புதன், 26 ஜூலை, 2017

பயணம்

கடந்துவந்த பயணம்
வளரும் பாதை
கரடுமுரடாய்
கற்கள்
கடந்துவந்தால் பக்கம் ஓடும்
பதம் பார்க்கும்
சுடுநீர்கால்வாய்
விளையாட்டாய் தாண்டி வந்தால்
கொளுத்தும் வெயில்
மணல் பாதை
போகட்டும் என்று
தப்பிதாவி கடந்தும்
முன்னாள் ஒரு மேடு பள்ளம்
வீழ்வேனோ என்று
பலம் திரட்டி
பாதையை பிடித்தால்
கால் உபாதை
இளைப்பாறலாமென்றால்
இடைவிடாத  மழை
நனைந்தே வந்தும்
கால் முழுவதும் சகதி
பக்கம் ஓர் ஓடை
சுகமாய் குளிர்ந்து
உறவாடி எழுந்த பின்
ஒட்டி கொண்டன மண்ணும் தூசியும்
காய்ந்த பின்பும் அதன் வாசனை
நேர்கோட்டில் பாதை
பாதை முழுவதும்
பசுமையும் ஆங்காங்கே
எங்கிருந்தோ ஓர் பாடல்
மனதிற்கும் உடலுக்கும்
இதமாய்
ஏற்று கொள்ளும்
கொல்லும் விதமாய்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதை தந்திட வெங்கடேஸன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
சொல்வடிவம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக