திங்கள், 9 அக்டோபர், 2017

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று சங்கே முழங்கு

                புதுமை எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று சங்கே முழங்கு
தமிழர் அடையாளத்திற்க்கு   விளம்பரம்...... அது கொடுப்பதோ ஆடம்பரம்... எந்த வகையில் பார்த்தாலும் ஆடம்பரத்தை விட்டொழிக்க  மனிதர்கள் விரும்ப போவதில்லை என்பது நிச்சயமாகிறது.  எளிமையே  பேஷன் என்று சொல்லி எளிமைக்கு ஆடம்பரமாய் செலவுகள் வைக்க ஆரம்பிப்பது தான்  இன்றைய பேஷன். கல்யாணங்கள் எல்லாம் கலாசாரத்தை காப்பாற்றுகிறேன் என்று அன்று எளிமையான கிடைக்க கூடிய பொருட்களில் கலாசாரம் என்று சொன்னதை  பின்பற்றினார்கள்  இன்றோ  அந்த பொருட்கள் எல்லாம் விவசாயம் போல் காண கிடைக்காத பொருள்களாய் மாறிவிட்டது இதற்கென்று  பிரத்யேகமாய் விளைவிக்கப்படுகிறதோ என்னும் படி விலை உயரத்தில் அதுவும் வித விதமாய்  கண்ணை கவரும் ஆடம்பர  அலங்காரத்தில்  ஜொலிக்க வைக்கப்பட்டு வாங்க படுகிறது

                                                                             தமில் தாலி

              எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று சங்கே முழங்கு என்று எல்லோரும் கிளம்பிவிட்டார்கள் தமிழ் மொழி, நாகரிகம், கலாசாரம்.. எல்லாத்தையும்  கட்டி காப்பேன் என்று உறுதி எடுத்தது போல்.... நன்மையும்  இருக்கிறது, சாதி அடையாளத்தை இது விட்டொழிக்க ஒரு வகையில் உதவுகிறது.
                                                         
        இப்போ லேட்டஸ்ட் ஒரு விளம்பரம் தமிழ் திருமணத்தற்க்கு பாண்டிசேரியில் முதலில்  பத்திரிகை பனை ஓலையில் விவசாயியை காப்பாற்ற மங்கலமாய்  ஆரம்பிப்போமே இந்த விஷயம் மனதிற்க்கு நிறைவை கொடுக்கிறது.
                                                                   
         அடுத்து   மணப்பெண் உடையிலும் மணமகனின் உடையிலும் தமிழ் தழுவி கொண்ட படுகிறது அதாவது மணப்பெண்ணி சேலையில் தமிழ் கலைகளும் உடல் பகுதியில் தமிழ் வட்டெழுத்துகள் தொடங்கி வழக்கில் உள்ள தமிழ் எழுத்துகளும், முந்தானையில் பெண்கள் பறையிசைக்கும், சிலம்பம் ஆடும் காட்சிகளும் நெய்யப்பட்டுள்ளது மணமகனின்  தோள்  துண்டில் சங்ககால கல்வெட்டுகளி்ல் இருக்கும் தமிழர் பண்பாடு சார்ந்த சுவடுகள் வரையப்பட்டிருக்கிறதாம் இதன்  வழியாக வரும் நன்மை  தறி  வைத்திருப்பவர்களின் வாழ்வாதரம் உயர்த்தப்படும் மிக மகிழ்ச்சி

                                                                பறை

       இரண்டாவது நன்மை எதுவென்றால் உறங்கி கிடந்த  தமிழ் மரபு இசைகளுக்கு  விழிப்புகள் கிடைத்தது .அந்த திருமணத்தில் பறை என்னும் மேளங்கள் இசைக்கப்படுகிறது மணமகள் வருகையை சொல்ல
       இது வரை சரி ஆனால் புதுமை புகுத்துகிறேன் என்று வடநாடு ஸ்டைலும் உள்ளே திணித்துவிடப்படுள்ளது தான் வேடிக்கை
      மணமகள் பல்லக்கில் வருகிறாள் அவளை எதிர் நோக்கி நிற்கும் மணமகன் பல்லக்கு நின்றதும் மணமகளை கைகளில் ஏந்தி மேடைக்குத் தூக்கிச் செல்லும் காட்சி தாலி கட்டுமுன் இது எதற்க்கு ? வீரத்தை நிரூபிக்கவா ?
       இன்னறய இளைஞ்சர்களின் புதுமை பாராட்டுக்கு உகந்தவையாய்  எப்படி மாறிக்கொள்வது மன்டையை உடைத்து கொள்கிறார்களோ யோசித்து யோசித்து 

                                                           திருமாங்கல்யம்

       இங்கு இந்த திருமணத்தின் ஹைலைட் புதுமை என்னவென்றால் பெண்ணுக்கு மட்டும்  ஏன்  தாலி கட்டும் சடங்கு ஆணுக்கும் வைப்போம் என்பதே  பெண்ணால் ஆணுக்கு கட்டப் படுகிறது .... நல்லாத்தான் இருக்கு சமத்துவம். ஆனா ஏற்கனவே தங்கம் விலை தலைக்குமேல் இங்கு மிளிரும்  புதுமையில் கையெட்டாத  தூரத்திற்கு போய்விட வாய்ப்பு உள்ளதோ ஏற்க்கனவே ஒருத்தர் இவ்வளவுதான் தங்கம் வைத்து கொள்ள  வேற சட்டம் சரி திறமைசாலிங்க நாமெல்லாம் எவ்வ்ளவு சட்டம் வந்தாலும் சந்துல சிந்து பாடுவோமில்ல .அந்த தாலியிலும் 'அ' வடிவம் பொறிக்கப்பட்டதாம் , அதில் ஒரு கரு உள்ளதுபோன்றும், அதன் மேல் ஓர் ஆண், பெண் உருவமும் இருப்பது போல் இந்த கற்பனையும் அழகு கொல்லர்களுக்கும் வேலை ..
         ஐந்திணை பூக்கள் கொண்டு வரப்படுகிறது இதுவும் நல்லாத்தான் இருக்கு தமிழ் இலக்கண பாடத்தில் படிப்பதை நேரில் நிஜத்தில் பார்த்து தெரிந்து கொள்ள உதவுகிறதே பிள்ளைகளுக்கு ஏன்? நமக்கும் தான் மறந்துவிட பாடத்தை நினைவு படுத்த உதவுகிறதே 

                                        Image result for seeds images

         கடைசியாக மிகவும் உயர்ந்த விஷயம் விதைகளை தாம்பூலமாய் கொடுப்பது கண்டிப்பாய்  பயனுக்குரிய விஷயம் வாங்குபவர் தன் வீட்டில் இடமில்லை என்றாலும் வாங்கியதற்காவது வளர்க இடமிருப்பவரிடம் பகிரப்படும் இல்லை காலி மனைகளில் வீசி எறிந்தாலும் நல்ல விதைகள் காலூன்றி தன்னை  வெளிப்படுத்தத்தான் செய்யும்
ஆடம்பரமாய் இருந்துவிட்டு போகட்டும் இதனை நன்மைகள் கிடைக்குமென்றால் என்ன சொல்றீங்க ......




20 கருத்துகள்:

  1. இன்று நாதஸ்வரத்தை ஒழித்து விட்டு செண்டையை கொண்டு வந்து விட்டார்கள்.
    மணமகனுக்கு வேஷ்டி சட்டையை ஒழித்து விட்டு பஞ்சாபி உடையை கொண்டு வந்து விட்டார்கள்
    உணவில் வடை பாயாசத்தை ஒழித்து விட்டு பிரியாணியை கொண்டு வந்து விட்டார்கள்
    எல்லாம் போச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை சொல்லுங்க நானும் வடை பாயசம் போச்சேன்னு கவலை பட்டு இருக்கேன் இப்போதெல்லாம் என்ன என்னமோ ஐட்டம் இலையை பரப்பி கடைசியில் எல்லாத்தயும் தொட்டு பார்த்துட்டு முடி வைத்து வருகிறோம் மிகவும் கஷ்டமா இருக்கும் பார்கும் போது

      நீக்கு
  2. பதில்கள்
    1. என்ன செய்யட்டும் இதற்கு என்ன செய்துவிட்டேனும் புரியலை திறந்து பார்த்தேன் ஹீ ஹீ டெலிட் பண்ணிவிட்டு புதிதாய் கொடுக்குமா

      நீக்கு
  3. கடைசி விஷயம் மட்டும் உருப்படியான விஷ்யம்.....ஆமாம் எனக்கு ஒரு சந்தேகம் குண்டாக உள்ள பெண்னை மாப்பிள்ளை தூக்கி செல்ல முடியவில்லை என்றால் கல்யாணம் நடக்குமா நடக்காதா? அல்லது தூக்க முடியாவிட்டால் உருட்டி செல்ல வாய்ப்புக்கள் உண்டா?


    இதை எதற்கு கேட்கிறேன் என்றால் நானும் ஒரு கல்யாணம் பண்ணலாம் என்று நினைக்கிறேன் நான் கொஞ்சம் ஒல்லி அதனால்தான் கேட்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா ஏன் கவலை குண்டாக மண்டகா என்று பல்லக்கை மணவறை வரை கொண்டு போயி வீட சொல்லுவோம் நீங்கள் வேண்டுமென்றால் அந்த பல்லக்கில் ஒரு ஓரமாய் தொற்றி கொள்ளுங்க இதுவும் வித்தியாசமாய் விடும்

      நீக்கு
  4. பறை ஒலியை திருமணத்தில் ஒலிக்க விடுவதில் அசாத்திய துணிச்சல் வேணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை மிகவும் நன்றாக இருந்தது என் அண்ணன் திருமணத்தில் வைத்திருந்தார்கள் இதுவும் பாண்டி தான் திருவாசகம் படித்து திருமணம் நடந்தது சிவனடியார்கள் வந்து நடத்தினர்

      நீக்கு
    2. என்ஒன்றுவிட்ட அண்ணன் வீட்டில் நடந்தஅவர் மகன் திருமணத்தில்

      நீக்கு
    3. பறை ஒலி நல்லா இருக்காதுன்னு சொல்ல வரல. பறை இசை
      கோவில் திருவிழாக்களுக்கும் கடைசி ஊர்வலத்துக்கும்ன்னு நம்மாளுங்க ஒதுக்கி வச்சிருக்காங்க.

      நீக்கு
  5. விதை நல்ல விசயம்.. இது அப்துல் கலாம் ஐயா சமாதில தொடங்குச்சுன்னு நினைக்கேன். அங்கிருந்துதான் முதன்முதலில் என் அம்மா வாங்கி வந்து எனக்கு விதை பந்துகளை அறிமுகப்படுத்தினாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது ராஜி தோட்டம் வைத்து இருக்கறீர்களா......

      நீக்கு
    2. எங்க வீட்டில் இல்ல. அம்மா வீட்டில் 2750 ச.அடில தோட்டம் இருக்கு. மாதுளை, எலுமிச்சை, மல்லி, கொய்யா, கனகாம்பரம், தென்னை, செம்மரம், தேக்கு, சவுக்கு, மணத்தக்காளி, துவரை, வெற்றிலை, பொன்னாங்கன்னி, சோத்துக்கத்தாழை, ஜாதி மல்லி, கொடி சம்பங்கி, துளசி, வாழை, முருங்கை, பப்பாளி, மா, அரை நெல்லின்னு இருக்கு. காய்ஞ்ச மரத்துண்டை என் அம்மாவும், என் பையனும் நட்டால்கூட பொழைச்சுக்கும் அத்தனை ராசியான கை இருவருக்கும்...

      நீக்கு
    3. சூப்பர் ராஜி உண்மைதான் சில பேர் சும்மா தான் நட்டு வைத்தேன் வந்துவிட்டது சொல்லி பார்த்து இருக்கிறேன் எனக்கும் கூட சாதரணமா செய்த போது ஈஸியா இருந்தது இப்போதான் ஆர்கானிக் போர்மிங் செய்ய போனபிறகு கொஞ்சம் உதைக்குது தோட்டத்துடன் மல்லுக்கட்டுகிறேன்

      நீக்கு
  6. மிகவும் கவரும் விஷயம் தாம்பூலப்பைதான். உபயோகமான விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் மிகவும் பிடித்த விஷயமாயிருந்தது அதுவே நான் மாடி தோட்டம் வைத்து இருக்கிறேன் கடந்த 10 வருடமாய்

      நீக்கு
  7. நம்ம ஏரியாவில் உங்கள் படைப்பு வெளியாகி இருக்கிறதே, பார்க்கவில்லையா?

    பதிலளிநீக்கு
  8. ஆமாம் நீங்கள் சொல்லியிருக்கும் இந்த மாற்றங்களை நாங்கள் கண்டு வருகிறோம் சகோ/பூவிழி...நல்ல விசயங்களை வர வேற்கலாமே இல்லையா...

    (நாங்கள் இருவர் துளசிதரன், கீதா நண்பர்கள் எங்கள் தளத்தில் எழுதி வருகிறோம். தற்போது துளசி ஒரு சில வேலைகளில் இருப்பதால் எழுத நேரமில்லை. நான் மட்டுமே அவ்வப்போது பதிவுகள் போட்டு வருகிறேன். எங்கள் கருத்துகள் பொதுவாக இருந்தால் அப்படியே வெளியிட்டு விடுகிறோம். தனிக் கருத்தாக இருந்தால் இருவரின் பெயரும் குறிப்பிட்டுப் போடுகிறோம். இங்கு பொதுவாக இருப்பதால் அப்படியே பதிகிறோம்...என்பதையும் தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறோம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாய் நாம் தமிழுக்கானது என்றால் அது ஆடம்பரமாய் போனாலும் பரவாயில்லை இன்றைய நிலையில் தமிழனை தமிழ் பாரம்பரியத்தை தூக்கி நிறுத்த வேண்டிய எல்லாவற்றயும் ஏற்ற கொள்ள தான் வேண்டும்
      .
      அப்படியா நானும் உங்கள் மற்றவர்கள் கீதா என்று சொல்லும் போது யோசித்து இருக்கிறேன் சரி டைட்டில் அப்படி வைத்து விட்டீர்கள் முதலில் என்று நினைத்து கொண்டேன் மிக நன்றி புரிய வைத்ததற்க்கு

      நீக்கு