஷுரன்ஸ் கிளைம் பண்ணாலும்  எனக்குதான் நஷ்டம் FIR போட்ட பிறகுதான் எதுவும் முடியும் சொல்றாங்க காச கொடுத்து முடிக்கலாம்டான்னு சொல்றேன் இவன் விடமாட்டேங்கிறான் ஆண்டி....  என்று இப்பொழுதும் வீட்டில் திட்டு......


 
என்ன செய்யட்டும்?

எப்படி வளர்த்திருக்கணும்? 

நான் தவறு செய்துவிட்டேனா?


அவனின் கேள்விகள் தவறாய் இல்லையென்போது முன்னுக்கு முரணாய் நான் பேச தயக்கமாய் இருக்கிறது .


செவ்வாய், 7 நவம்பர், 2017

விலைவாசி

மழையில் நடக்கும் நிகழ்வுகளில் மீண்டும் அதை பற்றி


ஏங்க .....


குமார் சீரியஸா டீவியில் நியூஸ்   பார்த்து கொண்டிருக்கிறான் சாப்பிட்டு கொண்டே…….  மழையின் தாக்கம் சென்னையில் என்ன செய்து இருக்கிறது என்ற செய்திகள் பீதியை கிளப்பி கொண்டு இருக்கிறது.


ஏங்க ...திரும்பவும்  ராதியின் குரல் பெட்ருமில்  இருந்து வருகிறது


இப்பொழுது தான் அரைமணி நேரமுன்னாடிதான்   வேலையில் இருந்து கொட்டும் மழையில் தன் வீடு இருக்கும் சாலை மழை நீரில் மூழ்கி இருக்க நீந்தி வந்து சேர்ந்து அழுக்காய் நாற்றமடித்த  தண்ணீரின் சுவடு போக குளித்து வந்து உடகார்க்கிறான் உடம்பு சில்லிட்டு இருக்கிறது .


குமார் என்னடா இது என்பது போல் மணியை பார்க்கிறான் மணி 9.30 வெளியே மழை சத்தம் நாளைக்கு நிலவரம் என்ன ஆகும் என்ற  கவலையெல்லாம் பின்னோக்கி ஓடிவிடுகிறது. மெதுவாய் சில்லிப்பு தாங்காமல் இறுக்கமாய் மடித்து வைத்த  கால்கள பிரித்து டிவியை அணைத்துவிட்டு ஒரு பரபரப்புடன் படுக்கையறை செல்கிறான்.


அங்கே ராதி தன் இரண்டாவது கைகுழந்தையை தொட்டிலில் ஆட்டி   கொண்டு இருக்கிறாள் மூன்றுவயது வருண் உறங்கி கொண்டு குமாரின் வரவு தெரியாமல் மீண்டும் “ஏங்க”…..என்று கூப்பிடுகிறாள். குழந்தை விழித்துவிடுமோ என்ற குரலை உயர்த்தாமல் அவள் அருகில் நெருக்கத்தில் குமார் திடுக்கிட்டு திரும்புகிறாள் என்னவென்று குமாரின் முகத்தை பார்த்து முறைக்கிறாள்.


நியூஸ்ல என்ன சொல்லறாங்க மழை நின்னுடுமா நாளைக்கு என்று கடு கடுவென முகத்துடன்


இல்லயாம் நாளைக்கும் மழை இருக்காம்


ஐயோ இப்பவே ரோடு மூழ்கியாச்சு தண்ணி ஏறிடுச்சினா  இன்னமும் ....கொஞ்சம் போயி இரண்டு பெக்கெட் பால் வாங்கிட்டு வந்துடுறிங்களா அப்படியே பிரட் முடடை சிலவற்றை பட்டியலியிடுகிறாள்.


நேரத்தை பாரு ஏண்டி அப்பவே போன்ல சொல்லி தொலைக்கவேண்டியது தானே சே இதுக்குதான் ஏங்க ஏங்க னு ஏங்கிட்டு இருந்தியா….. இந்த மழையில  நீந்திக்கிட்டு திரும்பவும் போ சொல்லற


பிளீஸ் பிளீஸ் கொஞ்சம் வாங்கிட்டு வாங்க வருணுக்கு உடம்பு சுடர மாதிரி இருக்கு சாப்பிடாமலே படுத்துட்டான் சின்னத்துக்குத்தான் பால் இருக்கு நாளைக்கு தேவை படும் பால்காரன் நீந்திக்கிட்டு எப்ப வருவானோ ?


அவனை  இப்பொது கவலை  தொற்றி கொள்கிறது
மருந்தெல்லாம் இருக்கா கையில சட்டையை எடுத்து மாட்டி கொண்டே  

ம்அதெல்லாம்  இருக்கு  இப்போதைக்கு லேசா சுடர மாதிரிதான் இருக்கு உங்களுக்கு நாளை லீவ் விடுவாங்களா?


ம்கூம் அவன் ஏன்டி லீவ் விட்டுறான் அங்கேயா மழை கார்ப்ரெட்லலாம் நாம கஷ்ட்டத்துக்குகெல்லாம் லீவ் விடமாட்டான் படிச்சவ மாதிரி பேசு……

.
பெருமூச்சுவிடுகிறாள் சே இப்படி மழை விடாம பெய்யுதே நாளைக்கு சப்போஸ் டாக்டர்கிட்ட போகணும்னா என்ன பண்ணுவது என்ற யோசனை அவள் மனதில்
சே நல்ல வந்து மாட்டிகிட்டோம் என்று மறந்து போயி சத்தமாய் சொல்லிவிடுகிறாள் .

இப்ப சொல்லு  உங்க அப்பனை சொல்லணும் எங்க வந்து வாங்கியிருக்கார் பார் சின்ன மழைக்கே தண்ணி வந்து நிக்கிற இடத்தில ஒரு எமெர்ஜென்சினாகூட ஒரு டாக்டர் கிடையாது இங்க ஒரு போக்குவரத்து வசதி வேணுமின்னா கிலோமீட்டர் நடந்து போகணும் கேப்காரன் கூட உடனடியா வரமுடியாத இடத்தில ……


சும்மா எங்க அப்பாவை  சொல்லுங்க உங்க அம்மாதான் என் புள்ளைக்கு பிளாட்டு வாங்கணும் பிளாட்டு வாங்கணும் சும்மா அவரை போட்டு நச்சரிச்சாங்க.... சரி மாப்பிளைக்கு வேலைக்கு போக ஈஸியா இருக்கும் என்று இங்கே வாங்கினார் டெவலப்பு  ஆகிற ஏரியா தானேனு இப்படி ஆகும் யாரு கண்டா கவர்மெண்டு எதுவும் செய்யாம இருக்கே

 
இது ஏரியா இல்லடி  ஏரியில வீடு  கஞ்சன் காசுக்கு பார்த்து இங்கே வாங்கி தள்ளிட்டார். இதோட பின்புலம் எதையும் கேட்காம வாங்கினது நம்ம தப்புதானே கவர்மெண்டு என்னாடி செய்யும் எவனோ எதையாவது ஆசை காட்டி வித்தா அதுக்கு  விலை போனது நாம….. மாமாங்கம….. மழை,  தாக்குதல் அளவுக்கு இல்லை இப்பமாதிரி……. என்ன பிரச்சனை வந்திட போகுதுனு நினைச்சிருப்பான்…… இதை இப்ப விக்கணும்னா கூட  ப்ரோகர்க்காரன்தான் சாப்பிடுவான்……..


சரி நான் போய்ட்டு வரேன் கதவை சாத்திக்கோ என்று ரெயின்  கோட்டையை மாட்டிக்கொண்டு வெளியி வருகிறான் கீழே கார் பார்கிங்கில் எதிர் பிளாட் கோபி சிகரெட்டுடன் 


என்னயா எங்க? …


ம் பால் வேணுமாம் ….


சரி  வா நானும் வரேன் கொஞ்சம் இரு போயி ரெயின் கோட்டு எடுத்துட்டு வரேன்.


அவர்கள் பிளாட்டின் உள்ளேயே தண்ணீர்  கணுக்கால் முழுகும் அளவுக்கு  கீழ் பகுதி முழுவதும்
கோபி வந்தவுடன் இருவரும் கவனமாய் தெருவில் நடக்கிறார்கள் டார்ச்  லைட்டை  பிடித்த படி


பச் இந்த ஸ்ட்ரீட் லைட்டை வேற இரண்டுநாளாய் போடல இன்னும் கரண்டை எப்ப ஆப் பண்ண போறாங்கலோ  நாளைக்கு விடாம  பெய்தால் கட் பண்ணிடுவான்


இருக்கட்டும் ப்ரோ ஸ்ட்ரீட் லைட்டால ரிஸ்க்கு வருதாம் நான் தான் தெரியாம இங்க வந்து மாட்டிகிட்டேன்  நீங்க ஏன் ப்ரோ விசாரிகளையா?


என்னமோ கையில காசு அவ்வ்ளவுதான் தேர்ச்சி அப்ப நாமளும் சொந்தமா வீட்டு வெச்சிருக்கோம்னு காண்பிச்சிக்கணும்னு ஒரு ஆசை நான் வந்த அப்ப இப்படி இல்ல கிரி தண்ணி ஓடிடும் கொஞ்சத்துக்கு கொஞ்சம் இப்பதான் ஏன் புரியலை.... இன்னொரு ஏரி இருந்தது  இரண்டு ஸ்டாப்பிங் தள்ளி பார்த்திருப்பியே அங்கே ஓடற மாதிரி இருந்தது இப்ப என்னடானா அதையும் முடி அங்கேயும் பிளாட் போட்டு கட்டிட்டான் எல்லா வழியையும் அடஞ்சிடுச்சி மெயின் ரோடு வழியா தான் போயாகணும் எங்க இங்கே பள்ளமா இருக்கறதால டக்குனு போக வழியில்ல மழை நீர் சேகரிப்பு டிரைனேஜ்ல போயி சேர மாட்டேங்குது லெவல் சரியா வைக்காம விட்டு இருக்காங்க  போல எவ்வளவோ வாட்டி  எழுதி வச்சுட்டு வந்துருக்கேன் எங்க வரானுங்க வந்தாலும் சரியா வாட்டம் கொடுக்க மாட்டேங்கிறானுக……….
விடிவுகாலம் இருக்கா தெரியல இந்த ஏரியாக்கு….. இதேமாதிரினா என்ன பண்ணுவதுன்னு புரியலை…… வீடு வாங்கினா லோனே இன்னுமும் முடியல…… 

  
எப்படியோ ரோடு முனைக்கு வந்துவிடுகிறார்கள் முனையில் இரண்டுமூணு சிறிய கடைகள் வரிசையாய்  ஒரு சின்ன மளிகை கடை அதனுள்ளேயே சின்ன பேக்கரியும் , பக்கத்தில்  பால் கடை ஒரு ஜெராக்ஸ் ஒரு மெக்கானிக் ஷெட்டு கூட இருக்கிறது

 
ஸ்ப்பா நல்ல காலம் கடைய முடாம வைத்திருக்கானே


இன்னும் மணி 11 ஆகலேயே


வாங்க சார் என்ன மழை போதுமா...... படிக்கட்டிலேயே செருப்பை விட்டுட்டு  ஏறுங்க சார்  கசகசன்னு ஆயிடுது இங்கே


கிண்டலயா உங்களுக்கு தண்ணி நிக்கலை இங்கேன்னு

 
என்ன கிண்டலு போனதடவை புயலு வந்து முன்னாடி எல்லாத்தயும் துகிடுச்சு  அதுக்கு முந்திதான் அபாயத்தில மாட்டி தப்பிச்சது வரலாறு இந்த தடவை இப்படி இருக்கு


சரி பிரெட்டு இருக்கா?..... உள்ளே பார்த்து விட்டு சொல்கிறார் இரண்டுதான்  இருக்கு 

சரி கொடுங்க அரை கிலோ ரவை, ஊறுகாய் ருசியா மாங்காய் தானே…. குட்டே பிஸ்கெட் 2 தாங்க ,சக்கரையும் ஒரு கிலோ கொடுங்க.................


கோபி  எனக்கும் ஒரு கிலோ சக்கரை எடு 


முதலில் கிரி 500/- எடுத்து கொடுக்கிறான் மீதி சில்லறை கொடுக்கிறார் 70/- ரூபாய்  கிரி வெய்ட் பண்ணுறான் மேல் கொண்டு தருவார் என்று.....


கடைக்காரர் கோபியிடம் ஒருகிலோ சக்கரையை பேக் பண்ணி கொடுத்துட்டு வேற சார் என்கிறார் நுறு ரூபாய் கொடுத்து விட்டு  கிங் இருக்கா


இருக்கு சார் லூசிலதான் ஒன்னு  25/-

   
யோவ் என்னயா…….


என்ன சார் பண்றது சரக்கு வர வரைக்கும் ஓட்டணுமே 


யோவ் நான் விலையே பத்தி கேக்கறேன்


அதுவும் தான் சார் மழை விட்டவரைக்கும் கொஞ்சம் ஏத்தம் ஏரகமாத்தான் இருக்கும்


கிரி பரிதாபமாய் கோபியை பார்க்கிறான் 

அநியாயம் பண்ணுங்க  இந்த ஜிஎஸ்டி போட்டதெல்லாம் பத்தலயா இப்ப இதுவேறயா

 
சரி 2 கொடு மீதி எவ்வ்ளவு தரணும்


நுறு சார்

 
முதலேயே நுறு கொடுத்துட்டேனே சக்கரை 100 சார் 50 கிங்


என்னது! திகைத்து போகிறான்.


அப்போ எனக்கும் மீதி அவ்வளவுதானா ?


ஆமாம் சார் பிரெட் ஒன்னு 50 , ஊறுகாய் 100 ரவை 5௦, 2-பிஸ்கெட் 80 சக்கரை 100


என்னது இது இவ்வளவு ஏத்திடிங்க


ஆமாம் சார் மழை விடற வரைக்கும் தான் அப்புறம் கொறஞ்சுடும் சார் நானும்  எக்ஸ்ராவா டெம்போ காரனுக்கு மழையில துட்டை கொடுத்துதான் வாங்கிறேன்


யோவ் என்னயா என்ன கதை விடற அப்படியே நீ சூப்பர் மார்கெட் ஆரம்பிக்க நான் முதல் போடணுமா என்று கத்துகிறான் கோபி


சார் பொருள் வேண்டாம் நா கொடுத்துடுங்க சார் சத்தம் போடாதீங்க கடையில 


நீ இந்த ஏரியாக்குத்தான் கடைய வச்சு இருக்க நியாபகம் வச்சுக்கோ


புரியுது சார் நான் என்ன பண்ணட்டும்  .........


ப்ரோ வாங்க போலாம் மழை வேற பெரிசாகுது வாங்க அப்புறம் பார்க்கலாம்


பக்கத்தில் பால் கடையிலும் இதே நிலைமை
பால் கடையில் சில காய்ங்க வெங்காயம் தக்காளி விக்கறாங்க இங்க இருக்கறவங்க வந்து வாங்குவதற்கு எப்போதுமே மார்கெட்டையை விட அதிகமாகத்தான் இருக்கும் இப்போ இன்னும் அதிகமாய் சொல்கிறான் வெங்காயம் எல்லா இடத்திலும் 50 னா இவன்கிட்ட 75 தக்காளியும் அப்படியே பச்சைமிளகாய் கூட காய்விலைக்கு சொல்கிறான். என்ன பண்ணவது இப்ப இருக்கற நிலைமையில் தேவைக்கு கொஞ்சம் வாங்க வேண்டியதாய் இருக்கு 

கிரி  கையில் பணமில்லாமல்  வாங்கினதுக்கு கார்ட் தேய்கிறான்

இனிமே நின்னா  அவ்வளவுதான் வீட்டையே எழுதி கொடுக்க சொல்வானுங்க வா கிரி


என்ன அநியாயம்  பாருங்க ப்ரோ  சம்பாதிப்பத்துக்கு நேரம் பார்த்தாங்க  ஐந்து நாள் மழையில குபேரனாயிடணும்னு பார்கிறாங்க….. என்று புலம்புகிறான்


இதுதான் இன்னைக்கி மனுஷன் புத்தி எதோ பொங்கலுக்கு தீபாவளிக்கி ஜாஸ்தியா வித்தானா நாமும் சந்தோஷத்தில் தானேனு சந்தோஷத்தில் தெரியவும் தெரியாது கொடுக்கலாம் ஆனா இப்படி துக்கத்தில் சம்பாதிக்கணும், வயித்தில் அடிக்கணும்னு நினைக்கிறான் பாரு இவனெல்லாம் உருப்படறான் என்ன கடவுள் போ அடுத்த வருஷம் அவன் சூப்பர் மார்கெட் வச்சிடுவான் நான் சொன்ன மாதிரி …….


இவனுங்களை வாழவைக்கணும்னே கடவுள் மழையை கொடுக்கிறாரோ 

இன்னும் நிவாரணம் கொடுக்கணும் கோடி கோடியா கேட்டு வாங்கி பிரியாணி பொட்டலத்தை கொடுத்து ஒப்பேத்திடுவாங்க அவங்க தேத்திக்குவாங்க……நீயும் நானும் கத்தி கொண்டாவது இதை வாங்க முடியும் நிலையில் அந்த வெல்டிங்கை கம்பெனில வேலை செய்யும் சீனியெல்லாம் எப்படி கஷ்டப்படுவான் இந்த விலைவாசியை தாங்குவானா…….


இதுல இவன் மனுஷன் இல்லை இவனில்லைனு யாரை குறிப்பிட்டு சொல்வது என்ன? அவன் பெரிசா செய்யறான்…. இவன் சிறுசா செய்யறான் சொல்லிக்கலாம்


என்ன ப்ரோ? நானெல்லாம் வேலைகிடைச்சி சம்பளம் வாங்கினத்தில் இருந்து இப்பவரைக்கும் மாசம் பொறந்தா எப்போ சாப்பிட போனாலும் எங்க ஆபிஸ் எதிர்க்க இருக்கிற ஹோட்டலில் டொனேஷன் பாக்சில் நுறு இரநூறுன்னு போட்டுடுவேன். கோவிலுக்கு போகும் போதெல்லாம் கடவுளே நானா செய்யமுடியாடியும் நீ பார்த்து செய்யினு உண்டியலில் போட்டுட்டு  வருவேன் இப்ப கூட ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த அப்ப என்னால முடிஞ்சது டிபனுக்கு  எல்லாம் ஷேர் பண்ணிக்கிட்டேன்  உட்கார்ந்தா சம்பளம் எப்படி வரும்  எப்படி ஹெல்ப் பண்ணமுடியும் அதனால டைம் கிடைக்கும் போது போனேன்.


சரிதான் கிரி ஆனா ஆபத்தில் உதவற மனசு இல்லை நமக்கு நேற்றிக்கு ஒரு நாயி நாம பிளாட்டுகுள்ள படிக்கட்ல வந்து படுத்துக்க பார்த்தது மழையினால் நாம விட்டோமா இல்லையே துரத்திவிட்டுட்டோம் இது தொல்லைனு....... நாம தொல்லையில்லன்னு நினைக்கிற விஷயத்திற்கு மட்டும் உதவுவோம். சிலசமயம் கும்பலோடு கோவிந்தா போடும் மிராக்களும் நடக்கும் அதற்கு அப்புறம் எதோ நினைவு தப்பி  நினைவு திரும்பியது போல் பழையநிலைக்கு வந்துவிடுவோம் அப்படியானது தான் 2015 வந்த உதவிகள் . ….. அதை உதவி செய்துவிட்டோம்னு நம் தோளில் நாமே தட்டி கொள்வோம் புண்படுத்தறேன் நினைச்சிக்காத கிரி எனக்கென்னமோ இப்படித்தான் தோன்றுகிறது. நூற்றில் 75% தைரியமா நான் மனிதன் தான் சொல்லிக்க முடியாமத்தான் வாழறோம்.


வெள்ளி, 3 நவம்பர், 2017

தன் இருப்பிடங்களை தேடி..

மழை தன் இருப்பிடங்களை தேடி அலைகிறது .....
எங்கேடா??? என் குளங்கள்....... 
எங்கேடா???? என் ஏரிகள் ......
தன்  இருப்பிடம் கிடைக்காத  சோகத்தில்....... 
தெருக்களில்  அலைந்து கொண்டு இருக்கிறது ........
யாரோ  நம்மை போல் இதை பகிர்ந்திருந்தார் முகநூலில் கவிதையாய் பெயரை படிக்காமல் விட்டுவிட்டேன் .....எவ்வ்ளவு உண்மை இந்த வரிகளில் ....
அந்த சோகமே கோபமாய் தாக்கிடுமோ என்பது போல் கண்ணுர்றேன் இன்று



மழையின் போக்குவரத்து இன்று சென்னையில் இன்று நான்  காலையில் பிராட்வே வரை செல்ல வேண்டி வந்தது போகும் போது கண்டது  மழையின் தாண்டவம்  என்று சொன்னால் கடவுள் இறங்கி வந்து பளாரென்று அறைந்துவிடுவார்......  மக்களின் மேம்போக்குத்தனம் ஆடுகிறது ஆடிவிட்டது எல்லா பக்கமும்  இரண்டு மாதத்துக்கு  முன் தண்ணீருக்கு காக்காயை போல்  பறந்தது பறந்து ஆடியது கொடுமையை அனுபவித்தது ....இன்று தண்ணீரை கண்டு பயந்து நடுங்குகிறது எங்கே செல்கிறோம்     சரி செய்யமுடியாத இடத்தை நோக்கி நகர்ந்துவிட்டோமோ என்று பயம் வருகிறது.

மழை  நீர் சேகரிப்பு நல்ல திட்டம் ஆனால் அது முழுவதும் எல்லா இடத்திலும் சரியாக பராமரிக்க படவில்லை என்பது தான் கண்முன் பார்க்கும் உண்மை நிலவரம்  இதற்கு  யார் காரணம்? மக்களாகிய நாம் தான் நாமே நம்மை கவலைக்கிடமாக  வைத்து கொள்கிறோம் ஆக்கிவிட்டோம். மேலும் அதில் முழுவதும்மண் சேர்ந்து  அடைத்து கொள்கிறது கடலில் போயி சேர்வதற்கு  பதிலாய் ஒவ்வொரு நகரிலும் பொதுவாய் ஒரு அல்லது இரு  பொது  இடத்தை தேர்ந்தெடுத்து   பெரிய அளவில் மழை நீர் சேகரிப்பு கட்டி பராமரிக்கலாம் என்று தோன்றுகிறது .தண்ணீர் கஷ்டமும் கொஞ்சம் குறையும்


இன்னுமொன்று  குப்பை அதுவும் மார்கெட் என்று ஒன்று இருக்கும் இடங்களில் நடக்கும் அடடாகாசம் தாங்கவில்லை எவ்வ்ளவு தான் இடங்களை அவர்களுக்க ஒதுக்கி வைத்தாலும் அவர்கள் அந்த இடத்தை சரிவர பயன் படுத்துவதில்லை நடை பாதையிலேயே  போட்டுவிடுவதில் அவர்களுக்கு என்ன சந்தோசம் வருகிறது என்று புரியவில்லை குப்பை லாரிகள் வரவில்லையென்றால் அந்த இடத்து மக்கள் படும் அவதி சொல்லி வடிக்க முடியாதவையாக இருக்கிறது   ஒழுங்கீனம் ஒழுங்கீனம் என்பதை வாசல்களாக ஆகி  கொண்டோம் இதற்கு சப்பைக்கட்டாய் அரசியல் சூதாடங்கள் மேற்கோள்கள்


அடுத்து அவர் அவர்கள் வீட்டு  வேலைகளுக்கு  நோண்டப்படும்  ரோடுகளை திரும்பவும் செப்பனிட மெனக்கெடுவதில்லை இது சுயநலம் தானே ஒவ்வொருவருக்கும் தோன்ற வேண்டும். தன் வீடு  இருக்கும் ரோட் நல்ல இருக்க வேண்டுமென்று.  வீட்டினுள்ளே  மட்டும் சுத்தம் பத்தம் வெளியே நாற்றம் பற்றி கவலையில்லை வெறுமனே புலம்பல் நாட்டை  குறை கூறி அடுத்தவரை குறை கூறி ....


மேம்பாலங்கள் கட்டி போக்குவரத்தை வழிநடத்தப்பட்டது பலன்களுக்கு பாலத்தின் அடியில் என்ன நிலை இன்று எல்லோருமே பாலத்திலே செல்ல முடியுமா ? நாம் புலம்பும் புலம்பல் எல்லாத்துக்கும் வரிகட்டுறேனே அப்புறம் திரும்பவும் நானே என்னை பார்த்து கொள்வதா ? என்ற கோபமான அலட்சியம்....... சரி இதற்கு முடிவு இப்படித்தான் ஒன்று கூடி  அனுபவிப்போம்..... ஆனால் ஒன்று கூடி  போராடமாட்டோம் நிற்கமாட் டோம் உண்மையாக.... யாரவது பார்த்து கொள்ளட்டும் நான் கை  மட்டும் தூங்குகிறேன் எனக்கு நேரமில்லை என்று ஒதுங்கி ஓடுவோம். ஆம்உங்களுக்கு  நேரமில்லை வாழ........ உன்னை நோக்கி நோயிகளின் அணிவகுப்பு உன் நேரமின்மைக்கு பரிசாய்


பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்
 நானும் ஒதுக்கிட்டு வழிவிட  வேண்டும்
என்ற நிலை இனி  வருமா .................
சிறுவயதில் மழை  வந்தால் குதித்து  நனைந்து காகித கப்பல்விட்டு மகிழ்ந்த காலமெல்லாம் போய்விட்டது....... இன்று மழை வந்தால் ஐயோ! மழை நீர் வடியாதே..... அதனுடன் எந்த சாக்கடை நீர் கலக்கிறதோ பயம் ஐயோ கூரையில்லாத  மக்கள் என்ன செய்கிறார்களோ...... என்ற பயம் மட்டுமே இன்று சென்னைவாசியாய் ஆகி  போனதில் பலபேருடைய ஆதங்கம் ,ஏக்கம் .....மழை புலம்பலில் இருந்து விடிவு  வருமா....... யார்? தரவேண்டும் என்ற கேள்வியை தாங்கி  நானும்....... 


திங்கள், 30 அக்டோபர், 2017

டெடிக்கேஷன் (Dedication) வேண்டும் .

நடப்பது என்ன? -7 


அறியாத வயதில் டீன் ஏஜ்  நட்பு  எப்படி பட்டதாக  அமைந்துவிடுகிறது அது எம்மாதிரியான   பிரச்னைகளை  கொண்டு வந்துவிடுகிறது என்பதனை   பார்த்து வருகிறோம் போன பதிவில் நடப்பது என்ன ?-பகுதி 6ஒரு நிஜமாய் நடந்த சம்பவத்தை பகிர்ந்து இருந்தேன் அதை படித்து கருத்துகள்  பகிர்ந்த அனைத்து தோழமைகளுக்கு நன்றி..... டீன்  ஏஜில் செய்யும் தவறுகள் வெளிச்சத்துக்கு வரும்போது தான் குடும்பத்தையே தலைகுனிய வைத்துவிடுகிறது .



ஏன் இப்படி நடந்திருக்க வேண்டும் .கட்டுப்பாட்டுடன் வளர்ந்திருந்தாலும் வளர்த்திருந்தாலும்  எங்கே தவறிவிடுகிறோம் நாம்...... அது நம் மேல் நாமே சில நேரம் கொண்டுள்ள நம்பிக்கை நான் சரியாக வளர்கிறோம் கண்டிப்புடன் அதனால் தவறு ஏற்பட வாய்ப்பு வராது என்று நினைத்து  கொள்கிறோம். ஆனால் டின் ஏஜ் என்பது எல்லாவற்றுக்கும் அப்பாற் பட்டது அது எந்த நேரம் எதை செய்யும்  என்று நம்மால் கணிக்கவே முடியாது. 



டீன்  ஏஜ் என்பது ஒரு புது உலகம் புரியாத வயது அங்கு பார்க்க படுவதெல்லாம் அவர்களுக்கு பிரமிப்பும் இனம் புரியாத மகிழ்ச்சியையும் கொடுக்கும் வயது .படிப்பை வைத்து  புத்திசாலி என்று இனம்காணப்படும்  பிள்ளைகளிடமும்  திமிராய் இருக்கும் அறிவுத்தனம் ,அறிவுத்தனமாய் இருக்கும் அசட்டுத்தனம் இருக்கும்.  



நாம் செய்ய வேண்டியது என்ன கண்காணிப்பு... கண்காணிப்பு ....கண்காணிப்பு பிள்ளை என்று பெற்றுவிட்டோம் அதுவே நம் வாழ்வின் முதல் கடமை எல்லாவற்றயும் விட    என்ற மனநிலை வரவேண்டும். கொஞ்சம் சோம்பலோ இல்லை வேறு காரணங்கலோ இந்தவிஷயத்தில் தடுப்பாக வர விட கூடாது.



பிள்ளைகள் யாரிடம் நட்பு வைத்திருக்கிறார்கள்.... . அவர்களின் பின்னனி  எங்கு செல்கிறார்கள்? யாருடன் செல்கிறார்கள்? உங்களிடம் சொல்விட்டு சென்றாலும் சொன்ன இடத்திற்கு தான் சென்று வருகிறார்கள் என்பதயும்.... சில  பல முறை கண் காணிப்பில் வையுங்கள். பழக்க வழக்கத்தில்  சின்ன மாறுதல் வந்தாலும் உஷாராகுங்கள் அவர்களின் உடல்  மொழியையும் கவனியுங்கள். திடிரென்று பணம் கேட்டால் எதற்கு  என்று நன்றாக  விசாரித்த பின் தேவையானவற்றிற்கு  மட்டும் கொடுங்கள்.  



படிப்பில் கவனம் குறைந்தால் வயது என்று காரணம் சொல்லி தள்ளி போட்டு விடாதீர்கள்.... என்னவாக காரணம் இருக்கலாம் என்று துப்பறியுங்கள். கூடா நட்பு வந்துவிட்டால் பதட்டப்பட்டு திட்டி வேறு நிலைக்கு நீங்கள் போகாமல் நாசுக்காக அவர்களை உங்களின் பால் திருப்ப நடவெடிக்கை எடுங்கள். முக்கியமாய் செல்போன் ரகசியமாய் பேசப்படுகிறதா..... கணனி ரகசியமாய்  கையாளப்படுகிறதா .......என்பதை கூர்ந்து  கவனியுங்கள். நான் தான் வாங்கி வைத்துவிட்டேனே  என்று  சமாதானம் படுத்தி கொள்ளாதீர்கள் இந்த வயது நம்மை ஏமாற சொல்லும் வயது. 



பல பிள்ளைகள் செய்யும் தவறுகளுக்கு முன் உங்கள் பிள்ளைகளின் தவறு பெரிதில்லை என்று ஓப்பிட்டு  செய்து தவற விட்டு விடாதீர்கள். தும்பை விட்டு வாலை  பிடித்த கதையாகிவிடும் நாம் கண்டிக்கும் போது அவர்கள் மனஅழுத்தத்திற்கு போவார்கள் இப்பொழுது அவர்களுக்கு நாம் கொடுக்க கூடியது அதிகமான கொஞ்சல் இல்லாமல் உனக்கு  நான் இருக்கிறேன் என்ற தாக்கத்தை கொடுக்கும் அரவணைப்பு. 


முக்கியமாய் தாய் கண்டிக்கும் போது தந்தை அதற்க்கு  எதிரான கருத்துக்கள் கூறுவது தந்தை  கண்டிக்கும் போது தாய்  எதிரான பாசதையும்  தயவையும்  குறிப்பால் உணர்த்துவது போன்ற செயல்கள் அவர்களுக்கு சாதகமாய் போய்விடும். இரண்டு பேருக்குமிடையே சண்டையை மூட்டிவிட்டு அவர்கள் குளிர்  காய்ந்து கொள்வார்கள் அதில் தங்களுக்கு ஆதாயமாய்... கவனம்.

 

எல்லாத்தயும் விட  காதல் என்ற இப்பெயரில் நடக்கும்  கூத்துக்களின்  விளைவால் நிறைய பிள்ளைகள் தங்கள் உயிரை துச்சமென நினைக்கும் மடையர்களாக இருப்பார்கள்  இல்லை இச்சை என்ற மாயைகுள்  சிக்கி கொள்வார்கள் இது மிக பெரிய சங்கிலி  தொடர் போல் தவறுகளை உருவாக்கி விடும்.


 நம்  வாழ்க்கையில் பிள்ளைகளை வளர்ப்பதில்  டெடிகேஷனாக(அர்ப்பணிப்பு )இருக்க வேண்டும்.  எப்படி கடவுளிடம் இருக்கிறோமோ? அப்படி அவர் நம்மை அறிய வேண்டும் நம் வேண்டுதலுக்கு செவி சாய்க்க வேண்டும் என்று இருக்கிறோம் அல்லவா டெடிகேஷனோடு  அப்படி பிள்ளைகளின் மேலும்  இருக்க வேண்டும்.   அப்போதுதான் அவர்களின் உடல், உள்ளம் இரண்டு அலைவரிசையையும்  நம்மால் உணரமுடியும் . வழிகாட்ட  முடியும் தவறுகள் நேரும் முன் காக்கவும் முடியும் 



நாம் நாம்மட்டுமே  அவர்களை காக்கும் கரங்களாக  இருப்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.நாமுடைய  டெடிகேஷன்  அவர்களுடைய உள் உணர்வு அறிய வேண்டும் அவர்கள்  செய்யும் எல்லாமும், எண்ணங்களும் உணரப்படுகிறது என்று அவர்கள் உணர வேண்டும்.  அப்போது அவர்களின் செயல்களில் ஒரு கட்டுக்கோப்பு வர வாய்ப்பு இருக்கிறது . .



இந்த தொடரில் நான் ஆண்  பிள்ளைகள் வளர்ப்பை பற்றி மட்டுமே அலசி உள்ளேன் அவர்கள் செய்யும் தவறுகளின் அதீதத்தை  தொடவில்லை ஏன் என்றால் அது முடிவற்றதாக  இருக்கும். இன்று செய்தி என்று ஒன்றை கேட்க படிக்க  போனால் நாம் பார்ப்பது எல்லாம் கதிகலங்க வைக்கும்  விஷயங்களே இன்னறய இளைய தலைமுறை எதை நோக்கி போகிறது? யார் காரணம்? நாமாக வேண்டாம்........ தவறுகளின் விகிதத்தை  குறைக்க நம்மால் ஆனா முயற்சிகளை  எடுப்போம். 


எனக்கு மனதில் தோன்றியதை இதுவரை பதித்து வருகிறேன் தவறுகள் இருப்பின் எனக்கு  புரிய வையுங்கள் நானும் இன்னமும் பிள்ளை வளர்ப்பை பற்றி கருத்துக்கள் கற்று கொள்ள உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன் .  இதை தொடர்ந்து ஒரு சிறு கதையை  பதிக்கிறேன்  ஒரே டிரையா  போகுதே  கதை வழியாக சொல்லலாமென்று   அடுத்து வரும்  பதிவுகளில் அதற்க்கும்  பின்னர் பெண் பிள்ளைகளின் டீன் ஏஜ்ஜை பற்றி பார்க்கலாம்.

தொடரும் ....