புதன், 20 பிப்ரவரி, 2013

நம்ப முடியவில்லை .....




ஆம் நம்ப முடியவில்லை இரட்டைமாடுவண்டி அச்சாணிகள்  கழலாமல் ஒரே விஷயத்தில் ஒத்து போனது 

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பான விஷயத்தில் நம்முதல்வர் ஜெயலலித்தாவும் முன்னால் முதல்வர்  கலைஞ்சர் கருணாநிதியும்   (எதிர்கட்சி தலைவரும் )ஒத்துமையாய் கருது வெளியிட்டுள்ளது மிகவும் வியப்பு வரவேற்க  தக்கது 
தமிழக முதல்வர் ஜெயலலிதா ,விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இலங்கை அரசு போர்க்குற்றங்கள் புரிந்ததை உறுதிப்படுத்துகின்றன என்று கூறியுள்ளார்.
இது குறித்து ஐ.நா அவையில் கண்டனத்தீர்மானம் கொண்டுவரப்படவேண்டும். அதுகுறித்த அமெரிக்க முயற்சிகளில் இந்தியாவும் ஒத்துழைக்கவேண்டும் மேலும் தமிழர்கள் இலங்கையில் கண்ணியமாக வாழவகைசெய்யப்படும்வரை இலங்கைமீது பொருளாதாரத்தடை விதிக்கப்படவேண்டுமன அவர் இன்று புதன் கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

அதே போன்று திமுக தலைவர் கருணாநிதியும் இலங்கை மீது போர்க்குற்றங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் செய்துவரும் முயற்சிகளுக்கு இந்தியா வலு சேர்க்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.(தூங்கறவங்களை எழுப்ப முடியும் தூங்குவது போல் நடிபவனை எப்படி எழுப்புவது விழித்தவர்களே கண்ணைகசச்கி கொண்டு இருக்கும் போது )

பாலகன் பாலச்சந்திரன் சேனல் 4 வெளியிட்டிருப்பதைப் போல, கொடூரமாக கொல்லப்பட்டிருந்தாலும், போரின் போது ராணுவத்தினரால் கொல்லப்பட்டிருந்தாலும் எப்படியும் அது கொலைதான். அப்படி கொலை செய்யப்படும் அளவிற்கு, அந்தப் பாலகன் செய்த குற்றம் என்ன? அதற்கு சிங்கள அரசு உலகத்திற்குப் பதில் சொல்லித் தானே ஆக வேண்டும் என சுட்டிக்காட்டுகிறார் கருணாநிதி.(ஹிட்லரின் வழியை தேர்ந்தெடுத்த பின் பாலகன் என்ன பாரியாள் என்ன) 

கடந்த ஆண்டே, ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், இலங்கை அரசு கடந்த ஓராண்டு காலத்தில் அதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறைகூறுகிறார் கருணாநிதி.(புகை அடங்க நேரமாகுமோ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக